Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

November 18, 2013

Mahatma Gandhi's Dream

Read a nice poem on Mahatma Gandhi's poem in Young World section of The Hindu newspaper.

To the great country
We pay our homage
Let us all get together
And hear Bapu’s message

Hindu, Muslim, Sikh and Christian
Remember you all are Indians
Love, peace and equality
Was his message to humanity
Hear no evil, see no evil
Speak nothing untrue
‘Sathyameva Jayathe’ (Only Truth Triumphs)
Should be your motto too
No one’s high nor anyone low
Let all barriers of caste be thrown
Let us treat all mean as equals
Who are God’s creations
Like me and you
Little children though we are
Let us pledge to the country
With Satya and Ahimsa as our theme [Truth and Non-Violence]
That we will fulfil Bapu’s dream.
             - Ilakkiya
- The writer is a student of VI E, Montfort School, Tiruchi
Link: click here

November 10, 2013

தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு

முதல் முறையாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை பற்றிய எனது கருத்தை சொல்லப்போனால் எனது ஆதங்கத்தினால் முதல் முறையாக எதிர்வினையை எழுதுகிறேன். 


ஸ்டார் விஜய் தொலைக்காட்சிகளிலேயே நான் மதித்து விரும்பி முக்கியமாக நடுவர்கள் நடுநிலையானவர்கள் என்ற முழுநம்பிக்கையுடன் பார்த்த ஒரு நிகழ்ச்சி தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு. இந்த நிகழ்ச்சி கடந்த 2009ஆம் ஆண்டு முதல் முறையாக ஒளிபரப்பப்பட்டது.  அப்போது நான் தில்லியில் இருந்தேன். காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகும். எனக்கு வயலின் வகுப்பு 10 மணிக்கு இருக்கும். ஆதலால் 9:50 வரை பார்ப்பேன். என்னை மிகவும் கட்டிப்போட்டு வைத்தது. நான் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அப்போது தொடங்க ஒரு உந்துதலாக இந்நிகழ்ச்சி . அன்று முதல் திரு. நெல்லை கண்ணன் ஐயா மீது மிகந்த மதிப்பு இருந்து வருகிறது.  முதல் தொகுப்பில் விஜயன் எல்லோரையும் மிரட்டினார். அவரது கருத்துக்கள் மிக சுயமாக ஆழ்ந்த அவதானிப்புகளின் பிரதிபலிப்பாக இருந்தது. பல நேரங்களில் நெல்லை கண்ணன் ஐயா அவர்கள் கண்கலங்கி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் மூலம் பல நல்ல பேச்சாளர்கள் எழுத்தாளர்களை கண்டுகொண்டேன். இந்த ஆண்டு நிகழ்ச்சியை கண்டபின் திரு நெல்லை கண்ணன் ஐயா அவர்களின் பேச்சுக்கள் பலவற்றை யூட்யூபில் பார்த்தேன். 2009 பிறகே இவரது பேச்சுக்களின் ஒளிப்பதிவுகள் யூட்யூபில் ஏற்றம் அதிகம் பெற்றன என்றென்பது குறிப்பிடதக்கது. 

முதல் தொகுப்பை தொடர்ந்து தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு - சுட்டிகள் வந்தது. அலுவுலக பணி இட மாற்றம் மற்றும் படிப்பு காரணமாக அதை நான் முழுவதுமாக காணவில்லை. பார்த்த சில நாட்களில் குழந்தைகள் நன்றாய் பேசுவது மகிழ்ச்சியளித்தது. 

