Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

April 07, 2021

மண்ணில் உப்பானவர்கள்


கடந்த 3 நாட்களாக சித்ரா பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய ”மண்ணில் உப்பானவர்கள்” என்ற புத்தகத்தை வாசித்தேன். இப்புத்தகம் உப்பு சத்தியாகிரஹம் என்னும் மகத்தான யாத்திரையை பற்றியது. விடுதலை நோக்கிய பயணத்தை பற்றிய புத்தகம்.

இப்புத்தகத்தில் பல தளபதிகளின் வாயிலாக இந்திய விடுதலை நோக்கிய இப்பயணம் முழுவதும் காந்தி வருகிறார். அது அவருடைய மகத்தான ஆளுமையை காட்டுகிறது. காந்தியை ஏக கதாநாயகனாக காண்பிக்காவிட்டாலும், பல எளியோர்களும் தலைவர்களும் இதன் நாயகர்களானாலும், இவர்களை விடுதலை நோக்கிப் பயணம் செய்ய வைத்ததில் காந்திக்கு மிக பெரிய பங்கு உண்டு என்பதை இப்புத்தகம் முழுக்க  நேரடியாக காணலாம்.

இன்றைய காலகட்டங்களில் ஒரு நாள் நடைபெறுகின்ற அரசியல் பேரணிக்கு சில பல கோடி ரூபாய்களில் பணத்தை செலவு செய்கின்றனர். அனைத்தும் ஆதாய நோக்கோடு மட்டுமே. ஆனால் 80 ஆண்டுகள் முன்பு தகவல்தொடர்பு வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் இல்லாத காலக்கட்டங்களில் எளியோர்களை தாமகவே முன்வந்து இப்போராட்டத்தில் பங்கேற்க மனதில் எழுச்சியை உருவாக்க விதையை விதைத்தவர் காந்தி. மிக எளிமையாக நடந்த போராட்டம்.

வழி நெடுக்கிலும் நான் கண்டவை/ கற்றவை/ பெற்றவை

1) இப்படிப்பட்ட மிகப்பெரிய போராட்டத்திற்கு தேவை ஒழுக்கமும் மனதிடமும் அச்சமின்மையும் சுயகட்டுப்பாடும். அதற்கு தகுதியானவர்களை பல வாரங்கள் ஆசிரமத்தில் தயார் செய்கிறார் காந்தி. இவர்களுக்கு ஒரு நாளில் பின்பற்ற வேண்டிய பணிகள் பற்றி ஒரு தெளிவான அட்டவனை / திட்டம் உண்டு.   காலை 4 மணிக்கு எழுந்து இரவு 9 மணிக்கு உறங்குவது வரை. சத்தியாகிரஹிகள் தினமும் நாட்குறிப்பு எழுதவேண்டும் என்று கூறுகிறார்.

2) உணவு, உடை, தங்குமிடம் மிக எளிமையாக இருத்தல் வேண்டும். அவற்றை செல்லும் வழியில் மக்கள் கொடுப்பதில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். எளிமையை கடைப்பிடிக்க வேண்டும்

3) காந்தி ஒரு ஊருக்கு செல்வதற்கு முன்பாக ஒரு குழு (விடியலின் படை) சில மணி நேரம் முன்பே சென்று தங்குவதற்கு தேவையான அனைத்தையும் தயார் செய்யும்

4) காந்தி கைது செய்துபட்டால் போராட்டத்தை தொடர அடுத்தகட்ட தலைவர்களை காந்தி கண்டைந்து அவர்களை போராட்டத்தை வழிநடத்த கூறியுள்ளார்

5) முதலில் உப்பு சத்தியாகிரஹப் போராட்டத்தை யாரும் பெரிதா எடுத்தகொள்ளவில்லை என்றாலும் இப்போராட்டத்தின் பிரமாண்டத்தை காந்தி திடமாக நம்பினார்

6) மற்றவர்களை விட ஓய்வின்றி அதிகம் உழைத்தவர் காந்தி. கடிதங்கள், கட்டுரைகளை, நேர்காணல்கள், உரையாடல்கள், பேச்சு என காந்தி நாள் முழுவதும் ஒரு நோடிக்கூட வீண் செய்யாமல் உழைத்திருக்கிறார்.

