Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

July 22, 2022

ஆரோக்கிய நிகேதனம் - வாசிப்பு

தாராசங்கர் பந்த்யோபாத்யாய (Tarasankar Bandyopadhyay) எழுதிய ஆரோக்கிய நிகேதனம் (Arogya Niketan) நாவலில் இருந்து நான் பெற்றவற்றை கீழ்வருமாறு தொகுத்துக்கொண்டேன். ஐயமின்றி கூறலாம் இது ஒரு செவ்வியல் என்று.

இந்நாவலை பற்றி ஜெயமோகனின் தளத்தின் மூலமாக முதலில் அறிமுகம் கொண்டேன். தொடர்ந்து வரும் கட்டுரைகள், கடிதங்கள் மூலம் உந்தப்பட்டு வாசித்தேன். ஜெ-விற்கு நன்றிகள். 

ஆரோக்கிய நிகேதனம் பற்றிய கட்டுரைகள்

ஆரோக்கிய நிகேதனம் - அறிமுகம் - தமிழ்.விக்கி / tamil.wiki தாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’ - எழுத்தாளர் ஜெயமோகன் மரணமின்மை எனும் மானுட கனவு- ஆரோக்கிய நிகேதனம் ஒரு வாசிப்பு - (ஆயுர்வேத மருத்துவர், எழுத்தாளர்) சுநில்கிருஷ்ணன் ஆரோக்யநிகேதனம்- சௌந்தர்


ஆயினும் சாஹித்திய அகெடமி வெளியிட்டுள்ள இந்நாவலின் மூன்றாம் பதிப்பைப் பற்றிய என் வருத்தத்தை பி.கு வில் கூறியுள்ளேன்.




ஆரோக்கிய நிகேதனம்

மனிதன் ஓர் உதவியற்ற பிராணி. மனிதன் உதவியின்றி இருக்கமுடியாது. உதவியை எதிர்நோக்கும் பிராணி அவன். ஆயுர்வேதம், நவீன ஐரோப்பிய மருத்துவமுறைகளைத் தாண்டி, மனிதனை அருவருப்புடன் நோக்காமல் அவனுக்கு எழுதப்பட்டதே இந்நாவல் என்று சொன்னால் மிகையாகாது.


ஆரோக்கியம்

உடம்புக்கு ஒன்றுமில்லை  என்ற சௌக்கியம் தான் வாழ்க்கைக்கு மிக அவசியம். உடம்பை நன்கு பாதுகாத்தால், கண்பார்வை கிழவயதில் மங்கவேண்டிய காரணமே இல்லை. 

உழைப்பால் உறுதியான தேகம், தெளிவான பார்வை, பரந்த மனநோக்கு கொண்ட ஒரு ஆள் அறையினுள் நுழைந்ததுமே ஒரு சோபை வருந்துவது போல் இருக்கும். 

ஆனால் ஒருவன் ஆழ்மனதில் அதிருப்தி இருந்து கொண்டே இருந்தால் அமிர்தத்தை ஒருவன் பெற முடியாது.

உயிருக்குள்ள ஆயுட்காலம், ஆரோக்கியமான நிலை இரண்டும் வெவ்வேறு. ஒருவனுக்கு நீண்ட ஆயுள் என்றால் அவனுக்கு ஆரோக்கிய வாழ்வென்பதென்று. அப்படிக் குறைந்த ஆயுள் உள்ளவன் என்றால், அவன் ஆரோக்கியமாக இருக்கமாட்டான் என்று அர்த்தமன்று. வாழ்வில் தூய்மையுடன் காலங்கழிப்பவனே ஆரோக்கியம் நிரம்பியவனாவான். இல்லாதுபோனால், சக்தியை விருத்தி செய்துகொள்ளத் தெரிந்தால் மனிதனுக்கு ஆரோக்கிய திடகாத்திரம் ஏற்படும். எந்த நோயையும் அவனால் தடுத்துக் கொள்ளவோ சகித்துக்கொள்ளவோ முடியும். மாறாக உடலை தன் உடலை, இந்த நோய்களின் வித்து நன்கு வளர்ச்சி பெறுவதற்கு வளமான இடமாக்கிக்கொண்டானெனில், எரிபொருளில் சிறு தீப்பொறி பற்றினால், பயங்கர ஜ்வாலையாக எழும்புவதுபோல், ஒரு நோய் மரணமாக மாறிவிடும்.

உடல்

மனிதன் நம்பிக்கொண்டிருக்கும் இந்த ஆத்மா மனிதனின் உடலை நம்பியே உள்ளது. இந்த உடற்கூடு ஒன்று இராதுபோனால் அது எதையும் பற்றி நிற்கமுடியாமல் தொங்கும் - அப்புறம் அது ஒன்றுமே இல்லை. 

தெய்வம் வீற்றிருக்கும் கோயிலை நன்றாகக் கவனிக்காதுபோனால் தெய்வம் அதில் எப்படி தெய்வம் உறையும்? தேகத்தை வருத்தி, அதைச் சீக்கிரமாக ஒழித்து விடப் பார்ப்பது ஒருவகை ஆத்ம தற்கொலை. இந்த உடலையும் பாதுக்காக்கவேண்டும். 

உரிய காலத்தில் பக்குவமாவது வேறு; பிஞ்சிலே பழுத்துப்போவது வேறு. அகாலத்தில் பழுப்பதில் ஏதாவது ஒச்சம் (குறைபாடுகள், பழுதுகள்) இருக்கும். அதன் திரட்சியில் ஏதவாது குறை தென்படும். ஆனால் உரிய காலத்தில் பக்குவமாவதில் பூரணப் பொலிவே தோன்றும்; குறையென்பதே இராது. உரிய பருவத்தில், நன்கு திரண்டுவரும் பழந்தான் ருசியாலும், மணத்தாலும், நிறத்தாலும் மனத்தை வசீகரம் பண்ணும். இம்மூன்று தன்மைகள் சேர்ந்து நிறை எழிலுடன் விளங்கும். 

ஒழுக்கம்

நீதி வழுவாத ஒரு லட்சிய புருஷர், எண்பது வயதிலும் சிறிதும் கூண் விழாமல் நிமிர்ந்து நிற்கமுடியும். நிலைத்து நோக்க முடியும். கண்ணில் சிறு துளியேனும் நீர் வராது. 

சாது சந்நியாசிகளின் தன்மை, நாடி இவற்றின் இயல்பே தனியானது; சாதாரண மனிதர்களிடம் பழக்கங்களைக் கடைப்பிடிப்பதால் இத்தகையோருக்குத் தேகத்தில் தாங்கும் சக்தி அதிகமாகிறது. கொடுத்த மருந்து வியப்பூட்டும் வகையில் வேலை செய்யும் (பெண் படாத நிலத்தில் போட்ட முதல் பயிருக்கான வித்துப்போல்)

யோகசாதனையில் ஈடுபட்டவரின் மனம் அற்புத சக்தி வாய்ந்ததாகும். அந்த உடலின் நலிவோ, பலவீனமோ அந்த ஒள்ளிய ஆத்மாவைச் சிறிதும் பாதிக்காது. மனதுள் உணர்வெழுந்து பொத்தலான உடலைத் துறந்து புதிய உடலையே கொள்வர்.

உண்மையில் ஒரு மகான்/யோகி, யோக சாதனையின் வாயிலாகத் தம் உடலின் அக உறுப்புக்களை வலிமை மிக்கதாகச் செய்துகொண்டுள்ளனர். விசித்திர விரதங்களை அநுஷ்டித்து வெளி இயற்கையின் சூழலை அடிக்கடி ஆளும் திறமையைப் பெற்றுள்ளனர்.

நியமப்படி இருப்பவர்களுக்கு நோய் கட்டாயம் தீரும். 

ஆயுள்

ஆயுள் என்பது ஒரு பெரிய மருந்து. பல யோகங்கள் செய்து சாதாரண மனிதர்களிடம் இருந்து வித்தியாசப்படலாம். அப்படி யோகங்கள் செய்வதால் எதையும் சகித்துக்கொள்ளும் வலிமை உண்டு. நோயுடன் போரிடுவது மருந்தைக்காட்டிலும், இந்த இந்த ஜீவசக்திதான். இந்த ஆயுள்பலந்தான்.

ஆயுட்காலம் எத்தனை நாள் நீடிக்கும் என்பது சாஸ்திரப்படி கூறலாம். ஆனால் கர்மபலத்தால் (வினைப்பயன்) அந்த ஆயுளின் வரம்பு கூடக் குறுகலாம்; பெருகலாம். விபசாரம் செய்து மனிதன் மரணத்தை அழைத்துக்கொள்ளலாம். தான் செய்த பாவத்தினாலேயே தன் வாழ்நாளை ஒருவன் எதிர்பாராதவிதமாகவும் குறுக்கிக் கொள்கிறான்.

மரணம்

இன்று இருப்பவர் நாளை இல்லை என்ற பெருமை உடையது இவ்வுலகு.  மரணம் எதையும் பார்ப்பதில் பட்சபாதமற்றது. எவரும் அமரர்கள் அல்ல. மரணம் சம்பவிப்பது நிச்சயமென்று அறிந்து அதை வரவேற்கக் கூடிய ஒரு மனோதிடம் மிக உயர்வானது; அப்படி ஒரு நிலை ஏற்படுமாயின், தேன் இல்லாத குறையை வெல்லம் கொண்டு நீக்குவது போலாகும். உலகைவிட்டுச் செல்வதென்றால் இதுபோல் விடைபெற்றுச் செல்லவேண்டும்; மரணதேவதையின் அதிதியாக, துளியேனும் முகம் கடுத்துக் கொள்ளாமல் சந்தோஷமாகவே பயணப்படவேண்டும். ஆனால் இந்த நாளில் மரணத்துக்கு இதுபோன்ற விருந்தினர் கிடைப்பது அரிது. 

மரணமே சாசுவதமான (எந்த உயிரும் மரித்தே ஆக வேண்டும் என்ற பேருண்மைமிக்க)  இப்புவியில் இப்படி அதை நினைந்து வருந்தியோ சஞ்சலப்பட்டோ ஒரு பயனுமில்லை. வாழும் பொழுது, குறிப்பாக முதுமையில், மரணத்தை நினைத்து துக்கப்படத்தேவையில்லை. 

அகால மரணம், பயங்கரமிக்கது தான். பயங்கர வலியையும், எரிச்சலையும் மூட்டி வாழ்க்கையே கசந்து போகும்படி செய்துவிடும் வியாதி. இந்த எரிச்சலைத் தணிக்கக் குளிர் மழைத் தாரையென மரணம் வந்து அமைதியையும் ஆறுதலையும் தருகிறது. ஆதலால் முதிய வயதில் மரணம் அமிருதம் போன்றது; இனிமை தருவது! அதைக்கண்டு பயப்படத்தேவையில்லை. மரணம் தான் முக்தி (விடுதலை). இதைவிட வேறு ஏதும் தேவையில்லை. ஏனெனில் அங்கே நம்முடைய கணவனோ/மனைவியோ, அம்மா, அப்பா, சகோதர்கள்,  உறவினர்கள் வரவேற்கக் காத்திருக்கிறார்கள்.

ஆனால், பலர் கிழவன் கிழவிகள் இறக்க விரும்புவதில்லை. ஆதாவது பெயரன் கல்யாணம் என்று சாக்குக் கண்டுப்பிடித்துக்கொண்டே இருப்பார்கள்.

ஜீவன் மஷாயின் தந்தை ஜீவனிடம் இப்படி கூறுகிறார் “நீ என்னுடைய வீரமகனடா! இந்த வாழ்க்கைப் போருக்கு அஞ்சாதவன். பின்வாங்கவில்லை; இளைப்பும் ஆறவில்லை. போர் முனையிலேயே மாள்கிறாய்! அதற்காக நீ அவமானப் படுவானேன்? எதன் எதிரே நீ தோற்றாய்? நீ யாரிடம் தோற்று நிற்கிறாயோ, அதனிடம் ராமன், கிருஷ்ணன், புத்தன், பீஷ்மன், துரோணன், நெப்போலியன் எல்லாருமேதான் தோற்று நின்றனர். அதைப்பற்றி வருத்தப்படாதே!” அதாவது மரணத்திடம் வரலாற்று நாயகர்களே தோற்று இருக்கிறார்கள். ஆதலால், வீரமாக அதுனுடன் தொடர்ந்து போரிட்டதனால், அவமானப்பட வேண்டாம்.

இளமை

இளமையில் ஒன்று உள்ளது; சரிவான தரையில் நீரின் ஓட்டம் விசைகொள்வதுபோல் ஒரு வேகம் உள்ளது. அச்சமயம், நல்லது கெட்டதுபற்றிய அறிவு, நீதி உபதேசங்கள், சமூகக் கட்டுப்பாடு யாவும் துச்சமாகிவிடும். மனக் குரங்கு எந்தக் கட்டுக்கும் அடங்காது. இந்த நீதி உபதேசங்கள் யாவும் மணலில் விட்ட நீர்போல் ஆகும். இளமையின் போக்கு சரிவான கீழிடம் நோக்கியே விரையும். டாக்டர் ஜீவன் மஷாய் மஞ்சரி அவருக்கு செய்த நம்பிக்கை துரோகத்தில் வெறுத்துப்போய் அவ்விஷத்தை கடைசிச் சொட்டுவரை பருகிவிட்டார். அதுவே அவருக்கு ரிபுவாக மாறியது.

