Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

December 29, 2017

பூவே பூச்சூடவா

பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..
பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா…

பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..

அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும்
ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என்வாசல் தீண்டவேயில்லை ..
கண்ணில் வெண்ணீரை வார்பேன்.
கண்களும் ஓய்ந்தது..
ஜீவனும் தேய்ந்தது..
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய்..
இந்த கண்ணிரில் சோகம் இல்லை
இன்று ஆனந்தம் தந்தாய்..
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்

பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..

காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்
தங்கம் கருக்காது தாயே
பொன் முகம் பார்க்கிறேன்
அதில் என் முகம் பார்க்கிறேன்..
இந்த பொன்மானை பார்த்துக்கொண்டே ..
சென்று நான் சேர வெண்டும்
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போது,
நீ என் மகளாக வேண்டும்.
பாச ராகங்கள் பாட வேண்டும்..

பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா…

பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..

=====================================
படம் : பூவே பூச்சூடவா
பாடல் :  பூவே பூச்சூடவா
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : சித்ரா, கே.ஜே.ஜேசுதாஸ்
=====================================


December 20, 2017

[கவிதை] கோபுரத்திற்கெல்லாம் ராஜமாதா ராஜகோபுரம்



ராஜகோபுரம்
கோயிலுக்கு என்று சென்ற போது
நான் முதன் முதலாய் கண்டது ராஜகோபுரம்
நீ அளித்த உவகை என்னை உன்னிடம் அழைத்தது
உன் பாதம் தொட்டு
வணங்கி செல்லாமலில்லை

கோயிலுக்குள்ளே சென்று நான்
பல  பரிவார மூர்த்திகளை
கண்டேன் தொழுதேன் நகர்ந்தேன்
கற்பகரகத்தை வணங்கினேன்
சிறுதெய்வங்களும் இருந்தனர்
ஆனால் அவைகள் பலர் கண்ணுக்கு தெரியவில்லை
கற்பகரகத்தில் இருந்து தினமும் பார்க்கிறேன்
ஆதலால் எனக்கு தெரிகிறது

பிரகாரம் சுற்றியப்பின்பு வந்து அமர்ந்தேன்
பிறரை போல் நான்
அண்ணாந்து பார்த்தது உனைதான்
உன் அடித்தளம் கண்டு வியந்தேன்
நீ நூற்றாண்டுகளாய் தாங்கும்
பெரும் பாரம் பேசி முடியாது
ஆனால் அழாமல் நீ அழகாய் இருக்கிறாய்

மற்ற சந்நிதிகள் கோபுரம் கொண்டாலும்
ராஜகோபுரத்தை நின்று பார்க்காதவார் உண்டோ?
நீ வான்நோக்கி எழும் பொழுது
சிற்பங்கள் உன் மீது எழுந்து அமர்ந்தது
பல மலர்கள் கொண்ட வெட்சி பூ ஏறி
கலச மகுடமாய் அழகு சேர்த்தது

மனிதர்ளாயினும் தெய்வங்களாயினும்
உன்னை தாண்டியே வரவேண்டும்
அதுவே உனக்களித்த சிறப்பு
கோபுரங்களுக்கெல்லாம் "ராஜமாதா" நீ
அதுவே உன் பேறு ராஜகோபுரம்

அவசரத்தில் செல்வோரும்
உனை பார்த்து மலைத்து
ஒரு கணம் வணங்கி
உன்னை மெச்சாதவர் உண்டோ?

உன் பெருமை கேட்டாயே ராஜகோபுரமே
மூலஸ்தானமாய் நின்று எனக்கு கிட்டாத
புகழும் உனக்கு கிட்டுகிறது
என்று சொல்வதில் மகிழ்ச்சியே

ஆயினும் நீ அழுவதை கண்டால் எனக்கு
விரக்தியாய் உள்ளது
கேள் ராஜகோபுரமே கேள்
உன் முதல் தளத்தில் நின்றுகொண்டு
மற்ற பரிவார மூர்த்திகள் கோபுரங்கள்
உயர்வாய் உனக்கு தெரிந்தால்
உன் உயரம் உனக்கு எப்படி தெரியும்!!
ராஜகோபுரம் மட்டும் இருந்தால்
கோயில் அவ்வளவு அழகில்லை
என்பதையும் அறிக நீ
கோயிலின் விளிம்பில் இருக்கிறேன்
என்று நினைக்கிறாய்
என்னில் முதல் படி நீ
என் அங்கம் நீ
நீ இல்லாமல் கோயிலை யார் அறிவார்?

