Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

Showing posts with label Book Synopsis. Show all posts
Showing posts with label Book Synopsis. Show all posts

April 15, 2017

ஏழாம் உலகம்

==================================================================
==================================================================
அன்புள்ள ஜெ,

நலமா?

தங்களின் சங்கச்சித்திரங்களை சிறிது சிறிதாக வாசித்தேன். நல்ல வாசிப்பாகவும், சங்க பாடல்களை எப்படி பார்க்க வேண்டும் என்று தெரிந்துக்கொண்டேன். உங்களின் திருக்குறள் பற்றிய உரைகளையும் யூடிபில் கேட்டேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஏனெனில் நான் அவ்வப்போது திருக்குறளை புரிந்துக்கொள்ளவேண்டும் என்று ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒரு குறள் என்று சுழற்ச்சி முறையில் வாசித்துக்கொண்டு இருக்கிறேஏண். நீங்கள் ஒரு இடத்தில் கூறி இருப்பீர்கள் ஒவ்வொரு சொல்லுக்கும் பல பொருள்கள் இருக்கும். அதனை அறிந்துக்கொண்டு படித்தால் திருக்குறள் இன்னும்  நன்றாக புரியும் என்று. அவ்வாறே கடந்த மூன்று ஆண்டுகளாக agarathi.com உதவியுடன் படித்து வருகிறேன். துவக்கத்தில் கடினமாக தான் இருந்தது. ஆனால் பிற்பாடு பொறுமையாக படித்தாலும் நன்கு படிக்க முடிந்தது.  இப்படி படிப்பது வீண் வேலையோ என்று ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால் உங்களின் உரை கேட்டப்பின்பு அது சிறந்த முறையில் ஒன்றே என்று தெரிந்துக்கொண்டேன். நன்றிகள்.

ஏழாம் உலகம்


சில ஆண்டுகளுக்கு முன் ஏழாம் உலகம் நாவலை வாங்கினேன். ஆனால் படிக்க ஒரு ஐயப்பாடு இருந்துக்கொண்டே இருந்தது. ஏனெனில் அது ஒரு இருண்ட உலகம், அதற்கு தேவையான நுண்வாசிப்பு என்னிடம் இல்லை என்ற எண்ணங்கள் என்னை தடுத்தன. கடந்த ஒரு வாரமாக வாசித்தேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நாவலை ஒரு தடவை வாசித்துள்ளேன். ஆதலால் நான் புரிந்துக்கொண்ட அளவு தொகுத்துக்கொள்ள முயற்சிக்கிறேன்.

நாவலின் துவக்கமே (30 பக்கத்திற்குள்) எனக்கு ஒரு உவப்பிலாத உலகத்திற்குள் செல்லும் உணர்வு இருந்தது. கீழே வைத்து விடலாம் என்றேன் தோன்றியது. அதுவும் ஒரு இடத்தில் எருக்குக்கு பெருமாள் தாலி கட்டும் இடம். பின்பு இன்னும் ஒரு 50 பக்கம் படித்தேன். அதன் பின்பு என்னால் அந்த ஏழாம் உலகம் சொல்ல வருவது புரிந்துக்கொள்ள முடிந்தது. நாம் வாழும் உலகையும் புரிந்துக்கொள்ள முடிந்தது.

நாவலின் பிற்பகுதியில் மண்ணுக்கு கீழ் உள்ள ஏழு லோகங்கள் அதலம். விதலம். நிதலம், கபஸ்திமல், மகாதலம், சுதலம், பாதளம் உண்டு அவை அனைத்தும் நம்மை சுற்றியே இருக்கிறது. ஆனால் நாம் அதை பார்ப்பது இல்லை. பழனி மலைக்கு படியேறி போறவங்க கூட எல்லாதையும் பாத்துட்டு சும்மா போகிறார்கள் என்று.  முருகனுக்கு அரோகரா என்று கூறுகிறார்கள். அதுபோல எருக்கை ஒரு துணியில் போட்டு அந்த மல வண்டியில் போடுகிறான். வண்டி அதிர்கிறது. எருக்கி மீது சாக்கை எடுத்து மூடுகிறான். ஆனால் இந்த வண்டியைப் பார்க்கும் எவரும் மறு முறை பார்க்காமல் பதறி விலகுகிறார்கள்.  இது போல நாம் வாழ்வில் நம்ம சுற்றி இருக்கிற உலகை பார்க்க மறுக்கிறோம். பொருள் அல்லவற்றை பொருள் என்று எண்ணி அதன் பின் ஓடுகிறோம். 

பழனிக்கு பல முறை சென்றதுண்டு. ஆனால் பழனியை இப்படி பார்ததது இல்லை. எல்லாவற்றையும் செய்து விட்டு சாமி சாமி என்று சொல்லும் எளிய மனிதர்கள். பாவிகளுக்கும் அதே சாமி, பிச்சக்காரணுக்கும் அதே சாமி, திருடனுக்கும் அதே சாமி. எளிய மனிதர்கள். ஒரு கையும் இரு கால்களும் இல்லாத மாங்காண்டி சாமியை கண்டால் ஐஸ்வர்யம் என்று நினைப்பவர்கள், தினமும் ஒரு காசாவது போடவேண்டும் என்று நினைப்பவர்கள் என்று அந்த பழனி மலை. அங்கே மக்கள் காசு பொடுவதும் ஒரு வணிகமாக சித்தரிக்கப் படுகிறது. பிச்சைக்கார்ர்களைப் பார்க்கும் போது ஐயோ என்பது. பின்பு நமக்கு இல்லையே என்று ஆறுதல் படுத்திக்கொள்வது. அதற்கு நன்றி சொல்லிக்கொள்வது என்று காசு போடுவது. கீழ்மைகள்.  இந்த பழநி மலை உண்மையில் ஒரு திருத்தலம் என்று கருதுகிறோம். ஆனால் தைப்பூசம் முடிந்தப்பின்பு அது ஒரு குப்பை குவியலாய் நாறுவது மனிதர்களை பற்றியே உணர்த்துகிறது. நம்ம மனதில் உள்ள குப்பைகளை பழனி என்ற குப்பை கூடையில் போடுகிறார்களோ என்று தோன்றியது.  ஆதலால் தான் என்னவோ (கேரளாக்கு கொச்சன்) எல்லா வருஷமும் போனாலும் ஒரு சாமிக்கும் இவர்களை அறியவில்லை. அந்த கோவிலில் (பல கோவில்களில்) நடக்கும் அபத்தமும் நன்றாக கூறப்பட்டு உள்ளது. வெளியுலகத்து தான் மரியாதையான கோவில் வேலை, மற்றபடி செய்வதெல்லாம் அறம் அல்லாதவைகள். கை நீட்டினாலும் அதும் எரப்பாளித் தனம்தான். மந்திரம் சொல்லி துண்ணூறுவாரிக் கொடுத்து கைய நீட்டினாலும்  கணக்குதேன்...  அந்த ஆறடிக்கல்லுக்கு ஆயிரம் வருசமா கழுவி சந்தனம் போட்டு பூ போட்டு கும்பிட்றது ஒர் தொழில் - அதுபோல முத்தமை பண்டாரத்தின் தொழிலுக்கு மூல தனம். 

இருந்த இடத்தில் சோறு கிடைக்கும் பழனியில் உருப்படிகளை காண்பிப்பது எல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை. அடுத்த பக்கம் போலாமா வேண்டாமா என்றே எண்ணித் திருப்பினேன்.  அங்கே ஓரு உருப்படியும் ஒவ்வொரு ரகம். மலமும் மூத்திமும் நாறும் இடத்தில் பன்னிக மாதிரி திங்குவதும் தூங்குவதும். .. கடைசியில் அவர்கள் எலை போட்டு சோறு திங்குவதற்கு காத்துகிடப்பது. குய்யன் கல்யாண் சாப்பாடு இல்லை என்ற உடன் வருத்தம் கொள்ளும் இடம், பிறகு சாக துணியும் இடங்கள் அவ்வளவு எளிதாக கடக்க முடியவில்லை.

பண்டாரம் எல்லாவற்றையும் செய்யும் பொழுதும் முருகன் துணையிருப்பான் என்று கூறுகிறான்..ஆரம்பத்தில் எல்லாம் பழனியாண்டிக்க கணக்கு... கணக்கறிந்தவன் அவன். ஞானபண்டிதன் என்கிறான்.  ஆனால் பண்டாரம் செய்யும் தொழில் உடல் உணமூற்றோர்களை வாங்கி, விற்று, பிச்சை எடுக்க வைத்து செய்யும் தொழில். பண்டாரம் இந்த உருப்படிகளை பிச்சை எடுக்க வைத்து சோறு போடுவதே அவர்களுக்கு ஒரு வித நல்லது .. இல்லை என்றால் யார் இவர்களை பார்த்துக்கொள்வார்கள் என்ற நினைப்பு.  பண்டாரம் செய்வதும் முதலாளித்துவம் தான். ஒரு குமாஸ்தா மூளையை விற்பது போல, தேசம் மனிதற்களை விற்பது போல. மனுசனை மனுசன் விக்காம் பணம் இல்லை என்ற இடங்கள் நன்றாக இருந்தது. பண்டாரம் இப்படி செய்கிறான் என்றால், உலகில் பல மக்கள் தந்திரத்தால் எப்படி காரியம் சாதிக்கின்றனர் என்பதை கூறும் இடங்கள் - உதாரணமாக -  ஒருத்தன் அடித் தொண்டையில நிதானமா பேசினாலே அவன் புத்திசாலின்னுஜனம் நினைக்கும். 

பின்பு தன் மகளுக்கு வளையல் வாங்கும் பொழுது அந்த இடத்தில் சுத்தியால் ஒரு குழந்தை அடிகிறார்கள். ஆனால் வளையலை வாங்கிவிட்டு செல்கிறான்... குடும்பவாழ்வில் கலியாணம் செய்து வைத்து பிள்ளைக்கு அப்பாவாக பொறுப்பாக பாசமாக இருந்தாலும், அவன் மனது அவனை அலைக்கழிக்கிறது. பண்டாரம் எல்லாவற்றையும் செய்து விட்டு நான் ஒருத்தனுக்கு துரோகம் நினைக்கவில்லை, ஒருத்தனையும் ஏமாத்தினதும் இல்லை என்பது எல்லாம் வெளியே சொல்லிக்கொள்ளும் சமாளிப்புகளே. உண்மையில் அவன் அகத்திற்கு தெரியும் அவன் செய்வது தவறு என்று. சில இடங்களில் அவன் நட்சத்திரங்களை பார்க்க முற்படுகிறான். ஆனால் அதை பார்க்க முடியவில்லை. கண் கூசுகிறது. அவன் செய்யும் தவறுகளை யாரோ பார்க்கிறார்கள் என்ற குற்ற உணர்வு. தன்நெஞ்சே தன்னைச் சுடும் என்பது போல.  
  