பின்நாட்களில், இத்தனை வண்ண விசித்திரமான ஆசைகள் எதற்காக எழுந்தனவோ என்று நினைத்துக்கொண்டார் ஜீவன் மஷாய். ”இரு வண்ணங்கள் - பகல் இரவு - வெண்மை கருமை இவ்விரண்டையும் தவிர மற்ற வண்ணங்களை நீயேதான் உன் கையாலேயே அழித்துவிட்டாய். தகுதியற்றவன் கையில் கிடைத்தால் இந்த வண்ணங்கள் அழிந்து வீணாகத்தான் போகும். வேதனையின் விழிநீரினால் இதெல்லாம் பொய்யென்று நினைத்து அழித்தாய்” என்றது அவரது மனது. 

இந்த உலகில் அவமானம் ஏற்பட்டதும், உள்ளுக்குள் ஒரு மெலிவு பஞ்சினுள் நெருப்பெனக் கனலத் தொடங்கும். அந்த நெருப்புபழி தீர்த்துக்கொள்ளவேண்டுமென்ற உற்சாகத்தினால் தான் அணையும். தம் இதயத்துள் பற்றிய இந்த வெவ்வழல் எதிரியையும் பற்றி அவன் எரிந்து சாம்பலானால்தான் தணியும். இது நிறைவேறாதுபோனால், அந்தக் கனல் துளித்துளியாக அவனையே பொசுக்கிவிடும்.  பெருந்தகையோர், மகாத்மாக்கள் இவர்கள் விஷயமே தனிப்பட்டது. அவர்கள் இந்த மாதிரி அவமானம் ஏற்பட்ட சமயங்களில், தம் பொறுமையாலும், மன்னிப்பாலும் அதைத் தணித்துவிடுவர்!

ஆற்றாமை

மனிதனில் உள்ள ஆற்றாமயே அவனுக்கு சத்ருவாக வரும். அதைவிட்டொழிக்காவிட்டால் அதற்கு தீர்வில்லை ஏனெனில் ஆற்றாமை எந்த மருந்தாலும் தீராது

சாதாரண மனிதன் பணம், புகழை ஈட்ட நினைப்பான். அவன் அமைதியின்மையில் இருப்பான். அவனுக்கு இருந்த வேட்கை தீராது. பசி தீராது. சுற்றுவான், அலைவான். மனிதனின் முயற்சியால் ஏற்படுவது சாதனை. அது வருவதற்கு முன்னால் நல்ல நிலை வருகிறது. அதிலிருந்து ஆற்றாமை (இன்னும் சம்பாதிக்க வேண்டுமென்ற நசை); இதுவே பகையாகும். இதன் தூண்டுதலினால், மனிதன் அளவுக்கு மீறிப் போய் நோயில் விழுகிறான். அவன் எதிரே வந்து நிற்கிறாள் அந்தச் மரண தேவதை!

நோய்

பிரபஞ்சத்தில் இந்த மரணம் நிச்சயமானது; பிறப்பன யாவும் இறந்தே தீரவேண்டும். இம் மரணம் பலவிதமாகத் தோன்றும்; இது தடுத்தற்கரிது. சிலர் நோய் நொடியினால் மரிப்பர்; சிலர் காயம் பட்டு இறப்பர்; சிலர் தம் இச்சையால்/இச்சைபோல் இறப்பர், தற்கொலை புரிந்துகொண்டு. ஆனால் இந்தப் பிணிகள் தாம் மரணத்துக்கு இட்டுச் செல்லும் பெரும்பாதை. இந்த நோய் ஒன்றே மரணத்தின் ஸ்பரிசத்தை ஏந்தி வருகிறது. எல்லா வியாதிகளாலும் மனிதன் இறப்பதில்லை. ஆனால் அதற்கு இவை வழிகோலிடுகின்றன.

இந்தப் பிரபஞ்ச வாழ்வில் மனிதன் சந்நியாசிக்குரிய சக்தியைப் பெறாது போனாலும், எல்லா நசைகளையும் கட்டிப் பிடிக்காமல் போனாலும், சிலவற்றையாவது அவன் வென்று வரவேண்டும். ஏதோ இரண்டு அல்லது மூன்று வகையான நசைகள். சிலர் ஐந்து வகையினையும் (ஆறு பகைகளில் ஐந்து) வென்று வருகின்றனர். ஆனால் ஒன்று அவர்களால் முடியவில்லையென்றால் அதுவே அவர்களுடையை பலவீனத்திற்கான வாசலைத் திறந்துவிடும். மரணப் படைகள் அந்த வாசல் வழியாகவே மனிதனின் உடலில் புகுந்துக்கொள்ளும்.

மனிதன் பிராணி ஆயினும் அவன் உள்ளத்தில் மிருகத்திற்குரிய காமம், குரோதம், உலோபம் யாவும் நிரம்பியுள்ளவன். ஆனால் மிருகத்திற்குரிய சகிப்புத் தன்மை அவன் உடலில் இல்லை.  பசிக்கு அடிமைகள், உலோபத்திற்கு அடிமைகள், காமத்துக்கு அடிமைகள். பண ஆசை, புகழ்மோகம், வேலைப் போதை, ருசிகள், சபலங்கள் .. என, ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று என, நம்மை பலவீனப்படுத்தி, நோய்க்கான காரணியாக ஆகி, மரணத்திடம் சேர்கிறது. “மிகினும் குறையினும் நோய்செய்யும்” என்பதே வள்ளுவர் கூறுவதும்.

மனிதன் தன் உடலை இந்த நோய்களின் வித்து நன்கு வளர்ச்சி பெறுவதற்கு வளமான இடமாக்கிக்கொண்டான் எனில் அது அவனுக்கு அழிவை தேடித்தரும்.  எரிபொருளில் சிறு தீப்பொறி பற்றினால், பயங்கர ஜ்வாலையாக எழும்புகிறது. 

ஒரு வேலையிலும் ஈடுபடாத மனிதனின் புத்தியைச் சோம்பல் வந்து சூழ்ந்துக்கொள்ளும்.

மனிதன் தான் செய்யும் தீய வினையாலேயே அழிகிறான். மனிதனின் நடத்தையே அவனுக்குச் சத்துருவாக நிற்கும். அநாசாரம், வரம்பு மீறிப் போகும் நடத்தை, விபசாரம் இவற்றின் விளைவாக மனித இனம் நோய்வாய்ப்படும். இவற்றை விடவில்லை என்றால் நோய் அதிகமாகும். விட்டுத்தொலைத்தால் குறையும்.  குடி/மதுபானம், கஞ்சா, சிகரேட், புகையிலை, விபசாரம் மற்றும் அதையொட்டிய பல தீய செயல்களாலும் தன்னையே ஒருவன் நிர்மூலமாக்கிக்கொள்வான். இதைத் தவிர ஏதாவது நோயில் படுத்தால், உருக்குலைந்துப்போவான். 

நோய் அதிகரித்தால், மடமடவென்று பனையளவு ஏறிப்போகும்; ஆனால் குறையும்பக்ஷத்தில் தினையளவாகத்தான் இறங்கிவரும்.

நோயுடன் கஞ்சா போன்ற கெட்ட பழக்கமும் சேர்ந்தால் சொல்லுவானேன்? நோயாளி தேறமாட்டான். ஏனெனில் கஞ்சாவுக்கு ஏங்கிப்போய் வெறிப்பிடித்தவனாவான். அவர்களை மருத்துவர்களின் சிகிச்சை காப்பாறுவது கடினம்.

தீய பழக்கங்கள்

வீட்டில் நெருப்புப் பற்றினால், வீடே எரிந்து சாம்பலாகப் போக வேண்டுமென்பதில்லை. தண்ணிரைக் கொண்டு அணைக்கலாம். அணைக்கவும் முடியும். ஆனால் நெருப்புக்குத் துணையாகக் காற்று வீசத் தொடங்கினால் அது எவ்வளவு நீர்தான் கொட்டினாலும், அணையவே அணையாது! கடைசிவரை எரிந்து, சாம்பலாக்கிவிட்டுப் பின்புதான் நிற்கும். பலருக்கு வியாதிகள் வருவர்தற்கு முக்கியமான காரணம் அவர்களுக்குள் இருக்கும் கெட்ட பழக்கங்கள் ஆகும். 

மேலும், பிணி மரண ரோகமாக மாறும் சமயம் ஒருவனது தீய பழக்கமே அவன் புத்தியை ஆட்டிவைக்கும். அமுதமென்று எண்ணி நஞ்சை உட்கொள்ள அது தூண்டும். 

கெட்ட பழக்கங்கள் பலநாள் இருக்கும். ஆனால் இயற்கை எத்தனை நாள் இந்த அநாசாரத்தைச் சகித்துக் கொண்டிருக்கும்? வரம்புக்கு மீறிச் செல்லும், சிறிதும் உஷார் இல்லாமல் சென்றால் நோயில் படுக்கவேண்டியது தான்.  

கெட்ட பழக்கங்கள் அதிகமானால், பிணி மிகவும் சிக்கலாகிவிடும். உடல் இளைக்கும், ஆயுளும் குறையும்.  உதாரணமாக, லிவர், ஸ்ப்ளீன், அந்தப் பழைய மலேரியா, ரத்தச் சோகை, மதுபானத்தினால் வரும் விளைவுகள் இவையனைத்தும் சேர்ந்தால் ஒரு குழுப்பமான வியாதியாகிவிடும். இதனால் அகால மரணம் ஏற்படக்கூடும்.

நோயாளிகளின் பயங்கரத் தீயபழக்கங்களால் அவர்களை பிழைக்க வைப்பது எந்த ஒரு மருத்துவருக்கும் இயலாத காரியமாகிவிடும். 

மருத்துவம் / ஆயுர்வேதம்

வாள், கத்தி இரண்டுமே படைக்கலங்கள்தாம்; ஆனால் வித்தியாசம் இருக்கிறதே! வாளால் எருமையைப் பலி கொடுக்கமுடியாது. கத்தியைச் சுழற்றினால் மட்டும் இந்த காலத்துப் போர்முறை ஆகிவிடாது; ஆதலால், ஆயுர்வேதம், சித்தா போன்ற மருத்துவமுறைகளும் நம் சாஸ்திரங்களும் காலத்துக்குச் சரிசமமாக நடைபோடவேண்டும்.

டாக்டர் ஜீவன் மஷாய் தனது குரு ரங்லாலின் அறிவுரையின் படி டாக்டரின் சிகிழிச்சை முறை, கவிராஜ் வைத்தியம், கைவைத்தியம் இந்த மூன்றையும் வைத்துக்கொண்டு ஒரு ட்ரை சைக்கிளிங் வாழ்க்கை ப் பயணம் செய்தார். அது ட்ரை-மோட்டார் போல் சென்றது.

இன்று, ஒரு கிளினிக் மட்டும் இருந்தால் பல உயிர்களை பிழைக்கச் செய்யலாம். மே! முதலிலேயே ‘ப்ளட் கல்சர்’ செய்தால், நல்ல மருந்துகள் கொடுத்தால் உயிர்களை பிழைக்க வைக்க முடியும்.  விஞ்ஞான முறைகள், ரத்த மல மூத்திர சோதனைகள், எக்ஸ்-ரேக்கள்,  மைக்ரோஸ்ப்கள் போன்ற க்ளினிக்கில் டெஸ்ட் இராமல் இந்தக் காலத்தில் ஓர் அடி எடுத்துவைக்க முடியாது

இந்தக் காலத்தில் எத்தனையோ நாட்டு மக்கள் ஓரிடத்திலிருந்து ஓரிடம் போவது சகஜமாகிவிட்டது. அவர்கள் வரும்போது புதுப்புது நோய்களை கொண்டுவந்து விடுகின்றனர். நீர், காற்று, நிலம் இவை மாறிப்போய் புதிய தோற்றம் கொண்டுள்ளன.

பழைய நோயால் தவிப்பவர்களுக்கு இன்றும் இந்நாட்டு வைத்திய முறைகள் மூலம் சிகிச்சை செய்து குணமாக்க முடிகிறது. ஆயினும், இன்னும் நிறைய இருக்கிறது. 

இன்னும் எத்தனையோ வகை புரியாத நோய்கள் இருந்தாலும், அதைரியமடையாமல், வெட்கப்படாமல், அதன் லக்ஷணங்களை ஆய்ந்து சிகிச்சை செய்ய முடியும். மேலைநாடு வைத்தியமுறைகள், விஞ்ஞான ரீதியான லாபரெடரிகள் போன்ற அன்று இங்கு இல்லாத இன்றைய சௌகரியங்களின் துணையுடன் ஆராயலாம். இவை உண்மையில் போராட்டமே. மரணத்துக்குச் சரிநிகர் நின்று நடத்தும் போர். இதில் தோற்றுப் போவதில் அகௌரவம் ஒன்றுமில்லை. 

உணவு

சாப்பாட்டு விஷயத்தையே எடுத்துக்கொண்டால், இயற்க்கையாக நம் உடலுக்கு சுவைப்பற்று இருக்கும்போது, கெட்ட உணவைத் தின்னாது. வயிறு நிரம்பியதும், இத்துடன் நில் என்று சொல்லிவிடும். அதற்குத் (மன)திருப்தியின் மூலம் நிவிருத்தி ஏற்படுகிறது. (விருப்பு ஓரளவுக்கு; அளவுக்குமேல் போனால் தெவிட்டுகிறது; வெறுப்பு ஏற்படுகிறது). 