இந்த ஆண்டு 2013இல் ஜூலை மாதம் முதல் மறுபடியும் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியின் இரண்டாம் தொகுப்பு ஒளிப்பரப்பானது. துவக்கம் முதலே இதன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்றார்ப்போல் பல நல்ல பேச்சாளர்கள் உரையாற்றினார்கள். திரு நெல்லை கண்ணன் அவர்கள் தலைமை நடுவராக இவர்களை நல்பாதையில் வழிநடத்தி  சென்றார். நிகழ்ச்சியின் துவக்க காலம் நல்துவக்கமாக அமைந்தது. இராமநாதன், கல்யாணசுந்தரம், ராஜ் மோகன், சரவண சித்தார்த், ஷண்முக சுந்தரம், மஞ்சரி, பௌசியா பானு, முனீஸ்  பவித்ரா, இளமுருகன், காசிநாதன்  ஆகியோர் நல்ல ஒரு தொகுப்பிற்கு நம்பிக்கையை விதைத்தார்கள். முதல் மூன்று சுற்றுக்கள் சில போதிய பயிற்சி அல்லாதவர்களை களைவதாக அமைந்தது.  இதில் ஒரு உறுத்தலான ஒன்று கண்ணுக்கு தெரியாமல் பின்புலத்தில் நடந்தது. அகிலா போன்ற நல்ல பேச்சாளரும் ராம் கபிலாவும் மற்றும் சிலரும் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு தாங்கலாக வரவில்லை என்று சொல்லப்பட்டது. தாங்களாகவே திடீரென்று விலகினார்கள். ஒரு வேளை அவர்கள் உச்சரிப்பு அவ்வளவு சரியில்லை இல்லை தாங்கள் இன்னும் சிறுமிகளே என்று வரவில்லையோ தெரியவில்லை.

என்னை பொறத்தவரை நிகழ்ச்சி கலைகட்டியது நான்காவது சுற்றில் திருக்குறளை பற்றி அனைவரும் ஒவ்வொரு  அதிகாரத்தில் பேசியது  தான். அதுவும் மஞ்சரியின் ஒழுக்கமுடைமை, இளமுருகனின் உழவு, ஷண்முகசுந்தரரின் புணர்ச்சிவிதும்பல், முனீஸ் பவித்ராவின் நெஞ்சொடுகிளத்தல் பேச்சுக்கள் அபாரம் அபாரம். அதுவும் காமத்துப்பாலில் உள்ள உளவியல் ரீதியான செய்திகளை அன்று தான் முதல் முதலில் உணர்ந்தேன் என்று சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். எனது எதிர்ப்பார்ப்பு பன்மடங்கு உயர்ந்தது. வரும் வாரங்களில் சங்க இலக்கியம், கவியரங்கம், இசையரங்கம் போன்றவற்றில் திளைப்பேன் என்று நினைத்தேன்.

ஐந்தாவது சுற்று. இங்கு தான் பயணம் திசை மாறியது.  நெல்லை கண்ணன் ஐயா அவர்கள் நடுவர் இருக்கையில் இல்லை. எங்கள் மனதில் சந்தேகம் வர காரணம் அவர் மிக நேர்மையானவர். இந்த நிகழ்ச்சி தமிழுக்கு செய்யக்கூடிய ஒரு தேவையான தொண்டு என்று உணர்ந்தவர். அவருக்கு இதை தவிர்க்கும் அளவிற்கு வேறு வேலை வைத்து இருப்பாரா என்றால் ? இருக்கும். ஆனால் அவர் இதன் வீச்சை அறிவார். ஆதலால் ஒரு காலமும் அவர் வராமல் இருக்க வேறு காரணம் இருக்காது என்று எண்ணுகிறேன். வந்த இரு நடுவர்களும் அருண்மொழி அவர்களும் தமிழச்சி தங்கபாண்டியனும் பேச்சாளர்களை மிகுந்த வருத்தத்துக்கு உள்ளாக்கினார்கள். பேச்சாளர்களை மெருகேற்றவே எதிர்வினைகள். ஆனால் தமிழச்சி தங்கபாண்டியன் தன் திராவிட முன்னேற்ற கழக கொள்கைகளையே முன்னிறுத்தி கொண்டு இருந்தார். அவரை ஒரு படித்த பண்பட்ட உலக அறிவு கொண்ட ஒரு பகுத்தறிவு  பீரங்கியாக தன்னை ப்ரபலபடுத்திகொள்ளவே ஈடுபட்டார் என்பது பார்க்கும் யாருக்கும் விளங்கும். எதற்கு தமிழச்சியை அமர்த்தினார்களோ ? ஸ்டார் விஜய் தொலைகாட்சிக்குதான் வெளிச்சம். நிகழ்ச்சியின் முடிவில் சுமார் 6 பேரு நீக்க  பட்டனர். பேர்  அதிர்ச்சி. இந்த நிகழ்ச்சி குட்டிச்செவுரு என்று வருத்ததுடன் கொந்தளிப்புடன் எனக்கு  உறுதியானது. திறமையான மஞ்சரி, முனீஸ் பவித்ரா, போசிய பானு நீக்கப்பட்டனர். நான்காம் பத்தியில் கடைசியில் சொன்னது எனக்கு இப்போது ஐயமாக தோன்றுகிறது. ஒரு வேளை ஸ்டார் விஜய் தொலைக்காட்சியே அவர்களை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டாதோ ? 