முத்தமைய பற்றி சொல்லமால் இருக்க முடியாது. அவளுடைய முதற்காட்சியே கொடூரம் என்று சொல்வேன்.  பண்டாரம் முத்தமையை அந்த நிலைமையிலும் பலபேருடன் புணர வைத்து அவளை ஒரு முட்டையிடும் கோழியாக சித்தரிப்பும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.   பதினேட்டு  பெற்றும் எதுவும் அவளுடன் இல்லை என்று கஷ்ட படுகிறாள். ஒற்றை முலை தான் இருந்தாலும் அவளுடைய தாய்மை சற்றும் குறையவில்லை. அவளது குழந்தையின் சிறுநீரு பட்ட உடன்.. எங்க மகாராஜல என்று சொல்லும் இடங்கள். (அந்த இடத்தில் குழந்தை பிரிக்கிறான் பண்டாரம். நட்சத்திரங்களை தன்னை அறியாமல் பார்க்கும் பொழுது அவனுக்கு கூசு கிறது. குடையை விரித்துக்கொள்கிறான். பாவங்களை இப்படித்தான் மறைத்துக்கொள்கிறார்கள். ) .. அது போல சணப்பியிடம் உரையாடும் இடங்களில். பிள்ளைகளை வெறுக்க முடியாது... முலைகளில் வாய் வச்ச பின்பு அது அம்மாண்ணு விளிப்பது மாதிரி இருக்கும் - பிறகு வெறுக்க முடியாது.  அது போல. குழுந்தை கூனும் குருடுமாக இருந்தாலும் பிள்ளையை மயிருனு சொன்னா அவள் கோபம் கொள்வதும். 

நான் சற்று நேரம் பின்பு கடந்த மற்ற சில இடங்களை சொல்ல வேண்டும்.1) நம்மள மாதிரி சாதாரண ஆத்மா நம்மளை மாதிரி இன்னொரு ஆத்மாவ மதிக்கணும், சினேகிக்கனும். 2) சீவன் கூனன் சீவனாட்டு மாறுமா என்ற இடத்தில்.. பீல எரியிர தீயும் சந்தனக் கட்டைல எரியர தீயும் நாத்த குப்பைல எரியிர தீயும் ஒன்னு தான் 3) அப்பன் குழந்தையை தொட்டு பார்க்கும் ஏற்படும் சுகம் அந்த மணத்தை மோந்தவன் செத்தாலும் மறக்க மாட்டன் 4) கூன்குருடு செவிடு நீங்கி பிறத்தலரிது. பிறந்தாச்சு. பின்ன என்ன? என்ற் இடமும் 5) ஓட்டு இல்லாதவன் முனிசிப்பாலிடி கேஸ் என்ற இடம் (லா அண்ட் ப்ரொசீஜர்) 6) எல்லோருக்கும் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான காலம் குழந்தைகள் வளர்ந்து வரும் காலகட்டம்தான்

இன்னும் சில நாட்கள் இந்த ஏழாம் உலகத்தில் தான் இருப்பேன் என்று நினைக்கிறேன். அப்படியே தொகுத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். யோசித்த்ப்பார்த்தால், நான் பல இடங்களை தவறவிட்டிருப்பேன். மறுவாசிப்பில் வாசிப்பும் மனதும் இன்னும் விரிவடையும் என்று நம்புகிறேன்.

Image result for ezham ulgam
எழுத்தாளர் ஜெயமோகன்

நன்றிகள்!! இதனை திரைப்படம் ஆக்கிய பாலாவிற்கும் நன்றிகள்! 

அன்புடன்,
ராஜேஷ்  

January 28, 2017

கிருஷ்ணா கிருஷ்ணா!!

அன்புள்ள வணக்கத்திற்குரிய திரு.இந்திரா பார்த்தசாரதி ஐயா அவர்களுக்கு,

நமஸ்காரங்கள்!

தாங்கள் நலமா?

முதல் முதலாக 2014இல் தங்களின் ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன குறுநாவலை வாசித்தேன். அப்பொழுது தான் நான் வாசிக்க துவங்கியிருந்தேன். நல்ல வாசிப்பு அனுபவமாக அமைந்தது.


Image result for krishna krishna indira parthasarathy


கடந்த ஒரு வாரமாக கிருஷ்ணா கிருஷ்ணா குறுநாவலை வாசித்தேன். கிழே வைக்க மனமில்லாமல் கிழே வைத்து வைத்து வாசித்தேன். கிருஷ்ணனை இப்படி எல்லாம் இதன் முன் பார்த்தது இல்லை நான் . மிக நல்ல திறப்பாக அமைந்தது. கிருஷ்ணன் மூலம் சொல்லப்படும் மாற்றம், மரணம், செல்வம், அதிகாரம்,பயம், உடல், காதல், காமம், பாசம், நட்பு, பெண்ணியம் (இன்னும் பல), பற்றி கூறுவதை ரசித்தேன்.

தர்மம், அதர்மம் பற்றி பல இடங்களில் வருவது மிகுந்த தெளிவாக இருக்கிறது. அன்றே விதிகளை ஆட்டதிற்கு ஏற்ப கிருஷ்ணன் மாற்றிக்கொண்டான். ஆஹா Reinvention என்ற buzz wordக்கு கிருஷ்ணனே வழிகாட்டி!! 

அதே போல் ராமன், கர்ணனை சுற்றி இருந்த துன்பியல்கள் கிருஷ்ணனை சுற்றியில்லை. கிருஷ்ணன் என்றால் கொண்டாட்டம். கிருஷ்ணனே அவ்வதாரத்தின் செய்தி என்று முதலில் குறிப்பிட்டது நினைவில் வந்தது. 

பின்பு கடைசியில் ராதவிற்கும் கிருஷ்ணன்னுக்கும் ஆன காதலை பற்றி சுறுக்கமாக சொன்ன இடங்களையும் ரசித்தேன்.

கிருஷ்ணா கிருஷ்ணா மொத்தத்தில் எனக்கு இப்பொழுது தேவை பட்ட ஒரு நல்ல வாசிப்பாக இருந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

நன்றி.

அன்புடன்
ராஜேஷ் பாலசுப்ரமணியன்


August 09, 2016

காடு வாசிப்பு எனக்கு ஒரு மீட்சியரிதாதல்

==================================================================
காடு நாவலை வாசித்தப் பின்பு நான் தொகுத்து/synopsis-ஆக ஒரு மடலாக நாவலாசிரியர் ஜெயமோகனுக்கு எழுதியது
==================================================================




அன்புள்ள ஜெ,

நலமா?

தங்களின் 'காடு' நாவலை முதலாவதாக  2-3 நாடகள் முன்பே வாசித்து முடித்தேன். நான் நீலத்திற்கு உள்ளே செல்லலாம் என்பதே என் திட்டமாக இருந்தது. ஆனால் காடு கொண்டு சென்ற வழி விரிந்து விரிந்து என்னை வழிதவறினேன். ஆதலால் நீலத்திற்கு முன்பு ஒர் இடைவேளையில் காடு-இனை தொகுத்துக்கொள்ள வேண்டும் என்று பின்வருமாறு எழுதியுள்ளேன். மிக நீளாமான மடல். மன்னிக்கவும்


காடு நாவலை நான் கிரிதரனின் பார்வையிலும், ஐயரின் பார்வையிலுமே அதிகம் அறிந்துக்கொண்டேன். மறுவாசிப்பில் இன்னும் பல திறப்புக்களை கண்டுக்கொள்வேன் என்று நினைக்கிறேன். மற்றவர் பார்வையில் இன்னும் அதிகம் பார்க்கவில்லை. அடுத்த வாசிப்பில் கண்டுக்கொள்வேன். காட்டில் பல தளங்களை காண்கிறேன். 


கிரியின் வாழ்வில் வரும் காதல் வேவ்வேறு காலங்களில் எப்படி இருக்கிறது. அவன் முதல் முதலாக  காட்டிற்குள் வரும் பொழுது காட்டின் மேல் கொள்ளும் காதலும், நீலியின் மேல் கொள்ளும் காதலும் அற்புதமான நேரங்கள். மொத்ததில் காட்டின் தீஞ்சுவை எனக்கு மீட்சியரிதாதல்

காதல் / காமம்

கிரி முதலாவதாக காட்டை காணும் பொழுது அப்பச்சை மரத்தடியில் அவன் கொள்ளும் எழுச்சியை போல அவனுள் இயற்கையான காதல் மலர துவங்குகிறது. பின்பு அது தீயின் துளி போல பெருகிறது. பின்பு காதலின் உச்சத்தில் பாறையின் மீது தகிக்கிறது. வழியில் காடு எப்படி பிரித்தறிய முடியாமல் மரங்களும் கொடிகளும் செடிகளும் உருவான  பச்சைப்பரப்பு. ஒர் இலைகளினாலான் ஏரி. அதில் கிரி முக்குளியிட்டு செல்கிறான். காதல் அதுபோலே பிரித்தறிய முடியாதது. ஆனால் இக்காடும் / காதலும்/ காமமும் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டே இருப்பது. ஒவ்வொரு இடமும் பார்த்தது போலவே இருந்தாலும் புதிய இடங்கள். திசையற்ற இடம் காடு. ஆனால் மனிதன் அங்கே திசை தேடி அபத்தம் ஆகிறான். ஆனால் காட்டை கண்டவன் காட்டை விட முடியாது. அது போல காதலும் .  கிரி காட்டிற்குள் மீண்டும் நுழைப்பொழுது மிக சீக்கிரம் ஓடைப்பாறை அடைகிறான். மேலே செல்ல நினைக்கிறான். அப்படி செல்கையில் காடு தன் எல்லையை விரித்து விரித்து உள்ளே இட்டுச் செல்கிறது. அங்கே கிரி காட்டின் மீது இருந்த பயம் கிளர்ச்சி அடங்குகிற்து. காதலும் காமும் இது போலவே என்று எனக்கு படுகிறது. துவக்கத்தில் காதல் பரவசம் இருந்தாலும் அதில் மனிதன் திளைத்தாலும் அவன் மேலே போவது என்பது அவனுடைய எண்ணத்தை பொருத்தது. அப்படி எண்ணினால் காதல் கூட்டிச்செல்லும். ஆனால் காடு விரும்பினதால் கூட்டிச்சென்றது. 