- ராஜேஷ் (19 டிசம்பர் 2017)

December 12, 2017

இரண்டாயிறத்திப் பதினேழ்

இரண்டாயிறத்திப் பதினேழே
இன்னும் இருபது நாட்கள் இருக்கிறாய்
உன்னை நான் மறவேன்
என் திருமண நாளின் ஆண்டு
என்பதற்காக அல்ல

ஜனவரி ஒன்று காலை இவ்வாண்டை
நல்லபடியாக கடக்க வேண்டும்
என்று வேண்டினேன்
ஏனெனில் அதற்கு ஒருவாரம் முன்பே
இவ்வாண்டு எவ்வளவு கடுமை
என்பதற்கான கடுஞ்சொல்லை
என் செவி கேளச்செய்தாய்

மனதில் உறுதியுடன்
உன்னை எதிர்க்கொண்டேன்
ஆனால் உனக்கு கிடைத்த
முதல் தருணத்திலேயே
என்னை செம்மட்டியால் அடித்தாய்

வலித்தாளாமல் வருந்தினேன்
என் வலிமை முழுவதையும்
உனக்காக கொடுத்தேன்
ஆனால் நீ எனக்கு சிறிதும்
கை கொடுக்கவில்லை

முளைத்து விதையாய் எழுந்தாலும்
நீ என் தழைகளை
கிள்ளி எரியும் தோறும்
வீழ்வேனோ என்று நான்
தழைத்து மீண்டும் வந்தேன்

வஞ்சகத்திற்கு பிறர் கைக்கொர்த்து
பிறர் அறியாமல்
அவர் சொற்களை திரித்தாய்
கருணையின்றி வெட்கமின்றி
ஓல சாசனம் எழுதினாய்

உன் சொற்கள் என்னை
வாலால் வெட்டி
மன்னில் புதைத்து
உன் இயலாமைக்கு என்னை
நரபலி கொடுத்துக்கொண்டது

நீ நசுக்கியது என்னையல்ல
என்னுள் இருந்த தன்னம்பிக்கையை
நான் உன்னை நினைக்காத நாள் இல்லை
என்பதனை நீ அறிவாயோ?
ஏனெனில் நீ என் 70-80 அகவைகளில் ஒருவன்

எனக்கெதற்கு
ஏன் நான்
என்ன தவறு செய்தேன்
இப்பொழுது ஏன்
என்று மனதில் உன்னை கேட்காத நாளில்லை

நயவஞ்சகனே உன் பதில் வேண்டி
உன்னை கேட்டேன்
ஒன்றுக்கும் பதில் கூறவில்லை
இல்லாத நியதிகளை கூறி
உண்மையை மறைத்து உன்னை தற்காத்துக்கொண்டாய்

கரையான் போல் என்னில்
ஒவ்வொரு உயிரணுவிலும் புகுந்தாய்
என் சந்தோஷங்களை
என் அமைதி
என் நம்பிக்கை
என் முயற்சி
என் நேரம்
என் ஓர் ஆண்டு
என் உன்னத தருணங்கள்
ஏன் என்னை சார்ந்தோரின் இன்பங்கள் என்று கூட இல்லாமல்
இரக்கமின்றி அழித்தாய்

நீ உமிழ்ந்த சொற்கள் எனக்கு அகோர ஓலமாய் ரீங்கரிக்கிறது
அகோர ஓலம் என்றால் என்னவென்று கேட்கிறாய்?
தொடர்மழையால் முளைத்துக்கொண்டு இருக்கும்
காட்டில் முளைத்த பல கோடி விஷகாளான்கள் போல
என்னுள் முளைத்துக்கொண்டே இருந்தாய்
உனை களைய நான் பாடுபட்டு
சோர்வடைந்தேன்
வீழ்ந்தேன்