ஆறாம் வாரம் திரு நெல்லை கண்ணன் ஐயாவை மறுபடியும் கண்டதில் ஒரு நம்பிக்கை துளிர்த்தது. ஆனால் தமிழச்சியின் பங்கேற்பு கசப்பாகவே என் மனதை உறுத்தியது. ஆனால் ஆறாவது சுற்றே அரையிறுதிச்சுற்று என்று எண்ணுகையில் ஈடுபாடு அவ்வளவுவாக இல்லை. திரு நெல்லை கண்ணன் ஐயா பேருக்கு தான் உட்கார்ந்து இருந்தார் என்று தோன்றிற்று. இந்த சுற்றில் எட்டில் நான்கு பேர் விலக்கம். அதுவும் முதலில் பேசிய நான்கு பேர். 

இந்த வாரம் இறுதிச்சுற்று. ஒரு நடுவர் அருண்மொழி அவர்கள் நேரம் குறைவாக கொடுக்கப்  பட்டதனால் நீங்கள் குறைவாக செய்திகள் சேகரித்து உள்ளீர்கள் என்று  கூறினார். இதில் இருந்து எனக்கு மிக தெளிவாக தெரிந்தது அரையிறுதிச்சுற்றும் இறுதிச்சுற்றும்  ஒரிரு நாள் இடைவேளியில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது என்று.  அதுவும் முதலில் பேசிய இருவரும் மிகுந்த குறைந்த நேரமே பேசினார்கள். 'வியப்பில்லாமல்' அவர்கள் இருவரும் கடைசிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கபடவில்லை. கடைசியாக ராஜ்மோகன் வெற்றிப்பெற்றார். அவர் நல்ல பேச்சாளர். ஆனால் முதல் பரிசு வாங்கும் அளவிற்கு அவரது உரை ஒன்று கூட இருந்தது  இல்லை. ஷண்முக சுந்தரம், ராமநாதன், மஞ்சரி, முனிஸ் பவித்ரா, கல்யாண சுந்தரம், இளமுருகன் ஆகியோர் இவரை விட முன்பு பல நல்ல ஆழமான பேச்சாற்றியுள்ளனர். கடந்த மூன்று வாரங்களில் (திருக்குறள் வாரத்திற்கு பிறகு) வெளியேற்றபட்ட யாவர் முகங்களிலும் ஒரு வருத்தமோ ஏமாற்றமோ இல்லை. வருத்தபட ஒன்றும் இல்லை - நிகழ்ச்சி சீர்கெட்டுவிட்டது என்று அறிவார் அவர்.

ஆக இந்த நிகழ்ச்சி அவசர அவசரமாக முடிக்கப்பட்டது. அதுவும் ஏழே சுற்றுகளில். இதில் ஒரு கவியரங்கம், விவாதம், பட்டி மன்றம் போன்ற சுற்றுக்கள் இல்லை. இங்கு தான் நான் இவ்வளவு நேரம் தொலைக்காட்சி மேல் சந்தேக பட்ட நான் சற்று ஒரு படி உள்ளே சென்று அவதானிக்க விரும்புகிறேன். 2009 ஒன்பது போல் 9 மணிக்கு அல்லாமல் 10 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பானது ஒரு ஆரோக்கியமான ஒன்று. 10 மணி என்பது சற்று அதிக டி-ஆர்-பி கொண்ட நிகழ்ச்சிகளுக்கு கொடுப்பார்கள் என்று எண்ணுகிறேன். அப்படியென்றால் மக்களின் மீது  நம்பிக்கை வைத்தே  இரண்டாம் தொகுப்பை நடத்தி உள்ளனர். ஆனால் அவசர அவசரமாக ஏழே சுற்றுகளில் முடிக்க பெரும் காரணமாக நான் மக்களையே பார்க்கிறேன். கண்டிப்பாய் டி-ஆர்-பி குறைவாக இருந்து இருக்கும். இது தொலைகாட்சியின் குற்றமா ? இல்லை. மக்களின் குற்றம். இங்கே மற்ற நிகழ்ச்சிகள் போல் அழுகைகளும் ஆராவரங்களும் போலி நாடங்களும் இல்லை. திறமையும் நேர்மையும் கைகோர்க்கும் இடமாகவே இருந்தது. ஆனால் மக்களுக்கு நல்ல அறிவுள்ள பேச்சுகளை கேட்க ஆயுத்தமாக இல்லை.  அவர்களுக்கு மலிவான சராசரியான பொழுதுபோக்கான நிகழ்ச்சிகள் மட்டுமே தேவை என்ற அவல நிலை உள்ளது. அவர்கள் மொழி,  வாசிப்பு தன்மை, இலக்கியம், சொற்பொழிவு,  கலாசாரம், விவாதங்கள் போன்றவற்றில் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளார்கள். வேதனை அள்ளிக்க கூடிய ஒன்று. பாரதி சொன்ன "தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதர்கள்" உள்ளவரை இது போன்ற நிகழ்ச்சிகள் பெருவாரியான வெற்றிப்பெறாது. 