அங்கே காட்டில் கிரியும்/ மனிதனும் அறியாத விஷயம் மீது மோகம் கொள்கிறான், காதிலிக்கிறான். அப்போது வானத்தை பார்க்கிறான். வானம்போல அவன் மனம் விரியமுடிகிறது. மனிதன் இயற்கையாக இருக்கும்பொழுது அவன் மனம் எப்படி இருக்கிறது. ஆனால் செயற்கையான நகரங்களில் மனைவியிடமும் காதலியிடமும் நம் மனம் நேரம் ஒதுக்கி பேசுகையில் எங்கே நமக்கு விரிவடைய முடியும்? .. அத்தகைய கணங்களில் மிக மெல்ல இரவெனும் தாபம் அவனுள் நிகழ்ந்தும் கொண்டு இருக்கிறது.

அதன் பின் மனுஷனுக்கு உள்ள தீ காமகுரோத மோகங்கள்.. அது காடு போல. இலைகள் தளிர்கள் வானை நோக்கி எழும் உயிர் உள்ளவரை. பின்பு மட்கியும் எரியும். காடு ஈவு இரக்கம் அல்லாதது. அங்கே பூக்கள் வசந்த காலத்தில் பூத்து அழிகிறது தடமே இல்லாமல்.  நம் மனமும் காதலும் எப்படி பட்டது. 


நீலியை கண்ட பின்பு ஓர் இடத்தில் அவர்களை தவிர காலமே இல்லாதது போல் தோன்றுகிறது. நினைவும் அறுபடவில்லை. அசையவுமில்லை. அதுபோல சிற காலம் நானும் இருந்து உள்ளேன் என்று என்னை அங்கு காண்கையில் ஒரு புன்னகை. ஆனால் இன்று யோசிக்கையில் அதை பற்றிய ஒரு சுவடு கூட என் நினைவில் பெரியதாய் இல்லை.  பின்பு கூறுகிறீர்கள் எப்படி அக்கணங்கள் கொந்தளிப்பாக இருக்கிறது. ஆனால் அனுபவம் முடிந்த மறுகணம் அதனை பகுத்துப்பிரித்து பார்க்கிறோம். எவ்வளவு உண்மை என்றே நினைத்துக்கொண்டேன். ஓர் இடத்தில் கிரி திட்டம் தீட்டுகிறான் பின்பு புதிய திட்டம் ஆனால் குட்டப்பனை கண்ட பின்பு அது ஒரு நினைப்பாகி விடுகிறது. நான் சில ஆண்டுகள் முன்பு ஒரு பெண்ணிடம் என் காதலை கூற முற்படுகையில் அவ்வாறு நடந்து உள்ளது. என்னுடன் பேரூந்தில் பயணிப்பாள். யாராவது வந்து விடுவார்கள். அல்லது மழை பெய்து விடும். சொல்ல வந்ததையே மறந்து விடுவேன். ஆனால் அப்போது அவளுடன் மழையில் சிறிது நேரம் உணவு உண்டாலும் - நீங்கள் குறிப்பிட்டு இருந்தது போல அது ஒரு பெரிய வெகுமதி.  பின்பு இதனை "தாண்டிச் சென்றபடியே இருத்தலை, இழந்தபடியே இருத்தலையே வாழ்க்கை என்கிறோம்" என்று குறிப்பிட இடமும் நன்று. 


அவன் காதல் முதிர்ச்சி அடையும் பொழுது அவள் வெறும் பெண். முடிந்துபோகும் என்று எண்ணி தன் எண்ணங்களை சாந்தப்படுத்திக்கொள்கிறான். நிதானமாக நடக்கிறான். ஆனால் அந்நிலைக்கு வர ஒருவனுக்கு ஒரு சிறிய காலம் தேவை படுகிறது. அங்கே ஓர் இடத்தில் கூறுகிறீர்கள் நிழல்கள் இடம் மாறியிருந்தன. அது போல காதலும் எப்படி நிறம் மாறுகிறது.  


ஐயர் ஓர் இடத்தில் சொல்கிறார் எல்லா பெண்ணிலும் அழகு இருக்கு. காட்டை ரசிகனும்னு நினச்சா நிம்மதியா இருக்கலாம். ஆனால் நீங்கள் சொல்லாமல் சொன்னது அதை (காட்டையும், பெண்ணையும்) அடைய நினைக்கும் பொழுது தான் ஆபத்து. கடைசியில் உனக்கு அகங்காரம் - தன்னை எல்லாரும் பேண வேண்டும் என்னும் எண்ணம். அது போல "காமம் காமம் என்ப காமம்" பாடல் மூலம் ஒரு ஒப்பீடு . காமம் கடைசி வரைக்கும் தீராத ஒரு விருந்து. காதல் என்னும் பழம் ஆதாம் ஏவால் காலத்தில் இருந்தே இருக்கிறது. அதாவது மனிதன் உருவான காலத்தில் இருந்தே காதலும் காமமும் மிக மிக இயற்கையான ஒன்று. அதனை செயற்கை படுத்த கூடாது. அதுபோல ஏங்கி உண்டால் பழத்தின் ருசியினை அறிய முடியாமல் ஆகிவிடும். உண்ணும் தோறும் ருசியும் வெறியும் ஏறும் என்னும் வரிகள!! பொதுவாகவே நீங்கள் குறுந்தொகை பாடல்களை குறிப்பிட்டு அகம் சார்ந்து நோக்கும் பார்வையில் நான் இது வரையில் அணுகியது கிடையாது. இந்நாவல் எனக்கு இன்னொரு திறப்பை கொடுத்தது என்றே சொல்லலாம். 


இருப்பினும் கிரி போல நானும் ஐயரால் எரிச்சல் அடைந்தேன். அவன் அவ்வளவு கற்பனையில் இருக்கும் பொழுது ஐயர் எளிதில் அதில் இருந்து விளகி மற்றொன்றுக்கு சென்று விடுகிறார். அவளின் அழகிற்கு விடுத்த அநீதி, தன் உணர்வுகளை சிறுமைபடுத்தியது போல. ஆனால் ஐயர் முதிர்ந்தவர் இதை போல பல நூறு பெண்களை பார்த்து இருப்பார் என்று நினைக்கும் பொழுது அது அவரது இயல்பு என்று படுகிறது. 


அது போல ஓர் இடத்தில் சொல்லுக்குள் வாழ்வதை அனுபவித்து பார்த்தால் தான் அறிந்துக்கொள்ள முடியும் என்பதனையும் ரசித்தேன். அது போல "மனம் அழகை உணரும் விதங்களின் மர்மங்களில் அலைக்கழிந்தேன்" என்னும் வரிகளில் பயணிக்கிறேன் இப்போது. நமக்கு ஏன் இப்படி எல்லாம் இதுக்கு முன்னாடி நடந்தது இல்லை. இப்ப எப்படி இதெல்லான் நடக்குது. அதுவும் நம்மலா இப்படினு நினைக்கும் பொழுது உண்மையாகவே மர்மமாக இருக்கிறது. 


நீலியின் பின்னால் அளவிட முடியாத பொன் காற்றில் குலுங்கி எழுந்தமர்ந்து (பொன்னைவிட ஒளி கொண்ட) பூக்கள் உதிர்கிறது. எவ்வளவு அழகான கற்பனை. அது போலவே அவள் பின்னால் காதல் உள்ளது என்றே எனக்கு படுகிறது. காதலே அங்கே பூக்களாக பொழிகிறது. ஆதலால் அவளே முக்கியமற்று இருக்கிறாள். .... ஆனால் "என்னால் அறிந்துகொள்ளவே முடியாத அளவுக்கு மகத்தான அபாயகரமான விஷயங்களின் விளிம்பில் உலவிக் கொண்டிருக்கிறேன் என்று நெஞ்சுக்குள் ஒரு சிறு அச்சம் சோன்றியது. கையில் அந்த மூக்குத்தி இருந்தது ஒரு சிறு கூழாங்கல்போல. உண்ணமுடியாத தானிய மணி போல. அதை ஆற்றை நோக்கி வீசினேன்" .. கிரி எப்படிபட்ட ஒரு அபாய கட்ட இடத்தில் இருக்கிறான். ஒரு படி தவறினாலும் விளைவு மிக மோசம். அங்கே அவன் கையில் எவ்வளவு அழகான ஒரு காதல் அழகிய மூக்குத்தி போல கூழாங்கல் (கூழாங்கல் உறுவாக எத்தனை ஆண்டுகள் ஆகும்)  போல தானியம் (அது எத்தனை விதைகளை உள்ளே கொண்டது) போல இருக்கிறது... ஆனால் அவன் அக்கனவை ஆற்றில் வீசுகிறான். எப்படி அதை நீங்கள் எழுதினீர்கள். பலர் அத்தகைய நேரங்களை வாழ்வில் தவறவிடுகின்றனர். 

கிரி காதலின் உச்சியில் எல்லாம் தெரிந்த பறவை இருக்கு என்கிறீர்கள். எனக்கு ஒருமாதிரி தான் புரிந்தது. இரண்டாவது தடவை பறவை தனை குறியீடாக வருகிறது. மீள் வாசிப்பில் அறிவேன் என்று நினைக்கிறேன்.


"காட்டையே ஒற்றைப் பெரும் பூவாக மற்றும் வேங்கை, தீப்பற்றி எரியும் காந்தள், பொன் சொரியும் கொன்றை எத்தனை மலர்கள். மாறாப் பசுமைக் காடு என்பது பூக்களின் பேருலகம். இந்த நிலத்திற்கு அடையாளமாக இந்த அபத்தமான பூவை ஏன் கற்பனை செய்தார்கள்? ஆனால் மொத்த சங்க இலக்கியப் பரப்பிலும் குறிஞ்சிப்பூ பற்றிய வர்ணனைகளே இல்லை என்பது நினைவுக்கு வந்தது." - இவ்விடத்தில் இவனுடைய காதல் என்பது எவ்வளவு சாதாரணமான ஒன்று என்று ஆகிறது. எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் காதலை போலவே. அதற்கு நீங்கள் மற்ற சில இடங்களில் காவியைத்தை பற்றியும் தூய காதல் பற்றியும் பேசுகிறீர்கள்.