சோர்வில் வந்த
பிழற்றல் எண்ணங்கள்
மேலூன்றிய பொழுதெல்லாம்
என் வலிமையும் பிறர் வலிமையும் அன்பும்
என்னை எளிதாக தற்காத்தது

ஆனால் என்னை இந்த கதியிற்கு
ஆளாக்கிய உன்னை என்னவெல்லாம்
செய்ய நினைத்தேன் தெரியுமா
உன்னை கடத்தி
வருடத்திற்கு பன்னிரண்டு மாதம்போல
பன்னிரண்டு பாகங்களாய் வெட்டி எரிய நினைத்தேன்

உன்னை ஒரு ஆள் உயர
கண்ணாடியாய் பாவித்து
உன்னை ஒவ்வொரு சில்லாய்
அடித்து நொறுக்க விழைந்தேன்
கண்ணாடி நொறுங்கும் தோறும்
ஒவ்வொரு சில்-இலும் அதன் ஒவ்வொரு ஓரத்திலும்
உன் குருதி வழிவதை
பார்க்கவே விரும்பினேன்
உன் விகார முகமும் அகோர மனமும்
இரக்கமின்றி  சிதைக்கவே விணவுகிறேன்

இரண்டாயிறத்திப் பதினேழே
ஆண்ட்ரியாவே
நான் வேண்டாத பாக்டீரியாவே
உன்னை அழித்துக்கொள்
என்னை விட்டுவிடு
இன்னும் இருபது நாட்கள்
இருப்பினும் இப்போதே
என்னை விட்டுவிடு!!

ஆனால் ஒன்று
கெட்டதிலும் ஒரு நன்மை
இரண்டாயிறத்திப் பதினேழே
நீ எனக்கு நிறைய வலி தந்தாய்!

August 07, 2017

ஓடும் தெளிந்த நீரில்

வாழக்கையை போல் 
அருவியும் இல்லை 
நதியும் இல்லை 

Image result for river
Image result for river
Image result for river
Image result for river
Image result for river

ஓடையாய் பிரிந்து
குளமாய் மாறி 
ஒரே மாதிரி காட்சியை கண்டு
தன் மேல் விழும்
சூர்யோதய பிம்பத்தையும்
நட்சத்திர பிம்பத்தையும்
தனதென எண்ணி
சுயகனவில் வாழ்ந்து
தன அடியில் உள்ள
காழ்ப்பில் ஊறி
உயர் வெயிலின்
வெட்பத்தில் வறண்டு
இம்மண்ணில் மாய்வோர் 
ஒரு குலம் எனில்

Image result for pond

ஆறாய் தொடர்ந்து 
பாறையில் முட்டி 
சங்கீதம்  எழுப்பி 
வளைவுகளில் வளைந்து கொடுத்து 
ஒவ்வொரு நொடியும் 
புதிய காட்சிகள் கண்டு
செல்லும் வழியில்
பல கோடி வேர்களுக்கு
தண்ணீர் பாய்ச்சி
சென்று சேரும் இடத்தில்
எண்ணற்ற கடல் உயிர்களுக்கு
புது ஸ்வாசம் தந்து
களிப்புறுவோர் 
இன்னொரு குலம் 

Image result for river

சும்மாவா சொன்னார்கள் 
ஓடும் தெளிந்த நீரில் 
நோய்யில்லையென்று!

- ராஜேஷ் (எ) பாலசுப்ரமணியன் (8 ஆகஸ்ட் 2017)

April 15, 2017

ஏழாம் உலகம்

==================================================================
==================================================================
அன்புள்ள ஜெ,

நலமா?

