Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

Showing posts with label People. Show all posts
Showing posts with label People. Show all posts

August 07, 2017

ஓடும் தெளிந்த நீரில்

வாழக்கையை போல் 
அருவியும் இல்லை 
நதியும் இல்லை 

Image result for river
Image result for river
Image result for river
Image result for river
Image result for river

ஓடையாய் பிரிந்து
குளமாய் மாறி 
ஒரே மாதிரி காட்சியை கண்டு
தன் மேல் விழும்
சூர்யோதய பிம்பத்தையும்
நட்சத்திர பிம்பத்தையும்
தனதென எண்ணி
சுயகனவில் வாழ்ந்து
தன அடியில் உள்ள
காழ்ப்பில் ஊறி
உயர் வெயிலின்
வெட்பத்தில் வறண்டு
இம்மண்ணில் மாய்வோர் 
ஒரு குலம் எனில்

Image result for pond

ஆறாய் தொடர்ந்து 
பாறையில் முட்டி 
சங்கீதம்  எழுப்பி 
வளைவுகளில் வளைந்து கொடுத்து 
ஒவ்வொரு நொடியும் 
புதிய காட்சிகள் கண்டு
செல்லும் வழியில்
பல கோடி வேர்களுக்கு
தண்ணீர் பாய்ச்சி
சென்று சேரும் இடத்தில்
எண்ணற்ற கடல் உயிர்களுக்கு
புது ஸ்வாசம் தந்து
களிப்புறுவோர் 
இன்னொரு குலம் 

Image result for river

சும்மாவா சொன்னார்கள் 
ஓடும் தெளிந்த நீரில் 
நோய்யில்லையென்று!

- ராஜேஷ் (எ) பாலசுப்ரமணியன் (8 ஆகஸ்ட் 2017)

September 16, 2016

M.S. Subbulakshmi 100

When I started listening seriously to Carnatic Music / Indian Classical music, in 2007, I was listening to multiple sources/musicians. It was like a cat running in a closed dark room trying to find a way out. My violin guru Shri Babu advised me to listen to @M.S.Subbulakshmi. I followed it blindly falling more in love with the music. Her music is so simple which IMO is very difficult to achieve. Her music is so spiritual with 100% Bhakti. Not to forget her perfect diction in any language that she sung in. If anyone listens to her music they can easily sing it along. She showed that one can attain Brahman (immortality) by Bhakti, hardwork and simple way of life irrespective of the birth (here her devdasi birth(no offense)). #MSS100 #birthCentenaryYear #MSSubbulakshmi #Inspiration


April 24, 2016

The dream I had and the road I had traveled

Dear Friends and Families,

P.S: This is a long post, as I believe this is an opportune moment to share my thoughts.

I graduated with a MBA degree last night. I am glad that I could make many people back home, cherish my feat. This ‪#‎byumba‬ is definitely one of the happenings which has contributed largely in me growing both personally and professionally. My MBA colleagues plus the BYU network as a whole have taught me a lot, making this program as well as my decision to pursue MBA here at BYU, an absolutely worthwhile experience.

At BYU, over the past two years, I have met many amazing people and have made some friends for life. Though I acknowledge the fact that I could have opened out myself some more, to have made more friends.., I still have a long list of BYU folks to thank, but I guess that it is only fair that I dedicate another post to them.


Last evening, as I was taking the “grad walk” towards the podium on the stage, I had mixed feelings. I missed many people by my side. There are many who have touched my life in a big way, helping me reach where I stand today, so, I dedicate this post to all of them. Almost everyone who knows me well, are aware of the amount of sacrifice and hard work which my mother and (unsung efforts of) my grandmother have put in for the last 25+ years, ever since I lost my father in 1990. In return, this MBA (and the MS that my younger brother accomplished 3 years ago) is a small thing we have been able to do, to make them happy.


Switching gears, there are countless people who have been a constant source of inspiration for me. Some of them have gone out of their way in making my life meaningful. Dr.Seetharaman Sir!! He played a pivotal role (during the years 1999-2001), in orienting me, the then young high school kid, to pursue engineering. He also made understand that hard work is necessary to succeed in life and believe in the fact that hard work always pays.


Next, I call her aunty, her name is Radha Krishnan, many people from PEC would know her as Sundaresan’s mother. I have seen very few souls like her. She considers me as her son, but I truly feel that I am far away to be given this title. I can write a separate post about her, but this post would be incomplete without mentioning her. During my high school/undergrad days, she seeded in me the desire to pursue higher education, as well as remained a constant source of encouragement to channelize my thoughts and actions to pursue my desire. Whenever I wavered from my path, due to professional or personal responsibilities, she reminded me of the milestones I had set for myself. 'Master's laan enna aachu?(what happened to Master's/MBA goals?)’ she would ask... I am blessed to receive her motivation.


Next, Lourdu Xavier- My friend for over a decade now, and in US slang, we are sort of MBA husband & wife. Over the past 10 years, I can’t count the number of times we have consulted each other while taking important decisions in life. In fact we both prepared for GMAT together . He, Gokul Nambiar and Rajesh Sundararaj  have persistently encouraged and inspired me to pursue my dreams. I am happy that both of us have succeeded in accomplishing the MBA. (He graduated with an EMBA from IIM Lucknow last month and has started his business career). I wish him good luck!


Special Mentions: RajaG - Who encouraged me and positively influenced my thoughts, Vijayaraman- who introduced me to BYU, Nirmal Ganesh - whom I bugged infinitely ever since I got the admit to BYU in March 2014, Vivek- for having provided me with the choultry every time I visited the Bay area, Perumal and Pinki (P4 family)- For all the love and affection you have showered. I could always turn to you whenever I needed guidance, Manikandan Arumugam bro - My Guberan (குபேரன், angel investor) - for the last two years !- (தம்பி உடையான் படைக்கு அஞ்சான் - One who has younger brother, doesn't need to worry about the opponent's army), @Balasubramani Arunachalam - for being my family more than a friend, Smruthy - for being contented with the little time I gave and showing glimpses of how awesome (to-be)-pondatti/wifey she is and how lucky-purusha(hubby) I am.


@All friends, colleagues, roommates and neighbors - who have encouraged and supported me in my decisions and helped me grow personally and professionally. And for all the times we partied, enjoyed, laughed.. You made it easier to stay away from home! - you will always be in my thoughts. Thank you so much.

One box, the job box, still remains unchecked in my goal list. I hope with all your blessings and prayers I will get it off the list soon.


Lastly, I leave you with some Kurals that inspire me!
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
(Think, and then dare the deed! Who cry,
'Deed dared, we’ll think.; disgraced shall be.)

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும் (592)
(The wealth of mind man owns a real worth imparts,
Material wealth man owns endures not, utterly departs.)

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து (596)
(Whate'er you ponder, let your aim be lofty still,
Fate cannot hinder always, thwart you as it will.)

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
(Though fate divine should make you labour vain;
Efforts its labour's sure reward will gain.)

Most importantly, I thank the almighty for all the blessings that has been showered upon me and my family

With gratitude,
Rajesh alias Balasubramanian Arumugam

November 23, 2014

Home at San Jose

I feel home only with good number of people. And I felt home at Vivek's house during my recent trip to San Jose[21,22 Nov 2014]. Without much hesitation I asked whatever food I wanted as if it is my own home. Felt good!

 With Vivek's Daughter Aadhiraa
 With Vivek

March 30, 2014

அறம் - பெட்ரோல் வங்கி

இன்று ஞாயிறுக்கிழமை 30-3-2013 மாலை 7 மணியளவில். பெட்ரோல் நிரப்ப புதுவையில் உள்ள அட்லேயர் பெட்ரோல் வங்கியிற்குச் சென்றேன். ரூ.500 கொடுத்தேன். 3L பெட்ரோல் ரூ.220 90mL என்ஜின் எண்ணை ரூ.20 என்று ரூ.240 ஆயிற்று. பெட்ரோல் நிரப்புபவர் மீதி சில்லரை என்று கொடுத்தார். வாங்கிக்கொண்டு சற்று நகர்ந்தேன். என் முன்பு இடதுப் பக்கத்தில் வண்டி டயருக்கு காற்று நிரப்ப நான்குப் பேர் வரிசையில் இருந்தனர். நானும் காற்று நிரப்பி பல வாரங்கள் ஆகிவிட்டது என்று நின்றேன். நான்கு பேருக்கு காத்திருக்க சற்று பொறுமையும் இல்லை எனக்கு. இருப்பினும் மனதை சற்று கட்டுப்படுத்தி வண்டிக்கு அடிச்சி பல ஆச்சு, இதுல ஒரு அதிகபட்சம் அஞ்சு நிமிடம் தான் ஆகும். பரவாயில்லை. நம்ம ஒன்னும் வெட்டி முறிக்க போகவில்லை என்று காத்து இருந்தேன். ஒரு இரண்டு நிமிடம் பிறகு என்னிடம் ஒரு பெட்ரோல் பங்கு ஊழியர் (வேறு ஒருவர்) வந்து பேசினார். நீங்க எவ்ளோ காசு கொடுத்தீங்க ? ரூ.500 என்றேன். எனக்கு உடனே பளார் என்று மூஞ்சில் அடித்ததுப் போல் ஒரு எண்ணம். ஆமாம். நான் ரூ.260 வாங்க வேண்டிய இடத்தில் ரூ.60 வாங்கி விட்டு வந்து இருக்கிறேன். அவர் எனக்கு ரூ.200 தந்துவிட்டு சென்றார். அங்கேயே தலையில் கை வைத்து சிந்தித்தேன்.

