Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

January 22, 2019

எனக்கு முக்கியமான ஜெயமோகன் மற்றும் பிற எழுத்தாளர்கள் பதிவுகள்

இக்கட்டுரைகளின் தொகுப்பு பெரும்பாலும் ஆசான் நிலையில் உள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் வலைத்தளத்தில் இருந்து வாசித்து சேமித்து வைக்கபட்டது. 

இவற்றில் எந்த ஒரு ஜெயமோகன் புத்தகமோ தொகுக்க படவில்லை. உதிரிகளாக சில இருக்கலாம். ஆயினும் அந்த ஒரு புத்தகமும் இல்லை. 


ஆனால், இக்கட்டுரைகள் தேர்ந்தெடுக்க எந்த வித ஒரு மதிப்பீடும் அளவுகோலும் நான் வைத்துக்கொள்வது இல்லை. பெரும்பாலும் 2-3 முறை வாசித்து இருப்பேன். இவை பெரும்பாலும் நான் வாசித்தபொழுது இருந்த மனநிலையில் அக்கட்டுரையில் இருந்த கருத்துக்காவோ அல்லது ஒரே ஒரு வரிக்காகவே அல்லது ஒரே ஒரு சொல்லுக்காக்கவோ எனக்கு முக்கியமானதாக பட்டவை. 

பெரும்பாலும் எனது மீள் வாசிப்பிற்காகவே பயன்படுத்தபடும் எனக்கான Bookmark post இது.

பொது

நூல்மரபில் - மனனம், ஸ்வாத்யாயம், தியானம் - மனப்பாடம்
செயல் தியானம் - தியானம்
இளிப்பியல்
அமெரிக்க நூலகச் சந்திப்பு - ஜெயமோகன் நேர்காணல் (Day Planning - என் நாளை எப்படி திட்டமிடுகிறேன், Indian Values)
நாம் எதைப்பற்றியாவது பெருமிதம் கொள்ளமுடியுமா?
ஒரே ஆசிரியரை வாசித்தல்
சகஜயோகம்
எதிர்விமர்சனங்களை தவிர்த்தல்… நம்பிக்கையிலிருந்து தொடங்குவது
யோகம்,ஞானம்
விற்பனை பற்றி - அகம்நக விற்பது - ஆட்டத்தின் ஐந்துவிதிகள் நூலுக்கான முன்னுரை 
எழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா?
எழுத்தாளன் வாழ்க்கை பற்றிஅறிவுரைக்கலாமா? -2
இயற்கையின் சான்றுறுதி (நாய்கள் பற்றிய எல்லா கட்டுரைகளும் இதன் கடைசியில் உள்ளன)
இன்றைய தற்கொலைகள் [செயல், பொருள், இலட்சியம், இலக்கு, குழந்தைகள், பெற்றோர்கள், தற்கொலை, அகவாழ்வு, உளச்சோர்வு, காதல், தோல்வி, நுகர்வு, விளையாட்டு, அதீத போட்டி]
இந்து பாக சாஸ்திரம்  (சமையல் மேல் ஏன் இத்தனை ஈடுபாடு? ஏனென்றால் இங்கே சமையல் வெறும் உணவு மட்டுமல்ல. அது சமூகப்படிநிலையில் மேலேறுவதன் வெளிப்பாடும்கூட)




லோலோ, கடிதம் [செல்வம், காமம், அதிகாரம் மூன்றிலும் மனிதனுக்கு பேராசை உள்ளது. அது அனைத்தையும் திரிபடையச் செய்கிறது.]

கௌதம் மேனன், துருவநட்சத்திரம், மீட்சி [குறுகிய கால தன்னலப் புத்தியால் இவற்றைச் செய்துவிட்டு தங்கள்  சொந்த வாழ்க்கையில், தங்கள் வாரிசுகளின் வாழ்க்கையில் அவற்றுக்கான விலையை கொடுக்காமல் சென்ற எவருமே இல்லை.............தோல்விச்சூழலில் வெளித்தெரிவதுதான் மனிதனின் தரம் என்பது.........அவரோட அந்த நிமிர்வு, எல்லாத்தையும் பொறுப்பேத்துக்கிட்டு எவரையுமே குறைசொல்லாம இருக்கிற அந்த ஃபைட்டர் ஆட்டிடியூட், அதான் எனக்கு இன்ஸ்பிரேஷன் ......... நான் வணிகமே செய்வதில்லை, என் அப்பாவின் ஆணை அது.]