தங்களின் சங்கச்சித்திரங்களை சிறிது சிறிதாக வாசித்தேன். நல்ல வாசிப்பாகவும், சங்க பாடல்களை எப்படி பார்க்க வேண்டும் என்று தெரிந்துக்கொண்டேன். உங்களின் திருக்குறள் பற்றிய உரைகளையும் யூடிபில் கேட்டேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஏனெனில் நான் அவ்வப்போது திருக்குறளை புரிந்துக்கொள்ளவேண்டும் என்று ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒரு குறள் என்று சுழற்ச்சி முறையில் வாசித்துக்கொண்டு இருக்கிறேஏண். நீங்கள் ஒரு இடத்தில் கூறி இருப்பீர்கள் ஒவ்வொரு சொல்லுக்கும் பல பொருள்கள் இருக்கும். அதனை அறிந்துக்கொண்டு படித்தால் திருக்குறள் இன்னும்  நன்றாக புரியும் என்று. அவ்வாறே கடந்த மூன்று ஆண்டுகளாக agarathi.com உதவியுடன் படித்து வருகிறேன். துவக்கத்தில் கடினமாக தான் இருந்தது. ஆனால் பிற்பாடு பொறுமையாக படித்தாலும் நன்கு படிக்க முடிந்தது.  இப்படி படிப்பது வீண் வேலையோ என்று ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால் உங்களின் உரை கேட்டப்பின்பு அது சிறந்த முறையில் ஒன்றே என்று தெரிந்துக்கொண்டேன். நன்றிகள்.

ஏழாம் உலகம்


சில ஆண்டுகளுக்கு முன் ஏழாம் உலகம் நாவலை வாங்கினேன். ஆனால் படிக்க ஒரு ஐயப்பாடு இருந்துக்கொண்டே இருந்தது. ஏனெனில் அது ஒரு இருண்ட உலகம், அதற்கு தேவையான நுண்வாசிப்பு என்னிடம் இல்லை என்ற எண்ணங்கள் என்னை தடுத்தன. கடந்த ஒரு வாரமாக வாசித்தேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நாவலை ஒரு தடவை வாசித்துள்ளேன். ஆதலால் நான் புரிந்துக்கொண்ட அளவு தொகுத்துக்கொள்ள முயற்சிக்கிறேன்.

நாவலின் துவக்கமே (30 பக்கத்திற்குள்) எனக்கு ஒரு உவப்பிலாத உலகத்திற்குள் செல்லும் உணர்வு இருந்தது. கீழே வைத்து விடலாம் என்றேன் தோன்றியது. அதுவும் ஒரு இடத்தில் எருக்குக்கு பெருமாள் தாலி கட்டும் இடம். பின்பு இன்னும் ஒரு 50 பக்கம் படித்தேன். அதன் பின்பு என்னால் அந்த ஏழாம் உலகம் சொல்ல வருவது புரிந்துக்கொள்ள முடிந்தது. நாம் வாழும் உலகையும் புரிந்துக்கொள்ள முடிந்தது.

நாவலின் பிற்பகுதியில் மண்ணுக்கு கீழ் உள்ள ஏழு லோகங்கள் அதலம். விதலம். நிதலம், கபஸ்திமல், மகாதலம், சுதலம், பாதளம் உண்டு அவை அனைத்தும் நம்மை சுற்றியே இருக்கிறது. ஆனால் நாம் அதை பார்ப்பது இல்லை. பழனி மலைக்கு படியேறி போறவங்க கூட எல்லாதையும் பாத்துட்டு சும்மா போகிறார்கள் என்று.  முருகனுக்கு அரோகரா என்று கூறுகிறார்கள். அதுபோல எருக்கை ஒரு துணியில் போட்டு அந்த மல வண்டியில் போடுகிறான். வண்டி அதிர்கிறது. எருக்கி மீது சாக்கை எடுத்து மூடுகிறான். ஆனால் இந்த வண்டியைப் பார்க்கும் எவரும் மறு முறை பார்க்காமல் பதறி விலகுகிறார்கள்.  இது போல நாம் வாழ்வில் நம்ம சுற்றி இருக்கிற உலகை பார்க்க மறுக்கிறோம். பொருள் அல்லவற்றை பொருள் என்று எண்ணி அதன் பின் ஓடுகிறோம். 