இதில் இரண்டு அம்சங்களை நோக்க வேண்டும்
1) இன்றும் அறம் சார்ந்து நிறுவனங்கள் இயங்குகின்றன. என் நேரம் நான் அஞ்சு நிமிடன் நின்றதனால் எனக்கு ரூ.200 கிடைத்தது என்பதை காட்டிலும், அவர் வந்து எனக்கு ரூ.200 தனைத் தேடி வந்துக் கொடுத்த அறவுணர்ச்சியைப் பாராட்டாமலும், நெகிழாமலும், கற்காமாலும் இருக்க இயலாது. இதைப் போன்ற தருணங்கள் தான் வாழ்வில் அறம் சார்ந்து இருக்க வேண்டும் என்ற வேரிற்கு நீரூற்றிக்கொண்டே இருக்கின்றது. அறம் வாழ்க! 

2) நான் எவ்வளவு அலட்சியமாய் இருந்து உள்ளேன் என்பதை நான் திரும்பிப்பார்க்காமல் இருக்க முடியாது. இதற்கு என்ன காரணம் ? பர்சில் காசு இருக்கா? மறதியா ? கவனகுறைவா ? வேறு இடத்திற்கு செல்ல வேண்டும் என்கிற அவசரமா ? இவையெல்லாம் சேர்ந்த ஒரு அமைதியின்மையா ? என்னை நானே கேட்டுகொள்கிறேன்.  எல்லாமே தான் என்று தோன்றுகிறது. (பின்பு. அம்மாவிடம் சொன்னேன். அம்மா சொன்னார்கள், பெட்ரோல் வங்கியில் பெட்ரோல் போட்டு விட்டு தான் காசு கொடுக்க வேண்டும். இது பெட்ரோல் வங்கியிற்கு மட்டும் அல்ல)

ஒவ்வொரு ரூபாயும் இந்த தருணத்தில், அதுவும் கல்லூரிக்கு செல்லும் போது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த நிகழ்வு எனக்கு ஒரு பாடமாக அமைந்தது. அடுத்த மூன்று மாதங்களும், அதன் பின்பும் வாழ்க்கையில் நாம் எவ்வளவு சிக்கனமாகவும், கவனமாகவும், பொறுமையாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும் என்பது உறுதிப்பட தெரிகிறது. 

January 17, 2014

குல்லா

நான் ஜூன் 1984 பிறந்த குழந்தை. செப்டெம்பர் 1984 இல் (மாத கடைசியாக இருக்கலாம்) சற்று குளிராக இருந்ததாம். நான் எனது பாட்டியை அரவனைத்துக் கொண்டேனாம். இதைப் பார்த்த எனது பட்டு என்னை அப்படியே விட்டுவிட்டு தாத்தாவிடம் கடைக்குச் செல்கிறேன் என்று சொல்லி உடனடியாக கிளம்பிவிட்டார்கள். பாண்டிக்குச் சென்று (டவுனுக்கு சென்று) ஷப்னமில் எனக்கு ஒரு ஸ்வெட்டர், குல்லா, கை கால்களுக்கு சாக்ஸ் வாங்கி வந்தார்கள். அதை முதல் வேலையாக எனக்கு போட்டுவிட்டு பார்த்தார்களாம். தாத்தாவும் எதற்கு இப்படி அவசர அவசரமாக சென்று வந்தாய், ஏன் இதனை அவசர அவசரமாக வாங்கினாய் என்று ஒரு வார்த்தை கேட்கவில்லையாம். இந்த குல்லாவை போட்டுப் பார்த்தப்பிறகு தான் பட்டுவுக்கு திருப்தியாக இருந்ததாம். மற்றும் அந்த பழுப்பு (மேரூன்) நிறக் குல்லாவில் நான் சூப்பராக இருந்ததாக பட்டு குறிப்பிடார்கள் இன்று சற்றுமுன் பேசிக் கொண்டிருக்கையில். அவ்வன்பின் கதகதப்பில் நான் இன்றும் குளிர்காய்ந்துக் கொண்டு இருக்கிறேன். அந்த குல்லா இன்னும் வீட்டில் எங்கேயோ இருக்கிறதாம். இருப்பின் அதை பாதுகாக்க வேண்டும்.

December 23, 2013

விஷ்ணுபுரம் விருது விழா 2013 - ஜெ மற்றும் நண்பர்களுக்கு ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களே,

கடந்த வார இறுதி எமக்கு மிகுந்த ஒரு மகிழ்ச்சியையும் ஒரு புது உலகையும் கொடுத்தற்கு திரு.ஜெயமோகனின் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஒரு மிக பெரிய காரணம். ஆனால் எல்லோருடனும் சொல்லிக்கொண்டு செல்ல முடியவில்லை. அதற்கு என்னை மன்னிக்கவும். தெளிவத்தை அவர்களின் ஏற்புரை முடிந்தவுடன் நேரம் ஆனதால் பெங்களுருக்கு பஸ் எடுக்க கிளம்பிவிட்டேன்.

ஜெ அவர்களின் வலைதளத்தை கடந்த சில மாதங்களாக பின்பற்றி வருகிறேன். விழா அறிவிக்கபட்ட உடன் கட்டாயம் செல்லவேண்டும் ஒரு எண்ணம் இருந்தது. வாசகர்கூட்டத்திற்கு வருவதா வேண்டாமா என்ற தயக்கம் இருந்துக்கொண்டே இருந்தது. புதன்க்கிழமை அன்று சேலம் ப்ரசாதிற்கு டெலிபோன் செய்தபிறகு அந்த அச்சம் உடைந்தது. 

நான் சனிக்கிழமை மாலை சீனு வழிகாட்டுதலுடன் s.v.n கல்யாண மண்டம் சேர்ந்தேன். பிறகு, திரு ஜெ மற்றும் இந்திரா பார்த்தசாரதி ஆகியோருடன் அனைவரும் கலந்துரையாடிக்கொண்டு இருப்பதில் பங்கேற்றது எனக்கு ஒரு புது அனுபவம். இதுப்போல் அனைவரும் கேட்ட ஆழமான கேள்விகளும் அவர்களின் நுண்வாசிப்புதனை எனக்கு காண்பித்தது. உண்மையில் நான் அவ்வளவு உன்னிப்பாக வாசித்தது இல்லை. ஆனால் அப்படிபட்ட நுண்வாசிப்பு மிக முக்கியம் இல்லையேல் மூளைக்கு வெறும் ஒரு பயிற்சியாக (intellectual exercise) வாசிப்பு அமையும் என்றென்பதை மறுபடியும் உணர்ந்தேன். 

இவ்விரு நாட்களின் உச்சமாக நான் பார்ப்பது எல்லோருடனுமான கலந்துரையாடல்கள் தான். ஜெ, இந்திரா பார்த்தசாரதி, தெளிவத்தை ஜோசப், சுரேஷ் இந்த்ரஜித், வேணுகோபால், யுவன், நாஞ்சில் ஆகியோரின் கலந்துரையாடல்களை கவனித்தது ஒரு புதிய அனுபவத்தைத் தாண்டி மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொல்வேன். இவ்வனுபவம் எமது வாசிப்பு ஆர்வத்தை அதிகப் படுத்தியது என்றே சொல்லவேண்டும். ஜெ வை தவிர மற்றவர்களின் எழுத்துக்களை வாசிக்கவேண்டும் (இதுவரை வாசித்தது இல்லை) என்ற ஒரு உந்துதலை தந்த ஒரு வாசலாக இந்த வாசகர்க் கூட்டத்தை நான் பார்க்கிறேன்.

​​நான் முக்கியமாக சொல்ல நினைப்பது அனைவரும் ஒருவருடன் ஒருவர் அன்புசெலுத்தியதை பற்றித் தான். கூச்சம் காரணமாக நான் பொதுவாக ஒரு புதிய இடத்தில் முதற் சென்று அறிமுகப் படுத்திக்கொண்டு பேசுபவன் அல்ல. ஆனால் என்னிடம் பலர் தாமாக முன் வந்து அறிமுகம் செய்துக் கொண்டு என்னுடன் உரையாடி நம்முள் இருந்த பனியை உடைத்து உங்களின் உரையாடல்களில் என்னை சேர்த்துக்கொண்டது என்னை உங்களில் ஒருவன் போல் எண்ணச் செய்தது. அதேபோல் அனைவரும் ஒருவருகொருவர் உணவு பரிமாறிக் கொண்டு, இரவு தரையில் ஜமுக்காளம் விரித்து படுத்துக்கொண்டு, காலையில் டீ குடித்துக்கொண்டு வயது வித்யாசமின்றி பள்ளிக்கூட நண்பர்கள் போல் அரட்டை அடித்துக்கொண்டு இருந்தது நான் சற்றும் எதிர்பாராத ஒரு இன்ப அனுபவமாக இருந்தது.  விழாவில் 84 வயதான இந்திரா பார்த்தசாரதி அவர்கள் ஒரு இரண்டு நாள் நான் என் வயசையே மறந்துவிட்டேன் என்று கூறும் போது அதற்கு காரணம் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அன்பர்கள் என்பதை தவிர வேறு காரணம் இருக்க முடியாது என்றென்பது அங்கு இருந்தவனாக என்னுடைய எண்ணம்.