ஆனால் இந்த இயற்கைக்குக் கெட்டதில் ருசி ஏற்பட்டுவிட்டாலோ, அதுவே இதற்குப் பகையாகி விடுகிறது. அப்போது ஆற்றாமை அதிகமாகிறது. திருப்தியே ஏற்படுவதில்லை. அந்த (இயற்கையான) வெறுப்புணர்வு ஓடிவிடுகிறது. ஊரெல்லாம் திரிந்து வயிறு வளத்துத் தன் உலோப குணத்தைத் திருப்தி செய்வதை குறியாக இருந்தால் ஆற்றாமை தீராது. நோய்களுக்கு ஆளாக நேரிடும்.  அவ்வுணவினால் தேக புஷ்டிக்குப் பதிலாக உடல் நலிவே ஏற்படும். அதனால்தான் இந்த நசைகள் - பகைகள் - சேர்ந்துவிட்டால், நோய் தடுக்கமுடியாதபடி மரணத்தை நோக்கி விரைகிறது. திருடி தின்ன தூண்டுகிறது. அப்படி உண்டு வயிறும்,  சிறுகுடலும் (இன்டெஸ்டைனும்) நொய்ந்து போகும்.(அகால) மரணத்தை அடைவேண்டி இருக்கிறது.

நாக்குச் சபலம் அதிகரித்துவிடக்கூடாது. நாக்கின் நீளத்தை அறுக்க வேண்டும். பசி எடுத்தால் கண்டதையுமா வயிற்றுள் தள்ளுவது தவறு.

சில அம்மாக்கள், குழந்தைக்கு உடம்பு நல்லதல்லவெனத் தெரிந்தும் கெடுதலான பட்சணங்களை மறைவாகக் கொடுப்பார்கள். டாக்டர் கூடாதென்று தடுத்தவிட்டபோதிலும், மனைவி ரகசியமாக மதுபானம் தருவித்துக் கணவனுக்குத் தருவாள்.

லிவரை கெடுக்கும் சாராயம் போன்றவற்றை அம்பாளின் பேரில் நிவேதனம் செய்து உண்ணாமல், அதற்கு பதிலாக உடலுக்கு தீங்குவிளைவிக்காத உணவுகளை நிவேதனம் செய்து உண்ணலாம்.

மருந்து

மருந்தினால் நோயைப்போகும் - ஆனால் மரணத்தை விலக்க அதனால் ஆகாது. 

ஆற்றாமை எந்த மருந்தாலும் தீராது.

மருந்து சாப்பிடுவதில் மோகம் இருத்தல் கூடாது. பன்னிரண்டு மாதங்களும் ஏதாவது ஒரு மருந்து சாப்பிட்டுக்கொண்டே இருப்பது; இங்கிலீஷ் மருந்து, ஆயுர்வேத மருந்து, யுனானின், கை மருந்து - இப்படிப் பல தினுசு - என மாற்றி மாற்றி சாப்பிடுவது உகந்ததல்ல.

கைவைத்தியம் - இந்த உலகில் எளிதாகக் கிடைக்கும் பொருள். (ஆனால் எவரும் அதற்கு மதிப்பு கொடுப்பதில்லை).

மீட்சி / மீள்தல்

உங்கள் மனத்தில் ஏதாவது மறைவாக இருந்து அந்தத் துர்ச்சிந்தனை உங்களை வாட்டியெடுக்கும் பட்சத்தில், அதனை வெளிப்படையாகச் சொல்லி நிம்மதியுறுங்கள்.

துயருற்றபோதும் மனச் சலனம் இன்றி இருத்தல் வேண்டும். 

நோயாளியிடமே அந்த நோயை எதிர்க்கும் சக்தியிருக்கு. மனிதனுக்குள்ள எண்ணம் பயங்கரமான வேலையைச் செய்யும். இனி நம்பிக்கையில்லை, படுத்துவிடுவோமென்று நினைப்பவரைப் பிழைக்கவைப்பது எளிதல்ல. இந்தச் சாது சந்தியாசிகள் மன உறுதி மிக்கவர் - இவர்களுக்கு அமோக இச்சா சக்தி உண்டு. மரணத்தை நினைத்தபோது இவர்களால் வரவழைத்துக்கொள்ள முடியும். 

நட்பு, தயை, அன்பு இவை அதிகப்படி இருந்தால் ஒருவனை அது விட்டுவிடாது.

நோயில் இருந்து விடுதலையை விரும்பினால் அது வந்தே தீரும். ஆனால் ஒருவனுக்கு இஷ்டமில்லை என்றால் அவனுக்கு அது கிடைக்காது. 

மீட்சிக்கு உதாரணமாக ஜீவன் மஷாயையே சொல்லலாம். டாக்டர் ஜீவன் மஷாயின் தந்தை ஒருதரம் அவருக்கு அறிவுரை கூறுவார். அதன்பிறகு ஜீவன் மஷாயின் மூளையைக் குழப்பிய ஒரு மூடுபனி விலகிப் போயிற்று. ஜீவனின் வாழ்வில் மீண்டும் சுவாலை எழுந்தது. அவருடைய ரிபு-களான மஞ்சரியும், பூபி போஸும் அவர் நினைவிடு மறைந்தனர்.  ஆத்தர்-பௌவும் அவர் நினைவில் இல்லை. புதுப்பிறவி எடுத்தாற்போல் இருந்தது - புதுப் பிறப்பிற்கான தவம். அச்சமயம் ஜீவனுடைய புலனுக்கு ரங்கலால் ஒருவரே புலப்பட்டார். கையில் தடிமனான நோட்டுப் புத்தகம்; கண்ணெதிரே, ஒளிமயமான எதிர்காலம்! அடுத்த நான்கு ஆண்டுகள், ஜீவனதத்தரின் வாழ்க்கையிலே நல்ல உச்சதிசையெனலாம்.

மற்றும்

வெம்மை பற்றினால் எந்தப் பொருளும் வெம்மை கொள்வது இயற்கையின் தருமம். வெம்மையுற்ற பொருள் எதுவும் விரிவடையுமென்பது விஞ்ஞான் உண்மையாகும். அளவுக்கு மீறிய செல்வம் இருக்கும் இடத்தில் அகம்பாவமும் செருக்கும் குடிக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன.

ஜீவன் மஷாயின் தந்தை ’உஹூம் முடியாது’ என்று கூறிவிட்டார் என்றால் அது முடியாது என்று பொருள். ஆனால் அந்த வன்மையில் ஒரு மென்மை கலந்திருந்தது. அவ்வளவு கடினத்திடையேயும் ஒரு மெதுத்தன்மை  ஒலிப்பதுதான் மிக அதிசயம்.

சாஸ்திரம் படிப்பது வேறு, சாஸ்திரஞானம் பெறுவது வேறு - நம்முடைய சாஸ்திரங்கள் கூறுகின்றன: குரு இல்லாமல் எந்த வித்தையும் வராது. படித்து விடலாம் பல நூல்களை. நெட்டுருவும் போட்டு விடலாம். ஆனால் இந்தப் பயிற்சியுடன் அறிவாற்றலும் இணைந்துவிட்டால் உலகத்துக் காட்சிகளே வேறுவிதமாகத் தோற்றம் கொள்ளும்.

ஜீவனின் குரு ரங்லால் கூறுவார்: ஜீவன், உன்னிடத்தில் எனக்கு ஆசை எதனால் தெரியுமா? நீ வாழ்க்கையில் தோல்வியைக் கண்டு மருண்டு போகாதவன் என்பதனால். இந்த நாட்டின் வைத்தியர்கள் தோல்வியை ஏற்று இந்த அலோபதி முறையை வீட்டில் குந்தியபடி சபித்துத் தீர்த்துவிட்டார்கள். இதற்குப் போட்டியாகத் தம் சாஸ்திர ஞானத்தை விருத்தி செய்துகொள்ளவில்லை. வைத்திய முறையில் புதுமையைப் புகுத்தவில்லை. அரைப்பிணங்கள் இப்படித்தான் செத்தொழியும். நீ உயிர் துடிப்புள்ள மனிதன்; அதனாலேயே உன்னிடம் எனக்கு மதிப்பு. தோற்றுப்போவதைவிட அவமானம் தரும் விஷயம் வேறில்லை. தோல்வியை ஏற்பதும் சாவதும் ஒன்றே; செத்தவன் செத்தவனே, புரிகிறதா?

பாவம், புண்ணியம் நிரம்பிய இந்தப் பிரபஞ்சத்தில் மனிதன் புண்ணியம் செய்யவே விழைகிறான். ஆனால் அவனால் முடிவதில்லை.  சாதாரண மனிதன் பணம் சம்பாத்திக்கிறான், பெயரும் புகழும் ஈட்டுகிறான், ஜோராக செலவும் செய்கிறன். இதை தவிர வேறு எதையும் விரும்பாதவன்.

ஆனால் மனதில் ஒருவனுக்கு திருப்தி ஏற்படவில்லையென்றால் ஒருவன் எப்படி ஆனந்தத்துடன் பொருளீட்டுவார்? புகழால் உண்மையான இன்பம் ஏற்படாது போனால் அது மனத்தைப் பரிபூரணமாக நிரப்பாதுபோனால், அது வெறும் பொய்யே. அதன் ஆயுட்காலம் சில நாளைக்கே. அந்த நாட்கள் சென்றதும் அந்தப் புகழும் பெயரும் வெறும் பொய்யாகிவிடும்!’ பிராந்திக் கோப்பையில் இருக்கும் போதையைப் போல்.

வம்சத்தின் நல்ல பெயரைக் கெடுப்பவன் துரோகியாவான். இதனால் பெற்ற அப்பன், அம்மா இவர்களுக்கெல்லாம் தலையிறக்கமடா... மேலே இருக்கும் பதினான்கு தலைமுறையான பெரியவர்களும் நடுங்குவார்களடா - அந்த மறுமை உலகிலும் இந்த அவமானத்தால் அவர்கள் கண்ணீர் சிந்துவார்களடா’

மரணம் தடுத்தற்கரியது. துயரமோ சோகமோ நிரந்தரமானதன்று. வாழ்க்கையில் அறுசுவையும் கலந்தே இருக்கும். வானிலும், காற்றிலும், இம்மாநிலத்திலும், ஆறு பருவங்களின் நடனம் நிகழ்கிறது. இம்மண்ணின் ஒவ்வோர் அணுவிலும் வெம்மையுடன் வேட்கையும் நிரம்பியிருப்பதுபோலவே உயிரினத்தின் வாழ்க்கையிலும், அதே போல் தேகத்தின் புரைகளிலும் இந்த வேட்கையும் சுவைபற்றிய நசையும் தேங்கியுள்ளன. இவை இராதுபோனால் வாழவே முடியாது - மனிதனின் உள்ளத்துள் ஆனந்தத்தைப் பெற வேண்டிய தாகம் இருக்கிறது. சோகம் என்பது எதற்காக? அது ஏன் நீடிக்கவேண்டும்? 

வருங்காலம்

மரணத்தை வென்று வரவே முடியாது;  ஆனால் அகால மரணத்தைப் காட்டிலும் துக்ககரமானது வேறெதுவுமில்லை. அகால மரணத்தைத் தடுப்பதே இந்த உலகில் மங்களமான காரியமாகும். எல்லாவற்றையும்விட இன்பம் தருவதாகும்.

மனிதன் அகால மரணத்தை வென்று வரலாம்; நிச்சயமாக அவனால் முடியும். நோய்களிலிருந்து அவன் மீட்சி தருவான். நல்ல பழுத்த வயதில் யோகியரைப்போல், தவசிகளைப்போல் மனிதன் ஒவ்வொருவனுக்கும் உடம்பை நீத்துச் செல்வான். அப்போது சிகிச்சர்களுக்கோ, டாக்டர்களுக்கோ தேவையிராது. நல்ல பக்குவ வயதில் ஆரோக்கியமான உடலுடன் மனிதர் யோகியரைப்போல், தவசிகளைபோல் உடலை நீத்துச் செல்வார்கள். வைத்தியனை விளித்து, ‘இனித் தேவையில்லை; போதும். ஓய்வுவேண்டும் - நான் தூங்கவேண்டும் புட் மீ டு ஸ்லீப் ப்ளீஸ் (Put me to sleep please) என்பார்கள். அது ஒரு பெருந்துயில் - மகாநித்திரை!

நன்றி ஜெ.

அன்புடன்

ராஜேஷ்

பி.கு: இந்நாவலை ஓர் ஆண்டாக நான்கு பிரபலாமன நூல்விற்பனை வலைத்தளங்களில் order செய்தும், பின்பு stock இல்லை என பதில்பெற்றேன். ஒருவழியாக நண்பரின் உதவியால் 2022 சென்னை புத்தககண்காட்சியில், சாஹித்திய அகேடமியின் 2020 வெளியிட்ட மூன்றாம் பதிப்பை பெற்றேன். ஆனால் இப்பதிப்பு நாவலின் வாசிப்பு அனுபவத்தை குளைத்துவிட்டது என்றே சொல்லலாம். 

