வாழக்கையை போல்
அருவியும் இல்லை
நதியும் இல்லை





ஓடையாய் பிரிந்து
குளமாய் மாறி
ஒரே மாதிரி காட்சியை கண்டு
தன் மேல் விழும்
சூர்யோதய பிம்பத்தையும்
நட்சத்திர பிம்பத்தையும்
தனதென எண்ணி
சுயகனவில் வாழ்ந்து
தன அடியில் உள்ள
காழ்ப்பில் ஊறி
உயர் வெயிலின்
வெட்பத்தில் வறண்டு
இம்மண்ணில் மாய்வோர்
தன் மேல் விழும்
சூர்யோதய பிம்பத்தையும்
நட்சத்திர பிம்பத்தையும்
தனதென எண்ணி
சுயகனவில் வாழ்ந்து
தன அடியில் உள்ள
காழ்ப்பில் ஊறி
உயர் வெயிலின்
வெட்பத்தில் வறண்டு
இம்மண்ணில் மாய்வோர்
ஒரு குலம் எனில்
ஆறாய் தொடர்ந்து
பாறையில் முட்டி
சங்கீதம் எழுப்பி
வளைவுகளில் வளைந்து கொடுத்து
ஒவ்வொரு நொடியும்
புதிய காட்சிகள் கண்டு
செல்லும் வழியில்
பல கோடி வேர்களுக்கு
தண்ணீர் பாய்ச்சி
சென்று சேரும் இடத்தில்
எண்ணற்ற கடல் உயிர்களுக்கு
புது ஸ்வாசம் தந்து
செல்லும் வழியில்
பல கோடி வேர்களுக்கு
தண்ணீர் பாய்ச்சி
சென்று சேரும் இடத்தில்
எண்ணற்ற கடல் உயிர்களுக்கு
புது ஸ்வாசம் தந்து
களிப்புறுவோர்
இன்னொரு குலம்

சும்மாவா சொன்னார்கள்
ஓடும் தெளிந்த நீரில்
நோய்யில்லையென்று!
- ராஜேஷ் (எ) பாலசுப்ரமணியன் (8 ஆகஸ்ட் 2017)