கலந்துரையாடல்களிளும் விழாவிலும் தெளிவத்தை அவர்களின் பேச்சு எனக்கு இலங்கை தமிழ் மக்களுக்குள்ளேயே உள்ள மற்றுமொரு மலையக தேசத்தை அறிமுகம் செய்தது. அது வருத்ததிற்க்குரிய அறிமுகமாகும். ஜெவின் வலையத்தில் உள்ள தமிழின் சிறந்த நாவல்கள் வரிசையில் இலங்கை எழுத்தாளர்கள் பற்றி அதிகம் அறிமுகம் இல்லை என்று கூறியிருப்பார். ஏன் நமக்கு அறிமுகம் இல்லை என்று நான் அவ்வளவு நினைத்தது இல்லை. போர் சூழல் காரணமாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு சென்றுவிடுவேன். அதற்கு காரணம் அரசியல் என்பது கண்டிக்கத்தக்க மிகப் பெரிய துயரமாகும். தெளிவத்தை ஜோசப் அவர்களின் எழுத்து இலங்கை தமிழ் எழுத்துக்களுக்கு ஒரு நல்ல சாளரமாக எனக்கு அமைந்துள்ளதாக கருதுகிறேன். அதற்கு ஜெவிற்கும் வி.இ.வட்டதிற்கு நன்றி கூறுகிறேன். வரும் காலங்களில் நிரம்ப இலங்கை எழுத்துக்கள் இந்தியாவிற்கு வரும் என்று நம்புகிறேன். அதற்கும் வாசலாக வி.இ.வட்டம் இருக்கும் என்று எண்ணுகிறேன்.

மொத்ததில், இந்த இரண்டு நாட்கள் எனக்கு மிகுந்த ஒரு உத்வேகத்தையும் மன நிறைவையும் அளித்தது. இதைப்போன்று அடுத்து எங்குக் கூடினாலும் கலந்துக்கொள்ள ஆவலாய் உள்ளேன். இத்தனை பெரிய விழாவையும், அற்புதமான கலந்துரையாடல்களையும் நான்காவது முறையாக சாத்தியப் படுத்திய ஜெ மற்றும் வி.இ.வட்டதிற்கு நன்றிப் பாராட்டுகிறேன். 

பேரன்புடன்
ராஜேஷ்.
http://rajeshbalaa.blogspot.in/
FandFstores.com
எண்ணித் துணிக கருமம்

December 13, 2013

Silver Lining

I have heard about this term Silver Lining during my very bad days. Incidentally, I came across it my Marketing Class recently. Here it goes.

Mental Accounting : Who's Happier ?

Mr. A was given tickets to lotteries involving the World Series. He won $50 in one lottery and $25 in the other.
Mr. B was given a ticket to a single, larger World Series lottery. He won $75.

Survey: Who is happier A or B ?
Results: A: 56  B: 16 No difference: 15

In Western culture, give gifts in multiple boxes than in single box.
Idea: Good News in Multiple Boxes.

Mental Accounting : Who's Unhappier ?

Mr. A received a letter from the IRS saying that he made a minor error on his tax return and owed $100. He received a similar letter the same day from his state income tax authority saying he owed $50. There were no other repercussions from either mistake.

Mr. B received a letter from the IRS saying that he made a minor error on his tax return and owed $150. There were no other repercussions from his mistake.

Survey: Who is unhappier A or B ?
Results: A: 66 B: 14 No difference: 7

Bad News in Multiple Boxes -> BAD Effect.
Bad News - Integrate it.

Silver Lining Principle
Amy lost a cycle $180.
Chris lost a cycle $200.
But Chris found a bill on the road for $20. So, in net,  Chris lost $180.
When considered that $20, Who is happier ? Chris is happier. This is called SILVER LINING Principle. Because that plus $20 makes him sort of better.

Apply to business
A car is worth $20000. Bill it for $22000. But give a rebate of $2000. So total price is $20000

November 10, 2013

தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு

முதல் முறையாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை பற்றிய எனது கருத்தை சொல்லப்போனால் எனது ஆதங்கத்தினால் முதல் முறையாக எதிர்வினையை எழுதுகிறேன். 


ஸ்டார் விஜய் தொலைக்காட்சிகளிலேயே நான் மதித்து விரும்பி முக்கியமாக நடுவர்கள் நடுநிலையானவர்கள் என்ற முழுநம்பிக்கையுடன் பார்த்த ஒரு நிகழ்ச்சி தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு. இந்த நிகழ்ச்சி கடந்த 2009ஆம் ஆண்டு முதல் முறையாக ஒளிபரப்பப்பட்டது.  அப்போது நான் தில்லியில் இருந்தேன். காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகும். எனக்கு வயலின் வகுப்பு 10 மணிக்கு இருக்கும். ஆதலால் 9:50 வரை பார்ப்பேன். என்னை மிகவும் கட்டிப்போட்டு வைத்தது. நான் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அப்போது தொடங்க ஒரு உந்துதலாக இந்நிகழ்ச்சி . அன்று முதல் திரு. நெல்லை கண்ணன் ஐயா மீது மிகந்த மதிப்பு இருந்து வருகிறது.  முதல் தொகுப்பில் விஜயன் எல்லோரையும் மிரட்டினார். அவரது கருத்துக்கள் மிக சுயமாக ஆழ்ந்த அவதானிப்புகளின் பிரதிபலிப்பாக இருந்தது. பல நேரங்களில் நெல்லை கண்ணன் ஐயா அவர்கள் கண்கலங்கி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் மூலம் பல நல்ல பேச்சாளர்கள் எழுத்தாளர்களை கண்டுகொண்டேன். இந்த ஆண்டு நிகழ்ச்சியை கண்டபின் திரு நெல்லை கண்ணன் ஐயா அவர்களின் பேச்சுக்கள் பலவற்றை யூட்யூபில் பார்த்தேன். 2009 பிறகே இவரது பேச்சுக்களின் ஒளிப்பதிவுகள் யூட்யூபில் ஏற்றம் அதிகம் பெற்றன என்றென்பது குறிப்பிடதக்கது. 

முதல் தொகுப்பை தொடர்ந்து தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு - சுட்டிகள் வந்தது. அலுவுலக பணி இட மாற்றம் மற்றும் படிப்பு காரணமாக அதை நான் முழுவதுமாக காணவில்லை. பார்த்த சில நாட்களில் குழந்தைகள் நன்றாய் பேசுவது மகிழ்ச்சியளித்தது. 

இந்த ஆண்டு 2013இல் ஜூலை மாதம் முதல் மறுபடியும் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியின் இரண்டாம் தொகுப்பு ஒளிப்பரப்பானது. துவக்கம் முதலே இதன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்றார்ப்போல் பல நல்ல பேச்சாளர்கள் உரையாற்றினார்கள். திரு நெல்லை கண்ணன் அவர்கள் தலைமை நடுவராக இவர்களை நல்பாதையில் வழிநடத்தி  சென்றார். நிகழ்ச்சியின் துவக்க காலம் நல்துவக்கமாக அமைந்தது. இராமநாதன், கல்யாணசுந்தரம், ராஜ் மோகன், சரவண சித்தார்த், ஷண்முக சுந்தரம், மஞ்சரி, பௌசியா பானு, முனீஸ்  பவித்ரா, இளமுருகன், காசிநாதன்  ஆகியோர் நல்ல ஒரு தொகுப்பிற்கு நம்பிக்கையை விதைத்தார்கள். முதல் மூன்று சுற்றுக்கள் சில போதிய பயிற்சி அல்லாதவர்களை களைவதாக அமைந்தது.  இதில் ஒரு உறுத்தலான ஒன்று கண்ணுக்கு தெரியாமல் பின்புலத்தில் நடந்தது. அகிலா போன்ற நல்ல பேச்சாளரும் ராம் கபிலாவும் மற்றும் சிலரும் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு தாங்கலாக வரவில்லை என்று சொல்லப்பட்டது. தாங்களாகவே திடீரென்று விலகினார்கள். ஒரு வேளை அவர்கள் உச்சரிப்பு அவ்வளவு சரியில்லை இல்லை தாங்கள் இன்னும் சிறுமிகளே என்று வரவில்லையோ தெரியவில்லை.

என்னை பொறத்தவரை நிகழ்ச்சி கலைகட்டியது நான்காவது சுற்றில் திருக்குறளை பற்றி அனைவரும் ஒவ்வொரு  அதிகாரத்தில் பேசியது  தான். அதுவும் மஞ்சரியின் ஒழுக்கமுடைமை, இளமுருகனின் உழவு, ஷண்முகசுந்தரரின் புணர்ச்சிவிதும்பல், முனீஸ் பவித்ராவின் நெஞ்சொடுகிளத்தல் பேச்சுக்கள் அபாரம் அபாரம். அதுவும் காமத்துப்பாலில் உள்ள உளவியல் ரீதியான செய்திகளை அன்று தான் முதல் முதலில் உணர்ந்தேன் என்று சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். எனது எதிர்ப்பார்ப்பு பன்மடங்கு உயர்ந்தது. வரும் வாரங்களில் சங்க இலக்கியம், கவியரங்கம், இசையரங்கம் போன்றவற்றில் திளைப்பேன் என்று நினைத்தேன்.