தமிழ் மக்களை காப்பாற்றுக! தமிழை காப்பாற்றுக!

November 07, 2013

Palani - Darasuram Trip

I planned to make a pilgrimage trip with my family to Palani Hills on this Diwali. Gladly, my Guruswamy family (my Guru in my Sabarimala Trip for last 18 years) and my friend Gokul Nambiar family also joined us for this trip. The plan started off with a 4 seater Tata Indica, then 6 seater Toyota Innova and finally 12 seater Force Traveller. I am glad that such a trip happened for me. My plan was to visit Palani Hills and Darasuram in a single day. But, since more number of people joined, we decided to extend the plan by half day. 

Day 1
On Saturday 2-Nov afternoon at 2:30pm, we headed to Srirangam. However, my guru suggested a temple in Thiruppattur (5km from Siruganur on the NH). At Thiruppattur, we first worshiped Lord Brahmapureeshwara (there is a separate shrine for Lord Brahma). Then Sri Devi Bhoodhevi Varadharaja Perumal Temple. After a tea, we headed to Sri-Rangam Temple . After long wait in spite of lined up in paid queue, we had a very good darshan of Lord Ranganadhaswamy. We had prasadam's from the stall as well as did our dinner at the temple itself under the Annadhana scheme. After dinner we headed to Palani Hills. 

Day 2
On Sunday 3-Nov Morning, we trekked 25 minutes to reach the Lord Dhandayudapany Shrine. My mother had made arrangements to do abhishekha for the Lord Murugan deity in the morning around 8:45a.m. Around 11am we headed to Darasuram from Palani. 

After our lunch at Trichy, we travelled via the Great Anicut Dam (Kallanai)m built by the Chola King Karikala Chola around 2nd Century AD). I must say that it was excellent part of travel. On my left, it was full of farm lands ranging from banana plantation to paddy fields while on my right it was the mighty Cauvery River. It was unfolding endlessly. Those two hours was a great watch for me.

We reached Darasuram at 5 p.m and visited the Airavatheeswara Temple.  This temple was built by Rajaraja Chola II in the 12th century CE is a UNESCO World Heritage Site and one of the Great Living Cholas Temples. It had excellent, intricate sculptures. One testimony for the excellent scriptures is the fused common face for a cow and a elephant. After spending one hour at the temple, we left to Swamimalai Murugan Temple. Later we headed to Vaitheeswaran Temple. Finally, our memorable satisfactory trip came to an end.

Places Covered
Thirupattur

Sri Brahmapureeswarae Temple,
Sri Sridevi Bhoodevi Varadharaja Perumal Temple
SrirangamSri Aranganatha Swamy Temple
PalaniSri Dhanayudhapany Swamy Temple
DarasuramSri Airavatheeswarar Temple
Swami MalaiSri Skanda Murugan Temple
Vaitheeswaran KoilSri Vaitheeswaran, Sri Thaiyal Naayagi, Sri Muthukumara Swamy

Here are few pictures.