ஒவ்வொரு பக்கத்திற்கும் சராசரியாக 1-2 பிழைகள். ஒற்றெழுத்து பிழைகள், வலிமிகும் மிகா பிழைகளை விட கண்ணுக்கு அப்பட்டமாக தெரியும் பிழைகளில் 90% தட்டச்சு பிழைகள் தான். உதாரணமாக ஆணடு (ஆண்டு), ஏதவது (ஏதாவது), அவவ்றையில் (அவ்வறையில்), தேற்றுப் (தோற்று), அநத்த் (அந்தத்), உணமை (உண்மை), இபபடி (இப்படி)... இந்த பதிப்பு Draft 2 என்றுக்கூட சொல்ல முடியாது அளவில் தட்டச்சுப்பிழைக்ள் நிரம்பியிருக்கின்றன. ஆனால், இது மூன்றாவது பதிப்பு என்று சொல்வது நம்ப முடியவில்லை. இத்தனைக்கும் 2015 பதிப்பை பற்றி வலைத்தளங்களில் பதிவுகள் உள்ளன. சாஹித்திய அகேடமியின் இ-மெயில் எழுதி ஒருவாரம் ஆகிறது. இதுவரை ஒரு பதிலும் இல்லை.

இந்நூலை படித்தப்பின்பு, அழிசி குழு சமீபத்தில் கிண்டிலில் வெளியிட்டுள்ள பதிப்பை (சொடுக்கை தட்டவும்) நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

Paperback வடிவில் வேண்டும் என்றால் வ.உ.சி நூலகம்/பதிப்பகம் வெளியிட்டுள்ள பதிப்பு (சொடுக்கை தட்டவும்) கிடைத்தால் வாங்கலாம். சாஹித்திய அகேடமியின் (2022 வரையிலான) பதிப்பை தவிற்பது நல்லது. (2022 ஜுலை-22 எழுதியது இக்கட்டுரை)

 


January 18, 2022

My Fitness Journey 2

This blog is in continuation of my blog "My Fitness Journey which I planned and chiseled on the way"  written mainly during 2019-2020 time period where I followed my diet and kept up with my exercises.

I was happy with what I could achieve until July 2020 and what I could maintain until Feb 2021. But after Feb 2021 I lost track of my weight at my conscience level because I was regularly measuring my weight. I let my other stresses take over me.

In July 2020, I had an injury in my left leg. It is called IT Band syndrome. I got it when I was running for some 10km one day. There was some difficulty and a kind of noise or uncomfortableness around the left side of the left knee. I still wanted to continue my running. But the pain forced me to stop after 1km. After that I could not even walk for 3 days. 

I tried to study about it. Yes, I went to Dr.Google. I self diagnosed it as IT band syndrome. I gave it some rest and was doing some strengthening exercises using massage balls, foam rollers etc. But all those things helped only a little bit. I could only manage walking. Whenever I tried running I can run only for 1 km. 

Once November 2020 hit, Regina's winter (-20 to -50deg celcius) didn't even let me to walk. However, I was running my 1 year old daughter inside the home and I could easily manage achieve 7000 steps per day in my FitBit. This let me maintain weight around 66kg. However, in Feb 2021, my family went to India for a quick vacation and I also got into a sedentary workstyle job which means I hardly did 1000 steps per day. This led to increase in weight by almost 1.5kg per month. By Jan 2022, I am now at approximately 80kg. This is unpardonable actually.

I did follow exercises that were recommended by physiotherapists, yoga masters etc. But I wasn't very disciplined. I was expecting quick results. But, it wasn't coming. Moreover, I got demotivated with the 6-7 exercises that they gave me.

One day I spoke very sadly to my yoga master. My yoga master Piyush suggested me to take help of Chiropractor. I went to the Chiropractor and he did helped me. He started with two simple exercises initially. But I have to do that 5 min exercises 3-5 times a day. That really helped me. Because it was taking only 5minutes. And also only 2 exercises. I was glad that I could finish a task quickly. Also, he prescribed me to keep hot water or ice pack therapy at the affected area. This therapy helps to improve the blood flow in that region by dilating the blood vessels. More blood flow helps in healing of the inflammation in that region. 

Right from session 1, my Chiropractor performed a massage with a steel knife (meant for massages). I think the steel knife massages helps to unblock the blockages in the micro capillaries in blood vessels and helps to heal the inflammation around the knee area soon.

I think hot water / ice pack therapy, exercises and massages helped to heal better.

Slowly, my chiropractor increased the number of exercises and intensity of exercises. I would say that it helped me. However, one must be more disciplined in order to see results soon and come out of the treatment and save money.

Also, my chiropractor told that it is not just a IT band issue. It is also a knee problem.

Main learnings

1) Find the right therapist as early as possible. Take it upon yourself. Understand why you are been asked to something. Because it will motivate you. A hot water/cold water therapy might sound not used for a muscle problem. But we will understand the problem is mainly due to inflammation in the muscles. So, in order to get rid of inflammation it is important that blood flows are at best.

Have a disciplined approach. Have goals. 3 months should be enough to heal. 6 months is max to get back on track. 

2) Have the right shoes. Change your shoes frequently 

3) Manage your running load. If you over do running, it will hurt you knees. By overloading yourself or your knees, you might be able to burn more calories. However, if you injure your knees or muscle groups, you will not be able to do any exercise and that will make you gain lot of weight. Have no hurry in losing weight. 

4) Do not change your running position on your own or by friend's suggestion. Change your running position (i.e. angle of landing, place of landing etc) only with the help of professional certified athlete. Because change of these angle in running has the potential to manifest a runners knee problem. 


My weight as on 15-Jan-2022 is 79.9 kg


Jan 2016 to Jan 2022 Weight graph

Jan 2018 to Jan 2022 weight graph


Now it is time to get back on track. I am going to take the following
1) Sugabedhi / சுகபேதி (Dysentery treatment) - Used castor oil to cleanse my stomach (flush away toxins out of my stomach) - 17 Jan 2022
2) Intermittent Fasting 16hr fasting 8hr eating period
3) Calorie Restricted eating 1600 calories per day
4) No Sugar. I.e., No tea / No Coffee (i.e no milk and sugar)
5) Minimal rice / wheat/maida 
6) Flax seeds / Pumpkin Seeds / Brazil Nuts / Vallarai maathirai  / Vit B12 / Vit D
7) Vegetables / Spinach
8) Cold shower in morning and night. Salt (pranic healing)


Other things
1) Pranayama 
2) Knee Strengthening
3) Basic Yoga
Total 30mins

November 17, 2021

வாலறிவன் நூலகம்

2021 மே 26 ஆம் தேதி எங்களது அம்மா ஒரு புது வீடு கட்டி க்ரஹப்ரவேசம் செய்தார்கள். அவ்வீட்டின் பிராதான வடிவமைப்பாளர் அல்லது தேவைகளின் வடிவமைப்பாளர் என் பொறுப்பில் ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக செய்தேன். அதனில் எனக்கு ஒரு குட்டி நூலகம் வைக்கவேண்டும் என்ற ஆசை வந்தது. அதனால் வாலறிவன் நூலகம் என்ற ஒரு குறுந்நூலகத்தை வீட்டின் வாசலில் வைக்க வடிவமைத்தேன். அதில் ப்ரதானமாக குழந்தைகளுக்கான புத்தகங்களை வைக்க திட்டமிட்டேன். ஏனெனில் இந்நூலகம் குழந்தைகளுக்கானாது. 

இந்நூலகத்திற்கான விதைகள் இரண்டு. 1) நான் வட அமெரிக்கா (யூ.எஸ்.ஏ மற்றும் கனடா) வில் வசித்து வருகிறேன். இங்கு பல வீடுகளில் இதுப்போன்ற இலவச குறுந்நூலகத்தை கண்டுள்ளேன்.நாமும் இதுப்போல் வைக்கவேண்டும் என்ற அவா எனக்கு என்றும் உண்டு 2) எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் வீடில்லா புத்தகங்கள் தொடரில்/புத்தகத்திலும் பல மேடை பேச்சுகளில் ஒரு முதியவர் அவர் வீட்டிற்கு வருவோர் எல்லோருக்கும் ஒரு புத்தகத்தை அன்பளிப்பாக தருவார் என்று கூறினார். இதுப்போன்ற நல்ல கதைகளே என்னை இதுப்போன்ற முயற்சிகளில் ஈடுப்பட செய்தது.

நூலகம் தயார் ஆக இன்னும் சில மாதங்கள் ஆகி, 23-செப்டம்பர் 2021 அன்று எனது தங்கை கிருத்திகாவின் குழந்தைகள் ப்ரத்ன்யா மற்றும் தன்யா சகோதரிகள் அதனை ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார்கள். முதலாவதாக தன்னறம் நூலகள் சிலவற்றை வாங்கி வைத்தோம். மேலும் பல புத்தகங்களை வாங்கி வைத்தோம்.

இந்நூலகத்தின் பெயர் வாலறிவன் நூலகம்.

இந்த நூலகத்தை செய்துக்கொடுத்த எனது பொறியாளர் நண்பர் டென்னீஸ் அவர்களுக்கு மிக்க நன்றி. 

இந்நூலகத்தைப் பற்றி குக்கூ காட்டுப்பள்ளியில் தன்னறம் நூல்வெளியையும் தும்பி சிறுவர் மாத இதழையும் நடத்தி வரும் சிவகுருநாதன் அவர்கள் அவர்களது தும்பி முகநூல் புத்தகத்தில் 17 நவம்பர் 2021 அன்று கீழ்க்காணும் பதிவை எழுதியிருந்தார். அவை கீழே.

தும்பி சிறுவர் மாத இதழ் முகநூல பக்கத்தில் வாலறிவன் நூலகத்தைப் பற்றிய பதிவு

வாசல் சுவற்றில் ஓர் சிறுநூலகம்...

துவக்கந்தொட்டே தும்பி இதழோடும், தன்னறம் நூல்வெளியோடும் கரங்கோர்த்துப் பயணிப்பவர், கனடாவில் வசிக்கும் தோழமை ராஜேஷ் அவர்கள். அவர் மற்றும் அவரின் குடும்பத்தாரின் அகவிருப்பமாக, பாண்டிச்சேரியில் அமைந்துள்ள அவர்களின் வீட்டுவாசல் சுவற்றில் ஓர் சிற்றறை நூலகத்தை அமைத்திருக்கிறார்கள். அதற்கு 'வாலறிவன் நூலகம்' எனப் பெயரிட்டுள்ளனர். அங்கிருக்கும் வீதிக்குழந்தைகளுக்கும் சுற்றுப்புற மனிதர்களுக்குமான குறுநூலகம் போல அது விரைவில் மாறப்போகிறது. 

வழக்கமான நூலகம் போலவே, இங்குள்ள புத்தகங்களை எடுத்துச்சென்று 1-2 வார காலத்திற்குள் படித்துவிட்டு, புத்தகத்தினை திரும்பவும் நூலகத்திற்கு அளித்திட வேண்டும். சில நாட்கள் முன்பாக, அவ்வீட்டுக் குழந்தைகளின் கரங்களால் அந்த எளிய நூலகம் வீதிமக்களின் பொதுப்பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. அந்நூலகத்தில் நாராயணகுருவின் 'அறிவு' புத்தகத்தை முகப்புநூலாக வைத்திருந்தமை தன்னறம் நூல்வெளிக்கு நிகழ்ந்த நற்குவியம் என்றே தோன்றுகிறது. 

'வீதிக்கு ஒரு வாசல்-நூலகம்' என்ற பெருங்கனவினை இக்குழந்தைகள் துவக்கி வைத்திருக்கிறார்கள். திண்ணை வைத்த வீடுகள் போல, நூலகம் வைத்த வீடுகள் நம் சமூகத்திற்கான பொது அறங்களில் ஒன்றாக நிலைகொள்ளட்டும். பறவைக்கு நீர்வைத்தல் போல மனிதர்களுக்காக புத்தகம் வைக்கும் இச்செயல் எல்லோருக்கும் சாத்தியப்படக்கூடிய ஒரு கனவுத்திட்டத்தை முன்வைக்கிறது. 'வீட்டுக்கொரு நூலகம்' என்ற உணர்வு, 'வீட்டுக்கொரு வாசல்-நூலகம்' என விரிவுகொள்கையில் எல்லா வீதிகளும் பாடசாலையாகிறது. 

கனவு வெல்க!





April 07, 2021

மண்ணில் உப்பானவர்கள்


கடந்த 3 நாட்களாக சித்ரா பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய ”மண்ணில் உப்பானவர்கள்” என்ற புத்தகத்தை வாசித்தேன். இப்புத்தகம் உப்பு சத்தியாகிரஹம் என்னும் மகத்தான யாத்திரையை பற்றியது. விடுதலை நோக்கிய பயணத்தை பற்றிய புத்தகம்.

இப்புத்தகத்தில் பல தளபதிகளின் வாயிலாக இந்திய விடுதலை நோக்கிய இப்பயணம் முழுவதும் காந்தி வருகிறார். அது அவருடைய மகத்தான ஆளுமையை காட்டுகிறது. காந்தியை ஏக கதாநாயகனாக காண்பிக்காவிட்டாலும், பல எளியோர்களும் தலைவர்களும் இதன் நாயகர்களானாலும், இவர்களை விடுதலை நோக்கிப் பயணம் செய்ய வைத்ததில் காந்திக்கு மிக பெரிய பங்கு உண்டு என்பதை இப்புத்தகம் முழுக்க  நேரடியாக காணலாம்.