பழனிக்கு பல முறை சென்றதுண்டு. ஆனால் பழனியை இப்படி பார்ததது இல்லை. எல்லாவற்றையும் செய்து விட்டு சாமி சாமி என்று சொல்லும் எளிய மனிதர்கள். பாவிகளுக்கும் அதே சாமி, பிச்சக்காரணுக்கும் அதே சாமி, திருடனுக்கும் அதே சாமி. எளிய மனிதர்கள். ஒரு கையும் இரு கால்களும் இல்லாத மாங்காண்டி சாமியை கண்டால் ஐஸ்வர்யம் என்று நினைப்பவர்கள், தினமும் ஒரு காசாவது போடவேண்டும் என்று நினைப்பவர்கள் என்று அந்த பழனி மலை. அங்கே மக்கள் காசு பொடுவதும் ஒரு வணிகமாக சித்தரிக்கப் படுகிறது. பிச்சைக்கார்ர்களைப் பார்க்கும் போது ஐயோ என்பது. பின்பு நமக்கு இல்லையே என்று ஆறுதல் படுத்திக்கொள்வது. அதற்கு நன்றி சொல்லிக்கொள்வது என்று காசு போடுவது. கீழ்மைகள்.  இந்த பழநி மலை உண்மையில் ஒரு திருத்தலம் என்று கருதுகிறோம். ஆனால் தைப்பூசம் முடிந்தப்பின்பு அது ஒரு குப்பை குவியலாய் நாறுவது மனிதர்களை பற்றியே உணர்த்துகிறது. நம்ம மனதில் உள்ள குப்பைகளை பழனி என்ற குப்பை கூடையில் போடுகிறார்களோ என்று தோன்றியது.  ஆதலால் தான் என்னவோ (கேரளாக்கு கொச்சன்) எல்லா வருஷமும் போனாலும் ஒரு சாமிக்கும் இவர்களை அறியவில்லை. அந்த கோவிலில் (பல கோவில்களில்) நடக்கும் அபத்தமும் நன்றாக கூறப்பட்டு உள்ளது. வெளியுலகத்து தான் மரியாதையான கோவில் வேலை, மற்றபடி செய்வதெல்லாம் அறம் அல்லாதவைகள். கை நீட்டினாலும் அதும் எரப்பாளித் தனம்தான். மந்திரம் சொல்லி துண்ணூறுவாரிக் கொடுத்து கைய நீட்டினாலும்  கணக்குதேன்...  அந்த ஆறடிக்கல்லுக்கு ஆயிரம் வருசமா கழுவி சந்தனம் போட்டு பூ போட்டு கும்பிட்றது ஒர் தொழில் - அதுபோல முத்தமை பண்டாரத்தின் தொழிலுக்கு மூல தனம். 

இருந்த இடத்தில் சோறு கிடைக்கும் பழனியில் உருப்படிகளை காண்பிப்பது எல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை. அடுத்த பக்கம் போலாமா வேண்டாமா என்றே எண்ணித் திருப்பினேன்.  அங்கே ஓரு உருப்படியும் ஒவ்வொரு ரகம். மலமும் மூத்திமும் நாறும் இடத்தில் பன்னிக மாதிரி திங்குவதும் தூங்குவதும். .. கடைசியில் அவர்கள் எலை போட்டு சோறு திங்குவதற்கு காத்துகிடப்பது. குய்யன் கல்யாண் சாப்பாடு இல்லை என்ற உடன் வருத்தம் கொள்ளும் இடம், பிறகு சாக துணியும் இடங்கள் அவ்வளவு எளிதாக கடக்க முடியவில்லை.