Thiruppattur - Brahmapureeswara Temple

Palani Temple - A pilgrim carrying Milk-Abishekha Tank

Trichy to Darasuram - via Great Anicut Dam (Kallanai) - 
On my left - Banana Plantation and Paddy fields


 Trichy to Darasuram - via Great Anicut Dam (Kallanai) - 
On my right- Cauvery River



Airavatheeswara Temple 


Arthanareeswarar

Gokul Nambiar's Father at Horse Rath

A group pic but my guruswamy missing






My Guruswamy family




Main Gopura of Airavatheeswara Temple



Sri Durga

Mom and Grand Mom


Elephant and Cow with a common fused face

Elephant and Cow with a common fused face



October 27, 2013

மழலை சொல் கேளாதார்

நேற்று மாலை என் நண்பரின் வீட்டிற்குச் சென்றேன். வழக்கம் போல் அனைத்து உபயகுஷலோபயியும் ஆயிற்று. நண்பரின் குழந்தை நான் சென்ற தருணம் உறங்கிக்கொண்டு இருந்தான். சிறிது நேரம் பிறகு துயில் சிறிது களைந்து எட்டிப்பார்த்தான். நான் அருகில் அவனை சென்று அள்ள முயன்றேன். அழ ஆரம்பித்தான். பிறகு அவன் அப்பா அவனை மார்போடு அள்ளிக்கொண்டு அவனை சமாதானம் செய்தார். துயில் நன்றாய் களைந்த உடன் யார் புதியதாக என்று கூர்ந்து கவனித்தான். நான் சிரித்தேன். கொஞ்சம் சிரித்துவிட்டு தன் முகத்தை அவன் தந்தையின் மார்பில் புதைத்துக்கொண்டான். இம்முறை, நண்பரின் குழந்தை நன்றாக வளர்ந்திருந்தான் என்று எனக்கு தோன்றியது. கொஞ்ச நேரம் கழித்து என்னை எட்டி எட்டிப் பார்த்தான், சிரித்தான் பிறகு முகத்தை திருப்பிகொண்டான். இதை ஒரு விளையாட்டை செய்துக்கொண்டு இருந்தான். சிறிது நேரம் கழித்து நான் வீட்டிற்கு கிளம்பினேன். அப்போது கீழேப் பேசிக் கொண்டு இருந்தோம். அவன் கையை வைத்து என்மேல் மகிழ்ச்சியாக அடித்துக் கொண்டு இருந்தான். அவன் கண்கள் என்னையே நோக்கிக்கொண்டு இருந்தன என்று எனக்கு இப்போழுது தோன்றுகிறது. நான் சிரித்தால் அவனும் சிரிக்கிறான். பல நேரங்களில் அவனே என்னை பார்த்து சிரித்துக்கொள்கிறான். எனக்கு இப்போது தோன்றுவது ஒன்று தான். அவன் என்னிடம் எதிர்பார்த்தது (எதிர்ப்பார்த்தானா என்றால் எனக்கு தெரியாது) பதிலுக்கு ஒரு சிரிப்பு. சிரிப்பு மழையில் நனைந்தபின் நான் வீட்டிற்கு செல்கையில் வழியில் சற்று வான் மழையிலும் நனைந்தேன்.

இன்று மாலை இச்சம்பவத்தை அசைப்போட்டுக்கொண்டு இருந்தேன். அம்மழலை எதர்க்காக என்னிடம் சிரித்தான் ? ஒரு வேளை அவன் என்னிடம் விளையாடிக்கொண்டு இருந்தானா ? நான் ஒரு விளையாட்டு பொம்மையா ? நான் எப்படிப் பார்க்கிறேன் என்றால், அவன் என்மேல் வைத்தது நம்பிக்கை - நான் பதிலுக்கு சிரிப்பேன் என்று. சிரித்தேன். அவனும் சிரித்தான். 

குழலினிது யாழினிது என்பர் தன்மக்கள்
மழலை சொல் கேளாதார் 

என்ற வள்ளுவரின் வாக்கை முழுமையாக மற்றுமொரு முறை அனுபவித்தேன்.

அவனுடன் பேசும் நாட்களுக்கு நான் காத்துக்கொண்டு இருக்கிறேன்.

October 25, 2013

சில நேரங்களில் சில மனிதர்கள்

திரு.ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய மகத்தான நாவல் சில நேரங்களில் சில மனிதர்கள். இந்நாவல் சிறப்பு வாய்ந்த சாஹித்திய அகாடமியின் விருதை பெற்றது. பின்பு 1975ஆம் ஆண்டில் திருமதி.லஷ்மி மற்றும் திரு.ஸ்ரீகாந்த் ஆகியோரின் சிறப்பான நடிப்பில் நாவலின் பெயர்க் கொண்டே திரைப்படமாய் வெளிவந்தது. இவை பெரும்பாலவனர்களுக்கு தெரிந்தவையே.