இன்றைய காலகட்டங்களில் ஒரு நாள் நடைபெறுகின்ற அரசியல் பேரணிக்கு சில பல கோடி ரூபாய்களில் பணத்தை செலவு செய்கின்றனர். அனைத்தும் ஆதாய நோக்கோடு மட்டுமே. ஆனால் 80 ஆண்டுகள் முன்பு தகவல்தொடர்பு வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் இல்லாத காலக்கட்டங்களில் எளியோர்களை தாமகவே முன்வந்து இப்போராட்டத்தில் பங்கேற்க மனதில் எழுச்சியை உருவாக்க விதையை விதைத்தவர் காந்தி. மிக எளிமையாக நடந்த போராட்டம்.

வழி நெடுக்கிலும் நான் கண்டவை/ கற்றவை/ பெற்றவை

1) இப்படிப்பட்ட மிகப்பெரிய போராட்டத்திற்கு தேவை ஒழுக்கமும் மனதிடமும் அச்சமின்மையும் சுயகட்டுப்பாடும். அதற்கு தகுதியானவர்களை பல வாரங்கள் ஆசிரமத்தில் தயார் செய்கிறார் காந்தி. இவர்களுக்கு ஒரு நாளில் பின்பற்ற வேண்டிய பணிகள் பற்றி ஒரு தெளிவான அட்டவனை / திட்டம் உண்டு.   காலை 4 மணிக்கு எழுந்து இரவு 9 மணிக்கு உறங்குவது வரை. சத்தியாகிரஹிகள் தினமும் நாட்குறிப்பு எழுதவேண்டும் என்று கூறுகிறார்.

2) உணவு, உடை, தங்குமிடம் மிக எளிமையாக இருத்தல் வேண்டும். அவற்றை செல்லும் வழியில் மக்கள் கொடுப்பதில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். எளிமையை கடைப்பிடிக்க வேண்டும்

3) காந்தி ஒரு ஊருக்கு செல்வதற்கு முன்பாக ஒரு குழு (விடியலின் படை) சில மணி நேரம் முன்பே சென்று தங்குவதற்கு தேவையான அனைத்தையும் தயார் செய்யும்

4) காந்தி கைது செய்துபட்டால் போராட்டத்தை தொடர அடுத்தகட்ட தலைவர்களை காந்தி கண்டைந்து அவர்களை போராட்டத்தை வழிநடத்த கூறியுள்ளார்

5) முதலில் உப்பு சத்தியாகிரஹப் போராட்டத்தை யாரும் பெரிதா எடுத்தகொள்ளவில்லை என்றாலும் இப்போராட்டத்தின் பிரமாண்டத்தை காந்தி திடமாக நம்பினார்

6) மற்றவர்களை விட ஓய்வின்றி அதிகம் உழைத்தவர் காந்தி. கடிதங்கள், கட்டுரைகளை, நேர்காணல்கள், உரையாடல்கள், பேச்சு என காந்தி நாள் முழுவதும் ஒரு நோடிக்கூட வீண் செய்யாமல் உழைத்திருக்கிறார்.

7) வழி நெடுக்கில் தீண்டாமை, சாதிய பாகுபாடு ஆகியவற்றை கறாராக கண்டிக்க காந்தி ஒரு போதும் தயங்கவில்லை. ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை என்பது அதிகார மாற்றம் அல்ல. மக்களுக்கு கிடைக்கும் சுதந்திரமும் சுயமரியாதையும் தான் உண்மையான விடுதலை என்கிறார். தீண்டாமை ஒழிக்காமல் விடுதலை பெற்று ஒரு பயனும் இல்லை என்கிறார்.

8) போராட்டத்தில் பெண்களின் பங்கு மிக அவசியம் என கருதிகிறார் காந்தி. 

9) அரசாங்கத்திற்கு அனைத்தையும் அறிவித்துவிட்டே செய்கிறார்.

10) இப்பொழுது தேவை ஒத்துழையாமையே என்பது காந்தி அளித்த செய்தி. மக்கள் ஒத்துழையாத பொழுது அரசுகள் அதிகாரம் செய்ய முடியாது என்று திடமாக நம்பினார். அதனை மற்றவர்களும் உணரும் படி செய்தார்.

11) தண்டி போன்ற சிறு கிராமம் பலரின் வருகையை தாக்குபிடிக்காது. ஆதலால் அனைவரும் அவரவர் உணவு இருப்பிடத்தைப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்கிறார்

12) ஒரு பிடி மண் என்றாலும் அதில் தான் இத்தேசத்தின் கௌரவும் உள்ளது என்ற செய்தியை எல்லார் மனதிலும் கடத்துகிறார்

13) இந்த யாத்திரை எளியோர்களால் ஆனது. நகரங்களும் தார் சாலை வழிகளும் அல்லாமல் கிராமங்கள் மூலம் மட்டுமே காந்தி பயணித்து இருக்கிறார். அவ்வாறே கடைக்கோடி எளியோரையும் தன் செய்தியின் மூலமாக சென்றுஅடைகிறார் காந்தி.

14)  பல செல்வந்தர்கள் தங்களது வசதிகளை சொத்துகளை துறந்து காந்திய கொள்கையை பின்பற்றி எளிய வாழ்கையை மேற்கொண்டு இப்போராட்டத்தில் பங்கேற்றனர். 

15) வயதையும் உடல்நலனையும் பொருட்படுத்தாமல் பலர் ஒவ்வொருநாளும் 15 முதல் 25 கிலோமீட்டர் தூரம் வரை நடந்துள்ளனர். 

16) உறவுகளை பேணுவதில் காந்திக்கு நிகர் காந்தியே. அதனால் தான் அவருடன் நூற்றுக்கணக்கான தளபதிகள். காந்திய பண்புகள் இருந்தாலும் அவரவருக்கு தனி அளுமைகள் உண்டு. 

17) சர்வதேச ஊடங்களுடன் காந்தியின் தரப்பையும் இந்தியாவின் தரப்பையும் முன்வைக்க சிறந்த ஊடகியவியலாளர்களை தேர்ந்தெடுத்து அப்பொறுப்பை அவர்களிடம் அளிக்கிறார் காந்தி.

18) எத்தகைய நிலையிலும் சமநிலை குலையாமல் இருக்கிறார் காந்தி

19) எல்லா வாரமும் திங்கட்கிழமை அன்று அவருடைய மௌனவிரதத்தை கடைப்பிடிக்கிறார். எந்த ஒரு புதிய செயலை செய்யும் முன் இரண்டு நாட்கள் மௌன விரதமும் உபவாசமும் இருக்கிறார் காந்தி. அவ்வாறே ஒரு போராட்டத்திற்கு மனதளவிலும் உடலளவிலும் தயாராகிறார் காந்தி.

20) உப்புச் சட்டத்தை மீறவேண்டியதின் அவசியத்தை செல்லுமிடமெல்லாம் கூறிக்கொண்டே செல்கிறார் காந்தி

21) நேரம் தவறாது செயல்களை திட்டமிட்டபடி செய்பவர் காந்தி.

22) கூட்டம் கூடினால் மட்டும் போதாது மக்களும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று நினைக்கிறார் காந்தி

23) ஆடம்பரமாக நடைப்பெறவேண்டிய போராட்டம் அல்ல இது. இந்த விடுதலை எளியவர்களுக்கானது.  மிக மிக எளிமையாக நடைபெற வேண்டியது. வல்லரசு கனவுகள் இல்லை ஏனெனில் இத்தேசம் எளியவர்களுக்கானது என்பதை தன் உடன் இருப்போருடன் சொல்லிக்கொண்டே இருக்கிறார். மக்கள் தாமாகவே வந்து பங்கேற்கும் போராட்டமே வெற்றி பெறும் என்று நம்பினார் காந்தி.

24) சுதந்திர கணலை மக்களின் மனதில் மூட்டிக்கொண்டே இருந்தவர் காந்தி

25) உப்பையும், நூற்று செய்த கதர் ஆடைகளை பலர் விற்று இப்போராட்டத்திற்கு பணம் சேர்த்துக்கொடுத்துள்ளனர். ஆனால் பணத்தை விட மக்களின் பங்கேற்ப்பே மிக அவசியம் என்று காந்தி கருதுகிறார்.

26) ஒவ்வொரு ஊரின் வழியாக செல்லும் பொழுதும் ஆங்கிலேயர்கள் கிராமத்துமக்களுக்கு கடுமையான உத்தரவுகளை போடுகிறது. ஆனால் கிராமத்து மக்கள் போராட்டத்திற்கும் தண்ணீரும் உணவும் தங்குமிடமும் கொடுத்து தங்கள் ஆதரவை தந்துக்கொண்டே இருக்கிறார்கள்

27) உப்பு சத்தியாகிரஹம் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடக்கிறது. அதுவே காந்தியின் வெற்றி. 

28) முக்காடு போட்டுக்கொண்டு வீட்டை தாண்டாத பெண்கள் கூட இப்போராட்டத்தில் அதிக எண்ணிக்கையில் பங்கேற்கின்றனர்

29) உப்பு சத்தியாகிறத்தை முதலில் இருந்து நம்பியவர் இராஜாஜி. வேதாரண்யத்தில் இராஜாஜி உப்பு சத்தியாகிரஹத்தை தலைமையேற்று நடத்தினார். அதற்கு பலரை கறாரான முறையில் நேர்காணல்கள் வைத்து தேர்வு செய்து நடத்தினார். 

30) எண்ணற்ற எளியோர்களும் பல தலைவர்களின் பங்கேற்பே இப்போராட்டத்தை வழி நடத்தியது.

உப்பு சத்தியாகிரஹம் துவங்கியப் பிறகு புதிய இந்தியா பிறந்தது எனலாம். அதில் சுதந்திரத்தின் கணலை வளர்த்து அதனை தொடர்ந்து பாதுகாத்தார் காந்தி. தன்னலமற்ற பலரின் தியாகத்தாலும் பெருஞ்செயல்களாலும் கிடைத்து இந்தச் சுதந்திரம். அதனை இப்புத்தகம் வாசிக்கும் தோறும் உணர்ந்தேன். அத்தகைய உணர்வை தன் எழுத்தில் மூலம் சாத்தியப்படுத்திய சித்ரா பாலசுப்ரமணியன் அவர்களுக்கு நன்றிகள் பல.

சீரான Tone-இல் அழகிய தரமான  புகைப்படங்களுடன் இப்புத்தகம் பதிப்பித்த தன்னறம் நூல்வெளி (பதிப்பகத்திற்கு) பாராட்டுக்கள். பெரும்பாலான தலைவர்களின் புகைப்படங்களை பார்த்துக்கொண்டே சென்றது ஒரு தனி வாசிப்பு அனுபவத்தை தந்தது.

அனைவரும் படிக்கவேண்டிய மிக முக்கியமான புத்தகம்.

January 20, 2021

அஞ்சலி : டாக்டர் ஷாந்தா / Dr.Shanta - வாழ்க உன் புகழ்

டாக்டர் ஷாந்தா அவர்களின் பெயரை சில வருடங்கள் முன்பு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலமாக கேள்விப்பட்டேன். அவர் சென்னையில் உள்ள அடையாறு புற்றுநோய் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக சேவை செய்துவருகிறார் என்ற அளவிலேயே கேள்விப்பட்டேன். பின்பு அவரைப் பற்றி அறிந்துக்கொண்டதில் அவர் தந்நலம் இன்றி பிறர்நலத்திற்காக தன் வாழ்வை முழுவதுமாய் அளித்தவர் என்று உணர்ந்தேன். 

அவ்வளவு தான் அவரைப் பற்றி எனக்கு தெரியும். ஆனால் அதற்கு மேல் அவரைப் பற்றி ஒன்றும் தெரியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இந்தியா போன்ற வளர்ந்துவரும் ஒரு நாட்டில் ஒரு மாபெரும் நிறுவனத்தை பிரதிபலன் பாராமல் 60 ஆண்டுகளுக்கும் மேலாக (குறிப்பாக இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு) சேவையாற்றி அதனை பல ஆண்டு காலம் இயக்குவதும் ஏழைகளுக்கும் புற்றுநோய்க்கான சிகிழ்ச்சை வசதிகளை அளிப்பது என்றால் அது ஒரு இமாலாய செயல் என்று என்னால் உணர முடிகிறது. 

மேலாண்மையை கற்ற ஒரு மாணவனாக எனக்கு ஒரு மருத்துவ நிறுவனத்தை நடத்தும் சிக்கல்கள் என்ன, பொருளாதார தேவைகள் என்ன, அதற்கு தேவைப்படும் நிர்வாக திறன் என்ன என்று ஓரளவு உணர முடியும். ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி அதனை பல ஆண்டு காலமாக செயலாற்ற வேண்டும் என்றால் அதற்கு பிறர் மீது அன்பு, ஒப்புரவு, கண்ணோட்டம் எவ்வளவு அவசியம் என்பதை மறுக்க முடியாது. தன் செயலை வாழ்வின் பொருளாக மாற்றிக்கொண்டார். பிறருக்கு பயனுள்ள வாழ்வே வாழ்வு. அதனால் தான் அவர் சான்றோர். பெரியோர். 