பண்டாரம் எல்லாவற்றையும் செய்யும் பொழுதும் முருகன் துணையிருப்பான் என்று கூறுகிறான்..ஆரம்பத்தில் எல்லாம் பழனியாண்டிக்க கணக்கு... கணக்கறிந்தவன் அவன். ஞானபண்டிதன் என்கிறான்.  ஆனால் பண்டாரம் செய்யும் தொழில் உடல் உணமூற்றோர்களை வாங்கி, விற்று, பிச்சை எடுக்க வைத்து செய்யும் தொழில். பண்டாரம் இந்த உருப்படிகளை பிச்சை எடுக்க வைத்து சோறு போடுவதே அவர்களுக்கு ஒரு வித நல்லது .. இல்லை என்றால் யார் இவர்களை பார்த்துக்கொள்வார்கள் என்ற நினைப்பு.  பண்டாரம் செய்வதும் முதலாளித்துவம் தான். ஒரு குமாஸ்தா மூளையை விற்பது போல, தேசம் மனிதற்களை விற்பது போல. மனுசனை மனுசன் விக்காம் பணம் இல்லை என்ற இடங்கள் நன்றாக இருந்தது. பண்டாரம் இப்படி செய்கிறான் என்றால், உலகில் பல மக்கள் தந்திரத்தால் எப்படி காரியம் சாதிக்கின்றனர் என்பதை கூறும் இடங்கள் - உதாரணமாக -  ஒருத்தன் அடித் தொண்டையில நிதானமா பேசினாலே அவன் புத்திசாலின்னுஜனம் நினைக்கும். 

பின்பு தன் மகளுக்கு வளையல் வாங்கும் பொழுது அந்த இடத்தில் சுத்தியால் ஒரு குழந்தை அடிகிறார்கள். ஆனால் வளையலை வாங்கிவிட்டு செல்கிறான்... குடும்பவாழ்வில் கலியாணம் செய்து வைத்து பிள்ளைக்கு அப்பாவாக பொறுப்பாக பாசமாக இருந்தாலும், அவன் மனது அவனை அலைக்கழிக்கிறது. பண்டாரம் எல்லாவற்றையும் செய்து விட்டு நான் ஒருத்தனுக்கு துரோகம் நினைக்கவில்லை, ஒருத்தனையும் ஏமாத்தினதும் இல்லை என்பது எல்லாம் வெளியே சொல்லிக்கொள்ளும் சமாளிப்புகளே. உண்மையில் அவன் அகத்திற்கு தெரியும் அவன் செய்வது தவறு என்று. சில இடங்களில் அவன் நட்சத்திரங்களை பார்க்க முற்படுகிறான். ஆனால் அதை பார்க்க முடியவில்லை. கண் கூசுகிறது. அவன் செய்யும் தவறுகளை யாரோ பார்க்கிறார்கள் என்ற குற்ற உணர்வு. தன்நெஞ்சே தன்னைச் சுடும் என்பது போல.  
  
முத்தமைய பற்றி சொல்லமால் இருக்க முடியாது. அவளுடைய முதற்காட்சியே கொடூரம் என்று சொல்வேன்.  பண்டாரம் முத்தமையை அந்த நிலைமையிலும் பலபேருடன் புணர வைத்து அவளை ஒரு முட்டையிடும் கோழியாக சித்தரிப்பும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.   பதினேட்டு  பெற்றும் எதுவும் அவளுடன் இல்லை என்று கஷ்ட படுகிறாள். ஒற்றை முலை தான் இருந்தாலும் அவளுடைய தாய்மை சற்றும் குறையவில்லை. அவளது குழந்தையின் சிறுநீரு பட்ட உடன்.. எங்க மகாராஜல என்று சொல்லும் இடங்கள். (அந்த இடத்தில் குழந்தை பிரிக்கிறான் பண்டாரம். நட்சத்திரங்களை தன்னை அறியாமல் பார்க்கும் பொழுது அவனுக்கு கூசு கிறது. குடையை விரித்துக்கொள்கிறான். பாவங்களை இப்படித்தான் மறைத்துக்கொள்கிறார்கள். ) .. அது போல சணப்பியிடம் உரையாடும் இடங்களில். பிள்ளைகளை வெறுக்க முடியாது... முலைகளில் வாய் வச்ச பின்பு அது அம்மாண்ணு விளிப்பது மாதிரி இருக்கும் - பிறகு வெறுக்க முடியாது.  அது போல. குழுந்தை கூனும் குருடுமாக இருந்தாலும் பிள்ளையை மயிருனு சொன்னா அவள் கோபம் கொள்வதும். 