7) வழி நெடுக்கில் தீண்டாமை, சாதிய பாகுபாடு ஆகியவற்றை கறாராக கண்டிக்க காந்தி ஒரு போதும் தயங்கவில்லை. ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை என்பது அதிகார மாற்றம் அல்ல. மக்களுக்கு கிடைக்கும் சுதந்திரமும் சுயமரியாதையும் தான் உண்மையான விடுதலை என்கிறார். தீண்டாமை ஒழிக்காமல் விடுதலை பெற்று ஒரு பயனும் இல்லை என்கிறார்.

8) போராட்டத்தில் பெண்களின் பங்கு மிக அவசியம் என கருதிகிறார் காந்தி. 

9) அரசாங்கத்திற்கு அனைத்தையும் அறிவித்துவிட்டே செய்கிறார்.

10) இப்பொழுது தேவை ஒத்துழையாமையே என்பது காந்தி அளித்த செய்தி. மக்கள் ஒத்துழையாத பொழுது அரசுகள் அதிகாரம் செய்ய முடியாது என்று திடமாக நம்பினார். அதனை மற்றவர்களும் உணரும் படி செய்தார்.

11) தண்டி போன்ற சிறு கிராமம் பலரின் வருகையை தாக்குபிடிக்காது. ஆதலால் அனைவரும் அவரவர் உணவு இருப்பிடத்தைப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்கிறார்

12) ஒரு பிடி மண் என்றாலும் அதில் தான் இத்தேசத்தின் கௌரவும் உள்ளது என்ற செய்தியை எல்லார் மனதிலும் கடத்துகிறார்

13) இந்த யாத்திரை எளியோர்களால் ஆனது. நகரங்களும் தார் சாலை வழிகளும் அல்லாமல் கிராமங்கள் மூலம் மட்டுமே காந்தி பயணித்து இருக்கிறார். அவ்வாறே கடைக்கோடி எளியோரையும் தன் செய்தியின் மூலமாக சென்றுஅடைகிறார் காந்தி.

14)  பல செல்வந்தர்கள் தங்களது வசதிகளை சொத்துகளை துறந்து காந்திய கொள்கையை பின்பற்றி எளிய வாழ்கையை மேற்கொண்டு இப்போராட்டத்தில் பங்கேற்றனர். 

15) வயதையும் உடல்நலனையும் பொருட்படுத்தாமல் பலர் ஒவ்வொருநாளும் 15 முதல் 25 கிலோமீட்டர் தூரம் வரை நடந்துள்ளனர். 

16) உறவுகளை பேணுவதில் காந்திக்கு நிகர் காந்தியே. அதனால் தான் அவருடன் நூற்றுக்கணக்கான தளபதிகள். காந்திய பண்புகள் இருந்தாலும் அவரவருக்கு தனி அளுமைகள் உண்டு. 

17) சர்வதேச ஊடங்களுடன் காந்தியின் தரப்பையும் இந்தியாவின் தரப்பையும் முன்வைக்க சிறந்த ஊடகியவியலாளர்களை தேர்ந்தெடுத்து அப்பொறுப்பை அவர்களிடம் அளிக்கிறார் காந்தி.

18) எத்தகைய நிலையிலும் சமநிலை குலையாமல் இருக்கிறார் காந்தி

19) எல்லா வாரமும் திங்கட்கிழமை அன்று அவருடைய மௌனவிரதத்தை கடைப்பிடிக்கிறார். எந்த ஒரு புதிய செயலை செய்யும் முன் இரண்டு நாட்கள் மௌன விரதமும் உபவாசமும் இருக்கிறார் காந்தி. அவ்வாறே ஒரு போராட்டத்திற்கு மனதளவிலும் உடலளவிலும் தயாராகிறார் காந்தி.

20) உப்புச் சட்டத்தை மீறவேண்டியதின் அவசியத்தை செல்லுமிடமெல்லாம் கூறிக்கொண்டே செல்கிறார் காந்தி

21) நேரம் தவறாது செயல்களை திட்டமிட்டபடி செய்பவர் காந்தி.

22) கூட்டம் கூடினால் மட்டும் போதாது மக்களும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று நினைக்கிறார் காந்தி

23) ஆடம்பரமாக நடைப்பெறவேண்டிய போராட்டம் அல்ல இது. இந்த விடுதலை எளியவர்களுக்கானது.  மிக மிக எளிமையாக நடைபெற வேண்டியது. வல்லரசு கனவுகள் இல்லை ஏனெனில் இத்தேசம் எளியவர்களுக்கானது என்பதை தன் உடன் இருப்போருடன் சொல்லிக்கொண்டே இருக்கிறார். மக்கள் தாமாகவே வந்து பங்கேற்கும் போராட்டமே வெற்றி பெறும் என்று நம்பினார் காந்தி.