டாக்டர் ஷாந்தா, மெட்ரோ மேன் ஈ.ஸ்ரீதரன்(Metro Man E.Sridharan) போன்றோர் பெருஞ்செயல்களை செய்தவர்கள். இவர்களை பற்றிய நல்ல ஒரு வாழ்க்கை குறிப்பு புத்தக வடிவில் இல்லை என்பது எவ்வளவு பெரிய இழப்பு நம் சமூகத்திற்கு. அவர்களைப் பற்றிய நல்ல புத்தகங்கள் விரைவில் வெளிவரவேண்டும்.

யோகிகள், எழுத்தாளர்கள் என்று சிலர் ஞானமே பாதையேன கொண்டவர்கள். அது ஞானமார்க்கம். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் போன்ற சிலர் செயல் வழி ஞானம் அடைந்தவர்கள். டாக்டர் ஷாந்தா போன்றோர் தான் பெற்ற அறிவை சேவையில் பயன்படுத்தி வாழ்வின் நிறைவை பெற்றவர்கள். ஆனால் வாழ்வில் ஒருபோதும் சென்றடையவில்லை எனும் நிறைவின்மை கொண்டு வாழ்ந்தவர்கள். 

வாழ்வில் பலர் நல்ல சூழ்நிலைகளாலும் நல்ல முன் உதாரணங்களாலும் சூழப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் எத்தனைப் பேர் அவற்றைப் பயன்படுத்தி பிறருக்கு பயனுள்ளதாய் வாழ்ந்துள்ளார்கள் என்று கணக்கிட்டால் நமக்கு மிக குறைவான மக்களே எஞ்சுவார்கள். இவ்வுலகில் சொகுசும் வசதியும் மூச்சு காற்றுப்போல் வேண்டும் என்று நினைக்கும் மக்களே அதிகம். குறிப்பாக வசதிப்படைத்தவர்களும் அறிவை (ஞானத்துடன் குழுப்பிக்கொண்டு) ஆணவமாய் தலையில் சூடிக்கொண்டு அலையும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. மனதில் தராசை வைத்துக்கொண்டு மற்றவர்களை எடைப்போடும் மக்களே மிகுதி. அவர்கள் பிறருக்கு என்ன செய்தார்கள் என்று அவர்கள் திரும்பிபார்த்தால் அவர்களே வெட்கி தலைகுனிவார்கள் அல்லது சால்ஜாப்பு சொல்வார்கள். உண்டு உறங்கி புணர்ந்து பின் மாயும் இந்த எளியோர்கள் சிறுமை வாய்ந்தவர்கள். இவர்கள் தங்களின் சூழலால் பயனுற்ற கல்வியைக்கொண்டு ஊதியத்திற்காக சில அன்றாட வேலைகளை செய்து தன்னை ஒரு படி மேல் என்று தவறாக நினைத்துக்கொள்ளும் சிறியோர்கள்.

மேற்சொன்ன பத்தியில் கூறப்பட்டுள்ள எண்ணற்ற சிறியோர்கள் மத்தியில் வாழ்ந்த ஒரு பெரியோர் என்றால் அது டாக்டர் ஷாந்தா போன்றவர் தான். செய்வதற்கு அரிய செயல்களை செய்தவர். அதனால் தான் அவர் பெரியோர். தன்னுயிர் தான் அற வாழ்ந்தவர். எழை எளியோர்க்கென வாழ்ந்தவர். அதனால் தான் இவரை இவ்வுலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைத்தொழுகின்றன.

டாக்டர் ஷாந்தா போன்று நான் வாழ்வில் ஒரு சில வருடங்கள் சேவையாற்றினால் கூட நான் பயனுள்ள ஒரு வாழ்வை வந்ததாய் உணர்வேன்.

டாக்டர் ஷாந்தவை நினைத்தால் எனக்கு நான்கு திருக்குறள்கள் நினைவுக்கு வருகின்றன. அவை

1) குறள் 268 (பொருளுக்கு சுட்டியைத் தட்டவும்)
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்

2) குறள் 26 (பொருளுக்கு சுட்டியைத் தட்டவும்)

3) குறள் 505 (பொருளுக்கு சுட்டியைத் தட்டவும்)

4) குறள் 983  (பொருளுக்கு சுட்டியைத் தட்டவும்)

1965-ல் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘பணம் படைத்தவன்’ திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதிய “கண் போன போக்கிலே கால் போகலாமா” பாடலில் இறுதியாக வரும் வரிகள் இவை 
”இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்…”

டாக்டர் ஷாந்தா பேர் நீடூடி வாழும்.

டாக்டர் ஷாந்தாவின் புகழ் வளரட்டும்.

டாக்டர் ஷாந்தாவுக்கு அஞ்சலி
Date 19 Jan 2021












January 08, 2021

2021 - Book Reading Challenge - Plan

=================

Weekly Works
=================
100 Best Tamil Short Stories - S.Ramakrishnan selected
100 Short Stories - Writing Marathon 2020 - Jeyamohan

=================
2021 - OP1 - Jan - Mar
=================
E-Books / Online 
1) வெண்முரசு - #10 பன்னிரு படைக்களம் - ஜெயமோகன்   [Currently Reading]
2) வள்ளுவரின் அறவியலும் அழகியலும் - கோவை ஞானி [Currently Reading]

Printbooks

Kindle
1) வாசிப்பது எப்படி?: vasippathu eppadi? - செல்வேந்திரன்  [Currently Reading]
2) பல ரூபங்களில் காந்தி (பஹுரூப் காந்தி) அனு பந்தோபாத்யாயா
3) ஒரு சிறு இசை - வண்ணதாசன்

Audiobooks
1) The 12 Week Year - Get More Done in 12 Weeks than Others Do in 12 Months - Written by: Brian P. Moran, Michael Lennington [Finished on 8 Jan 2021]
2) The Universe Always Has a Plan - The 10 Golden Rules of Letting Go - Matt Kahn
3) Talent Is Overrated - What Really Separates World-Class Performers from Everybody Else 

Audiobooks - Unplanned

Total Planned - 7
Total Actual -
Total Uncompleted - 

=================
2020 - OP2 - Apr - Jun
=================
E-Books / Online 
1) வெண்முரசு - #11  சொல்வளர்காடு - ஜெயமோகன்

Printbooks

Printbooks Unplanned

Kindle

Kindle Unplanned

Online Unplanned

Audiobooks

Total Planned -
Total Actual - 
Total Uncompleted - 

=================
2020 - OP3 - Jul - Sep
=================
E-Books / Online 
1) வெண்முரசு - #12  - கிராதம் - ஜெயமோகன்

Printbooks

Kindle

Audiobooks

Total Planned - 7
Total Actual - 
Total Uncompleted :

=================
2020 - OP4 - Oct - Dec
=================

E-Books / Online 
1) வெண்முரசு - #13 – மாமலர் - ஜெயமோகன்

Kindle
Audiobooks

Printbooks 

Total Planned - 7
Total Actual - 
Total Uncompleted - 

Total Year 2020 - Planned - 60
Total Year 2020 - Actual   - 62+3(Thirukkural related) = 65

For Future

Audiobooks
2) Gandhi: The Years That Changed the World, 1914-1948 - Ramachandra Guha - 36h 11m [Currently Listening]

Kindle
4) Swipe to Unlock
5) The Shooting Star - Shivya Nath
6) கே.பி.டி. சிரிப்பு ராஜசோழன் - க்ரேஸி மோகன்
7) அமானுஷ்ய நினைவுகள் - அசோகமித்ரன் 
8)பாரதியின் சுய சரிதைகள் - கனவு, சின்னச் சங்கரன் கதை - ஆ.ரா.வேங்கடாசலபதி

3) Three Acres and Liberty
4) வெக்கை - பூமணி
5) இந்திய பிரிவினை - மருதன்
6) விசும்பு - ஜெயமோகன்
7) புதுமைப்பித்தன் சிறுகதைகள்
8) எனது நாடக வாழ்க்கை - அவ்வை ஷண்முகம்
9) ஜெயகாந்தன் சிறு கதைகள் - 1
10) ஜெயகாந்தன் சிறு கதைகள் - 2


Printbooks to read (Future)

1) போரும் அமைதியும் (1/3) - War and Peace - Leo Tolstoy - Translated by M.A.Susila 
2) போரும் அமைதியும் (2/3) - War and Peace - Leo Tolstoy - Translated by M.A.Susila 
3) போரும் அமைதியும் (3/3) - War and Peace - Leo Tolstoy - Translated by M.A.Susila
மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்
தந்திர பூமி (அல்லது சுதந்திர பூமி) - இந்திரா பார்த்தசாரதி
அசடன் - The Idiot -  Fyodor Dostoyevsky translated by M.A.Susila
கோபாலபுரத்து மக்கள் - கி.ராஜநாரயணன்
ஒளியிலானது - தேவதேவன் - ஜெயமோகன்
புயலிலே ஒரு தோனி - ப.சிங்காரம்
தனிமையின் 100 ஆண்டுகள் - One Hundred Years of Solitute -  Gabriel García Márquez, - Translated by Sukumaaran


Kindle Books to read (Future)
மாயமான் - கி.ராஜநாராயணன்
ஜே.ஜே சிலக்குறிப்புகள் - சுந்தர ராமசாமி
8) Tamil translation of Sapiens - A brief history of humankind - Yuval Harari
9) எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
10) கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேலுக்குடி கிருஷ்ணன்
11) ராமானுஜர் - இந்திரா பார்த்தசாரதி
12) குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி
1) ஒரு மனிதன் ஒரு வீடு ஒர் உலகம் - ஜெயகாந்தன்  

இந்திய ஞானம் - ஜெயமோகன்
அவ்வை ஷண்முகம் படைப்புகள்
How to Speak and Write Correctly

Myskin suggested to read (Future)
Anna Karenina,
Brothers Karamazov,
Siddhartha by Herman Hesse,
Works of Gabriel Garcia,
Survival in Auschwitz by Primo Levi,
Works of Anton Chekhov,
Zen and the art of motor cycle,
Works of Pudhumai Pithan, G. Nagarajan,
Folk Stories by AK Ramanujam,
Susan Sontag's criticism on 200+ books,
War and Peace by Leo Tolstoy

January 04, 2021

Food :: Cold Rice

Can You Eat Cold Rice?

Rice is a staple food worldwide, especially in Asian, African, and Latin American countries.

Though some prefer to eat their rice while it’s fresh and hot, you may find that some recipes, such as rice salad or sushi, call for cold rice.

Nevertheless, you may wonder whether it’s safe to eat cold rice.

This article reviews the facts.

Potential benefits

Cold rice has a higher resistant starch content than freshly cooked rice.

Resistant starch is a type of fiber that your body cannot digest. Still, the bacteria in your gut can ferment it, so it acts as a prebiotic, or food for those bacteria.

This specific type of resistant starch is called retrograded starch and is found in cooked and cooled starchy foods. In fact, reheated rice seems to have the highest amounts.

The fermentation process produces short-chain fatty acids (SCFAs), which influence two hormones — glucagon-like peptide-1 (GLP-1) and peptide YY (PYY) — that regulate your appetite.

They’re also known as antidiabetic and anti-obesity hormones due to their association with improved insulin sensitivity and reduced abdominal fat.

One study in 15 healthy adults found that eating cooked white rice that had been cooled for 24 hours at 39°F (4°C) and then reheated significantly reduced blood sugar levels after the meal, compared with the control group.

Additionally, a study in rats who were fed retrograded rice powder determined that it considerably improved blood cholesterol levels and gut health, compared with a control group.

Nevertheless, though these findings seem promising, further human studies are needed to confirm these effects.

SUMMARY

Eating cold or reheated rice may help increase your resistant starch intake, which may improve your blood sugar and cholesterol levels.

Risks of eating cold rice

Eating cold or reheated rice increases your risk of food poisoning from Bacillus cereus, which may cause abdominal cramps, diarrhea, or vomiting within 15–30 minutes of ingesting it.

Bacillus cereus is a bacterium typically found in soil that can contaminate raw rice. It has the ability to form spores, which act as a shield and allow it to survive cooking.

Thus, cold rice may still be contaminated even after being cooked at high temperatures.

However, the issue with cold or reheated rice is not bacteria, but rather how the rice has been cooled or stored.

Pathogenic or disease-causing bacteria, such as Bacillus cereus, grow rapidly at temperatures between 40–140°F (4–60°C) — a range that’s known as the danger zone (16).

Therefore, if you let your rice cool by leaving it at room temperature, the spores will germinate, quickly multiplying and producing the toxins that make you sick (17).

While anyone who consumes contaminated rice may get food poisoning, those with compromised or weak immune systems, such as children, older adults, or pregnant women, may have a higher risk of infection (10).

SUMMARY

Eating cold rice increases your risk of food poisoning from Bacillus cereus, a bacterium that survives cooking and may cause abdominal cramps, diarrhea, or vomiting.

How to safely eat cold rice

Since cooking doesn’t eliminate Bacillus cereus spores, some believe that you should treat cooked rice similarly to how you would treat any perishable food.

Here are some important pointers to follow regarding how to safely handle and store rice (17, 18, 19):

To refrigerate freshly cooked rice, cool it within 1 hour by dividing it into several shallow containers. To speed up the process, place the containers in an ice or cold water bath.

To refrigerate leftovers, place them in airtight containers. Avoid stacking them to allow enough airflow around them and ensure rapid cooling.

Leftover rice should not be left at room temperature for more than 2 hours. If so, it’s best to throw it away.