ரசனை 
நுகர்வுக்கு அப்பால் [இயற்கையை ரசிப்பதைக்கூட நுகர்வாக எண்ணிக்கொள்ள நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். ஊட்டி ஏரியை பார்த்து ‘கொடுத்த காசுக்கு ஒர்த்துடா!” என்று சொல்லும் பலரை நான் கண்டிருக்கிறேன். அம்மனநிலை ரசனையை முற்றாக அழிப்பது. ஏனென்றால், நுகர்வு என்பது நாம் விரும்பும் பொருளை நம் விருப்பப்படி ஆக்கிக்கொண்டு அனுபவிப்பது. நம் விருப்பத்தையே பொருளாக ஆக்கி நுகர்ந்து மகிழ்கிறோம். ரசனை என்பது நாம் அந்த ரசிக்கப்படும் விஷயம் நோக்கி முன்னகர்வது. ரசனை என்பது நம்மை சற்றேனும் மேம்படுத்தவேண்டும். நுகர்வில் நாம் வளர்வதில்லை.............இன்றைய வாழ்க்கையில் நுகர்வோர் மனநிலைக்கு வெளியே சென்று நாம் அடைபவை மட்டுமே உண்மையில் மதிப்புள்ளவை. நுகர்வுக்கு அப்பால் செல்லும்போது மட்டுமே வாழ்கிறோம்.]



வரலாறு

இசை

கவிதை


ஆன்மிகம் 
கீதை
திருக்குறள் / இலக்கியம் / தத்துவம் / கல்வி / அறிவு / கலை


மு. இராகவையங்கார் - கலாச்சாரம் / அறிவுச்செயல்பாடு [கலாச்சாரம் என்பதே மானுட இயற்கைக்கு எதிராகச் செயல்படுதல் என்று சொல்லலாம். மானுடவிலங்கு காமமும் பசியும் வன்முறையுமாக அன்றாடத்தில் வாழ்ந்து அழிவது. உள்ளுணர்வு மட்டுமே அதன் தொடர்ச்சியாக நீடிக்கிறது. கலாச்சாரம் என்பது நேர் எதிரானது. காமத்தை வன்முறையை கட்டுப்படுத்தி, பசியை ஆட்சிசெய்தாலொழிய கட்டுப்பாடு இல்லை. கூடவே அன்றாடத்தில் மட்டுமே திளைக்கும் உள்ளத்தை இழுத்து விரித்து கடந்தகால நினைவுகளாக, எதிர்காலக் கனவுகளாக ஆக்கவேண்டும்.

சென்ற கால அறிஞர் ஒருவரை பற்றிப் பேசினால் உடனே “அதெல்லாம் தெரிஞ்சுகிட்டு இப்ப என்ன?” என்று உங்களுக்குத் தோன்றினால் நீங்கள் எவராக இருந்தாலும் கலாச்சாரத்துக்கு எதிரான எளிமையான மானுடவிலங்கு மட்டும்தான். இன்னொரு சொல்லில் பாமரர். அவர்களே நம்மில் பெரும்பாலானவர்கள். அதைச் சொன்னால் வருந்துவார்களென்றாலும் அதுவே உண்மை. அறிவுச்செயல்பாட்டில் ஈடுபடுபவர்கள் அறிஞர்களை நினைவுகூர்ந்தே ஆகவேண்டும். அப்படியெனில் மட்டுமே அவர்கள் நினைவுகூரப்படுவார்கள். அந்த உறுதிப்பாடே அறிவுச்செயல்பாட்டின் அடிப்படை ]

வயதடைதலும் வயதாவதும் -ஒரு கடிதம்
பாத்தும்மாவுடைய ஆடும் இளம் பருவத்துத்தோழியும்
காமமும் கம்பனும்- ஒரு காலைநேரம்
கம்பனும் காமமும், இரண்டு
கம்பனும் காமமும் 3:அருளும் மருளும் அது
மகள் மங்கலம் ,கம்பனும் காமமும் 6
மனம் (மனதை என்ன செய்யவேண்டும் குரு?)
பேச்சும் பயிற்சியும்  (மற்றும் பொதுக்கல்வி vs தற்கல்வி)
காடு, நிலம், தத்துவம் (நாங்கள் லாஜிக்கல் பாஸிடிவிஸத்தைக் கொண்டு அன்றுவரை பேசப்பட்ட அத்தனை தத்துவநிலைபாடுகளையும் உடைத்தோம். எஞ்சியது இடிபாடுகள். எங்களால் எதையும் உருவாக்க முடியவில்லை. அழகியலையோ அறவியலையோ” நாங்கள் லாஜிக்கல் பாஸிடிவிஸத்தைக் கொண்டு அன்றுவரை பேசப்பட்ட அத்தனை தத்துவநிலைபாடுகளையும் உடைத்தோம். எஞ்சியது இடிபாடுகள். எங்களால் எதையும் உருவாக்க முடியவில்லை. அழகியலையோ அறவியலையோ” )