பல இடங்களில் மாமியை நினைக்கும் பொழுதெல்லாம்,தனிமையிலும், அவன் மனம் ஒன்றையே நாடுகிறது மாறாத சடங்காய். குற்ற உணர்வு, இழிவுணர்வு, சுய இரக்கம். அச்செயல் முடிந்த உடன் ஒரு வெறுமை. ஆனால் தவிர்க்க நினைத்தால் இரண்டு நாட்களைத் தாண்டாதது. பிறகு. கண்களை மூடி நினைவுகளை மனதிலிருந்து விரட்டுகிறான். அதுவே பல சமயம் நடக்கிறது.  எப்படி அவனுக்கு காமம் ஒரு கேளிக்கையாக மாறிவிடுகிறது. 

நான் சில இடங்களில் கிளியை பற்றிய குறிப்புகளை கவனித்தேன். கொஞ்சம் தவறான புரிதலா என்று தெரியவில்லை. பேசி தெரிந்துக்கொள்ள வேண்டும்.  "கிளி பறந்து போனதும் கிளை சற்று விடுபட்டது. காற்றில் ஆடிச் சரிந்தது. அதன் இலைகள்மீது வெயிலின் ஒரே ஒரு கதிர். இலைகள் கைவிரித்து அதை அள்ள முயன்றன 'கிளி விளி பயிற்றும் வெயில் ஆடு பெருஞ்சினை... பின்பு ஓர் இடத்தில் நீங்கள் மாமி கட்டிலில் அமர்கிறாள் என்றும் கிளிக்கு ஒப்புவாக கிரியை கிளையாக சொல்கிறீர்கள். மாமி சென்ற உடன் அவன் மனம் எப்படி விடுபடுகிறது. 


நகரம்

நகரத்தை பற்றியும் காற்றை பற்றியும் நீங்கள் சொன்ன பல குறிப்புகள் மிக மிக சரியாகவே எனக்கு பட்டது. எனக்கு பிடித்த வற்றையும் நான் வாழ்வில் சந்தித்த வற்றையும் கீழே குறிப்பிட்டு உள்ளேன். 

1. காட்டில் மனிதன் எவ்வளவு நிதானமாக இயங்கிக் கொண்டு இருக்கிறான். காட்டை ரசித்துக்கொண்டு, காதல் கொண்டு காமம் கொண்டு. ஆனால் அங்கே இருக்கும் பொழுது தெரியவில்லை வெளியே வரும் பொழுது தான், நகரத்துடன் ஒப்பிடுகையில் தெரிகிறது நாம் எவ்வளவு வேகமாக சென்று கொண்டு இருக்கிறோம் ஒன்றுமே ரசிக்காமல். 

2. காடும் மனிதனின் இச்சைப்போல சீரற்றது. ஆனால் மனிதன் காட்டை சமன் செய்து கொண்டு இருக்கிறான். துல்லிய வடிவங்களால் நிர்ப்புகிறான். 


3. நகரங்களில் காதலிப்பது தவிர வேறு பிரச்சினைகளே இல்லையா என்றும் கேட்கும் இடத்தில் நம் சமூகத்தில் இன்று நடக்கும் சம்பவங்களை (பல பெண்களை கொலை செய்தல், சினிமாக்களில் காதல் இல்லாமல் டூயல் பாடல்கள் இல்லாமல் இல்லை) பார்க்கையில் இது மாறுமா என்றே கேட்டுக்கொள்கிறேன்.


4. குடிசைகள் எவ்வளவு ஆபாசமான ஒன்று. மழை என்னும் அமுதை ஓவ்வொரு அணுவும் திளைக்காமல் மனிதன் எலி போன்று இருட்டில் பதுங்குகிறான். அவனுடைய பயம், பலவீனம், சுயநலத்தின் அடையாளமே குடிசை. நம்முடைய வாழ்வில் சொந்தமான வீடே ஒரு பெரும் லட்சியமாக இருக்கிறது என்று நினைக்கையில் சற்று ஆபாசமாக உள்ளது. 


5. நீலியை வரவழைத்து பார்க்க நினைக்கிறான். ஆனால் அதில் நியாயமில்லை என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது. "காடு என்பது மனிதன் அனுபவிக்கப்பட வேண்டிய பொருள் என்று நினைக்கும் நகர் மனநிலையின் தொடர்ச்சி அது" ..என்னும் இடம்!!! பின்பு காற்றை வணிக பொருள்களின் (பலகை) உற்பத்தியாகும் இடம் என்று நினைக்கும் மனம். ஒரு தடவை நாஞ்சில் நாடனின் "மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

காடும் உடையது அரண்பற்றிய கட்டுரையை நினைத்துக்கொண்டேன். 

6. "நட்சத்திரங்களை ஏறிட்டுப் பார்த்தேன்.. அலங்காரக் கூரை.. வீட்டிற்க்குள்ளே சென்று விடுக்கிறான். மழையில் இருந்தும் வெயிலில் இருந்தும் தப்புவதற்க்காக இல்லை. அப்படி என்றால் ஆயிரம் வழிகள் உண்டு. ஆனால் தான் தான் என்று சதா நினைத்தபடி ஓடுகிறான். வாழ்வின் துவக்க நாட்களில் தான் நிமிர்ந்து பார்க்க முடிகிறது... இதை பற்றி சில வருடங்களாக நினைத்ததுண்டு. நான் பள்ளிச்சிறுவனாக இருந்த பொழுது அரசு குடியிருப்புகளில் மொட்ட மாடியில் உணவு உண்டு உறங்கிய நாட்கள் உண்டு. ஆனால் இன்றோ அது நடந்து குறைந்தது 10 வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். ஏன் நாம் அப்படி இப்பொழுது எல்லாம் செய்ய முடியவில்லை. பல நேரம் சினிமா, கடற்க்கரை, நண்பர்களுடன் உணவகத்தில் என்று வீடு திரும்பவே 10 மணிக்கு மேல் ஆகிறது. இதன் பிறகு எங்கே மொட்ட மாடி.  தினசரிகளில் சாலையில் பயணமே 1-2 மணி நேரம், பின்பு எங்கே வானம். கடைசியாக நான் மேல் நோக்கி வியந்து வானம் பார்த்தது என் மனைவியாக போகிறவளுடன் தொலைப்பேசியில் உறையாடிக்கொண்டு இருக்கும் பொழுது. அப்பொழுதும் இதையே நினைத்துக்கொண்டேன். 


7."வாழ்க்கையை கடந்து சென்றபோது எத்தனையோ அனுபவங்கள் சிறு தடயம்கூட இல்லாமல் ஆகின்றன. அது மலையேற்றம் போல ... ஏறும் பொது ஒவ்வொன்றும் சிறியதாகி, அற்பமாகி பார்வையை விட்டு மறையும். உச்சியில் மலையே அற்பமாகி விடுகிறது. வானம் மட்டும் எஞ்சுகிறது"..என்று நீங்கள் கூறும் இடம் அற்புதம். நான் பதின் பருவங்களில் இருக்கையில் என்னுடைய சபரிமலை குரு இதனை யொட்டி கூறியுள்ளார். மலை ஏற ஏற நாம் தேங்காய் களை உடைத்துகொண்டு செல்கிறோம். நம் பாரங்கள்/ பாவங்கள் குறையும் என்று. அவரை நினைத்துக்கொண்டேன். நீங்கள் பொதுவாக மலையெற்றத்திற்கு கொடுத்த விளக்கம் மிக ஏற்ப்புடையாத இருந்தது. 

8. நகர வாழ்க்கையில் காதல் எவ்வளவு செயற்கையாகி கொண்டே இருக்கிறது. சிறுவர்களிடம் இருக்கும் பணம் போல என்னும் இடம்!! 

9. ஆனால் அழகு என்பது எல்லா இடங்களிலும் இருக்கிறது. சுசீந்திரம்கிற சாக்கடைச் சந்திப்பு முனையில்கூட வானம் அழகு என்னும் இடம்!!


10. தெய்வங்கள் ஊரில் இருந்தாலும் காடுக்கு உரியவர்கள் காட்டில் முளைத்து ஊருக்குள் நிறுவப் பட்டவர்கள். நான் கேட்ட பல புராண கதைகள் காட்டில் நடந்தவை என்று நினைத்துப்பார்கையில் பெரிய அளவில் அதிர்ச்சி இல்லை ஏன் என்றால் உங்கள் தளத்தில் இந்து மதம் எப்படி பட்டது என்று நீங்கள் எழுதிய பல கட்டுரைகள் வாயிலாக அறிந்துள்ளேன். 


11. காடு என்பதை மனிதன் எப்படி உரிமை கொண்டாடுகிறான். ஒரு சாலை மௌனமாக ஒரு திட்டத்துடன் பாம்புபோல நீள்கிறது. .. அதேபோல முயல் காட்டில் எவ்வளவு இயல்பாக உள்ளது. ஆனல் சாலையில் வந்த உடன் மருண்டுவிடுகிறது என்னும் இடம்.  [ஆண்டுதோறும் 1993 முதல் சபரிமலை சென்று வருவதால் நீங்கள் காட்டை காட்சிப்படுத்தும் பொழுது என்னால் முழுமையாக உள்வாங்கி கற்பனை செய்ய முடிந்தது.  உதாரணமாக திசையில்லா காடு, பல பச்சைகள், பல நிழல்கள், பார்த்தது போல் தோன்றும் புதிய இடங்கள். ஆனால் இன்றோ எங்கு பார்த்தாலும் பீடி நாற்றம், ரப்பர் தோட்டங்களின் பரவலான ஆக்ரமிப்புகள், சாலைகள் சென்றுள்ள தொலைவு/வளர்ச்சி.  அந்த அழகிய காட்டின் மீது மனிதன் செய்த கொடுமைகளை பார்த்துள்ளேன்.  1995களில்  வெறும் கஞ்சி மட்டுமே கிடைக்கும். அதுவும் 5ரூபாயுக்குள்ளே. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேல் அங்கே தோசை முதல் சன்னா பரோட்டா வரை கிடைக்கிறது. அது மட்டும் அல்லாமல் மனிதனின் மலம் அங்கே சரியான முறையில் அப்புறபடுத்தாதனால் அங்கு காட்டிற்கு ஏற்படும் சுகாதார கேட்டினை ஒரு சுற்றுசூழல் தன் ஆர்வலுருமான நண்பரின் மூலம் அறிந்து கொண்ட பொழுது நெஞ்சம் கனக்கிறது. அன்றெல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா என்று சொல்லும்பொழுது பழைய நினைவுகளின் மீது  ஏக்கம்/Nostalgia  வரவில்லை. மனிதனின் மீது கோபமே வருகிறது.  நீங்கள் ஒரு இடத்தில் குறிப்பிட்டு இருந்தீர்கள். காடு மனிதன் அனுபவிக்க படைக்க பட்டாதக எண்ணிக்கொள்கிறான். அற்பமான மனிதன்!! ]


12. நாகரீகம் என்பது நகர் சார்ந்தது. அதற்கு எதிர்ப்பதம் காட்டுமிராண்டி என்று பள்ளிகள் முதலே கற்பிப்பபடுவது. காட்டை வென்றடக்கும் ஊர்களின் கதையே மனித நாகரீகம் போலும். ஆனால் நகரம் என்பது எவ்வளவு செயற்கையானது. காடு எவ்வளவு இயற்கையானது என்று யோசிக்க தவறுகிறோம். 