 


நேற்று இப்படத்தை யூடுயுபில் பார்த்தேன்.  முதலில் நான்கு நாட்களில் பார்க்கலாம் என்று தான் இருந்தேன். முந்தாநாள் முதல் அரை மணி நேரம் பார்த்தேன். நேற்றும் இரண்டாவது அரை மணி நேரம் பார்க்கலாம் என நினைத்தேன். ஆனால் படம் என்னை கட்டிப்போட்டுப் ஒரே வீச்சில் பார்க்கச் செய்தது. 

கண்டிப்பாய் சொல்ல வேண்டும். தரமான படம். இன்று நான் துயிலில் இருந்து எழும் வரை நேற்று இரவு உறக்கத்தில் இப்படம் என் நினைவில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. இப்பொழுதும். என்னை மிகுந்த ஒரு சலனத்தில் இருந்து தெளிவுப்படுத்திய உணர்வை இப்படம் கொடுத்தது என்று சொல்வேன். இது பீம்சிங்ப் போன்ற இயக்குனர் கையாண்ட விதம் போற்றுதலுக்குரியது. 

அனைத்து கதாபாத்திரங்களுக்கும் அற்புதமான கதாபாத்திர வடிவமைப்பு. அனைவரும் ஒப்பனை என்று சொல்லாதவகையில் உடலும் சதையுமாய் நடித்திருந்தனர். குறிப்பாக லஷ்மி கங்காவாகவும் ஸ்ரீகாந்த் ப்ரபுவாகவும் வாழ்ந்திருந்தார்கள். கங்காவின் மாமாவாக வை.ஜி.பார்த்தசாரதியும், ஸ்ரீகாந்தின் மகள் மஞ்சுவாக ஜெயகீதா மனதில் பதிகின்றனர்.



இப்படிபட்ட துணிவான கதைக்களத்தில் 1975ஆம் ஆண்டிலேயே இப்படம் வந்தது ஆச்சர்யம் தான். இன்று இப்படி ஆண் பெண் உறவையும் அதில் உள்ள உளவியலையும் முன்னிலைப் படுத்தி திரைப்படம் வெளிவருமா என்றென்பது கேள்வியளவே இருக்கின்றது.  இன்றும் இதுப் போன்ற திரைப்படங்கள் வரவேற்பைப் பெற்றாலும் திரையரங்குகளில் வெற்றிப் பெறுவதில்லை என்பது வருத்தத்துக்குரிய நிலையாகும்.
 

  

கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம். அதுவும் 17 முதல் 20 வயதிற்குள் இருப்பவர்கள் பார்க்கவேண்டிய படம். இந்த நாவலை படிக்கலாம் என்று சென்ற மாதம் வாங்கினேன். இன்னும் படிக்கவில்லை. கண்டிப்பாய் படம் தொட்ட ஆழத்தை விட இன்னும் ஆழமாய் தொட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

ரம் சொல்லேல்.
பொருள்: ஒருதலைப் பட்சமாகக் பேசக் கூடாது. 
Meaning: Let your argument never be biased.

October 17, 2013

Effort Gives Joy

Excerpts from "The Sunlit Path" - by The Mother.

An aim gives a meaning, a purpose to life, and this purpose implies an effort; and it is in effort that one finds joy.

Exactly. It is the effort which gives joy; a human being who does not know how to make an effort will never find joy. Those who are essentially lazy will never find joy - they do have the strength to be joyful! It is effort which gives joy. Effort makes the being vibrate at a certain degree of tension which makes it possible for you to feel the joy . . . . 

It is only effort, in whatever domain it be - material effort, moral effort, intellectual effort - which creates in the being certain vibrations which enable you to get connected with universal vibrations; and it is this which gives joy. It is effort which pulls you out of inertia; it is effort which makes you receptive to the universal forces. And the one thing above all which spontaneously gives joy, even to those who do not practise yoga, who have no spiritual aspiration, who lead quite an ordinary life, is the exchange of forces with the universal forces. People do not know this, they would not be able to tell you that it is due to this, but so it is.