Make sure to refrigerate the rice under 41ºF (5ºC) to prevent the formation of spores.

You can keep your rice refrigerated for up to 3–4 days.

Following these cooling and storing instructions allows you to prevent any spores from germinating.

To enjoy your serving of cold rice, make sure to eat it while it’s still cold instead of allowing it to reach room temperature.

If you prefer to reheat your rice, make sure it is steaming hot or verify that the temperature has reached 165ºF (74ºC) with a food thermometer.

SUMMARY

Properly cooling and storing rice helps reduce your risk of food poisoning.

The bottom line

Cold rice is safe to eat as long as you handle it properly.

In fact, it may improve your gut health, as well as your blood sugar and cholesterol levels, due to its higher resistant starch content.

To reduce your risk of food poisoning, make sure to cool the rice within 1 hour of cooking and keep it properly refrigerated before eating it.

Food :: Eat More Protein

10 Science-Backed Reasons to Eat More Protein

The health effects of fat and carbs are controversial. However, almost everyone agrees that protein is important.

Most people eat enough protein to prevent deficiency, but some individuals would do better with a much higher protein intake.

Numerous studies suggest that a high-protein diet has major benefits for weight loss and metabolic health.

Here are 10 science-based reasons to eat more protein.

1. Reduces Appetite and Hunger Levels

The three macronutrients — fats, carbs, and protein — affect your body in different ways.

Studies show that protein is by far the most filling. It helps you feel more full — with less food.

This is partly because protein reduces your level of the hunger hormone ghrelin. It also boosts the levels of peptide YY, a hormone that makes you feel full.

These effects on appetite can be powerful. In one study, increasing protein intake from 15% to 30% of calories made overweight women eat 441 fewer calories each day without intentionally restricting anything.

If you need to lose weight or belly fat, consider replacing some of your carbs and fats with protein. It can be as simple as making your potato or rice serving smaller while adding a few extra bites of meat or fish.

SUMMARY

A high-protein diet reduces hunger, helping you eat fewer calories. This is caused by the improved function of weight-regulating hormones.

2. Increases Muscle Mass and Strength

Protein is the building block of your muscles.

Therefore, eating adequate amounts of protein helps you maintain your muscle mass and promotes muscle growth when you do strength training.

Numerous studies show that eating plenty of protein can help increase muscle mass and strength.

If you’re physically active, lifting weights, or trying to gain muscle, you need to make sure you’re getting enough protein.

Keeping protein intake high can also help prevent muscle loss during weight loss (10, 11, 12Trusted Source).

SUMMARY

Muscle is made primarily of protein. High protein intake can help you gain muscle mass and strength while reducing muscle loss during weight loss.

3. Good for Your Bones

An ongoing myth perpetuates the idea that protein — mainly animal protein — is bad for your bones.

This is based on the idea that protein increases acid load in the body, leading to calcium leaching from your bones in order to neutralize the acid.

However, most long-term studies indicate that protein, including animal protein, has major benefits for bone health.

People who eat more protein tend to maintain bone mass better as they age and have a much lower risk of osteoporosis and fractures.

This is especially important for women, who are at high risk of osteoporosis after menopause. Eating plenty of protein and staying active is a good way to help prevent that from happening.

SUMMARY

People who eat more protein tend to have better bone health and a much lower risk of osteoporosis and fractures as they get older.

4. Reduces Cravings and Desire for Late-Night Snacking

A food craving is different from normal hunger.

It is not just about your body needing energy or nutrients but your brain needing a reward (18).

Yet, cravings can be incredibly hard to control. The best way to overcome them may be to prevent them from occurring in the first place.

One of the best prevention methods is to increase your protein intake.

One study in overweight men showed that increasing protein to 25% of calories reduced cravings by 60% and the desire to snack at night by half.

Likewise, a study in overweight adolescent girls found that eating a high-protein breakfast reduced cravings and late-night snacking.

This may be mediated by an improvement in the function of dopamine, one of the main brain hormones involved in cravings and addiction.

SUMMARY

Eating more protein may reduce cravings and desire for late-night snacking. Merely having a high-protein breakfast may have a powerful effect.

5. Boosts Metabolism and Increases Fat Burning

Eating can boost your metabolism for a short while.

That’s because your body uses calories to digest and make use of the nutrients in foods. This is referred to as the thermic effect of food (TEF).

However, not all foods are the same in this regard. In fact, protein has a much higher thermic effect than fat or carbs — 20–35% compared to 5–15% (21Trusted Source).

High protein intake has been shown to significantly boost metabolism and increase the number of calories you burn. This can amount to 80–100 more calories burned each day.

In fact, some research suggests you can burn even more. In one study, a high-protein group burned 260 more calories per day than a low-protein group. That’s equivalent to an hour of moderate-intensity exercise per day (25Trusted Source).

SUMMARY

High protein intake may boost your metabolism significantly, helping you burn more calories throughout the day.

6. Lowers Your Blood Pressure

High blood pressure is a major cause of heart attacks, strokes, and chronic kidney disease.

Interestingly, higher protein intake has been shown to lower blood pressure.

In a review of 40 controlled trials, increased protein lowered systolic blood pressure (the top number of a reading) by 1.76 mm Hg on average and diastolic blood pressure (the bottom number of a reading) by 1.15 mm Hg

One study found that, in addition to lowering blood pressure, a high-protein diet also reduced LDL (bad) cholesterol and triglycerides.

SUMMARY

Several studies note that higher protein intake can lower blood pressure. Some studies also demonstrate improvements in other risk factors for heart disease.

7. Helps Maintain Weight Loss

Because a high-protein diet boosts metabolism and leads to an automatic reduction in calorie intake and cravings, many people who increase their protein intake tend to lose weight almost instantly.

One study found that overweight women who ate 30% of their calories from protein lost 11 pounds (5 kg) in 12 weeks — though they didn’t intentionally restrict their diet. 

Protein also has benefits for fat loss during intentional calorie restriction.

In a 12-month study in 130 overweight people on a calorie-restricted diet, the high-protein group lost 53% more body fat than a normal-protein group eating the same number of calories.

Of course, losing weight is just the beginning. Maintaining weight loss is a much greater challenge for most people.

A modest increase in protein intake has been shown to help with weight maintenance. In one study, increasing protein from 15% to 18% of calories reduced weight regain by 50%.

If you want to keep off excess weight, consider making a permanent increase in your protein intake.

SUMMARY

Upping your protein intake can not only help you lose weight but keep it off in the long term.

8. Does Not Harm Healthy Kidneys

Many people wrongly believe that a high protein intake harms your kidneys.

It is true that restricting protein intake can benefit people with pre-existing kidney disease. This should not be taken lightly, as kidney problems can be very serious (32Trusted Source).

However, while high protein intake may harm individuals with kidney problems, it has no relevance to people with healthy kidneys.

In fact, numerous studies underscore that high-protein diets have no harmful effects on people without kidney disease.

SUMMARY

While protein can cause harm to people with kidney problems, it doesn’t affect those with healthy kidneys.

9. Helps Your Body Repair Itself After Injury

Protein can help your body repair after it has been injured.

This makes perfect sense, as it forms the main building blocks of your tissues and organs.

Numerous studies demonstrate that eating more protein after injury can help speed up recovery.

SUMMARY

Eating more protein can help you recover faster if you’ve been injured.

10. Helps You Stay Fit as You Age

One of the consequences of aging is that your muscles gradually weaken.

The most severe cases are referred to as age-related sarcopenia, which is one of the main causes of frailty, bone fractures, and reduced quality of life among older adults.

Eating more protein is one of the best ways to reduce age-related muscle deterioration and prevent sarcopenia.

Staying physically active is also crucial, and lifting weights or doing some sort of resistance exercise can work wonders.

SUMMARY

Eating plenty of protein can help reduce the muscle loss associated with aging.

The Bottom Line

Even though a higher protein intake can have health benefits for many people, it is not necessary for everyone.

Most people already eat around 15% of their calories from protein, which is more than enough to prevent deficiency.

However, in certain cases, people can benefit from eating much more than that — up to 25–30% of calories.

If you need to lose weight, improve your metabolic health, or gain muscle mass and strength, make sure you’re eating enough protein.

December 02, 2020

வீழ்ச்சி

நீர் வீழ்ச்சியின்ன் அழகை கண்டு பொறாமை கொள்ளாத மனம் உண்டோ? இல்லை. சரி இதை ஏன் சொன்னேன்? வீழ்ச்சியையும் பொறாமையையும் பற்றி ஒன்று கூறப்போகிறேன். அதனால்.

வீழ்ச்சியின் பொழுது நமது ஏற்றத்தின் மீது பிறர்க்கொண்டா ரகசிய அழுக்காறுகள் வெளியே வரும். அவர்களை அடையாளம் காண மிக சரியான சந்தர்ப்பம் வீழ்ச்சி. ஆனால் இந்த எளியவற்றுக்கா வீழ்ச்சி? இல்லை. நமது வீழ்ச்சிகளையும் கற்றுக்கொண்டு. நம்மை அறிந்துக்கொள்வதைவிட நம்மை சுத்திகரிக்க (self purification) மிக ஏதுவான காலம் இது.

December 01, 2020

Dangers of Breathing Cold Air

Dangers of Breathing Cold Air (Credit: Cold Avenger)

Prolonged exposure to cold air can present a serious threat to the body's vital organs and systems.

The body uses a few different means to protect itself from cold air, the first lines of defense being the nose, mucus system, and lungs.

The nose helps protect the lungs by adding moisture and increasing temperature to inhaled air. When a person is exposed to cold temperatures, the tissue lining the nose swells as the capillaries open. This brings warm blood to the nose to heat the cold air. In fact, often it's too much blood in the nose (not increased mucus) which results in nasal congestion.

The body's next defense against cold air is the mucus lining in the airways. The mucus lining acts as a barrier protecting the airways from dangerous particles and organisms, including bacteria that can cause the common cold and other airway infections. As the mucus lining in the airways is exposed to cold air it thickens through inflammation and dehydration and can block airways. Cold can incite inflammation and airway swelling leading to asthma.

If cold air does reach the lungs despite the body's natural nose and mucus defenses, the lungs may react by releasing histamine and other inflammatory mediators. Histamine is a natural chemical often released by the body during allergic reactions. In people with sensitive airways or asthma this causes wheezing.

On average, a human breathes 1,100 times per hour, with each breath measuring about one liter in volume and requiring humidification to keep the lungs and airway from drying. When inhaled air is cold, the body works to heat the air to 98°F and humidify it to 100%. This extra work represents a significant effort and heat loss to the body.

By passively humidifying and gently warming inhaled air with a ColdAvenger face mask, lungs are protected from the damaging effects of dry/cold air.

Why cold air makes your nose run (Credit CNN)

About 50-90% of people get a runny nose when it's cold. We call this "cold-induced rhinitis", or "skier nose". People with asthma, eczema and hay fever seem to experience it more.

It's the job of your nose to make the air you breathe in warm and wet so that when it gets to your lungs it does not irritate the cells.

When inhaling air through the nose at subfreezing temperatures, the air in the back of the nose is usually about 26°C (78.8˚F), but can be as high as 30°C (86˚F). And the humidity of air at the back of the nose is usually around 100%, irrespective of how cold the air is we're breathing in.

This shows the nose is very effective at making sure the air we breathe becomes warm and wet before it reaches the lungs.

So how does it do this?

Cold, dry air stimulates the nerves inside your nose, which send a message through your nerves to your brain. Your brain then responds to this impulse by increasing the blood flow to the nose, and these dilated blood vessels warm the air passing over them.

Secondly, the nose is triggered to produce more secretions via the mucous glands in order to provide the moisture to humidify the air coming through.

Simple nudges can increase physical activity

The cold, dry air also stimulates cells of your immune system (called "mast cells") in your nose. These cells trigger the production of more liquid in your nose to make the air more moist. It's estimated you can lose up to 300-400mL of fluid daily through your nose as it performs this function.

Your brain performs better when it's cold outside

Heat and water loss are closely related: heating the air in the nasal cavities means the lining of the nasal cavity (mucosa) becomes cooler than core body temperature; at the same time, water evaporates (becomes vapour) to make the air moist.

Water evaporation, which requires large amounts of heat, takes heat from the nose, thus making it cooler.

In response, the blood flow to the nose increases further, as the task of warming the air that's breathed in takes precedence over heat loss from the nose (the body's normal response to cold is to shunt blood away from the surface to the deep vessels to minimise heat loss from the skin).

So it's a difficult balancing act to achieve the correct amount of heat and moisture lost from the nose.

When the compensatory mechanism is a little too overactive, moisture in excess of that needed to humidify this cold, dry air will drip from the nostrils.

Mast cells are usually more sensitive in people with asthma and allergies, and blood vessel changes more reactive in those who are sensitive to environmental irritants and temperature changes. So nasal congestion and even sneezing can be triggered by the cold air.

Treatment is usually simply to carry some tissues or a handkerchief. Although the use of anticholinergic (blocks nerve impulses) and anti-inflammatory nasal sprays such as Atropine and Ipratropium have been trialled with some success.


Cold Weather and Runny Noses (Credit: Very Well Health)

While you may wish you could turn your runny nose off like a faucet, that drip actually serves several important purposes in protecting your health. The moisture protects your mucous membranes, traps germs such as bacteria and viruses, and keeps foreign substances out of your nasal passages and body.