பொது


மேலே காதல், நகரம் என்று மட்டும் அல்லாமல் நான் பொதுவாக ரசித்த இடங்கள். 

1. அவன் அம்மாவிடம் ஏற்படும் இழப்பினை  காதலிக்கும் கணத்தில் அன்னையை கண்டுக்கொள்கிறான் என்னும் இடத்திலும்... பின்பு அடிக்கடி தின்பதற்கு ஏதாவது தந்து முன்போலவே இருந்தாலும் கூட..வெகுதூரத்தில் என்னை உணர்ந்தேன் இடத்திலும்.. ஒரு நிமிடம் நின்று மீள் வாசிப்பு செய்தேன்!  

2. பெயர்களில் உள்ள அப்பத்தத்தை பற்றி ஒரு இடத்தில் கூறியிருப்பீர்கள். அவை ஒருபோதும் மந்திரங்களாக முடியாது. எவரும் அதைப் பிடித்து ஏறி முக்தியைத் தொடமுடியாது - என்னும் இடம் அற்புதம். நான் பதின் வயதில் இருக்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியுடன் ஒப்பிட்டுக்கொள்வேன். எனது அப்பாவின் பெயர் ஆறுமுகம். இதனை கேட்ட ஒருவர் உங்கள் பெற்றோர்கள் கலப்பு திருமணமா என்று கேட்டார். ஆம் என்றேன். எப்படி பேரை மட்டும் வைத்து அவர் கேட்டார் என்று எனக்கு ஆச்சர்யம். எனது பாட்டியை கேட்டேன். பாட்டி சொன்னாங்க நம்முள்ள அப்படி பெயர் வைக்க மா என்று கேட்டதற்கு பெயர்  கடவுளின் சமஸ்கிருத பெயராக இருந்தால் உன்னை கூப்பிடுபவர்களுக்கு முக்தி அடைய வாய்ப்பு உண்டு என்று. அதற்கு ஒரு உதாரணம் கொடுத்தார்கள். துரியோதனனுக்கு புஷ்ப விமானம் வந்துச்சாம். வந்துச்சு ஏன்னா கிருஷ்ணா கிருஷ்ணா என்று கிருஷ்ணனின் பெயரை உச்சரித்துக்கொண்டே இருந்தானாம். அன்றே எனக்கு அபத்தமாக தோன்றியது ஏன்றால் இன்னொரு பக்கம் கர்ணன் அவ்வளவு கொடைகளை அளித்ததனால் முக்தி அடைகிறான் என்று படம் பார்த்து உள்ளோம். 

3.  ஒரு மனிதனின் பழக்கங்கள் அவனுடைய மனம்தான். தன் மனதின் மேலேயே பிடி இல்லாத எளிய மனிதர்கள் பிறரது மனம் மீது கட்டளைகளை விதிக்கிறார்கள் ஆலோசனைகள் சொல்கிறார்கள். வருத்தமும் ஆதங்கமும் கொள்கிறார்கள். என்னும் இடம். 

4. "கருமையளவுக்கு அது இளமையை வெளிப்படுத்துவதில்லை. கரிய நிறம் கண்களை நிறைத்து விடுகிறது" போன்ற சிறு சிறு இடங்களையும் ரசித்தேன். 
5. மனுஷ உடல்ல இருந்து மலம் போறது மாதிரி மனசில இருந்தும் போகணும்
6. தருக்கம்னா அது அதருக்கத்தை போய்த் தொடணும். அப்பதான் அதுக்கு மதிப்பு..... ஏன்னா, ஒவ்வொரு தர்க்கத்துக்கும் கண்டிப்பா எதிர் தர்க்கம், சமானமான வலிமையோட இருக்கும்

7. "என்ன ஒரு அசைவு! செயற்கையான பவ்யம், தளுக்கு, வெக்கம் ஒண்ணும் கிடையாது. ஆனா மலர்ச்செடி அசையறா மாதிரி ஒரு மென்மை, நளினம்... பார்வதிதேவி மலைமகளா இப்படித்தான் இருந்திருப்பா சிவனுக்கு பித்துப் பிடிக்க வைக்கிற சிவகாமசுந்தரி." ... ஒரு பெயரை நான் இப்படி நோக்கியது இல்லை. அவ்வளவு அழகு. 


8. "ஒரு சங்கீத கச்சேரியில் இருப்பவர்களைப்போல ஒரு மிகையான நெகிழ்வு. ஆனால் நெகிழ்வையே கணக்கு வழக்கின் மொழியில் சொல்வார்கள்" - கச்சேரிகளில் சில நேரங்களில் எரிச்சல் அடையும் அளவுக்கு செய்வார்கள். அவர்கள் கணக்கு போடுவது அவர்களின் உரிமை. ஆனால் பக்கதில் உள்ளவரிடம் கலந்துரையாடும் பொழுது அது என்னை எரிச்சலடைய செய்கிறது. 

கடைசியாக/கிளைமாக்ஸ்

அவன் அவளுடைய அருகாமையை அவன் புலன்கள் கொண்டாடும் இடம் தன் அகம் போன்றது என்னும் இடங்கள் அதுவும் காடு போன்றது. பின்பு இருவரும் மலர்களை எறிந்து விளையாடும் இடத்தில் அங்கே உரசுவது மனங்கள். அது சிறுவிளையாட்டு என்னும் இடம். அருகாமையில் இருக்கையில் காற்று வெளியிடையையும் காலத்தையும் நிரப்ப முனைவது. காதல் எவ்வளவு அகம் சார்ந்த ஒரு விஷயம் என்று கூறுகிறீர்கள். ... ஆனால் இவை அனைத்திலும் ஒன்றையும் நிகழ்த்தாமல் காலம் சென்றுக்கொண்டு இருக்கிறது.

அதேப்போல இறுதியில் அவன் நீலியின் அருகாமையை உணர்கிறான். ஆனால் மாமியுடன் ஏற்படும் உறவினால் அவன் காதல் என்னும் கனவினை இழக்கிறான். அங்கே அக்கனவாக நீலி அழும் காட்சி அற்புதம். அவன் கனவை கொன்று/ தொலைத்து நிகழ் காலத்திற்கு வருகிறான். பின்பு வாழ்வில் செல்லும் பொழுது அவன் மனைவியுடன் மகிழ்ச்சியிள்ளாத வாழ்க்கை, மாமியின் நினைவுகள் அவனை ஒரு வழி செய்கிறது. காதலும்/ காமமும் கேளிக்கை ஆகுகிறது. ஒரு கட்டத்தில் மூத்திரம் போகவே கஷ்டப்படுகிறான். அவன் வாழ்வில் தோல்வி அடைகிறான். 

காடு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. அதனில் ஒரு 2-3 நாட்கள் அலைந்து கொண்டு இருந்தேன். என்னுடைய வாசிப்பினை யாரிடமாவது கலந்துரையாடிக் காட்டினை இன்னும் அறிந்துக்கொள்ள நினைத்து கடலூர் சீனுவிற்கு அழைத்தேன். அவர் நான் காணாத இடங்களையும் தளங்களையும் காண்பித்தார். அப்போழுது தான் நான் ஆழமாக வாசிக்காத இடங்களை தெரிந்துக்கொண்டேன். அவரும் என்னை தொகுத்துக்கொள்ள ஊக்குவித்தார். ஆதலால் முதல் முறையாக தொகுத்துக்கொள்ள முனைந்தேன். 

காடு போன்ற படைப்பிற்கு மிக்க நன்றி! 

அன்புடன்,

ராஜேஷ்

December 27, 2013

மீன்கள் - தெளிவத்தை ஜோசப் - சிறுகதை தொகுப்பு

சென்ற வாரம் விஷ்ணுபுரம் விருது விழாவில் பங்கேற்க செல்லும் முன் இவ்வாண்டின் விழா நாயகர் எழுத்தாளர் திரு.தெளிவத்தை ஜோசப் (இலங்கை மலையக பகுதி எழுத்தாளர். பூர்வீகம் - தமிழ்நாடு) அவர்களின் மீன்கள் சிறுகதையை மட்டும் படித்தேன். வலையங்களின் இன்னும் சில சிறுகதைகள் இருந்தன ஆனால் பின்புப் புத்தக வடிவில் வாங்கி படிக்கலாம் என்று எண்ணிப் படிக்கவில்லை. இன்று படித்தேன். 

நான் நிரம்ப சிறுகதைகள் முன்பின் படிக்காவிட்டாலும், எனது பாட்டியும் படித்து கருத்துக் கூறியதால், நானும் சற்று ஆழ்ந்து படித்தமையால் என்னால் ஒன்று சொல்ல முடியும் - மீன்கள் சிறுகதை தொகுப்பு (நற்றிணை பதிப்பகம்) படிக்க வேண்டிய ஒரு மிகசிறந்த தொகுப்பு. 