ஐந்தாவது சுற்று. இங்கு தான் பயணம் திசை மாறியது.  நெல்லை கண்ணன் ஐயா அவர்கள் நடுவர் இருக்கையில் இல்லை. எங்கள் மனதில் சந்தேகம் வர காரணம் அவர் மிக நேர்மையானவர். இந்த நிகழ்ச்சி தமிழுக்கு செய்யக்கூடிய ஒரு தேவையான தொண்டு என்று உணர்ந்தவர். அவருக்கு இதை தவிர்க்கும் அளவிற்கு வேறு வேலை வைத்து இருப்பாரா என்றால் ? இருக்கும். ஆனால் அவர் இதன் வீச்சை அறிவார். ஆதலால் ஒரு காலமும் அவர் வராமல் இருக்க வேறு காரணம் இருக்காது என்று எண்ணுகிறேன். வந்த இரு நடுவர்களும் அருண்மொழி அவர்களும் தமிழச்சி தங்கபாண்டியனும் பேச்சாளர்களை மிகுந்த வருத்தத்துக்கு உள்ளாக்கினார்கள். பேச்சாளர்களை மெருகேற்றவே எதிர்வினைகள். ஆனால் தமிழச்சி தங்கபாண்டியன் தன் திராவிட முன்னேற்ற கழக கொள்கைகளையே முன்னிறுத்தி கொண்டு இருந்தார். அவரை ஒரு படித்த பண்பட்ட உலக அறிவு கொண்ட ஒரு பகுத்தறிவு  பீரங்கியாக தன்னை ப்ரபலபடுத்திகொள்ளவே ஈடுபட்டார் என்பது பார்க்கும் யாருக்கும் விளங்கும். எதற்கு தமிழச்சியை அமர்த்தினார்களோ ? ஸ்டார் விஜய் தொலைகாட்சிக்குதான் வெளிச்சம். நிகழ்ச்சியின் முடிவில் சுமார் 6 பேரு நீக்க  பட்டனர். பேர்  அதிர்ச்சி. இந்த நிகழ்ச்சி குட்டிச்செவுரு என்று வருத்ததுடன் கொந்தளிப்புடன் எனக்கு  உறுதியானது. திறமையான மஞ்சரி, முனீஸ் பவித்ரா, போசிய பானு நீக்கப்பட்டனர். நான்காம் பத்தியில் கடைசியில் சொன்னது எனக்கு இப்போது ஐயமாக தோன்றுகிறது. ஒரு வேளை ஸ்டார் விஜய் தொலைக்காட்சியே அவர்களை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டாதோ ? 

ஆறாம் வாரம் திரு நெல்லை கண்ணன் ஐயாவை மறுபடியும் கண்டதில் ஒரு நம்பிக்கை துளிர்த்தது. ஆனால் தமிழச்சியின் பங்கேற்பு கசப்பாகவே என் மனதை உறுத்தியது. ஆனால் ஆறாவது சுற்றே அரையிறுதிச்சுற்று என்று எண்ணுகையில் ஈடுபாடு அவ்வளவுவாக இல்லை. திரு நெல்லை கண்ணன் ஐயா பேருக்கு தான் உட்கார்ந்து இருந்தார் என்று தோன்றிற்று. இந்த சுற்றில் எட்டில் நான்கு பேர் விலக்கம். அதுவும் முதலில் பேசிய நான்கு பேர். 

இந்த வாரம் இறுதிச்சுற்று. ஒரு நடுவர் அருண்மொழி அவர்கள் நேரம் குறைவாக கொடுக்கப்  பட்டதனால் நீங்கள் குறைவாக செய்திகள் சேகரித்து உள்ளீர்கள் என்று  கூறினார். இதில் இருந்து எனக்கு மிக தெளிவாக தெரிந்தது அரையிறுதிச்சுற்றும் இறுதிச்சுற்றும்  ஒரிரு நாள் இடைவேளியில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது என்று.  அதுவும் முதலில் பேசிய இருவரும் மிகுந்த குறைந்த நேரமே பேசினார்கள். 'வியப்பில்லாமல்' அவர்கள் இருவரும் கடைசிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கபடவில்லை. கடைசியாக ராஜ்மோகன் வெற்றிப்பெற்றார். அவர் நல்ல பேச்சாளர். ஆனால் முதல் பரிசு வாங்கும் அளவிற்கு அவரது உரை ஒன்று கூட இருந்தது  இல்லை. ஷண்முக சுந்தரம், ராமநாதன், மஞ்சரி, முனிஸ் பவித்ரா, கல்யாண சுந்தரம், இளமுருகன் ஆகியோர் இவரை விட முன்பு பல நல்ல ஆழமான பேச்சாற்றியுள்ளனர். கடந்த மூன்று வாரங்களில் (திருக்குறள் வாரத்திற்கு பிறகு) வெளியேற்றபட்ட யாவர் முகங்களிலும் ஒரு வருத்தமோ ஏமாற்றமோ இல்லை. வருத்தபட ஒன்றும் இல்லை - நிகழ்ச்சி சீர்கெட்டுவிட்டது என்று அறிவார் அவர்.

ஆக இந்த நிகழ்ச்சி அவசர அவசரமாக முடிக்கப்பட்டது. அதுவும் ஏழே சுற்றுகளில். இதில் ஒரு கவியரங்கம், விவாதம், பட்டி மன்றம் போன்ற சுற்றுக்கள் இல்லை. இங்கு தான் நான் இவ்வளவு நேரம் தொலைக்காட்சி மேல் சந்தேக பட்ட நான் சற்று ஒரு படி உள்ளே சென்று அவதானிக்க விரும்புகிறேன். 2009 ஒன்பது போல் 9 மணிக்கு அல்லாமல் 10 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பானது ஒரு ஆரோக்கியமான ஒன்று. 10 மணி என்பது சற்று அதிக டி-ஆர்-பி கொண்ட நிகழ்ச்சிகளுக்கு கொடுப்பார்கள் என்று எண்ணுகிறேன். அப்படியென்றால் மக்களின் மீது  நம்பிக்கை வைத்தே  இரண்டாம் தொகுப்பை நடத்தி உள்ளனர். ஆனால் அவசர அவசரமாக ஏழே சுற்றுகளில் முடிக்க பெரும் காரணமாக நான் மக்களையே பார்க்கிறேன். கண்டிப்பாய் டி-ஆர்-பி குறைவாக இருந்து இருக்கும். இது தொலைகாட்சியின் குற்றமா ? இல்லை. மக்களின் குற்றம். இங்கே மற்ற நிகழ்ச்சிகள் போல் அழுகைகளும் ஆராவரங்களும் போலி நாடங்களும் இல்லை. திறமையும் நேர்மையும் கைகோர்க்கும் இடமாகவே இருந்தது. ஆனால் மக்களுக்கு நல்ல அறிவுள்ள பேச்சுகளை கேட்க ஆயுத்தமாக இல்லை.  அவர்களுக்கு மலிவான சராசரியான பொழுதுபோக்கான நிகழ்ச்சிகள் மட்டுமே தேவை என்ற அவல நிலை உள்ளது. அவர்கள் மொழி,  வாசிப்பு தன்மை, இலக்கியம், சொற்பொழிவு,  கலாசாரம், விவாதங்கள் போன்றவற்றில் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளார்கள். வேதனை அள்ளிக்க கூடிய ஒன்று. பாரதி சொன்ன "தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதர்கள்" உள்ளவரை இது போன்ற நிகழ்ச்சிகள் பெருவாரியான வெற்றிப்பெறாது. 

தமிழ் மக்களை காப்பாற்றுக! தமிழை காப்பாற்றுக!

October 27, 2013

மழலை சொல் கேளாதார்

நேற்று மாலை என் நண்பரின் வீட்டிற்குச் சென்றேன். வழக்கம் போல் அனைத்து உபயகுஷலோபயியும் ஆயிற்று. நண்பரின் குழந்தை நான் சென்ற தருணம் உறங்கிக்கொண்டு இருந்தான். சிறிது நேரம் பிறகு துயில் சிறிது களைந்து எட்டிப்பார்த்தான். நான் அருகில் அவனை சென்று அள்ள முயன்றேன். அழ ஆரம்பித்தான். பிறகு அவன் அப்பா அவனை மார்போடு அள்ளிக்கொண்டு அவனை சமாதானம் செய்தார். துயில் நன்றாய் களைந்த உடன் யார் புதியதாக என்று கூர்ந்து கவனித்தான். நான் சிரித்தேன். கொஞ்சம் சிரித்துவிட்டு தன் முகத்தை அவன் தந்தையின் மார்பில் புதைத்துக்கொண்டான். இம்முறை, நண்பரின் குழந்தை நன்றாக வளர்ந்திருந்தான் என்று எனக்கு தோன்றியது. கொஞ்ச நேரம் கழித்து என்னை எட்டி எட்டிப் பார்த்தான், சிரித்தான் பிறகு முகத்தை திருப்பிகொண்டான். இதை ஒரு விளையாட்டை செய்துக்கொண்டு இருந்தான். சிறிது நேரம் கழித்து நான் வீட்டிற்கு கிளம்பினேன். அப்போது கீழேப் பேசிக் கொண்டு இருந்தோம். அவன் கையை வைத்து என்மேல் மகிழ்ச்சியாக அடித்துக் கொண்டு இருந்தான். அவன் கண்கள் என்னையே நோக்கிக்கொண்டு இருந்தன என்று எனக்கு இப்போழுது தோன்றுகிறது. நான் சிரித்தால் அவனும் சிரிக்கிறான். பல நேரங்களில் அவனே என்னை பார்த்து சிரித்துக்கொள்கிறான். எனக்கு இப்போது தோன்றுவது ஒன்று தான். அவன் என்னிடம் எதிர்பார்த்தது (எதிர்ப்பார்த்தானா என்றால் எனக்கு தெரியாது) பதிலுக்கு ஒரு சிரிப்பு. சிரிப்பு மழையில் நனைந்தபின் நான் வீட்டிற்கு செல்கையில் வழியில் சற்று வான் மழையிலும் நனைந்தேன்.

இன்று மாலை இச்சம்பவத்தை அசைப்போட்டுக்கொண்டு இருந்தேன். அம்மழலை எதர்க்காக என்னிடம் சிரித்தான் ? ஒரு வேளை அவன் என்னிடம் விளையாடிக்கொண்டு இருந்தானா ? நான் ஒரு விளையாட்டு பொம்மையா ? நான் எப்படிப் பார்க்கிறேன் என்றால், அவன் என்மேல் வைத்தது நம்பிக்கை - நான் பதிலுக்கு சிரிப்பேன் என்று. சிரித்தேன். அவனும் சிரித்தான். 