வாடிவாசல் - 1959 - சி.சு.செல்லப்பா

சென்ற வெள்ளிக்கிழமை (11-அக்டோபர்) அன்று பெங்களுரில் இருந்து புதுவைக்கு சரஸ்வதி பூஜைக்காக சென்றேன். அன்று மாலை ரயிலுக்கு புறப்பட சிறிது நேரம் இருந்தது. அப்போது சமீபத்தில் புத்தக கண்காட்சியில் வாங்கிய வாடிவாசல் என்ற குறுநாவலை வாசிக்கலாம் என்று எடுத்தேன். ரயிலில் மீதி பாதியை வாசித்தேன்.



வாடிவாசல் அமரர் திரு.சி.சு.செல்லப்பா அவர்கள் 1959 ஆண்டு எழுதியது. இந்த நூல் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் உள்ள ஒரு கிழவன் மற்றும் கிழக்கில் இருந்து வந்துள்ள பிச்சி, முருகு ஆகியவர்களின் நடுவே நடக்கும் உரையாடலில் துவங்குகிறது. கிழவன் ஜல்லிகட்டை பற்றி சற்று விவரிக்கிறான். கிழவனுக்கும் தெரியும் வகையில் பிச்சியும், முருகுவும் மனம் பாதி பேச்சிலும் பாதி நோட்டம் விடுவதுமாக இருந்தார்கள். அப்போது அம்புலி என்கிற ஒரு ஜல்லிக்கட்டு வீரரை பற்றி சிலாகிக்கும் வகையாக பேசுகிறார். அம்புலிக்கு காரி என்னும் காளையால் நேர்ந்த துயரத்தை வருத்துடன் சொல்கிறார். அப்போது கிழவன் திகுதிகுக்கும் வகையில் இது அம்புலி புள்ள பிச்சி என்று முருகு சொல்கிறான். தன் தந்தையிடம் அவரின் மரணப் படுக்கையில் கொடுத்த வாக்கிற்காக காரியை அடக்குவதற்க்காக வந்திருக்கிறான் பிச்சி. வழக்கம் போல் காரி போன்ற பிசாசு காளைகளை ஜல்லிக்கட்டில் விட்டு மிருகங்களின் மூலம் பேர் ஈட்டிக்கொள்ளும் ஜமிந்தார் வந்திருந்தார். மற்றும் திறளாய் திரண்டிருந்த மக்கள். இது தான் கதைகளம் ஆடுகளுமும் கூட. இதில் இருந்து இம்மி அளவும் வெளியே செல்லவில்லை. சி.சு.செல்லப்பா அவர்கள் இதனை ஒரு முழு நாவலாக படைப்பதற்கு அனைத்து சாத்திய கூறுகள் இருந்தப்பின்னும் அவர் அவ்வழியே செல்லவில்லை. ஒரு போதும் வாடிவாசல் நடக்கும் ஊரை பற்றியோ, அல்லது, அங்கு திருவிழாக்கு கூடியிருப்பதுப்போல் கூடியிருக்கும் மக்களை பற்றியோ, அல்லது, பிச்சி, பிச்சியின் தந்தை அம்புலி, ஜமிந்தார்களின் பின்புலத்தை பற்றி ஒருப் போதும் நாவல் செல்லவில்லை.

வாடிவாசல் என்பது ஜல்லிக்கட்டில் காளைகள் ஆடுகளத்திற்குள் நுழைவதற்கான நுழைவு கதவு. அதன் வழியாக தான் நூற்றுக்கணக்கான காளைகளை பலர் விடுவர். இந்த நூலில் சி.சு.செல்லாப்பா அவர்கள் ஜல்லிக்கட்டின் ஆடுகளத்தை அவரது வர்ணஜாலத்தின் மூலம் கண் முன் நிறுத்துகிறார் என்பதே மெய். காளை சீறும் விதம், மனிதன் காளையின் கொம்பை பிடிக்கும் விதம், மனிதன் காளையை நோக்கம் (காளையின் குணாதிசியங்களை சுதாரிப்பது) விடும் விதம், காளை மனிதனை தூக்கி வீசும் இடம், ஆகியவற்றை மிக நேர்த்தியாக சொல்லி இருப்பார். மனிதன் காளையை வீழ்த்தும் தருணங்களில் ஜமிந்தார், கிழவன், காரி காளை, பிச்சி, மக்கள் ஆகியோரின் மிக யதார்த்தமான மனநிலையை மிக அழகாக பதிவுசெய்து இருப்பார். சினிமாவில் காட்டுவது போல் அவ்வளவு எளிதல்ல காளையின் கொம்பை பிடித்து அதனை அடக்குவது என்பது நமக்கு புரியும். 