நான் சிறிது அறிந்துக்கொண்டவற்றில் சில 

(சிறுகதையின் வலையத்தல சுட்டி உள்ளது. தட்டவும்)

ஒரு மிக சிறிய வீட்டில் இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகளுடன் ஒரு கணவன் மனைவி வாழ்கின்றனர். கதையின் துவக்கமே ஒரு பெரிய திகைப்போடு (கதையின் முடிவுடன்) துவங்குகிறது. இப்படி பட்ட சிறிய வீட்டில் இவர்களுக்கு அந்தரங்கமே கிடையாது. அந்தரங்கம் இல்லாத் வாழ்வு ஒர் வாழ்வா ? இவர்கள் ஒரு குடிசையைக் கூட மற்றவர் அனுமதி இன்றி கட்டிகொள்ள முடியாது. இவர்களுக்கு இன்னொரு வீடு கேட்க கங்கானியை காண செல்கிறான். அங்கு என்ன நடப்பது என்பது தான் கதை. 

கதையில் வரும் வரி - "எவ்வளவு சிறிய மீனாக இருந்தாலும் தன்னிலும் சிறியதை விழுங்கத்தானே செய்கிறது!" என்பதே கதையின் சாரம்சம்.

ஒரு கல்யாணம் ஆன தமிழன் தன்னுடன் வேலை புரியும் சிங்கள பெண்ணுடன் நாளடைவில் பழகி உறவு கொள்கிறான். இதனை அவனின் மனைவி மூலம் அறியும் அவனது நண்பர் ஆச்சர்யப்படுகிறார். இந்த விவகாரம் துவங்கும் முன் கேள்விப் பட்ட போது நம்பவில்லை ஏனென்றால் அலுவகத்தில் கிசுகிசுக்கள் சகஜம்.  அவன் நினைப்பது இது தான் "பிலாக்காய் என்றால் பிளந்து பார்த்துவிடலாம். மனிதனை எப்படிப் பார்ப்பது என்று". 

மனைவியை (அவள் சொந்த ஊரிக்கு அனுப்பி) ஒதுக்கி வைத்து அந்த சிங்கள பெண்னை கல்யாணம் செய்து கொள்கிறான். பெண் குழந்தை. காலம் செல்கிறது. புதிய பெண்டாடி இத்தனை ஆண்டுகளுக்குள் வியூகம் அமைக்கிறாள். மொழி, மதம், இனம், சுற்றம், சூழல் சமூகம், எனப் பல படிகள் கொண்ட வியூகம் அது. வெளித்தோற்றம் காட்டாத உள் மன விலங்குகள்.

இப்போது முதல் மனைவியின் குடும்பம் எப்படி இருக்கும் என்று எண்ணுகிறான் நண்பன். காலம் எப்படி எல்லாம் மனித மனங்களின் காயங்களை குணப்படுத்திவிடுகிறது. குணப்படுத்தி விடுகிறதா அல்லது மறைத்து வைத்துக் கொண்டு மறக்கடித்து விடுகிறதா…! அந்த பெண் குழந்தைக்கு கல்யாணம் ஆகும் நேரம் ஒரு சிக்கல். இவன் கிறுஸ்துவனாக மாறவேண்டும். இவன் எதிர்கிறான். ஆனால் அவர் சூழ்நிலைகளின் கைதியாக வெகு காலமாகிவிட்டது.

இந்த கதை திபாவளி நாளை மத்தியமாக கொண்டு மூன்று நாட்களில் நகர்கிறது. 

பஸ்ஸில் – ரயிலில் – தியேட்டரில் ஒரு நல்ல இடம் பிடித்துக் கொள்வதற்கு முட்டி மோதும் அளவுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல இடம் பிடிப்பதற்கு நம் மக்கள் முட்டுவதில்லை. மோதுவதில்லை. - என்று துவங்குகிறது கதை.

பஸ்ஸில் ஒரு பிச்சைகாரனுக்கு காசுப் போடும் மக்களின் மனநிலையை படம் பிடித்து காண்பிக்கிறது இக்கதை. 

ஒரு பேருந்தில் நடக்கும் பயணமே கதை. இதில் சிங்களவர்களுக்கும் மலையக தமிழ் மக்களுக்கும் பேருந்தில் நடக்கும் பாரபட்சமே கதை. 

இது ஒரு சின்னப் பயணம். பத்துமைல் தூரம் ஓடும் பஸ் பயணம். இதே இந்த மக்களுக்கு இத்தனை சிரமமானதும், சிக்கலானதுமாக இருக்கிறதென்றால் வாழ்க்கை எனும் பெரும்பயணம்…..?

ஒரு சிங்கள டாக்டர் ஒரு தமிழரின் வீட்டில் காந்தி, நேரு, போஸ் படங்களை பார்த்து, நீங்கள் எங்கள் நாட்டு தலைவர்களின் போட்டோகளை வைக்காமல் உங்கள் பூர்விக நாட்டு தலைவர்கள் போட்டோவை வைத்து உள்ளீர். ஆனால் இங்கு குடியுரிமை கேட்கின்றீர். கடைசி தமிழன் வரை அனுப்ப வேண்டும் என்கிறார். படத்தில் உள்ளவர் யார் என்று சிங்கள டாக்டர் கேட்கிறார். தமிழனின் பதில் : 

காந்தியின் படத்தைப் பார்த்து இது யாருடைய படம் என்று கேட்பதன் மூலம் தனக்கும் எனது தலைவர்களுக்கும் பெருமைத் தேடிக் கொள்வதாக எண்ணிக்கொள்ளும் அய்யாவின் அறியாமை அவனுக்கு சிரிப்பூட்டியது.

“இது யாருன்னு அய்யாவுக்குத் தெரியலையா… அடப்பாவமே! ‘மனிதர்கள் தங்கள் நாட்டை நேசிக்கிறார்கள் என்பதால் மற்ற நாட்டை வெறுக்கிறார்கள் என்பதல்ல பொருள்’ என்று கூறிய மகாத்மா இவர்தான்.

மற்றவர்களுடைய தலைவர்களை, மற்ற நாட்டவர்களை வெறுப்பதன் மூலம் மட்டுமே உங்கள் நாட்டை, உங்கள் தலைவர்களை, உங்கள் நாட்டவர்களை நேசிப்பதாக கற்பனை பண்ணிக் கொள்ளும் உங்கள் போன்றவர்களுக்கு உலகத்துக்கே ஒப்பற்றவரான ஒரு மனிதரைத் தெரிய முடியாதுதான்….”

ஒரு இரண்டு வயது குழந்தை குளியல் அரையில் தாழ்ப்போட்டுக்கொண்டு மாட்டிக் கொள்கிறாள். இருட்டில் அவள் உற்சாகம் இன்றி இருக்கிறாள். வீட்டில் உள்ள உறவினர்கள் தவிக்கிறார்கள். அவர்களுக்கு எப்படி இந்த நேரத்தில் குழந்தையுடன் பேசவேண்டும் என்று தெரியவில்லை. 

தாத்தா குழந்தையிடம் நான் உங்களிடம் வருகிறேன் என்று பேசியப் பின் குழந்தை மனதில் ஒரு உற்சாகம். பின்பு குழந்தையிடம் லாவகமாக பேசி குழந்தை வைத்தே கதவை திறக்கிறார் தாத்தா. 

குழந்தை வந்தவுடன் இனிமேல் குழந்தை பிரச்சனையில் மாட்டிகொள்ளாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கூச்சல் இடுகிறார்கள். ஆனால் ஒரு சிக்கலில் (இருக்கும் குழந்தை) எப்படி செயல் படவேண்டும் என்ற பாடத்தை அங்கு யாரும் கற்கவில்லை.

ஒருவன் கொழும்புவில் இருந்து தன் உடம்பு சரியில்லாத (சாக கிடக்கும்) அம்மாவை காண தனியாக அவன் சொந்த ஊர்க்கு செல்கிறான். அவன் குடும்பம் வரவில்லை. 

முன்பு அவன் வந்தால் "அந்த வயதிலும் அந்தக் குளிரிலும் அம்மா சிட்டைப்போல் பறப்பதாகத் தெரியும் அவனுக்கு. உழைத்து உரமேறிய உடல் சீக்கிற்கோ தளர்வுக்கோ அது இடமளிக்காது. அவனுடைய வருகையும் அவளுக்கு ஒரு புதுத் தென்பைக் கொடுக்கிறது. உடலிலே ஒரு இளமை@ நடையிலே ஒரு துள்ளல்!"

தங்களைச் சுற்றி சுற்றியே வலம் வரும் அம்மாவின் அன்புப் பார்வை அவனைத் தடுமாறச் செய்கிறது.

அம்மாவுக்கென்று அவன் என்ன செய்திருக்கின்றான்? படித்து பாஸாகி உத்தியோகம் தேடி காதலித்துக் கல்யாணம் கட்டிக் குழந்தை பெற்று …..

என் மகன் இப்படி இப்படி இருக்கிறான் என்று கூறிக் கூறிப் பெருமை படும் நெஞ்சம் அது!

மருமகளிடம் அம்மா மூச்சு விடமாட்டார்கள். ‘ வாம்மா, இரும்மா’ என்றுகூடச் சொல்லமாட்டார்கள்: ‘வாங்க, இருங்க’ தான். மருமகள் அம்மாவுக்கு ஒரு மகாராணி மாதிரி! என் மகளை நம்பி வந்தவளாயிற்றே என்னும் நினைவு.


எனக்கு என்ன செய்தாய் என்று எதிர்ப்பார்க்கும் நெஞ்சமல்ல… இப்படி ஒருநாள் வருவதுவும் “இனி எப்பப்பா?…..” என்னும் கேள்வியுடன் விடை பெறுவதுவும்தான்; அவன் செய்வது!

என்று அம்மாவின் பாசத்தை உணர்த்துகிறார். 

ஆனால் அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை என்று ஏற்கனவே மூன்று முறை குடும்பத்துடன் வந்து பார்கிறான். சிறிய இடமென்பதால் ஒரே நாளில் ஊருக்கு திரும்பிச் செல்கிறான் ஒவ்வொரு தடவையும். இந்த தடவை தனியாக வருகிறான். இந்த நிலையில் அவர்களின் மனதை காண்பிக்கிறார். இங்கு வந்து செல்வது ஒரு நடுத்தர வர்கனான அவனுக்கு எவ்வளவு நிதி சுமையாக இருக்கிறது என்று காண்பிக்கிறார். 