குழலினிது யாழினிது என்பர் தன்மக்கள்
மழலை சொல் கேளாதார் 

என்ற வள்ளுவரின் வாக்கை முழுமையாக மற்றுமொரு முறை அனுபவித்தேன்.

அவனுடன் பேசும் நாட்களுக்கு நான் காத்துக்கொண்டு இருக்கிறேன்.

October 17, 2013

வாடிவாசல் - 1959 - சி.சு.செல்லப்பா

சென்ற வெள்ளிக்கிழமை (11-அக்டோபர்) அன்று பெங்களுரில் இருந்து புதுவைக்கு சரஸ்வதி பூஜைக்காக சென்றேன். அன்று மாலை ரயிலுக்கு புறப்பட சிறிது நேரம் இருந்தது. அப்போது சமீபத்தில் புத்தக கண்காட்சியில் வாங்கிய வாடிவாசல் என்ற குறுநாவலை வாசிக்கலாம் என்று எடுத்தேன். ரயிலில் மீதி பாதியை வாசித்தேன்.



வாடிவாசல் அமரர் திரு.சி.சு.செல்லப்பா அவர்கள் 1959 ஆண்டு எழுதியது. இந்த நூல் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் உள்ள ஒரு கிழவன் மற்றும் கிழக்கில் இருந்து வந்துள்ள பிச்சி, முருகு ஆகியவர்களின் நடுவே நடக்கும் உரையாடலில் துவங்குகிறது. கிழவன் ஜல்லிகட்டை பற்றி சற்று விவரிக்கிறான். கிழவனுக்கும் தெரியும் வகையில் பிச்சியும், முருகுவும் மனம் பாதி பேச்சிலும் பாதி நோட்டம் விடுவதுமாக இருந்தார்கள். அப்போது அம்புலி என்கிற ஒரு ஜல்லிக்கட்டு வீரரை பற்றி சிலாகிக்கும் வகையாக பேசுகிறார். அம்புலிக்கு காரி என்னும் காளையால் நேர்ந்த துயரத்தை வருத்துடன் சொல்கிறார். அப்போது கிழவன் திகுதிகுக்கும் வகையில் இது அம்புலி புள்ள பிச்சி என்று முருகு சொல்கிறான். தன் தந்தையிடம் அவரின் மரணப் படுக்கையில் கொடுத்த வாக்கிற்காக காரியை அடக்குவதற்க்காக வந்திருக்கிறான் பிச்சி. வழக்கம் போல் காரி போன்ற பிசாசு காளைகளை ஜல்லிக்கட்டில் விட்டு மிருகங்களின் மூலம் பேர் ஈட்டிக்கொள்ளும் ஜமிந்தார் வந்திருந்தார். மற்றும் திறளாய் திரண்டிருந்த மக்கள். இது தான் கதைகளம் ஆடுகளுமும் கூட. இதில் இருந்து இம்மி அளவும் வெளியே செல்லவில்லை. சி.சு.செல்லப்பா அவர்கள் இதனை ஒரு முழு நாவலாக படைப்பதற்கு அனைத்து சாத்திய கூறுகள் இருந்தப்பின்னும் அவர் அவ்வழியே செல்லவில்லை. ஒரு போதும் வாடிவாசல் நடக்கும் ஊரை பற்றியோ, அல்லது, அங்கு திருவிழாக்கு கூடியிருப்பதுப்போல் கூடியிருக்கும் மக்களை பற்றியோ, அல்லது, பிச்சி, பிச்சியின் தந்தை அம்புலி, ஜமிந்தார்களின் பின்புலத்தை பற்றி ஒருப் போதும் நாவல் செல்லவில்லை.

வாடிவாசல் என்பது ஜல்லிக்கட்டில் காளைகள் ஆடுகளத்திற்குள் நுழைவதற்கான நுழைவு கதவு. அதன் வழியாக தான் நூற்றுக்கணக்கான காளைகளை பலர் விடுவர். இந்த நூலில் சி.சு.செல்லாப்பா அவர்கள் ஜல்லிக்கட்டின் ஆடுகளத்தை அவரது வர்ணஜாலத்தின் மூலம் கண் முன் நிறுத்துகிறார் என்பதே மெய். காளை சீறும் விதம், மனிதன் காளையின் கொம்பை பிடிக்கும் விதம், மனிதன் காளையை நோக்கம் (காளையின் குணாதிசியங்களை சுதாரிப்பது) விடும் விதம், காளை மனிதனை தூக்கி வீசும் இடம், ஆகியவற்றை மிக நேர்த்தியாக சொல்லி இருப்பார். மனிதன் காளையை வீழ்த்தும் தருணங்களில் ஜமிந்தார், கிழவன், காரி காளை, பிச்சி, மக்கள் ஆகியோரின் மிக யதார்த்தமான மனநிலையை மிக அழகாக பதிவுசெய்து இருப்பார். சினிமாவில் காட்டுவது போல் அவ்வளவு எளிதல்ல காளையின் கொம்பை பிடித்து அதனை அடக்குவது என்பது நமக்கு புரியும். 




வாடிவாசல் மூலம் நான் உணர்ந்த சில உண்மைகள் : 
1) மனிதனுக்கு தெரியும் அது விளையாட்டு என்று. ஆனால் காளைக்கு தெரியாது அது விளையாட்டு என்று. நம்மிடம் இரக்கம் எதிர்ப்பார்த்தே அது உள்ளது. அதனை நாம் யாரும் தருவதில்லை.

2) காளை மூலம் வெற்றி பெற்று தன் அதிகாரத்தை தனது சுற்றுப்புரத்திற்ககும் தன்னிடம் உள்ள மனிதர்களும் ஊர் மக்களுக்கும் காண்பிக்கிறான் ஜமிந்தார். ஆனால் அதே காளை தோற்றால் தயவு தாட்சியம் இல்லாம் அங்கேயே கொல்கிறான். அதை கொன்று விட்டு திரும்பிக் கூட பார்க்காமல் ஒரு வருத்தமும் இல்லாமல் வீடு திரும்புகிறான்.

3)மனிதனில் உள்ள மிருகம் சினம் கொண்டு வருவதை பிச்சியின் விளையாட்டில் காணலாம். 

4) தன் காளை தோற்றாலும் பரவாயில்லை காளையை வீழ்த்து என சொல்லும் ஜமிந்தார் மனிதர்கள் மிருகங்களையும் (மனிதர்களையும்) அடக்கி ஆள நினைக்கும் அதிகாரத்துவுத்தின் நிகரில்லா சான்று.

5) வெரும் இரண்டு பவுன் தங்க காசுக்கிற்காக காளையிடம் உயிரை தூக்கி விசுகிறார்கள் மனிதர்கள்.

6) தொடை குத்து தான் நாலு நாள்-அ சரியாப் போய்டும். வேப்ப எண்ணை காச்சு ஊத்தினா சரியாப் போய்டும் என கிழடுகளும் மனிதர்களும் அதை சொல்பவர்கள் பலர் உண்டு.

இதனை படித்துவிட்டு ஜல்லிகட்டுப் போன்ற விளையாட்டுக்கள் தேவையா போன்ற பல கேள்விகள் எல்லோர் மனதிலும் எழும். எனக்கும். ஆனால் இந்த குறுநாவல் அதனை சொல்வதற்கு அல்ல. நான் மேற்சொன்ன அடிப்படை உண்மைகளை பின்புலத்தில் மிக நேரகா நேர்த்தியாக திரு.சி.சு.செல்லப்பா அவர்கள் சொல்லி இருப்பார். இன்னொரு முறை படித்தால் இன்னும் சில உண்மைகளை உணர்வேன் என்று நம்புகிறேன். 

ஒரு 2 மணி நேர வாசிப்பிற்கான ஒரு நல்ல வாசிப்பு இந்த 50-60 பக்க குறுநாவல். மிக சிறந்த் இச்சிற்றிலக்கியத்தை தங்களுக்கு அன்போடு பரிந்துரைக்கிறேன்.


பி.கு: குறிப்பாக ஒன்று சொல்லவேண்டும், சி.சு.செல்லப்பா இந்நூலில் சொல்லாதது, வேரு எங்கோ நான் வாசித்தது, ஜல்லிகட்டு என்றென்பது தமிழர் பண்பாட்டில் ஆயிரம் ஆண்டு காலத்திற்கும் மேலாக வரலாற்றில் அருபடாமல் தொடரும் ஒரு விளையாட்டு. 

பொருள்: துன்பம் விளைவிக்கும் எந்த செயலையும் செய்யாதே. 
Meaning: Do not do anything that may hurt (self & others)

October 07, 2013

புதுச்சேரி எக்ஸ்ப்ரஸ்

அக்டோபர் - 1. என்னுடன் வேலைப் பார்த்த ரகுவீர் தரிமலா வீட்டில் நன்றாய் சாப்பிட்டேன். எதற்கு இந்த செய்தி ? இறுதியில் சொல்கிறேன். இரவு 10:35க்கு க்ருஷ்ணராஜபுரம் வரவேண்டிய புதுச்சேரி எக்ஸ்ப்ரஸ் சற்றுத் தாமதமாக 11 மணிக்கு வந்தது. S4 பெட்டியில் 49ஆம் படுக்கை எனக்கு.