24) சுதந்திர கணலை மக்களின் மனதில் மூட்டிக்கொண்டே இருந்தவர் காந்தி

25) உப்பையும், நூற்று செய்த கதர் ஆடைகளை பலர் விற்று இப்போராட்டத்திற்கு பணம் சேர்த்துக்கொடுத்துள்ளனர். ஆனால் பணத்தை விட மக்களின் பங்கேற்ப்பே மிக அவசியம் என்று காந்தி கருதுகிறார்.

26) ஒவ்வொரு ஊரின் வழியாக செல்லும் பொழுதும் ஆங்கிலேயர்கள் கிராமத்துமக்களுக்கு கடுமையான உத்தரவுகளை போடுகிறது. ஆனால் கிராமத்து மக்கள் போராட்டத்திற்கும் தண்ணீரும் உணவும் தங்குமிடமும் கொடுத்து தங்கள் ஆதரவை தந்துக்கொண்டே இருக்கிறார்கள்

27) உப்பு சத்தியாகிரஹம் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடக்கிறது. அதுவே காந்தியின் வெற்றி. 

28) முக்காடு போட்டுக்கொண்டு வீட்டை தாண்டாத பெண்கள் கூட இப்போராட்டத்தில் அதிக எண்ணிக்கையில் பங்கேற்கின்றனர்

29) உப்பு சத்தியாகிறத்தை முதலில் இருந்து நம்பியவர் இராஜாஜி. வேதாரண்யத்தில் இராஜாஜி உப்பு சத்தியாகிரஹத்தை தலைமையேற்று நடத்தினார். அதற்கு பலரை கறாரான முறையில் நேர்காணல்கள் வைத்து தேர்வு செய்து நடத்தினார். 

30) எண்ணற்ற எளியோர்களும் பல தலைவர்களின் பங்கேற்பே இப்போராட்டத்தை வழி நடத்தியது.

உப்பு சத்தியாகிரஹம் துவங்கியப் பிறகு புதிய இந்தியா பிறந்தது எனலாம். அதில் சுதந்திரத்தின் கணலை வளர்த்து அதனை தொடர்ந்து பாதுகாத்தார் காந்தி. தன்னலமற்ற பலரின் தியாகத்தாலும் பெருஞ்செயல்களாலும் கிடைத்து இந்தச் சுதந்திரம். அதனை இப்புத்தகம் வாசிக்கும் தோறும் உணர்ந்தேன். அத்தகைய உணர்வை தன் எழுத்தில் மூலம் சாத்தியப்படுத்திய சித்ரா பாலசுப்ரமணியன் அவர்களுக்கு நன்றிகள் பல.

சீரான Tone-இல் அழகிய தரமான  புகைப்படங்களுடன் இப்புத்தகம் பதிப்பித்த தன்னறம் நூல்வெளி (பதிப்பகத்திற்கு) பாராட்டுக்கள். பெரும்பாலான தலைவர்களின் புகைப்படங்களை பார்த்துக்கொண்டே சென்றது ஒரு தனி வாசிப்பு அனுபவத்தை தந்தது.

அனைவரும் படிக்கவேண்டிய மிக முக்கியமான புத்தகம்.

January 20, 2021

அஞ்சலி : டாக்டர் ஷாந்தா / Dr.Shanta - வாழ்க உன் புகழ்

டாக்டர் ஷாந்தா அவர்களின் பெயரை சில வருடங்கள் முன்பு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலமாக கேள்விப்பட்டேன். அவர் சென்னையில் உள்ள அடையாறு புற்றுநோய் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக சேவை செய்துவருகிறார் என்ற அளவிலேயே கேள்விப்பட்டேன். பின்பு அவரைப் பற்றி அறிந்துக்கொண்டதில் அவர் தந்நலம் இன்றி பிறர்நலத்திற்காக தன் வாழ்வை முழுவதுமாய் அளித்தவர் என்று உணர்ந்தேன். 

அவ்வளவு தான் அவரைப் பற்றி எனக்கு தெரியும். ஆனால் அதற்கு மேல் அவரைப் பற்றி ஒன்றும் தெரியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இந்தியா போன்ற வளர்ந்துவரும் ஒரு நாட்டில் ஒரு மாபெரும் நிறுவனத்தை பிரதிபலன் பாராமல் 60 ஆண்டுகளுக்கும் மேலாக (குறிப்பாக இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு) சேவையாற்றி அதனை பல ஆண்டு காலம் இயக்குவதும் ஏழைகளுக்கும் புற்றுநோய்க்கான சிகிழ்ச்சை வசதிகளை அளிப்பது என்றால் அது ஒரு இமாலாய செயல் என்று என்னால் உணர முடிகிறது. 