அர்ஜுனனும் கர்ணனும் [மகாபாரதத்தில் கர்ணன் மெய்ஞானம் தேடி எந்தப் பயணத்தையாவது செய்திருக்கிறானா? எங்காவது அலைந்திருக்கிறானா?

மாறாக அர்ஜுனன் திசைப்பயணம் செய்துகொண்டே இருந்தவன். சிவனையே சந்தித்து பாசுபதம் பெற்றவன். தேடுபவனுக்கே சொல்லப்படும் இல்லையா? // அர்ஜுனர்களுக்கே கீதை சொல்லப்படமுடியும். ஒரு போரில் எதையும் அடையும் நோக்கம் இல்லாமல், எதற்கும் எதிராக இல்லாமல், கடமையின்பொருட்டே வில்லெடுப்பவர்கள் அர்ஜுனர்கள்தான். அவர்கள் வில்லை தாழ்த்துவது சொல்லைப் பெறுவதற்காகவே.]




====

இலக்கிய வாசிப்பு / வெண்முரசு பற்றி 
ஒரு மலரிதழை முளைக்க வைத்தல்
கல்விச்சாலையில் இந்திய மரபிலக்கியங்கள்
யானைடாக்டர்- கதை தொன்மமாதல் (கதையாக சொல்லுதல்)
மொழியாக்கங்களை வாசிப்பது (this has lot of references on translation works)
தமிழாசியா- வாழ்த்துரை (ஏன் வாசிக்க வேண்டும்? ஏன் எழுத்தாளர் வேண்டும்)
பிறழ்வுகள் [ஒரு கட்டிடத்தை நீங்கள் கட்டி குடியிருக்கிறீர்கள். தொன்மையான, பாரம்பரிய உரிமையாக கிடைத்த பழைய கட்டிடம். அதை ஒரு விசை உடைத்து விரிசலிடுகிறது. நீங்கள் அதை விட்டு வெளியே வந்து வெட்டவெளியில் நிற்கிறீர்கள். பின்னர் நீங்களே ஒரு புதிய வீட்டை கட்டுகிறீர்கள். புதிய வீடுகள் அவ்வாறுதான் கட்டப்படுகின்றன. அந்த விசைதான் இலக்கியம். அது உடைக்கிறது, மறுபரிசீலனைக்குச் செலுத்துகிறது]
மொழிவழி அறிதலும் மொழியை அறிதலும்  [நீங்கள் பார்த்த ஒன்றை, அறிந்த ஒன்றை மொழியாக ஆக்கத்தெரியவில்லை என்றால் உங்களுக்குள் அது எவ்வகையிலும் தொகுக்கப்படவில்லை என்றுதான் பொருள். அது எந்த வகையிலும் உங்களுக்குப் பயனற்றது என்பதே உண்மை]

ச ங் க ச் சி த் தி ர ங் க ள்

சங்கப்பாடல்








பேட்டிகள் 
ஓலைச்சுவடி இதழ் - பேட்டி
கட்டிடக் கலை


வெண்முரசு பற்றி 


=======================

புத்தர்


நகைச்சுவை


விலங்குகள்



குமரித்துறைவி [தனிமையின் புனைவுக்களியாட்டு / கதைத் திருவிழா]
=======================================================================