(நன்றி: வலையுலகம்) 

நான் ஏறும் போது சிலர் அவர்களுடைய பெயர்களை பெயர்ப் பலகையில் இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொண்டு இருந்தனர். அவர்கள் பெயர்கள் இல்லை என்று சற்றுக் குழம்பினார்கள். நான், அது தாதர்-இல் இருந்து வரும் சாலுக்யா எக்ஸ்ப்ரஸ். ஆதலால் அங்கு பெங்களுரில் இருந்துப் புதுவைச் செல்லும் பெயர்ப் பட்டியல் இருக்க வாய்ப்பு குறைவு என்று ஆங்கிலத்தில் சொன்னேன். அந்த பொன்னு என்னப் பாத்து யா யா`னு சொல்லிட்டு ஏறினாள். அந்த பொன்னு ரொம்ப நல்ல இருந்தா. நவீன உலகுத்துப் பெண் போன்று ஒரு தோற்றமும் பேச்சும் இருந்தாலும் அவளிடம் இருந்த அடக்கும் தேவையான அளவு நாணமும் மரியாதையும் அவளிடம் ஒரு நல்ல எண்ணத்தை உறுவாக்கியது. பரவா இல்லையே நம்ம பெட்டிலக் கூட பாக்க லக்‌ஷனமா இருக்குரப் பொன்னுங்க ஏறுதேனு நெனச்சுக்குட்டு ஏறினேன். எப்படியும் நம்ம கம்பார்ட்மேன்ல வரமாட்டாங்கனு (ஏன்னா அப்படி ஒரு ராசி/அனுபவம்) மனச தேத்தினு சென்றேன். அந்த மூன்றுப் பெண்கள் என்னோட கம்பார்ட்மேன்ல நின்றுக்கொண்டு அவர்களுடைய சாமான்களை கீழ்ப் படுக்கையின் கீழ் வைத்துக் கொண்டு இருந்தார்கள். அவர்களுடன் மூன்றுப் பசங்களும் இருந்தார்கள். எனக்கு ஒரு மெல்லிய சந்தேகம் இருந்தது. ஒரு வேலை அந்தப் பொண்ணுங்க பக்கத்து கம்பார்ட்மேன்ல படுத்துக்கப் போதுங்கனு. ஆனா அவுங்க அங்கேயே இருந்தாங்க ஒரு பத்து நிமிஷம். எதிர்ப்பார்க்காதப் போது தான் கடவுள் கொடுப்பார் என்பார்களே அதுப் போல் அமைந்தது. எனக்கு பயங்கரச் சந்தோஷம். இருப்பினும் ஒரு மெல்லிய சந்தேகம் இருந்துக்கொண்டே இருந்தது. ஏன்னா அந்தப் பொண்ணுங்க கொஞ்ச நேரம் அரட்டை அடித்து விட்டு எப்ப வேண்டுமானாலும் கிளம்பலாம். நாகமணிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் - தல. காட் இஸ் க்ரேட் தல. ஐ அம் ஆல் ஸ்மைல்ஸ். ய ஆவ்சம் க்ஏல் இன் தி ட்ரைன். ஜஸ்ட் ஸ்போக் டு ஹர் வைல் சீன்ங் நேம் இன் சார்ட் லிஸ்ட். ஆர் நேம்ஸ் வெர் தெர். ஐ ஹவ் ய லாஜிக்கல் எக்ஸ்ப்ப்லனேஷன் தட் இட் இஸ் ஃப்ர்ம் தாதர். சோ இட் மைட் நாட் பி தெர். டு யு நொ தீ பெச்ட் திங். ஷி இஸ் இன் மை கம்பார்ட்மேண்ட் தட் இஸ் வித்-இன் தி 6 சீட்ஸ் இன் தி பாக்ஸ். :D நாகமணிக்கு மற்றும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் - இத்தன வாட்டி ட்ரைன்`ல வந்துருக்கேன். இவ்லோ மாடர்னா க்லாசியா ஒரு பொன்னு வாய்ப்பே இல்ல. தே ஆர் ப்லேயிங் டம்-சி :) அவர் எனக்கு ஒரு பதில் குறுஞ்செய்தி அனுப்பினார் - :) என்ஜாய் பாஸ். அம் சிட்டிங் நெஸ்ட் டு 70இயர் ஒல்ட் தாத்தா.

ரயில் வரும் வேளையில் நான் என்னுடன் முன்பு வேலைப் பார்த்த ஜகதீஷிடம் பேசிக்கொண்டு இருந்தேன். ரயில் வந்ததால் அழைப்பை துண்டித்து விட்டேன். மேற்ச் சொன்னவர்கள் என்னுடன் பயணம் செய்துக் கொண்டு இருந்தும் நான் ஜகதீஷுக்கு மறுபடியும் அழைத்து சிறிது நேரம் பேசினேன். இவர்களோ டம்-சி எனப்படும் ஒரு செய்கை விளையாட்டினை ஆடிக் கொண்டு இருந்தனர். அவர்கள் மிக சுவாரச்யமாக மகிழ்ச்சியுடன் விளையாடினார்கள். அவர்களுடையக் கேலிகள் என்னை கவர்ந்தன. என் மனம் ஜகதீஷின் பேச்சில் இல்லை என்பதே உண்மை. அவன் பேச்சு எனக்கு நன்றாய்  ஒலித்தப் போதும், ரயில் வேகமாய் செல்கிறது எனக்குக் கேட்கவில்லை என்று செல்லப் பொய்ச் சொல்லி அழைப்பை நிறைவு செய்தேன் (அவனுக்கு கல்யானம் உறுதியானதால் அவனுக்கு அங்கு ஒருவர் காத்திருந்தார் என்பதாலும் நான் அவசரமாக  நிறைவு செய்தேன்). சேவியர் அழைத்தான். அவனிடமும் ஒரிரு வாரத்தைகள் பேசி, இங்கு சில முதன்மையானவர்கள் இருக்கிறார்கள் என்று  நிறைவு செய்தேன். பிறகு `The Sunlith Path' என்கிற ஒரு புத்தகத்தைப் படித்தேன். கொஞ்சப் பக்கங்களை படித்துக் கொண்டு இருந்தேன். ஆனால் மனமெல்லாம் டம்-சி-யில் அல்லவா இருந்தது. (இதில் ஒன்றும் வியப்பில்லை).

(நன்றி: வலையுலகம்)

அவர்கள் உற்சாகமாக விளையாடிக் கொண்டு இருந்தார்கள். என் மனமோ அவர்களிடம் தான் இருந்தது என்று முன்பே கூறினேன். அப்போது எனது காதில் நாப்பது என்று கேட்டது. என்னடா இது, இதுவரைக்கும் தமிழ் வார்த்தையே இவர்களுடைய விளையாட்டில் வரவில்லையே என்றப்பின் அவர்களின்  விளையாட்டை நோக்கினேன். அப்ப ஒருவன் நமாஸ் செய்வதுப் போல் காண்பித்துக் கொண்டு இருந்தான். நான் நாப்பது என்பதை வைத்து இது "அலிபாபவும் 40 திருடர்களுமா" என்றேன். அவன் ஆம் என்றான். அப்ப அந்தப் படத்தின் பெயரை கண்டுப்புடிக்க முயற்சித்த பெண் அவள் உள்ளங்கையை என் உள்ளங்கையில் அடிக்க அவள் விரல்கள் வானத்தை நோக்க காண்பித்தாள். நான் என் உள்ளங்கையை அவள் உள்ளங்கையுடன் லேசாக தட்டி வெற்றி வெற்றி என்றவாரு மகிழ்ந்தோம். நீங்களும் ஆட்டத்துல சேந்துக்கோங்க`னு அவுங்க கூப்பிடாங்க. நான் எனக்கு விளையாட தெரியாது. நான் வேண்டுமானால் படத்தின் பெயர்களை சொல்கிறேன். நீங்கள் உங்கள் ஆட்டத்திற்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றேன்.  நாகமணிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் - ஐ அம் ஆல்சோ ப்லேயிங் டம்-ஷராஸ் என்று.

புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன். அவர்களுடன் சேர்ந்து நானும் தமிழ்ப் படங்களுக்கு மட்டும் யூகித்தேன். ஒரு பெண் மலையாளம் என்பதை அறிந்துக்கொண்டேன். சரி நீங்கள் நீளத் தாமரா என்ற படத்தின் பெயரை இவர்களுக்கு நடித்துக் காண்பியுங்கள் என்றேன். அவங்களும் காண்பித்தார்கள். இவர்கள் எளிதாகக் கண்டுபிடித்தார்கள். பிறகு ஒருவன் ஒரு மூன்று வார்த்தை திரைப்படம் என்றான். கடைசி வார்த்தை வாலிபன் என்று கண்டுப் பிடித்தார்கள். உலகம் சுற்றும் வாலிபன் என்றோம். இல்லை. இரண்டாவது வார்த்தை அரண்மனை என்று செய்கை காண்பித்தான். சற்று குழம்பினோம். நான் கோட்டையா என்றேன். ஆம் என்றான். வஞ்சிக் கோட்டை வாலிபன் ? ஆம். சரியான பதிலை சொல்லி அவர்கள் மனதில் ஒரு சந்தோஷத்தை உண்டாக்கினேன். அவர்கள் ஹே ஹே ஹே என்று கோஷமிட்டார்கள். :) அவர்களுக்கு வஞ்சி என்றால் பெண் என்று பொருள் கூறி, பெண்களின் கோட்டையில் வாலிபன். அது நம் காதல் மன்னன் ஜெமினி என்று கூறினேன். அவர்கள் துத்துதுத்துது என்று உச்சுக் கொட்டினார்கள்.