Woman blowing nose in Fall season

While your body produces between one and two quarts of mucus every day, certain conditions can increase that amount.1 Allergies caused by pollen or mold in the air, rhinoviruses (also known as the common cold) and irritation can all cause your body to secrete excess mucus, as can exposure to cold weather.

What to Do When You Get a Cold

Vasomotor Rhinitis

When you only have a runny nose while outdoors in cooler temperatures and no other symptoms of allergies or illness, the culprit could be vasomotor rhinitis, a type of nonallergic rhinitis caused by changes in temperature, humidity, and exposure to strong odors and perfumes.2 Usually, a person with vasomotor rhinitis will have production of clear nasal discharge that may drain out of the front of the nose, down the back of the throat, or result in nasal congestion.

Why Temperature Matters

Your body has an inherent intelligence that prompts it to take action to protect itself when needed. When exposed to cold temperatures, the additional mucus warms and moisturizes the air taken in through your nasal passages. This protects your mucous membranes in your nose from damage due to the dry, cold air and also protects the bronchioles (delicate air sacs) in your lungs from damage.

In addition, a runny nose due to cold temperatures is a phenomenon similar to condensation. While the air you breathe in may be cold, your body temperature warms the air and when you exhale, you release that warm, moist air into the environment (which is cold). As these two temperatures meet, droplets of water are produced, ultimately dripping down from your nose along with the mucus they mix with.

How to Prevent Cold-Weather Runny Nose

The only way to effectively prevent a runny nose from developing due to cold exposure is to avoid breathing in cold air. One way to do that is by covering your nose and mouth with a wrap or scarf while outdoors, which allows the air to become warm and moist before you inhale it.

Vasomotor rhinitis will not usually get better with antihistamines but may get better by using a nasal steroid or nasal antihistamine spray. The best medication for the treatment of vasomotor rhinitis, especially when the symptoms are a nose that “runs like a faucet," is Atrovent (ipratropium bromide) nasal spray.2 Atrovent works by drying up the mucus-producing cells in the nose and can be used as needed since the spray will start working within an hour. Atrovent nasal spray is available by prescription only—check with your doctor to see if this medication is right for you.

Finally, use a humidifier while indoors.1 Even if the temperature in your home is mild, air is generally drier during cold-weather months. Humidification can help keep your mucous membranes optimally moistened.

November 06, 2020

குறள் - நன்றி - கடிதம்

எனது கடிதம் - 26-Oct-2020

அன்பிற்கும் வணக்கத்திற்கும் உரிய ஜெ,

நலமாக இருக்கிறீர்களா?

சில காலமாக கடிதங்கள் எழுதவில்லை. ஆயினும் உங்களையும் வெண்முரசையும் தொடர்ந்து வாசித்து வருகிறேன். 

திருக்குறள் வாசிப்பு 
2013 இறுதியில் நாளும் ஒரு திருக்குறள் (https://DailyProjectThirukkural.blogspot.com/) கற்க வேண்டும் என்று ஒரு செயலில் இறங்கினேன். ஆனால் தொடர்ச்சியாக செய்யவில்லை. ஆனால் கடந்த 2.5 வருடங்களாக நாளும் அரைமணிநேரம் எடுத்துக்கொண்டு தொடர்ந்து திருக்குறளை கற்றேன். சென்ற வாரம் அதனை (முதல் நிலை கற்றல்/ஸ்வாத்யாயம்) நிறைவு செய்தேன்.

துவக்கத்தில் வெறுமென  திருக்குறளைப் படித்துக்கொண்டிருந்த நான், பின்பு திருக்குறளில் இருந்து அதிகம் பயன்பெற்றேன் என்றால் அதற்கு காரணம் நீங்கள் கூறியதுப்போல் ஒவ்வொரு சொல்லுக்கும் அகராதியில்(agarathi.com) இருந்து எல்லா அர்த்தங்களையும் அறிந்து குறளை ஸ்வாத்யாயம் செய்தது தான். உங்களின் “மனப்பாடம்” கட்டுரையும், யூட்யுபில் உள்ள உங்களது குறளினிது உரைகளும் மற்றும் இந்திய சிந்தனை மரபில் குறள் கட்டுரைகளும் எனக்கு வழிகாட்டியாக அமைந்தன. நீங்கள் பரிந்துரைத்த கி.வா.ஜகன்னாதன் ஆராய்ச்சிப் பதிப்பும் (மற்ற இலக்கியங்களில் திருக்குறள் எடுத்தாளப்பட்டது) உதவியாக இருந்தது. மனனம் செய்த பல குறள்களில் சில குறள்கள் ஆப்த்வாக்கியமாக தோன்றி தெளிவு கொடுத்ததும் உண்டு. சில குறள்கள் பல குழப்பங்களுக்கு தீர்வை கொடுத்தது என்றும் கூறலாம். குறள்கள் எனது சுயமுன்னேற்றத்திற்கும் நிர்வாக மேலாண்மைக்கும் வழிக்காட்டியாக இருந்தது. 

இக்கற்றல் பயணம் எனக்கு பயனுள்ளதாகவும் மனதிற்குநிறைவாகவும் இருந்தது.

திருக்குறளை (பொதுவாக இலக்கியங்களை) விவாதிப்பது பற்றி நீங்கள் கூறியதுப்போல் என் தோழி ஒருவருடன் (இதுவரையில் 79 குறள்கள்) விவாதித்து வந்துக்கொண்டு இருக்கிறேன். அதன் விளைவாக பிழைத்துணர்ந்த ஒன்றை இழைத்துணரும் வாய்ப்பும் கிடைத்தது/கிடைக்கிறது. ஆதலால் திருக்குறள் மறுவாசிப்பும் விவாதமும் மேலும் தெளிவுப்பெற உதவுகின்றன. 

மேலும் எனது தங்கையின் 7 வயது மகள் ப்ரத்ன்யாவிற்கு மனனம் செய்ய பயிற்சி அளித்துக்கொண்டு இருக்கிறேன். இதுவரையில் 94 திருக்குறள்கள் ஆயிற்று. துவக்கத்தில் வெறுமென மனனம் செய்தாள், போக போக அதன் அர்த்தத்தையும் கேட்டு அறிந்துக்கொள்கிறாள். பிற்காலத்தில் அவளுக்கு திருக்குறள் பயனாக அமையும் என்று நம்புகிறேன். ஒருவிதத்தில் எனக்கும் மனனம் ஆகிறது. இவ்வாறு ப்ரத்ன்யாவிற்கு சொல்லித்தர வாரத்தில் மூன்று நாட்கள் ஒரு 10 நிமிடம் எடுக்கவில்லை என்றால் திருக்குறளை மனனம் செய்வேனா என்று தெரியவில்லை. இந்த இருவழி கற்றல் வழி நன்மையாகவும் இனிமையாகவும் உள்ளது. 

மிக்க நன்றி ஜெ🙏. 

அன்புடன்
அன்புள்ள ராஜேஷ்

ஒரு செவ்வியல்நூலை வாழ்நாள் முழுக்க பயிலலாம். குறள் அதற்கு அப்பால் சூத்திரமும் கூட. அது பயிலப்படவேண்டிய நூல் மட்டுமல்ல, பிற நூல்களை பயில்வதற்குரிய அடித்தளத்தை அமைக்கும் நூலும்கூட.

சமீபத்தில் ஒரு நாவலை வாசித்துக்கொண்டிருந்தேன். அதிலிருந்த தந்தைமகன் உறவை புரிந்துகொள்ள முயன்றபோது

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தத்தம் வினையான் வரும்
என்றவரி வந்து நினைவை தட்டியது. பொருள் என்று நாம் இங்கே உணர்வனவற்றில் குழந்தைகள்தான் உண்மையான பொருள். அது நாம் செய்த ஊழ்வினையால் அமையும்.

நெடுந்தொலைவு செல்லவைத்தது

ஜெ

November 05, 2020

பொய்த்தேவு- கண்டடைதல்

எனது கடிதம் - 26-Oct-2020

அன்பிற்கும் வணக்கத்திற்கும் உரிய ஜெ,

பொய்த்தேவு
சென்ற வாரம் க.நா.சு.வின் “பொய்த்தேவு” நாவலை வாசித்தேன். மிகவும் பிடித்து இருந்தது. அதனை ஒரு சினாப்சிஸ் ஆக தொகுத்துக்கொண்டேன் எனது வலைப்பூவில். 

இந்நாவலில்“ஆத்ம பலம்” பற்றி குறிப்பிட்டு இருக்கப்படும். சாம்பமூர்த்தியின் ”ஆத்மபலம் அவர் எவ்வளவுதான் தவறு செய்தாலும் ஒரு விநாடியில் அவரை திருத்திக் காப்பாற்றிவிடும்” என்று ஒரு வரி வரும். அவ்வரியைப் பற்றி பல முறை யோசித்து இருந்துக்கொண்டு இருந்தேன். ஏனெனில் நான் சமீப காலங்களில் சந்தித்த தோல்விகளுக்கு எனது ஆத்மபலம் குன்றியிருந்தது காரணமோ என்று எனது மனதில் சில காலமாய் ஓடிக்கொண்டு இருந்தது. அவ்வரி அதனைக் கூறியதுப்போல் இருந்தது. மேலும் ”நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம்” இக்குறளை பிறர்க்கு என்று எடுத்துக்கொள்ளாமல் எனக்கு என்று பொருத்திக்கொண்டேன். பிரச்சனைக்கான விடையை என்னிடமே தேடிக்கொள்ள முயன்றேன். எனது சில தவறுகள் எனக்குத் தெரியும். அவற்றில் சிலவற்றை சீர் செய்தேன். அதன் பலனும் கிடைத்தது. ஆனால் ஆத்மபலம் அதிகரித்ததாக உணரவில்லை. 

குழந்தைப்பருவம் முதல் என் இருப்பத்தைந்து வயது வரையிலும் பல எதிர்மறை சூழ்நிலைகளைச் சந்தித்து இருந்தாலும் அப்பொழுது நான் நேர்மறையாகவே செயல்பட்டேன். யோசித்துப்பார்த்தால் அப்பொழுது எனக்கு பக்தி மார்க்கத்தில் சீரான ஈடுபாடு இருந்தது. உதாரணமாக வருடா வருடம் ஐம்பது நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று வருவது என்னை நெறிப்படுத்தியதுப் போல் இருக்கிறது. கடந்த பத்துவருடங்களில் வேறு ஊர்களிலும் நாடுகளிலும் இருப்பதால் அதனை தொடர்ச்சியாக செய்ய முடியவில்லை ஊருக்கு வரும் பொழுது மட்டும் செய்கிறேன். ஊக்கமும் ஆள்வினையும் இருக்கிறது. ஆனால் தோல்விக்கு பிறகு எதிர்மறை சூழ்நிலைகளை எண்ணங்களை எதிர்க்கொள்வது சவாலாகவே இருக்கிறது. அது மேலும் சோர்வை கொடுக்கிறது. அதனால்தான் என் ஆத்ம பலம் குறைந்ததோ என்று நினைக்கிறேன். 

ஆத்ம பலம் குறைவது எங்கு என்று தெளிவாக தெரியவில்லை. ஒருவேலை அன்று நான் தெரியாமல் /பலாபலன் பார்க்காமல்(பக்தி போன்றவற்றை) செய்ததைதான் இன்று தெரிந்து செய்யவேண்டுமா என்று தெரியவில்லை.   உங்களில் தளத்தில் ஆத்ம பலம் / சக்தி என்று மூன்று நாட்களாக தேடினேன். பதில்கள் கிடைக்கவில்லை.  நீங்கள்  பல கட்டுரைகளில் தன்னறத்தை என்னவென்று கண்டடைந்து செயல்பட்டால் உற்சாகம் கிடைக்கும் என்று கூறியுள்ளீர்கள். அது தான் ஆத்ம பலமா? அல்லது என்ன? ஆத்மபலத்தை பற்றிய உங்கள் பதில் பயனுள்ளதாய் இருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி.

அன்புடன்
ராஜேஷ்


அன்புள்ள ராஜேஷ்

ஒரு நாவலை வாசிக்கையில் நமக்கு ஒரு நிலைகுலைவு உருவாகிறது. நாம் அதுவரை நம்மைப்பற்றி கொண்டிருந்த எண்ணங்கள் மாறுபடுகின்றன. நம்மை நாமே உடைத்து ஆராய்கிறோம். மறு ஆக்கம் செய்துகொள்கிறோம். அவ்வாறு பொய்த்தேவு உங்களுக்குள் உருவாக்கிய கேள்விகளும் அலைவுகளுமே நீங்கள் எழுதியவை. அது அந்நாவலின் வெற்றி’

அந்தக் கேள்விகளுக்கான பதில்களை அந்நாவலை முன்வைத்தும், இதுவரை நீங்கள் வாசித்த நூல்களை முன்வைத்தும், வாழ்வறிதல்களைக்கொண்டும் நீங்கள்தான் சென்றடையவேண்டும். அதுவே இலக்கியம் நிகழ்த்தும் அகப்பயணம். அதை வெளியே ஒருவருடன் விவாதிக்கமுடியாது

ஜெ

எனது பதில் - 5-Nov-2020

அன்புள்ள ஜெ,

தங்களது பதில் பதிவை தளத்தில் கண்டேன். நன்றி.
நீங்கள் சொன்னதுப்போல் செய்து விடைத்தேடுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்