குமரித்துறைவியின் விழா [திருவிழா என்பதைப்பற்றி தொடர்ந்து சொல்லிவருகிறேன். ஆரல்வாய்மொழி என்னும் ஊரில் வாழ்பவர்கள் அந்தப் பத்துநாளும் இருக்கும் நிலை என்பது ஓர் அரிய விடுதலைநிலை. அப்படி ஒருவரின் ஆயுளில் நினைவறிய அறுபது எழுபது விழாக்களை பார்க்கமுடியும். வாழ்க்கை என்பதே அவ்வளவுதான். அதில் மகிழ்வுக்குரிய எந்த தருணமும் விடுதற்குரியவை அல்ல. சில்லறை ‘பகுத்தறிவு’ , நம்மை ஒரு படி மேலாக எண்ணிக்கொள்ளும் பலவகை ஆணவங்கள் வழியாக சமூகத்தின் கூட்டுக்களியாட்டங்களை இழந்தால் உளச்சோர்வுக்கே செல்வோம். உலகியல்வாழ்க்கையில் செல்வம் ஈட்டுவதும் நுகர்வதும் முக்கியம்தான், ஆனால் அவற்றுக்கிணையானவை இத்தகைய களியாட்டுகளும். பழங்குடிச் சமூகங்கள் முதல் அதிநவீன சமூகங்கள் வரை அவை வெவ்வேறு வகையில் உள்ளன]

=====

==========

======


====



வெண்முரசு கட்டுரைகள்
01 முதற்கனல்


=======================
========


கோவில்கள்

தொடர்கள் 
மகாபாரத கதைகள்



ஜெயமோகன் Quotes

தன்னிலை என்பது நாம் ஏற்று அணிந்துகொள்ளும் அடையாளம் அல்ல. நம்மில் உருவாகிக்கொண்டே இருப்பது. அழிந்து அழிந்து உருவாவது. [அத்வைத மரபின்படி ஒருவன் முதல்முழுமையின் பகுதியாக தன்னை அறுதியாக உணர்வதே முழுத்தன்னிலை. அதைக் கடந்து சென்று தன்னிலையழிவது வீடுபேறு]
- ஜெயமோகன் [இந்து என உணர்தல்- ஒரு கடிதமும் பதிலும்]

இங்கு நிகழும் நன்றுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது ஆணவம். தீதுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது மேலும் ஆணவம். இங்கு உங்களை எதிர்த்து நின்றிருப்போரின் வாழ்வை நீங்கள் அமைத்தீர்களா என்ன? இங்குவரை அவர்கள் தெரிந்து வந்தமைந்த வழியை வகுத்தீர்களா? முடிவுக்கு மட்டும் நீங்கள் எவ்வண்ணம் பொறுப்பேற்கிறீர்கள் என்ற உங்கள் சொல்லை நான் தலைக்கொண்டவன்.

இங்கனைத்திலும் நிறைந்திருக்கும் அழிவற்ற ஒன்றின் அலைகளே இவையென்று உணர்ந்தவன் துயரோ களிப்போ கொள்வதில்லை. எழுவதே அமையும். எரிவதே அணையும். எனவே இருமைகளற்று துலாமுள் என நிலைகொள்பவனுக்கு சோர்வென்பதில்லை என்றது உங்கள் மெய்வேதம்.
-ஜெயமோகன் [வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை-54]

ஆக, நான் முன்வைப்பது ஒரு முக்கியமான வேறுபாட்டை. போலிக்கும் அசலுக்குமான வேறுபாட்டை. உண்மையான கருத்தியல் நிலைப்பாட்டுக்கும் உள்நோக்கம் கொண்ட வெறுப்புக்குரலுக்கும் இடையேயான மாபெரும் தூரத்தை.

இந்நிலையில் செய்யக்கூடியது இந்த உண்மையை முடிந்தவரை உரத்துக்கூவுவதுதான். அதற்கு ஏதேனும் விளைவுகள் வருமென்றால் அதைச் சந்திப்பதுதான். அப்படி உரத்துக்கூவ முதன்மையான தகுதி நம் மடியில் கனமில்லாமல் இருப்பது. நமக்கு சுயலாப நோக்கங்கள் இல்லாமல், அவை பறிபோகுமா என்ற அச்சமில்லாமல் இருப்பது. அது எனக்கிருப்பதாக நம்புவதனால் இதைச் சொல்கிறேன்.
-ஜெயமோகன் [அவதூறு செய்கிறேனா?]