நான் சற்று நேரம் பின்பு கடந்த மற்ற சில இடங்களை சொல்ல வேண்டும்.1) நம்மள மாதிரி சாதாரண ஆத்மா நம்மளை மாதிரி இன்னொரு ஆத்மாவ மதிக்கணும், சினேகிக்கனும். 2) சீவன் கூனன் சீவனாட்டு மாறுமா என்ற இடத்தில்.. பீல எரியிர தீயும் சந்தனக் கட்டைல எரியர தீயும் நாத்த குப்பைல எரியிர தீயும் ஒன்னு தான் 3) அப்பன் குழந்தையை தொட்டு பார்க்கும் ஏற்படும் சுகம் அந்த மணத்தை மோந்தவன் செத்தாலும் மறக்க மாட்டன் 4) கூன்குருடு செவிடு நீங்கி பிறத்தலரிது. பிறந்தாச்சு. பின்ன என்ன? என்ற் இடமும் 5) ஓட்டு இல்லாதவன் முனிசிப்பாலிடி கேஸ் என்ற இடம் (லா அண்ட் ப்ரொசீஜர்) 6) எல்லோருக்கும் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான காலம் குழந்தைகள் வளர்ந்து வரும் காலகட்டம்தான்

இன்னும் சில நாட்கள் இந்த ஏழாம் உலகத்தில் தான் இருப்பேன் என்று நினைக்கிறேன். அப்படியே தொகுத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். யோசித்த்ப்பார்த்தால், நான் பல இடங்களை தவறவிட்டிருப்பேன். மறுவாசிப்பில் வாசிப்பும் மனதும் இன்னும் விரிவடையும் என்று நம்புகிறேன்.

Image result for ezham ulgam
எழுத்தாளர் ஜெயமோகன்

நன்றிகள்!! இதனை திரைப்படம் ஆக்கிய பாலாவிற்கும் நன்றிகள்! 

அன்புடன்,
ராஜேஷ்  

February 01, 2017

இசை

நான் என்றும் இசையில் லயித்து விடுவேன். நான் பள்ளியில் படிக்கும் காலங்களில் (ஒன்பதாவது இருக்கும்) எமது நண்பர்கள் வந்தே மாதரம் பாடினார்கள். கண்ணில் நீர் திரண்டது. அதே போல் எனது சகோதர சகோதரி படித்த பள்ளியின் ஆண்டு விழாவுக்கு செல்லும் பொழுதும் உணர்ச்சிவசப்படுவேன். அடுத்த பிறவி என்று ஒன்று எனக்கு இருந்தால் அதில் இசையை முறைப்படி கற்க வேண்டும். இசை என் முதன்மை  வாழ்வாக இருக்க வேண்டும். 

January 28, 2017

கிருஷ்ணா கிருஷ்ணா!!

அன்புள்ள வணக்கத்திற்குரிய திரு.இந்திரா பார்த்தசாரதி ஐயா அவர்களுக்கு,

நமஸ்காரங்கள்!

தாங்கள் நலமா?

முதல் முதலாக 2014இல் தங்களின் ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன குறுநாவலை வாசித்தேன். அப்பொழுது தான் நான் வாசிக்க துவங்கியிருந்தேன். நல்ல வாசிப்பு அனுபவமாக அமைந்தது.


Image result for krishna krishna indira parthasarathy


கடந்த ஒரு வாரமாக கிருஷ்ணா கிருஷ்ணா குறுநாவலை வாசித்தேன். கிழே வைக்க மனமில்லாமல் கிழே வைத்து வைத்து வாசித்தேன். கிருஷ்ணனை இப்படி எல்லாம் இதன் முன் பார்த்தது இல்லை நான் . மிக நல்ல திறப்பாக அமைந்தது. கிருஷ்ணன் மூலம் சொல்லப்படும் மாற்றம், மரணம், செல்வம், அதிகாரம்,பயம், உடல், காதல், காமம், பாசம், நட்பு, பெண்ணியம் (இன்னும் பல), பற்றி கூறுவதை ரசித்தேன்.

தர்மம், அதர்மம் பற்றி பல இடங்களில் வருவது மிகுந்த தெளிவாக இருக்கிறது. அன்றே விதிகளை ஆட்டதிற்கு ஏற்ப கிருஷ்ணன் மாற்றிக்கொண்டான். ஆஹா Reinvention என்ற buzz wordக்கு கிருஷ்ணனே வழிகாட்டி!! 