திடீரென்று குஷி வந்து விட்டால் இருநூறு ரூபாய்க்கு ஐஸ்கிரிம் வாங்கி தின்பார்கள். நூறு ரூபாய்க்குக் குடைவாங்க சங்கடப்பட்டுக்கொண்டு கழுத்தில் டையுடன் மழைக்கு கையை தலையில் வைத்துக் கொண்டு றோட்டில் ஓடுவார்கள்.. அந்த வர்க்கத்தின் அச்சொட்டான பிரதிநிதிதான் இவனும்… இல்லாவிட்டால் ழும்பது ரூபாயில் பஸ்ஸில் செல்வதை விடுத்து ஐநூறு ரூபாய் செலவு செய்து காரில் போவானா?

இந்த தடவை அவனிடம் காசு அவ்வளவு இல்லை. வட்டிக்கு வாங்குவது அதிகம். அலுவகத்தில் Death Fund Scheme இல் போலிசி எடுக்க விண்ணப்பிகிறான். அவர்கள் மூன்று மாத சம்பளம் கொடுப்பார்கள் ஆனால் அம்மா இறந்தால் தான்.  அவன் என்னுகிறான் இந்த தடவை அம்மா ஏமாற்ற மாட்டார்கள்.

பாவ சங்கீர்த்தனம் (மின் அணு பதிப்பு (சுட்டி) இல்லை)
ஒரு வயதில் பெரியவர் ஒரு பெண்னை பார்த்து மனதில் எப்படி பட்ட எண்ணங்களை கொள்கிறார் என்று கதை சொல்கிறது. அந்த பெரியவரின் கடவுள் வழிபாடுகளை கூறுகிறார்.

மந்திரங்களை கீழ்வகுப்புப் பிள்ளைகள் பெருக்கல் வாய்ப்பாடு ஒப்பிப்பதுபோல

உலகத்தின் அசுர வேகத்துடன் இணைந்தோட இறை வணக்கத்திலும் ஒரு வேகம். வெறும் உதட்டாட்டம். ஜபத்தின் கருத்து மனத்தைத் தீண்டமுடியாத ஒரு வேகம்.

எண்ணிப் பாத்தால் என்ன சுவாமி இருக்கிறது இவ்வுலக வாழ்வில் - ஒன்றுமே இல்லை.

இவர் உத்தியோகத்தில் மட்டுந்தான் பெரியவர்.

கோவிலில் மண்டியிட்டுக் கூறமட்டும்தான் ஜபம் என்றால் அந்த ஜபத்தை படிக்க வேண்டிய அவசியம் ... ?

பெண்ணின் கண்ணீருக்குச் சக்தி. கண்ணீரைவிட அந்தக் கண்களுக்கே சக்தி அதிகம்.

ஒருவாரம் செய்த பாவங்களைச் சுவாமியார் ஒருவரிடம் சொல்லிவிட வேண்டியது. அடுத்த வாரத்துக்கான பாவங்கள் அடுத்த வாரத்தில் ஒரு நாள்.

குப்பைத் தொட்டி நிறைவதும் காலிபண்ணுவதும் பிறகு நிறைவதும்போல. அதுவா பாவ சங்கீர்த்தனம் ? அவருக்குமா பாவ மன்னிப்பு கேட்கிறது ?

October 17, 2013

வாடிவாசல் - 1959 - சி.சு.செல்லப்பா

சென்ற வெள்ளிக்கிழமை (11-அக்டோபர்) அன்று பெங்களுரில் இருந்து புதுவைக்கு சரஸ்வதி பூஜைக்காக சென்றேன். அன்று மாலை ரயிலுக்கு புறப்பட சிறிது நேரம் இருந்தது. அப்போது சமீபத்தில் புத்தக கண்காட்சியில் வாங்கிய வாடிவாசல் என்ற குறுநாவலை வாசிக்கலாம் என்று எடுத்தேன். ரயிலில் மீதி பாதியை வாசித்தேன்.



வாடிவாசல் அமரர் திரு.சி.சு.செல்லப்பா அவர்கள் 1959 ஆண்டு எழுதியது. இந்த நூல் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் உள்ள ஒரு கிழவன் மற்றும் கிழக்கில் இருந்து வந்துள்ள பிச்சி, முருகு ஆகியவர்களின் நடுவே நடக்கும் உரையாடலில் துவங்குகிறது. கிழவன் ஜல்லிகட்டை பற்றி சற்று விவரிக்கிறான். கிழவனுக்கும் தெரியும் வகையில் பிச்சியும், முருகுவும் மனம் பாதி பேச்சிலும் பாதி நோட்டம் விடுவதுமாக இருந்தார்கள். அப்போது அம்புலி என்கிற ஒரு ஜல்லிக்கட்டு வீரரை பற்றி சிலாகிக்கும் வகையாக பேசுகிறார். அம்புலிக்கு காரி என்னும் காளையால் நேர்ந்த துயரத்தை வருத்துடன் சொல்கிறார். அப்போது கிழவன் திகுதிகுக்கும் வகையில் இது அம்புலி புள்ள பிச்சி என்று முருகு சொல்கிறான். தன் தந்தையிடம் அவரின் மரணப் படுக்கையில் கொடுத்த வாக்கிற்காக காரியை அடக்குவதற்க்காக வந்திருக்கிறான் பிச்சி. வழக்கம் போல் காரி போன்ற பிசாசு காளைகளை ஜல்லிக்கட்டில் விட்டு மிருகங்களின் மூலம் பேர் ஈட்டிக்கொள்ளும் ஜமிந்தார் வந்திருந்தார். மற்றும் திறளாய் திரண்டிருந்த மக்கள். இது தான் கதைகளம் ஆடுகளுமும் கூட. இதில் இருந்து இம்மி அளவும் வெளியே செல்லவில்லை. சி.சு.செல்லப்பா அவர்கள் இதனை ஒரு முழு நாவலாக படைப்பதற்கு அனைத்து சாத்திய கூறுகள் இருந்தப்பின்னும் அவர் அவ்வழியே செல்லவில்லை. ஒரு போதும் வாடிவாசல் நடக்கும் ஊரை பற்றியோ, அல்லது, அங்கு திருவிழாக்கு கூடியிருப்பதுப்போல் கூடியிருக்கும் மக்களை பற்றியோ, அல்லது, பிச்சி, பிச்சியின் தந்தை அம்புலி, ஜமிந்தார்களின் பின்புலத்தை பற்றி ஒருப் போதும் நாவல் செல்லவில்லை.

வாடிவாசல் என்பது ஜல்லிக்கட்டில் காளைகள் ஆடுகளத்திற்குள் நுழைவதற்கான நுழைவு கதவு. அதன் வழியாக தான் நூற்றுக்கணக்கான காளைகளை பலர் விடுவர். இந்த நூலில் சி.சு.செல்லாப்பா அவர்கள் ஜல்லிக்கட்டின் ஆடுகளத்தை அவரது வர்ணஜாலத்தின் மூலம் கண் முன் நிறுத்துகிறார் என்பதே மெய். காளை சீறும் விதம், மனிதன் காளையின் கொம்பை பிடிக்கும் விதம், மனிதன் காளையை நோக்கம் (காளையின் குணாதிசியங்களை சுதாரிப்பது) விடும் விதம், காளை மனிதனை தூக்கி வீசும் இடம், ஆகியவற்றை மிக நேர்த்தியாக சொல்லி இருப்பார். மனிதன் காளையை வீழ்த்தும் தருணங்களில் ஜமிந்தார், கிழவன், காரி காளை, பிச்சி, மக்கள் ஆகியோரின் மிக யதார்த்தமான மனநிலையை மிக அழகாக பதிவுசெய்து இருப்பார். சினிமாவில் காட்டுவது போல் அவ்வளவு எளிதல்ல காளையின் கொம்பை பிடித்து அதனை அடக்குவது என்பது நமக்கு புரியும். 




வாடிவாசல் மூலம் நான் உணர்ந்த சில உண்மைகள் : 
1) மனிதனுக்கு தெரியும் அது விளையாட்டு என்று. ஆனால் காளைக்கு தெரியாது அது விளையாட்டு என்று. நம்மிடம் இரக்கம் எதிர்ப்பார்த்தே அது உள்ளது. அதனை நாம் யாரும் தருவதில்லை.

2) காளை மூலம் வெற்றி பெற்று தன் அதிகாரத்தை தனது சுற்றுப்புரத்திற்ககும் தன்னிடம் உள்ள மனிதர்களும் ஊர் மக்களுக்கும் காண்பிக்கிறான் ஜமிந்தார். ஆனால் அதே காளை தோற்றால் தயவு தாட்சியம் இல்லாம் அங்கேயே கொல்கிறான். அதை கொன்று விட்டு திரும்பிக் கூட பார்க்காமல் ஒரு வருத்தமும் இல்லாமல் வீடு திரும்புகிறான்.

3)மனிதனில் உள்ள மிருகம் சினம் கொண்டு வருவதை பிச்சியின் விளையாட்டில் காணலாம். 

4) தன் காளை தோற்றாலும் பரவாயில்லை காளையை வீழ்த்து என சொல்லும் ஜமிந்தார் மனிதர்கள் மிருகங்களையும் (மனிதர்களையும்) அடக்கி ஆள நினைக்கும் அதிகாரத்துவுத்தின் நிகரில்லா சான்று.

5) வெரும் இரண்டு பவுன் தங்க காசுக்கிற்காக காளையிடம் உயிரை தூக்கி விசுகிறார்கள் மனிதர்கள்.

6) தொடை குத்து தான் நாலு நாள்-அ சரியாப் போய்டும். வேப்ப எண்ணை காச்சு ஊத்தினா சரியாப் போய்டும் என கிழடுகளும் மனிதர்களும் அதை சொல்பவர்கள் பலர் உண்டு.

இதனை படித்துவிட்டு ஜல்லிகட்டுப் போன்ற விளையாட்டுக்கள் தேவையா போன்ற பல கேள்விகள் எல்லோர் மனதிலும் எழும். எனக்கும். ஆனால் இந்த குறுநாவல் அதனை சொல்வதற்கு அல்ல. நான் மேற்சொன்ன அடிப்படை உண்மைகளை பின்புலத்தில் மிக நேரகா நேர்த்தியாக திரு.சி.சு.செல்லப்பா அவர்கள் சொல்லி இருப்பார். இன்னொரு முறை படித்தால் இன்னும் சில உண்மைகளை உணர்வேன் என்று நம்புகிறேன். 

ஒரு 2 மணி நேர வாசிப்பிற்கான ஒரு நல்ல வாசிப்பு இந்த 50-60 பக்க குறுநாவல். மிக சிறந்த் இச்சிற்றிலக்கியத்தை தங்களுக்கு அன்போடு பரிந்துரைக்கிறேன்.