(நன்றி: வலையுலகம்)

"முதல் மரியாதை" படத்தைப் பரிந்துரைத்தேன். அவர்கள் அதை உடனே கண்டுப்பிடித்து விட்டார்கள். அவர்கள் என்னை ஒரு படத்தின் பெயரை செய்கை செய்து காண்பிக்க சொன்னார்கள். இல்லை எனக்கு நடித்து காண்பிக்க தெரியாது என்று பவ்யமாக மறுத்துவிட்டேன். அவர்கள் இல்லை பரவாயில்லை முயற்சி செய்யுங்கள் என்றார்கள். ஆனால் மனதில் ஒரு சிறிய ஆசை செய்து காண்பிப்போமே என்று. மனதை மாற்றிக்கொண்டேன். செய்து காண்பிக்கலாம் என்று வந்தேன். அங்கு பலர் ஆர்வமாய் இருந்தனர். அதைக் கண்டு எனக்கு ஒரு அச்சம் உருவாயிற்று. ஆதலால் இல்லை எனக்கு நடிக்க வராது என்று சொல்லிவிட்டு அவர்களுக்கு சில ஆங்கில படங்கள் "அப் இன் தி எர்", "ஆல் அப்போட் உமென்" (அது "ஆல் அப்போட் மதர்ஸ்") மற்றும் 'கல்யானம் பன்னியும் ப்ரம்மச்சாரி" படங்கள் பெயரை என்னுடன் இருந்த சென்னை பெண்ணிடம் கூறினேன். அவுங்க ப்ரம்மச்சாரி, பன்னியும் ஆகிய வார்த்தைகளை கண்டுப்பிடிப்பதில் கொண்ட மெனக்கேடல் ஒரு அலாதி. ஆக மொத்தம் இந்த டம்-சி ரொம்ப நல்லா போச்சு. இதுக்கு முன்னாடி அரிசெண்ட்’ல வெள்ளிக்கிழமை மதியம் சில வாரங்கள் டம்-சி விளையாடி உள்ளோம். இன்றும் ரொம்ப நல்லா இருந்துச்சு. நம்மளும் நடிச்சுக் காண்பிக்க ஒரு நல்ல வாய்ப்ப நம்ம தவர விட்டுடோமேனு தோணுச்சு. நம்ம எதுக்கு இன்னும் இந்த கூச்சமெல்லாம் வைத்துக்கொண்டு இருக்குரோம். நாளை போய் பெரிய பெரிய படிப்பெல்லாம் படிக்கப் போரோம். இன்னும் இப்படி இருக்கோமேனு இருந்துச்சு.

பிறகு அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் எங்கு எதற்கு செல்கிறார்கள் என்று கேட்டேன். ஏன் என்றால், நான் செவ்வாய் அவர்களை சந்தித்தேன். புதன் காந்தி ஜெயந்தி என்றாலும், வியாழன் வெள்ளி விடுப்பு எடுத்து எங்க ஊரை சுற்ற ஒன்றும் பெரிதாக இல்லை. அவர்கள் சொன்னார்கள் அவர்கள் அசிம் ப்ரெம்ஜி பல்கலைகழகத்தில் எம்.ஏ எஜுக்கேஷன் படிக்கிறார்களாம். ஆதலால் அரசுப் பள்ளிகளில் ஒரு துறையில் ஆய்விற்காக (Field Study) வந்துள்ளார்களாம். குறிப்பாக ஆசிரியர்களிடம் நேர்காணல் எடுப்பார்களாம், வேண்டுமென்றால் பெற்றோர்களுடம் கலந்துரையாடுவார்களாம். வந்தவர்களில் சித்தார்த் என்பவன் சென்னைவாசி, ஒருவன் மதுரை, ஒருவன் கேரளாவில் மனப்புரம், ஒரு பெண் பஞ்சாப் மாநிலம், ஒரு பெண் சென்னை - ஆனா தமிழ் கொஞ்சம் கஷ்டபடுது (ஆங்கிலம் சரளம்), ஒரு பெண் கேரளம். இவர்கள் அனைவரும் மிக கண்ணியமாக அவர்களுடன் பழகிக்கொண்டு வந்தார்கள். பார்க்கவே நன்றாய் இருந்தது.  1 மணி ஆயிற்று. இரண்டு மணி நேரம் எப்படிச் சென்றது என்றே தெரியவில்லை. ஆனால் மிக மிக அருமையாக சென்றது.. சரி எங்க தங்கப் போரிங்க என்றேன். அவர்கள் ரெட்டியார்ப்பாளையம்’ல விடுதி ஒன்றை அவுங்க அசிம் ப்ரேம்ஜியோட புதுவை செயல்பாட்டு உழியர்கள் ஆயத்தம் செய்து உள்ளதாக சொன்னார்கள். ஆட்டோக்கு எவ்ளோ ஆகும்னு கேட்டாங்க. நான் ஒரு 200 கேட்க வாய்ப்பு இருக்கு என்றேன். எங்க போலாம்னு சித்தார்த் கேட்டான். பாண்டி’ல எப்போதும் போல் ஆரோவில், ஆஷ்ரம், மனக்குள் விநாயகர் கோவில், சுன்னாம்பார் போகலாம். நீங்க வேணும்னா சிதம்பரம் பக்கதுல பிச்சாவரம் போய்ட்டுவாங்க. ஒரு அறை நாள் ஆகும்னு சொன்னேன். சிறிது நேரம் பிறகு எல்லாரும் தூங்கலாம் என்றார்கள். எல்லோரும் உறங்கினார்கள். நானும்.  (குறிப்பு: நான் எப்போதும் ட்ரைனோ பஸ்-ஓ - ஏறி உட்காந்த உடனே தூங்கிருவேன்)  நாகமணிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் - அந்தப் பொன்னு மல்லூ பொன்னு. வெரி நைஸ் நைட். ஐ ஹட் ய ஹெவ்வி டின்னர். இன் ஸ்பைட் ஆப் தட் ஐ டிண்ட் கெட் ஸ்லீப் ;)

(நன்றி: வலையுலகம்)

காலை 6:30 மணிக்கே எழுந்துவிட்டேன். அந்த மல்லூ பொன்னு சைடு லொயர் உட்கார்ந்துனு வேடிக்கைப் பார்த்துனு வந்துச்சு. விழுப்புரம் வந்த உடனே நான் போய் வாயக் கொப்லிச்சுட்டு நாகமணிக்கு ஒரு ப்பொணப் போட்டேன். இரவு நடந்தையேல்லாம் கூறினேன். அவுரு என்ன சொன்னாருனு மறந்துட்டேன். ஆனா அவுரு 30 வருஷமா நானும் எத்தனையோ ரயில் பயணங்களில் சென்று வந்துள்ளேன்.  ஆனா இந்த மாதிரி ஒன்னுக் கூட நடத்து இல்லைனு பீல் பன்னார். வாழ்க்கைல இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோஷக்குதுக்கு தானே இந்த சின்ன மனசு ஏங்குது. FB'க்கு ஒரு குறுஞ்செய்தி தட்டினேன் - லாஸ்ட் நைட்ஸ் ட்ரைன் ஜர்னி - ஈஸிலி தி பெஸ்ட் ட்ரைன் ஜர்னி சொ ஃபார்.

(நன்றி: வலையுலகம்)

விழுப்புரத்தில் ஒரு காப்பி அடித்து விட்டு மறுபடியும் ஏறினேன். (குறிப்பு: நான் எப்போதும் விழுப்புரம் தாண்டி புதுவைக்கு 15நிமிடம் முன்னாடி தான் எழுந்துப்பேன்) அப்போது, மறுபடியும் விட்ட இடத்தில் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். அந்த மல்லூ பொன்னு சைடு லோயர்’ல எதிர்ப் பக்கம் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தாள். நான். எதுவும் பேசவில்லை. ஒரு 25 நிமிடம் கழித்து நீங்க கேரளால எந்த ஊரு ? நான் உட்டப்பலம் (Ottappalam)’னு சொன்னா. ஓ! அது எங்கே ? பாலக்காடு பக்கத்துல. ஓ! நான் பாலக்காடுக்கு என் ஃப்ர்ண்டோட கல்யானத்துக்கு வந்து இருக்கேன்’னு சொன்னேன். ஓ அப்படியா என்றாள். கொஞ்ச நேரம் கழித்து ஒரு சில வீடுகளையும், ரயில்வே கடப்புகள் (க்ராசிங்ஸ்) நகரப்புரம் வந்துவிட்டது போல் ஒரு எண்ணம் தனை உண்டாகிற்று. எனக்கு அச்சம். என்னடா 8 மணிக்கு தானே இந்த ரயில் புதுவையை சென்றடையும். இதென்ன 7:45க்கு விற்கெல்லாம் புதுவை வந்து விட்டது என்று. அந்தப் பொன்னு கிட்ட இன்னும் கொஞ்ச நேரம் பேச்சுக்கொடுக்கனும் போலைய இருந்துச்சு. பாவி ரயில் 20 நிமிஷம் முன்னாடியே வந்துருச்சு அன்னிக்கு. அம்மாக்கு எங்க இருக்கேள் என்று ப்போன போட்டேன். 7:45’க்கே வந்துருச்சா. 8 மணிக்குத்தானே வரும் என்றார்கள். புதுவை இரண்டாவது ரயில் நடைமேடையை வந்தடைந்தது புதுச்சேரி எக்ஸ்ப்ரேஸ். அந்தப் பொன்னு மத்தவங்கள எழுப்பிச்சு. (எச்சரிக்கை: நான் சொல்லப்போவது சிலருக்கு வயத்து எரிச்சலை உண்டாக்கி, இதய எரிச்சலை உண்டாக்கி, மாரடைப்பே வரக்கூடும்) என்னிக்கி ரிட்டன் என்றேன். அந்தப் பொன்னு அக்டோபர் -15 என்றாள். எனக்கு கடந்த சில நாட்களில் விழுந்த மிக இனிமையான செய்தி அதுவே என்று பரவசமடைந்தென். ஏன் என்றால் அக்டோபர் -15 அன்று கொலு பொம்மைகளை எடுத்து பரன்மேல் வைத்துவிட்டு கிளம்புவது என்று ஒரு இரண்டுமாதம் முன்பே திட்டம் செய்து உள்ளேன். எல்லாரும் எழுந்த உடன் ஹவ் ய நைஸ் ஸ்டே. என்ஜாய்னு சி யூ என்று கிளம்பினேன். அவர்களும் த்ன்க்யூ என்றார்கள். நான் கட கட வென்று வெளியே வந்து அம்மாவுக்காக காத்திருந்தேன். அவர்கள் சிறிது நேரம் கழித்து வந்தார்கள். அவர்களே ஆட்டோப் பார்த்துக்கொண்டு ஆட்டொவில் ஏறினார்கள். அவ்வளவு என்று கேட்டேன் 100 என்றார்கள். பிறகு அம்மாவுடன் அவர்கள் சென்றப் பாதையில் அவர்கள் பின்னால் தாவரியல் பூங்கா வரை சென்றேன். (குறிப்பு: வழக்கமாக நான் மகாத்மா காந்தி ரோட் வழியாக இந்தியன் காப்பி ஹொஸ் சென்றுவிட்டு செல்வேன்). அவர்கள் இடபக்கம் ரெட்டியார்பாளையம் சென்றார்கள். நான் வலப்பக்கம் ராஜா தியேட்டர் பக்கம் சென்றேன். பின்பு அல்லாவற்றையும் அசைப்போட்டுக்கொண்டு சென்றேன். சேவியர், நம்பினு எல்லார்க்கிட்டேயும் சொன்னேன். நேத்து ரயில்’ல வசந்துகிட்ட முழுசா சொன்னேன். FB-ல போட்டேன். நாகமணி மெய்ன் கரக்டர்ஸ் நரேஷன் மிஸ்ஸிங்னு கம்மண்ட் பன்னார். அவருக்காக ஒரு சிறு குறிப்பு கொடுத்தேன். ட்ரைன விட்டு இறங்கியப்பின் அல்லவா தோன்றியது அந்தப் பெண்ணிடம் நெல்லியம்ப்பதி பத்திப் பேசி இருக்கலாம். இப்போது  அவர்களுடைய நினைவுகளை அசைப்போட்டுக் கொண்டு அக்டோபர்-15’க்கு சாலுக்யா எக்ஸ்ப்ரஸில் அவர்களுக்காக காத்திருக்கிறேன்.  குறிப்பு: உண்மையிலேயே எனக்கு சித்தார்தோட பெயரைத் தவிர வேறு யாருடைய பெயரும் தெரியாது. கேட்கவுமில்லை).