நான் எப்போதும் சொல்வதுதான் , ஒருவாழ்க்கையில் பல வாழ்க்கைகளை வாழ்பவனே வாழ்வை பொருள்கொள்ளச் செய்பவன். மெய்யாக வென்றவன் அவன். ஆனால் அவனுக்கு அறைகூவல்கள் மிகுதி. ஆகவே சோர்வும் கொந்தளிப்பும் மிகுதி. அவன் தன்னை மீண்டும் மீண்டும் தொகுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. வரையறை செய்ய வேண்டியிருக்கிறது. அதன்பின்னர் அதைக் கடக்க வேண்டியிருக்கிறது. அது சிந்தனையினூடாக நிகழவேண்டும்.
- ஜெயமோகன் [வரையறுத்து மீறிச்செல்லுதல்]


தனிப்பட்ட வாழ்க்கையில் உருவாகும் இடர்கள் கற்பதற்கும் மேலே செல்வதற்கும் தடைகள்தான். ஆனால் அதை நாம் கடந்தே ஆகவேண்டும் அதற்கான உளக்கருவிகள், வழிமுறைகள் ஒவ்வொருவருக்கும் ஒன்று அதை நாம் கண்டடையவேண்டும். சிலருக்கு பிரச்சினையில் இருந்து மானசீகமாக விலகிக்கொள்வது, சிலருக்கு அதை சிறுகச்சிறுக எதிர்கொள்வது, சிலருக்கு அதை வேறு ஒன்றாக கற்பனைசெய்துகொள்வது. ஆனால் விலகியாகவேண்டும் என்னும் உறுதியான எண்ணம் இருந்தால்போதும் - ஜெயமோகன் [இரு தொடக்கங்கள்]

எப்போது நாம் தத்தளிப்பின் எல்லையில் இனியென்ன என்று தவிக்கிறோமோ அப்போது நமது அந்தரங்கத்திலிருந்து அதுவரை நாமறிந்திராத ஓர் உள்ளொளி உதயமாகி நம்மை புதிய சாத்தியங்களின் வாசல்களை நோக்கி இட்டுச் செல்கிறது. அது தரும் தன்னம்பிக்கையும் துணிவும் என்றும் நமது வழித்துணையாக இருக்கும். சற்றும் எதிர்பாராதபடி ஓர் எரிமலை நம்முள் உடைந்து தீக்கங்குகளை உமிழும்போது, வானைத் துழாவும் தீ நாக்குகளை நாம் செயலற்றுப் பார்த்திருக்குபோது, அவ்வொளியில் புதிய தோற்றம் தரும் வானம், பிறகு நம் வாழ்வின் மிக இனிய நினைவுகளில் ஒன்றாக ஆகிவிடுகிறது.

– யதி & ஜெயமோகன்  [தும்பி]



வலியை எதிர்கொள்ள சிறந்த வழி என்பது வலியை கூர்ந்து கவனிக்க ஆரம்பிப்பதே. வலியில் நாம் நினைப்பவை எல்லாமே வலியுடன் தொடர்பு கொண்டவையாக இருக்கின்றன. எதையும் கூர்ந்து நோக்கும்போது நம்முடைய மனம் அதில் இருந்து மெல்ல விலகிவிடுகிறது. அதை வேடிக்கை பார்க்க ஆரம்பிக்கிறது. அந்த வேடிக்கை அவ்வனுபவத்தில் உள்ள அச்சம், துயரம், வலி போன்றவற்றை பெருமளவுக்குக் குறைத்து விடுகிறது

- ஜெயமோகன் [வலி]

மனிதர்களை எங்கும் சந்தித்துக்கொண்டேதான் இருக்கிறோம். அவர்களின் அன்பு காழ்ப்பு சிறுமை பெருமைகளுடன். ஒன்றை வைத்து இன்னொன்றை எடைபோடாமலிருப்பது, ஒன்றைப் பெருக்கி இன்னொன்றைக் காணாமலிருப்பதுதான் பயிலவேண்டிய நிலை.

- ஜெயமோகன் [கொரோனா- கடிதங்கள்]

பாதைகள் இருப்பது மண்ணிலும் கால்களிலுமல்ல. அவை காற்றில் வானில் திசைகளில் இருக்கின்றன. அவற்றை மனம்  எதிர்கொள்ளும் சாத்தியங்களில் இருக்கின்றன. பாதைகள் ஏற்கனவே நுண்வடிவில் இருந்துகோண்டிருக்கின்றன. தயங்கி ஐயுற்று துணிந்து மீண்டும் அஞ்சி மெல்லமெல்ல மனிதன் அவற்றுக்கு மண்ணில் ஒரு பருவடிவத்தை அளிக்கிறான்.