மேலாண்மையை கற்ற ஒரு மாணவனாக எனக்கு ஒரு மருத்துவ நிறுவனத்தை நடத்தும் சிக்கல்கள் என்ன, பொருளாதார தேவைகள் என்ன, அதற்கு தேவைப்படும் நிர்வாக திறன் என்ன என்று ஓரளவு உணர முடியும். ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி அதனை பல ஆண்டு காலமாக செயலாற்ற வேண்டும் என்றால் அதற்கு பிறர் மீது அன்பு, ஒப்புரவு, கண்ணோட்டம் எவ்வளவு அவசியம் என்பதை மறுக்க முடியாது. தன் செயலை வாழ்வின் பொருளாக மாற்றிக்கொண்டார். பிறருக்கு பயனுள்ள வாழ்வே வாழ்வு. அதனால் தான் அவர் சான்றோர். பெரியோர். 

டாக்டர் ஷாந்தா, மெட்ரோ மேன் ஈ.ஸ்ரீதரன்(Metro Man E.Sridharan) போன்றோர் பெருஞ்செயல்களை செய்தவர்கள். இவர்களை பற்றிய நல்ல ஒரு வாழ்க்கை குறிப்பு புத்தக வடிவில் இல்லை என்பது எவ்வளவு பெரிய இழப்பு நம் சமூகத்திற்கு. அவர்களைப் பற்றிய நல்ல புத்தகங்கள் விரைவில் வெளிவரவேண்டும்.

யோகிகள், எழுத்தாளர்கள் என்று சிலர் ஞானமே பாதையேன கொண்டவர்கள். அது ஞானமார்க்கம். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் போன்ற சிலர் செயல் வழி ஞானம் அடைந்தவர்கள். டாக்டர் ஷாந்தா போன்றோர் தான் பெற்ற அறிவை சேவையில் பயன்படுத்தி வாழ்வின் நிறைவை பெற்றவர்கள். ஆனால் வாழ்வில் ஒருபோதும் சென்றடையவில்லை எனும் நிறைவின்மை கொண்டு வாழ்ந்தவர்கள். 

வாழ்வில் பலர் நல்ல சூழ்நிலைகளாலும் நல்ல முன் உதாரணங்களாலும் சூழப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் எத்தனைப் பேர் அவற்றைப் பயன்படுத்தி பிறருக்கு பயனுள்ளதாய் வாழ்ந்துள்ளார்கள் என்று கணக்கிட்டால் நமக்கு மிக குறைவான மக்களே எஞ்சுவார்கள். இவ்வுலகில் சொகுசும் வசதியும் மூச்சு காற்றுப்போல் வேண்டும் என்று நினைக்கும் மக்களே அதிகம். குறிப்பாக வசதிப்படைத்தவர்களும் அறிவை (ஞானத்துடன் குழுப்பிக்கொண்டு) ஆணவமாய் தலையில் சூடிக்கொண்டு அலையும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. மனதில் தராசை வைத்துக்கொண்டு மற்றவர்களை எடைப்போடும் மக்களே மிகுதி. அவர்கள் பிறருக்கு என்ன செய்தார்கள் என்று அவர்கள் திரும்பிபார்த்தால் அவர்களே வெட்கி தலைகுனிவார்கள் அல்லது சால்ஜாப்பு சொல்வார்கள். உண்டு உறங்கி புணர்ந்து பின் மாயும் இந்த எளியோர்கள் சிறுமை வாய்ந்தவர்கள். இவர்கள் தங்களின் சூழலால் பயனுற்ற கல்வியைக்கொண்டு ஊதியத்திற்காக சில அன்றாட வேலைகளை செய்து தன்னை ஒரு படி மேல் என்று தவறாக நினைத்துக்கொள்ளும் சிறியோர்கள்.

மேற்சொன்ன பத்தியில் கூறப்பட்டுள்ள எண்ணற்ற சிறியோர்கள் மத்தியில் வாழ்ந்த ஒரு பெரியோர் என்றால் அது டாக்டர் ஷாந்தா போன்றவர் தான். செய்வதற்கு அரிய செயல்களை செய்தவர். அதனால் தான் அவர் பெரியோர். தன்னுயிர் தான் அற வாழ்ந்தவர். எழை எளியோர்க்கென வாழ்ந்தவர். அதனால் தான் இவரை இவ்வுலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைத்தொழுகின்றன.