வாடிவாசல் மூலம் நான் உணர்ந்த சில உண்மைகள் : 
1) மனிதனுக்கு தெரியும் அது விளையாட்டு என்று. ஆனால் காளைக்கு தெரியாது அது விளையாட்டு என்று. நம்மிடம் இரக்கம் எதிர்ப்பார்த்தே அது உள்ளது. அதனை நாம் யாரும் தருவதில்லை.

2) காளை மூலம் வெற்றி பெற்று தன் அதிகாரத்தை தனது சுற்றுப்புரத்திற்ககும் தன்னிடம் உள்ள மனிதர்களும் ஊர் மக்களுக்கும் காண்பிக்கிறான் ஜமிந்தார். ஆனால் அதே காளை தோற்றால் தயவு தாட்சியம் இல்லாம் அங்கேயே கொல்கிறான். அதை கொன்று விட்டு திரும்பிக் கூட பார்க்காமல் ஒரு வருத்தமும் இல்லாமல் வீடு திரும்புகிறான்.

3)மனிதனில் உள்ள மிருகம் சினம் கொண்டு வருவதை பிச்சியின் விளையாட்டில் காணலாம். 

4) தன் காளை தோற்றாலும் பரவாயில்லை காளையை வீழ்த்து என சொல்லும் ஜமிந்தார் மனிதர்கள் மிருகங்களையும் (மனிதர்களையும்) அடக்கி ஆள நினைக்கும் அதிகாரத்துவுத்தின் நிகரில்லா சான்று.

5) வெரும் இரண்டு பவுன் தங்க காசுக்கிற்காக காளையிடம் உயிரை தூக்கி விசுகிறார்கள் மனிதர்கள்.

6) தொடை குத்து தான் நாலு நாள்-அ சரியாப் போய்டும். வேப்ப எண்ணை காச்சு ஊத்தினா சரியாப் போய்டும் என கிழடுகளும் மனிதர்களும் அதை சொல்பவர்கள் பலர் உண்டு.

இதனை படித்துவிட்டு ஜல்லிகட்டுப் போன்ற விளையாட்டுக்கள் தேவையா போன்ற பல கேள்விகள் எல்லோர் மனதிலும் எழும். எனக்கும். ஆனால் இந்த குறுநாவல் அதனை சொல்வதற்கு அல்ல. நான் மேற்சொன்ன அடிப்படை உண்மைகளை பின்புலத்தில் மிக நேரகா நேர்த்தியாக திரு.சி.சு.செல்லப்பா அவர்கள் சொல்லி இருப்பார். இன்னொரு முறை படித்தால் இன்னும் சில உண்மைகளை உணர்வேன் என்று நம்புகிறேன். 

ஒரு 2 மணி நேர வாசிப்பிற்கான ஒரு நல்ல வாசிப்பு இந்த 50-60 பக்க குறுநாவல். மிக சிறந்த் இச்சிற்றிலக்கியத்தை தங்களுக்கு அன்போடு பரிந்துரைக்கிறேன்.


பி.கு: குறிப்பாக ஒன்று சொல்லவேண்டும், சி.சு.செல்லப்பா இந்நூலில் சொல்லாதது, வேரு எங்கோ நான் வாசித்தது, ஜல்லிகட்டு என்றென்பது தமிழர் பண்பாட்டில் ஆயிரம் ஆண்டு காலத்திற்கும் மேலாக வரலாற்றில் அருபடாமல் தொடரும் ஒரு விளையாட்டு. 

பொருள்: துன்பம் விளைவிக்கும் எந்த செயலையும் செய்யாதே. 
Meaning: Do not do anything that may hurt (self & others)

October 07, 2013

Kolu 2013

Kolu or Navarathiri Kolu is a festival celebrated in the Sep-Oct of every year. Here is a collage of Kolu 2013 (this is almost 20th Kolu) in my home.