பலகோடி பாதைகளின் பின்னல்வலையால் முற்றிலும் சூழப்பட்ட இந்தபூமி ககனவெளியில் திரும்பித்திரும்பி பிற கோளங்களுக்கு நன் பாதைக்கோலத்தின் அழகைக் காட்டியபடிச் சுற்றி வருகிறது. பிரபஞ்சத்துக்கு அப்பாலிருந்து பார்க்கையில் கோள்களின் மீன்களின் மாபெரும் பாதைவலையே பிரபஞ்சமென்று தோன்றுமோ?

அப்படியே இருக்கட்டும் இந்தப்பாதை. அதன் மறுநுனியில் நானறிந்த அனைத்துமே இன்னும் மேலானதாக மேலும் மகத்தானதாக இருக்கட்டும். பாதை ஒரு  வாக்குறுதி, வெளியே திறந்த வாசல்.

-ஜெயமோகன் [குன்றுகள்,பாதைகள்]


நான்கு வினாக்களை கேட்டுக்கொள்ளவேண்டும். 

1. எதைச் செய்தால் நான் உண்மையாகவே மகிழ்ச்சியாக இருப்பேன்? 

2. எதைச்செய்ய என்னால் முடியும்? 

3. அதில் எனக்கிருக்கும் தடைகள் என்ன? 

4. அதைச்செய்வதற்கான திட்டங்கள் என்ன? 

தொடங்குங்கள். வாழ்நாள் முழுக்கச் செல்லுங்கள். அப்படி தொடங்குவது ஒரு பிறப்பு. அது ஒரு பிறந்தநாள் சூளுரை. அது ஒன்று போதும்.

-ஜெயமோகன் [புத்தாண்டுச் சூளுரை]

ஆகவே உங்களிடம் நான் என்ன சொல்வேன்? 

உங்களால் அரிது என்று மலைக்கப்படும் ஒரு செயலை இன்றே செய்ய தொடங்குங்கள்.

- ஜெயமோகன் [இருத்தலின் ஐயம்]

வாழ்வதன் அகலம் அல்ல, வாழ்வதன் ஆழமே முக்கியம்

நான் ஏன் செயலாற்ற வேண்டும் இந்த இனிமை போதுமே என்று கேட்கலாம். செயலாற்றுவதன் மூலம நாம் அடைவது தன்னிறைவு. செயல் போல் நிறைவளிக்கக்கூடியது ஏதுமில்லை. செயல் என்பதே நம்மை மற்ற உயிர்களிடத்தில் இருந்து பிரித்து காண்பிப்பது. செயலின்மை என்பது இனிய மது. செயலாற்றவே நாம் மனிதனாக பிறந்துள்ளோம். உண்மையில் எதையாவது செய்ய ஆரம்பித்து அதன் சவால்களைச் சந்தித்து அச்சவால்களைத் தூண்டுவது போல் சிறந்தக் கல்வி என ஏதுமில்லை. அது மிக மிக கூர்மையான கல்வி. அது செயல்முறைக் கல்வி. நமக்குப் பிடித்த தளத்தில் செயலாற்றுவதுதான் யோகம். அது நம்மை கண்டடையும் வழி. நம்மை முழுமைப்படுத்தும் வழி. வாழ்க்கை வெல்வதற்கும் நிறைவதற்கும் உரியது. பத்திரமாக பதுங்கி இருப்பதற்குரியதல்ல.

-ஜெயமோகன் [சரியான வாழ்க்கையா?] [தன்மீட்சி- கடிதம்]

நான் விதைக்குள் வாழும் அழியா நெருப்பு

அறத்தின் முன், ஊழின் முன், தெய்வங்களுக்கு முன் தணிவதே நாங்கள் கற்றாகவேண்டியது. இரக்கத்தை அடையும் அசுரன் தேவனாகிறான்.

சிறிய குன்றுகள் வழியாக நான் ஏறும் மாமலை ஒன்று இருக்கிறது.

அதாவது சகோதரா, சின்ன விஷயங்களில்தான் நமக்கு உடனடி வெற்றிகள் கிடைக்கும். சின்ன விஷயங்களில் உள்ள சின்னச்சின்ன சந்தோஷங்கள் நமக்கு மட்டுமே உரியவை. அவைதான் நமக்கு அன்றாடம் ருசிக்கத்தக்கவையாக இருக்கும். பெரிய விஷயங்கள் மலைகளைப்போல பக்கத்தில் இருந்தாலும் நாம் நெருங்கநெருங்க விலகிவிலகிச் செல்லக்கூடியவை. அவற்றை நெருங்கியதும் நாம் மிகமிகச் சிறியவர்களாக ஆகி மறைந்துவிடுவோம். பெரியவிஷயங்களில் உள்ள துன்பமும் ஏமாற்றமும் பிரம்மாண்டமானவை. அவற்றில் உள்ள வெற்றியும் மகிழ்ச்சியும் பல்லாயிரம்பேரால் பகிர்ந்துகொள்ளப்படும்.