பி.கு (16-அக்டோபர்) - 15-அக்டோபர் அன்று புதுச்சேரியில் இருந்து பெங்களுரு செல்கையில் அவர்களை மீண்டும் கண்டேன். அவர்களில் இரண்டு ஆண்கள்  (மற்றும் ஒரு புதிய நபர்) மட்டுமே இருந்தனர் . மற்ற நான்கு பேர் அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று அப்படியே பெங்களுர் வருவதாக அவர்கள் திட்டத்தை மாற்றி கொண்டனர். அந்த ஒரு நபரின் பெயரை கேட்க எனக்கு ஆவலாய் இருந்தது. ஆனால் கேட்பது ஒழுக்கம் அல்ல என்று கேட்க கூடாதென்று இருந்துவிட்டேன். பின்பு இரண்டு மணி நேரம் கழித்து அந்த பசங்க எதேர்ச்சய்யாக ஒருவர் பெயரை பேசிக்கொண்டாட்கள் (ஒட்டப்பலம் சென்ற வழியை பற்றி). ஒட்டப்பலம் ப்ரீத்தா, மதுரை தாமரைச் செல்வன், மனப்புரம் ரபிக், சென்னை சித்தார்த் (மற்ற இருவர் பெயர் தெரியவில்லை)

கேள்வி முயல்.
பொருள்: கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயற்சி செய் 
Meaning: Listen to good advice/techniques from knowledgeable/ experienced person

September 28, 2013

Vaishnav Jan To [One Who is a Vaishnav]

Vaishnav Jan To, sung by Bharat Ratna Shrimathi M.S.Subbulakshmi, is a song that freezes me everytime I listen to it. M.S.Subbulakshmi has given so much soul to such excellent lyrics. It was roughly in early 2008 I listened to this song, since then it has always been in my playlist. I listened to this again today and felt crying. Many singers have sung Vaishnav Jan To. But the one by M.S.S stands out. She is a legend. Her lesser known erraticaly written part of life has been excellently perceived in an essay by writer Mr.Jeyamohan at ஓர் அக்கினிப்பிரவேசம்  (click)

Video Linkhttp://www.youtube.com/watch?v=yHqhLHn6Ezc 

M.S.Subbulakshmi in sublime form [Photo Courtesy: Raghu Rai]

Song and Meaning
        Vaishnav jan to tene kahiye je
        [One who is a vaishnav]  
        PeeD paraayi jaaNe re
        [Knows the pain of others]
        Par-dukhkhe upkaar kare toye
        [Does good to others, esp. to those ones who are in misery]
        Man abhimaan na aaNe re
        [Does not let pride enter his mind]
        Vaishnav...
     
        SakaL lok maan sahune vande
        [A Vaishnav, Tolerates and praises the the entire world]
        Nindaa na kare keni re
        [Does not say bad things about anyone]
        Vaach kaachh man nishchaL raakhe
        [Keeps his/her words, actions and thoughts pure]
        Dhan-dhan janani teni re
        [O Vaishnav, your mother is blessed (dhanya-dhanya)]
     
        Vaishnav...

        Sam-drishti ne trishna tyaagi
        [A Vaishnav sees everything equally, rejects greed and avarice]
        Par-stree jene maat re
        [Considers some one else's wife/daughter as his mother]
        Jivha thaki asatya na bole
        [The toungue may get tired, but will never speak lies]
        Par-dhan nav jhaalee haath re
        [Does not even touch someone else's property]
        Vaishnav...

        Moh-maaya vyaape nahi jene
        [A Vaishnav does not succumb to worldly attachments]
        DriDh vairaagya jena man maan re
        [Who has devoted himself to stauch detachment to worldly pleasures]
        Ram naam shoon taaLi laagi
        [Who has been edicted to the elixir coming by the name of Ram]
        SakaL tirath tena tan maan re
        [For whom all the religious sites are in the mind]
        Vaishnav...

        VaN-lobhi ne kapaT-rahit chhe
        [Who has no greed and deciet]
        Kaam-krodh nivaarya re
        [Who has renounced lust of all types and anger]
        BhaNe Narsaiyyo tenun darshan karta
        [The poet Narsi will like to see such a person]
        KuL ekoter taarya re
        [By who's virtue, the entire family gets salvation]
        Vaishnav...
                            - Narsinh Mehta

னம் தடுமாறேல்.
Meaning: Never get disturbed

June 30, 2013

Reunion at Bangalore - Tata ELXSI (Chennai)

At last, I got the photos from our beloved Sai Prithvi, hence very late in posting this post.

After almost 2 months of conceiving and planning this get-together, we, Tata Elxsi-Chennai friends, decided to gather for a reunion with our families on 30-June-2013. We expected few more friends to join us, however, due their work locations and other unavoidable circumstances they could not join us this time. We had earlier met in 2010 for Gopi-Vrushali marriage and in 2011 for Manickam-Rekha marriage, but this was the first time for a get-together after we start disintegrating from TATA ELXSI from 2008. 

We met at Fantasy Golf Resorts, near the Bangalore Airport. I was first to reach the place in order to receive Abirami with her family who came all the way from Chennai for this. Later Manickam and family, Vasanth, Sai Prithvi joined us. Little later, Gopi joined us with his family. Sai Prithvi reached Bangalore from Chennai a day before itself. A night before, I, Vasanth and Sai Prithvi watched Raanjhanaa at Cine Max, Soul Space Arena opposite Samsung in Outer Ring Road.

We started with a breakfast and had chit chats. It was great to rewind the days we had together at Tata Elxsi, Chennai. After Tata Elxsi time had flied. We played cricket, table tennis, golf, badminton, carrom etc. It was fun playing with Abirami's second daughter Deekshika, Manickam's son Advaith and Gopi's son Amartya. All the three kids made our day very memorable. I, Manickam, Vasanth, Gopi, Sai Prithvi jumped into the swimming pool. Mine and Gopi's swimming shorts were bit funny. We were in swimming pool for 45 minutes and then it was time for lunch. 

We had a nice lunch and at around 2 p.m it was time for Abirami & Family to leave to Chennai via Vellore. Later, rest of us played carrom, badminton etc. We had a high tea and left the place with cherishable time. 

Even now, when I write this blog after so many months, I feel happy and cherish the time with Deekshikha, Advaith and Amartya. I wish to carry this forward as a legacy. I am sure we would meet again once in 2-3 years.

Here are few photos (Courtesy: Sai Prithvi)

 
 Left: Sai Prithvi Right: Rajesh with Advaith and Deekshika

 Vrushali, Abirami, Manickam, Rajesh
Deekshika and Advaith

Deekshika

 
 Left: Gopi and Amartya Right: Vasanth and Deekshika
Manickam and Advaith

 
Left:  Manickam and Family  Right: Vasanth
Vasanth, Gopi, Sai Prithvi

Rekha, Abirami & Family, Manickam

Wondering what Sai Prithvi was doing at that moment

With Advaith



Vasanth


Group Pic

Manickam and Sai Prithvi

Vasanth and I