அதே போல் ராமன், கர்ணனை சுற்றி இருந்த துன்பியல்கள் கிருஷ்ணனை சுற்றியில்லை. கிருஷ்ணன் என்றால் கொண்டாட்டம். கிருஷ்ணனே அவ்வதாரத்தின் செய்தி என்று முதலில் குறிப்பிட்டது நினைவில் வந்தது. 

பின்பு கடைசியில் ராதவிற்கும் கிருஷ்ணன்னுக்கும் ஆன காதலை பற்றி சுறுக்கமாக சொன்ன இடங்களையும் ரசித்தேன்.

கிருஷ்ணா கிருஷ்ணா மொத்தத்தில் எனக்கு இப்பொழுது தேவை பட்ட ஒரு நல்ல வாசிப்பாக இருந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

நன்றி.

அன்புடன்
ராஜேஷ் பாலசுப்ரமணியன்


January 08, 2017

பெருமழை

எத்தனை வகையான மழை, இந்த ஒரே கவிதைக்குள்! முதலில் கரிய வேங்கை மரத்தில் வண்டுகள் மொய்ப்பது போல ரீங்கரிக்கும் இளம் மழை. பின்பு மலைச்சரிவுகள் அதிரும் யானைப் பிளிறல் போன்ற பெருமழை. கடல் முழுக்கக்  குடித்து உமிழும் மழை. மண்ணை மூடும் நீலமணி அருவி . இடிநாதம் சேவை செய்ய ஊர்வலம் வரும் மழை. 

இந்த உக்கிரமழை ஒரு காத்திருப்பின், எதிப்பார்ப்பின், ஒரு கற்பனைக் கூடலின் பேருருவம். எல்லா அலங்காரங்களும் கட்டுப்பாடுகளும் அறுந்து தெறிக்கும் வெறிமழை. அப்படிப்பட்ட ஒரு மழையில்தான் யுகங்களாக மண்ணில் பதிந்து, மௌனத்தின் பரு வடிவங்களாக ஆன மாமலைகள் தங்கள் ஒளி காக்கும் கண்களைக் திறக்கும் போலும். உறவை அப்படி அதன் உக்கிரத்துடன் அறிய வேண்டும். பிறகு நாசூக்கான மௌன மழைகள் வம்மை நினைப்பதில்லை. வாழ்க்கையில் எது முக்கியம் என்ற கேள்விக்குப் பிறகு இடமே இல்லை. 

நற்றிணை - 112. குறிஞ்சி
பருவ வரவின்கண்ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது. 
விருந்து எவன்செய்கோ- தோழி!- சாரல்
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கைச்
சுரும்பு இமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டு,
உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும்
பெருங் கல் நாடன் வரவு அறிந்து, விரும்பி,
மாக் கடல் முகந்து, மணி நிறத்து அருவித்
தாழ் நீர் நனந் தலை அழுந்து படப் பாஅய்,
மலை இமைப்பது போல் மின்னி,
சிலை வல் ஏற்றொடு செறிந்த இம் மழைக்கே?
               -  பெருங்குன்றூர் கிழார்

(எளிய வடிவில்)
அரும்புகள் முழுக்க விரிந்த
கரிய கால் கொண்ட
வேங்கை மரத்தில்
வண்டுகள் ரீங்கரிக்கின்ற,
மலைச்சரிவுகள் எதிரொலிக்க
யானை மத்தகம் பிளந்து
சிம்மம் உலவுகின்ற,
மாமலையின் அதிபன் வருவத்தைச் சொல்ல
பெருங்கடல் நீர் அள்ளி ,
நீலமணியருவியென
மண் நிறைத்து ஒழுகி,
மலை கண்ணிமைப்பதுபோல
மின்னல் ஒளிர
இடிமேளம் முழங்க
வரும் இந்த மழையை
எப்படி வரவேற்பது தோழி!

(நன்றி: ஜெயமோகன் / சங்கச்சித்திரங்கள்)

Related image