ஆனாலும் பெரியவிஷயங்களை நோக்கிச் செல் என்றே நான் சொல்வேன். பெரியவிஷயங்களைச் செய். அல்லது பெரிய விஷயங்களுக்குப் பக்கத்திலே இரு. ஏனென்றால் அவைதான் சரித்திரம்…சரித்திரத்திலே பங்கெடுக்காத வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை. அப்படி வாழ்ந்து சாகிறவர்கள்தான் கோடிக்கணக்கானவர்கள். அவர்களெல்லாம் இதோ இந்த கங்கையில் வெடித்து அழியும் குமிழிகள்… நாமெல்லாம் போய் மறைவோம். சரித்திரம் மட்டும் எஞ்சும்
-ஜெயமோகன் [பிழை, சிறுகதை]


ஆனால் எந்த துறையிலும் முதன்மையாளர்கள் என்பவர்களுக்கு ஒரு தகுதி உண்டு, அவர்களின் நீண்டகால அர்ப்பணிப்பு. ஒன்றை தெரிவுசெய்து அதில் தன்னை முழுதளித்தல்.  நான் செய்வதுபோல ஒரு கரு அமைந்ததுமே கையில் வடிவம் உங்களுக்கு வரவேண்டுமா? என்னைப்போல நாற்பதாண்டுகள் ஒவ்வொருநாளும் குறைந்தது எட்டு மணிநேரம் முழுக்கவனத்துடன் வாசியுங்கள், எழுதுங்கள், ஓர் ஆண்டுக்கு பத்தாயிரம் கிலோமீட்டருக்கு குறையாமல் உலகைப் பார்ப்பதற்காக மட்டுமே பயணம் செய்யுங்கள், நீங்கள் மதிக்கும் அத்தனை பேராளுமைகளையும் எந்த தயக்கமும் இல்லாமல் சென்று பாருங்கள், ஆணவத்தை முழுமையாக கழற்றிவிட்டு காலடியில் அமர்ந்து கற்றுக்கொள்ளுங்கள். 

பிற தளங்களில் வெற்றியும் பணமும் புகழும் உள்ளது, நாலுபேர் மதிக்கும்படி இருக்கவேண்டும் என்பதுபோன்ற சபலங்களை கடந்து உங்கள் கலைக்கு உங்களை அளியுங்கள். அதன்பின் முயலுங்கள்.
- ஜெயமோகன் [’மாஸ்டர்’]

இந்த உடல் அதன் வடிவம் மூலம் உங்களுக்கு
ஒரு கடமையை விடுக்கிறது. செயலாற்றுக.
ஒரு சவாலை விடுக்கிறது. வென்று செல்க!
- ஜெயமோகன்

அத்திமரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைகாலம் நெருங்கிவிட்டதென்று அறிந்துகொள்வீர்கள். வேர்கள் காயும் கோடையில் புதிதெனத் தளிர்க்கும் மரங்கள் மட்டுமே அறியும் அவன் ரகசியம்.

வலியைப்பற்றிய அச்சமளவுக்கு பயங்கரமானதல்ல வலி. வலியைத் தாங்கமுடியாது என்ற கற்பனையே பொய். வலியைத் தாங்கமுடியும். மனிதனால் மிகமிகக் கடுமையான வலியைக்கூட தாங்கமுடியும். அதை உணர உணரத்தான் சித்ரவதைமுறைகள் மேலும் மேலும் கடுமையாகின்றன. அவை அப்படிக் கடுமையாக ஆவதிலிருந்தே மனிதன் வலியை வெல்கிறான் என்று தெரிகிறது. 