பி.கு: குறிப்பாக ஒன்று சொல்லவேண்டும், சி.சு.செல்லப்பா இந்நூலில் சொல்லாதது, வேரு எங்கோ நான் வாசித்தது, ஜல்லிகட்டு என்றென்பது தமிழர் பண்பாட்டில் ஆயிரம் ஆண்டு காலத்திற்கும் மேலாக வரலாற்றில் அருபடாமல் தொடரும் ஒரு விளையாட்டு. 

பொருள்: துன்பம் விளைவிக்கும் எந்த செயலையும் செய்யாதே. 
Meaning: Do not do anything that may hurt (self & others)

May 27, 2013

Gandhi & His Experiments with Truth

I mentioned in my March 2013 post that I have started to read Gandhi  - The Story of My Experiments with Truth. Due to consistent travels I couldn't read it for a brief period. But, last two weeks, I made it a point to read it regularly. And now I have read it.

After reading, I confidently say that my mix conceptions about Gandhi have definitely shattered into pieces. I would say that the book was, in a sense, deeply spiritual. After reading the book, I (we) wouldn't find that Gandhi did extraordinary things to attain the stature that he enjoyed those days and his soul enjoys today. I honestly accept that I would miss many things that I liked about Gandhi. Nevertheless, let me list down what I liked about Gandhi and the story about his experiments with the truth.

1) True to the title of the book, the book had only Truth. Gandhi had written it with remarkable frankness as well as mentions his failures.

2) Explains why he staunchly followed Vegetarianism [though he once ate meat (misled by a friend in childhood]

3) His conviction and experiments on natural medicines. And he didn't depend on modern medicines. He believed that modern medicines might solve the problem but would also generate many side effects.

4) The social service he did in London and how he did social networking even in those days and the kind of respect he commanded from everyone in the Indian diaspora. 

5) Gandhi explains that role of a husband and how he had to teach his illiterate wife though he failed many  times because it took him a lot of time to overcome the lust.

6) Gandhi accounts every single anna and shillings every night and showed that this discipline helped him in maintaining large funds of public money.

7) Gandhi frankly says the relationship he had with a London girl and says how he felt when he felt/afraid that she might have some other feelings on him when he was already a father of a son. And the letter he had written with utmost maturity to that lady explaining the situation.

8) Gandhi explains how fearless he was when he demanded complete free hand to find out the Truth from the Government authorities, Judges, Court, whenever he took over a case. And he explains that he got more joy in reconciling the client and the opponents and considered that has a duty of a barrister. 

9) Gandhi explains the importance of Mother Tongue. I remember there are few lines which says, the one who don't teach and speak mother tongue to their children is betraying his/her children and the nation. They are keeping their children away from culture and spirituality offered by that nation.

10) Gandhi details the irony he had to came across, where he was the first person to speak in Hindi in a meeting which had mostly Indians and very few British bureaucrats 

11) Gandhi firmly believed that having milk, non-veg are deterrents to follow Brahmacharya and explains that fasting alone doesn't purify a person. Rather, stopping the thoughts alone would purify a person.

12) Gandhi cities that we should not kill the venomous snakes and reptiles in the agricultural farm lands. If we don't harm them, then it will not harm us as well. And he gives an example that in 20 years in a farm no death was due to an animal. And it is no fortuitous accident rather it is the grace of God.

13) Gandhi vowed not to take milk. But he and his wife, in different times, had to undergo  some operations. Doctors, saints, well wishers compelled them to have beef tea, milk etc. But he said a firm NO to those things even for his treatment and his wife. At one stage in his life, he was so weak and he was once again compelled to at least have Goat's milk. Though Gandhi vowed not to take Cow's milk and Buffalo's milk, yet he was deeply pained to take Goat's milk because he firmly believed though he vowed only Cow's and Buffalo's milk, yet he implicitly vowed not to take animal products. By having Goat's milk, he felt he has breached the Truth.

14) Gandhi explains the state of third class compartments in South Africa and it was no different when compared with that of first class compartments. But he found that third class compartments in India were very untidy. And he says that all businessmen, bureaucrats must travel in third class compartments and demand equal service.  (And sadly even in 2013, Indian Railways is not much different)

15) Gandhi explains the importance of keeping one's place clean and neat. 

16) Gandhi says everyone should have his thought, creed, and deed to be clean and pure all the time.

17) Gandhi doesn't believe in propaganda of the superiority of a religion over other religion. 

18) Gandhi firmly explains the importance of doing exercise in day to day life. And every person must at least spend thirty means to walk thereby creating an appetite. 

19) Gandhi explains how he cut down the food to only twice a day and how it helped him to bring the frequency of headache and later disappearing. And he also explains this stern belief on fruits, nuts as food as well having the dinner before it gets dark.

20) Gandhi doesn't believe much in literary education. But he says that if a parent teaches his children everyday at least one hour (or maximum 2 hours) then he can really bring a wonderful person. And he says that it is the duty of the parents to take care of the children's upbringing in the right way imparting them with moral values.

21) Gandhi explains how Bhagavath Gita helped him throughout his life and acknowledges that he found answers for every question he had in that.

22) His glimpses on religion

23) Gandhi was completely a spiritual man, but he didn't completely believe in the concepts of having bath in Kumbh Mela. Because he felt that self-purification must start from purifying the thoughts and automatically everything falls in place.

24) Gandhi shows how he trained the spirit which is very important. 

25) Gandhi persuaded his wife and children and returned all the gifts (and jewels) that he received when he was returning from South Africa to India. He firmly believed that, if he hadn't done those social service, no one would have gifted him anything. And he believed that he should not take anything in return of social service.

26) Gandhi mentions he drew inspiration from Tolstoy and others. From "Unto the Last", he mentions that it is worth living a life of an artist or any other profession.


27) His love for British and his regard for the British empire. He wanted Swaraj but he didn't hate British. He always felt that Swaraj should not be transfer powers from British to wrong hands in India. 

28) Gandhi was a many of limited words. He carefully chose is words and gave only the required information. His writings were to the point and were not out of scope.

29) His aversion to Medical Insurance. I really liked that very much.

30) And of course, how he conceived Satyagraha and put it in practise. 

I am sure I have missed many things (there are 125 chapters). Hence I HIGHLY RECOMMEND "Gandhi - The Story of My Experiments with Truth" to everyone. Especially to people in the age group 15 to 35 years. While we read, we would automatically feel that, for self-purification it only takes a human effort not a superhuman effort. 

P.S: There are many translations of this book originally written in Gujarati. I read the translation by Mahadev Desai (the original translator name is not said in public). I felt that the book was adequately translated and the spirit was captured rightly.

Soft copy of the book is available in this link (Click it).
You can purchase the book from Flipkart in this link (Click it).



And Einstein rightly said 
“Revolution without the use of violence was the method by which Gandhi brought about the liberation of India. It is my belief that the problem of bringing peace to the world on a supranational basis will be solved only by employing Gandhi’s method on a large scale…
…It should not be forgotten that Gandhi’s development resulted from extraordinary intellectual and moral forces in combination with political ingenuity and a unique situation. I think that Gandhi would have been Gandhi even without Thoreau and Tolstoy.
Generations to come will scarcely believe that such a one as this ever in flesh and blood walked upon this earth.
Meaning: Do not mingle with naiveté

March 24, 2013

Gandhi - The Story of My Experiments with Truth


Generally, when I read books, I don't read with much expectations or excitement. I read them just for reading. But, I am starting with a book now with lots of excitement. I am not a judge, but I have divergent views on Mohandas Karamchand Gandhi and his leadership. But, in recent times, by hearing and reading articles, I have started seeing more positives in Gandhi and his way of life. My Chemistry professor, Dr Seetharaman who I know for last 15 years and, for me, he is my God Father, many times said me I follow Gandhi principles (eating Parle-G biscuits, Groundnut-jaggery cakes/chikki) I didn't take them seriously. Even though he earned well, yet, I have found his house to be following a very very a minimalistic style. But those days I didn't realise. Only in recent times, when I was thinking, I did realize it was Gandhian way of living. So these observations gave me more drive to read his autobiography. It is "Gandhi - The Story of My Experiments with Truth". This book (translated from Gujarathi) is an autobiography by Mahathma Gandhi. I am not reading this book to become a Mahatma but to digest the message. And, I hope, I get much needed insights, essence for me and my self.




My reading so far; how it started; who made it?

I am not an avid reader. I didn't had any reading habit when I passed my college in 2005.  I was more afraid of the jargons and vocabularies used. But my friend Lourdu Xavier who showed me a way that I should "travel" and enjoy. I started with an epic novel Ponniyin Selvan in Tamil. What more best novel can I ask to start with. I had only competed first part by end of 2005. After which I travel across places which gave me junk reasons to procrastinate. But some of wonderful friends, namely Balasubramani Arunachalam, MPC, Rajesh Sundarraj, Shankar S, Sundaresan KM, RT, Nagamani Raajan, AM and of course Lourdu Xavier, -colleagues inspired me with their wonderful language and maturity. And I could sense well that they are very good readers.  And, in July 2008, I moved to New Delhi. It gave me wonderful time to read books. I started cultivating the habit slowly. But I was irregular. As a fan of carnatic music, it happened for me follow Mr Sanjay Subramanyham's website. There, the best thing that happened for me was the Book Read Challenge he had posted from GoodrReads.com. I too registered my self with 10 book that year (though it is low, but I felt it is good a number to start with). And today, I have read around 40 books. I don't take pride in those numbers. But I realized I do can read novels, auto-biographies, short stories, spiritual books and most importantly they help me realize my self. Though I was initially tempted, but one thing I have so far avoided was self-help/management books - again inspired from a note (with wisdom) on a casual chat with a friend Muthu Kumaran. Now, in Korea, in April 2013 I have good time. To a certain extent I am have made good use of my time in reading books. Going forward I long to read more books on various topics. And, one person who constantly encouraged me was my beloved grand mother Srimathi Saraswathi Subramanian. Till her teenage she was a very good reader. But post marriage, her reading got limited to magazines. I am glad I rekindled her interest in books and reopened her windows and give her good number of Tamil books.

Things in my Shelf are : Ramayana, Mahabharatha, Thuppariyum Sambu, The Idiot, Paths of Glory, etc

Wishing that my self grows as I grow.

துன்பத்திற்கு இடம் கொடேல்.
Meaning: Don't allow sadness to occupy you