இதோ என்னைப்போல. நானும் வலியை வென்றிருக்கிறேன். என்னாலும் முடியும்… அந்த வெற்றியுணர்வு என்னைப் பூரிக்கச்செய்தது. என்னைப்பற்றி எப்போதும் உணராத பெருமிதம் உருவாயிற்று
- ஜெயமோகன் [கன்னி நிலம்]


எந்த பித்துக்கும் ஆட்படாத உள்ளம் கொண்டவர்கள் ,ஜாக்ரதையானவர்கள், இழப்பே இல்லாதவர்களாகவும் எங்குமே உரசிக்கொள்ளாதவர்களாகவும் மறுகரைக்குச் சென்றிருப்பார்கள். அவர்கள் அடைந்தவை என ஒரு சில கணங்கள்கூட இருக்காது. அவர்கள் வாழ்ந்திருக்க மாட்டார்கள், வெறுமே கடந்து சென்றிருப்பார்கள். அதற்காகவா வந்தோம்? 


பெருஞ்செயல் என்றால் பெருங்கனவின் நடைமுறை வடிவம். கனவு ஒட்டுமொத்தமானது.செயல் அதன் துளிகளால் ஆனது. துளிகளில் மனம் ஊன்றி தொடர்ச்சியாகச் செய்துகொண்டே இருக்கவேண்டியது. ஒட்டுமொத்தம் நம் கனவில் இருக்கிறது. ஆழத்தில் நாம் அறியாமல் உறைகிறது. துளிகளில் நாம் முழுமையாக வெளிப்பட்டோம் என்றால் ஒட்டுமொத்தம் ஒத்திசைவுடன் தன்னை நிகழ்த்திக்கொள்வதைக் காண்போம்

நான் ஒன்றைக் கண்டுகொண்டேன். 
அச்சம்தான் சித்ரவதையின் முக்கியமான கருவி. 
அச்சத்துக்கு ஆட்படாமலிருந்தாலே பாதி வென்றது போலத்தான். 
ஆனால் அச்சம் நம்மை மீறுகிறது. 
அதை வெல்ல ஒரே வழி அதை உதாசீனம் செய்வது. 
உதாசீனம் செய்யச் சிறந்தவழி பிறிதொன்றைக் கவனிப்பது…
- ஜெயமோகன் [கன்னி நிலம்]


ஆவேசமான ஒரு காதல் நம்மிடம் எப்போதும் ஊறிக்கொண்டே இருக்க வேண்டும். அந்தக் காதல் எப்போது இல்லாமலாகிறதோ அப்போது நம்முள் உயிர்ச்சக்தி இல்லாமல் ஆகிறது என்று பொருள்.
- ஜெயமோகன் [லோகி 1..காதலன்]

ஒருபோதும் சென்றடையவில்லை என்கிற நிறைவின்மையை அடைக!
- ஜெயமோகன்

January 21, 2019

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends,


By interpreting various meanings for every word in a Thirukkural I am attempting to write my explanation for Thirukkural. It is a small effort to understand Thirukkural little more deeply than usual and take it to my life.

I have taken it as project and it is document in the aforementioned blog.

Kindly have a look and if you find it good, you can subscribe to it

Best Regards
Rajesh
==================================================
அன்புள்ள வாசகர்களே / நண்பர்களே

ஒவ்வொரு பாலின் அதிகாரங்களும் (அதன் சுட்டிகளும்) இந்த முதன்மை பதிவின் சுட்டியில் உள்ளன.


ஒவ்வொரு சொல்லாய் ஆழ் பொருள் - - A sincere attempt at understanding the deeper meaning of Thirukkural by analyzing meanings word by word  

அன்புடன்
ராஜேஷ்

January 19, 2019

Who is your life partner???

Who is your life partner??? 
Mother?
Dad?
Husband /wife?
Best friend?
Son?
Daughter??
Teacher?
Principal?

Or someone else… ????

Not at all. Remember ! Your real life partner is Your Body.

Once your body stops responding no one is with you.
You are your body stay together from Birth till Death.
What you do to your body is your responsibility and that will come back to you.
The more you care for your body, the more you your body will care for you

What you eat, What you do for being Fit? How you deal with Stress? How much you Rest you give to it? will decide how your body gonna respond.

What your body wants is?
Love
Care
Respect
Politeness
Humbleness
Honesty

Remember your body is the only permanent address where You live.
Your body is your asset/ liability, which no one else can share.

Your body is your responsibility. Because, You are the real life partner. Be Fit forever, Take care of yourself. Money comes and goes, Relatives and Friends are not permanent.

Remember, No one can help your body other than you.

Pranayama - for Lungs
Meditation - for Mind
Yoga-Asanas - for Body
Walking - For Heart
Good Food - for Intestines
Good Thoughts - for Soul
Good Karma - for World

Be Fit forever.