டாக்டர் ஷாந்தா போன்று நான் வாழ்வில் ஒரு சில வருடங்கள் சேவையாற்றினால் கூட நான் பயனுள்ள ஒரு வாழ்வை வந்ததாய் உணர்வேன்.

டாக்டர் ஷாந்தவை நினைத்தால் எனக்கு நான்கு திருக்குறள்கள் நினைவுக்கு வருகின்றன. அவை

1) குறள் 268 (பொருளுக்கு சுட்டியைத் தட்டவும்)
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்

2) குறள் 26 (பொருளுக்கு சுட்டியைத் தட்டவும்)

3) குறள் 505 (பொருளுக்கு சுட்டியைத் தட்டவும்)

4) குறள் 983  (பொருளுக்கு சுட்டியைத் தட்டவும்)

1965-ல் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘பணம் படைத்தவன்’ திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதிய “கண் போன போக்கிலே கால் போகலாமா” பாடலில் இறுதியாக வரும் வரிகள் இவை 
”இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்…”

டாக்டர் ஷாந்தா பேர் நீடூடி வாழும்.

டாக்டர் ஷாந்தாவின் புகழ் வளரட்டும்.

டாக்டர் ஷாந்தாவுக்கு அஞ்சலி
Date 19 Jan 2021












January 08, 2021

2021 - Book Reading Challenge - Plan

=================

Weekly Works
=================
100 Best Tamil Short Stories - S.Ramakrishnan selected
100 Short Stories - Writing Marathon 2020 - Jeyamohan

=================
2021 - OP1 - Jan - Mar
=================
E-Books / Online 
1) வெண்முரசு - #10 பன்னிரு படைக்களம் - ஜெயமோகன்   [Currently Reading]
2) வள்ளுவரின் அறவியலும் அழகியலும் - கோவை ஞானி [Currently Reading]

Printbooks

Kindle
1) வாசிப்பது எப்படி?: vasippathu eppadi? - செல்வேந்திரன்  [Currently Reading]
2) பல ரூபங்களில் காந்தி (பஹுரூப் காந்தி) அனு பந்தோபாத்யாயா
3) ஒரு சிறு இசை - வண்ணதாசன்

Audiobooks
1) The 12 Week Year - Get More Done in 12 Weeks than Others Do in 12 Months - Written by: Brian P. Moran, Michael Lennington [Finished on 8 Jan 2021]
2) The Universe Always Has a Plan - The 10 Golden Rules of Letting Go - Matt Kahn
3) Talent Is Overrated - What Really Separates World-Class Performers from Everybody Else 

Audiobooks - Unplanned

Total Planned - 7
Total Actual -
Total Uncompleted - 

=================
2020 - OP2 - Apr - Jun
=================
E-Books / Online 
1) வெண்முரசு - #11  சொல்வளர்காடு - ஜெயமோகன்

Printbooks

Printbooks Unplanned

Kindle

Kindle Unplanned

Online Unplanned

Audiobooks

Total Planned -
Total Actual - 
Total Uncompleted - 

=================
2020 - OP3 - Jul - Sep
=================
E-Books / Online 
1) வெண்முரசு - #12  - கிராதம் - ஜெயமோகன்

Printbooks

Kindle

Audiobooks

Total Planned - 7
Total Actual - 
Total Uncompleted :

=================
2020 - OP4 - Oct - Dec
=================

E-Books / Online 
1) வெண்முரசு - #13 – மாமலர் - ஜெயமோகன்

Kindle
Audiobooks

Printbooks 

Total Planned - 7
Total Actual - 
Total Uncompleted - 

Total Year 2020 - Planned - 60
Total Year 2020 - Actual   - 62+3(Thirukkural related) = 65

For Future

Audiobooks
2) Gandhi: The Years That Changed the World, 1914-1948 - Ramachandra Guha - 36h 11m [Currently Listening]

Kindle
4) Swipe to Unlock
5) The Shooting Star - Shivya Nath
6) கே.பி.டி. சிரிப்பு ராஜசோழன் - க்ரேஸி மோகன்
7) அமானுஷ்ய நினைவுகள் - அசோகமித்ரன் 
8)பாரதியின் சுய சரிதைகள் - கனவு, சின்னச் சங்கரன் கதை - ஆ.ரா.வேங்கடாசலபதி

3) Three Acres and Liberty
4) வெக்கை - பூமணி
5) இந்திய பிரிவினை - மருதன்
6) விசும்பு - ஜெயமோகன்
7) புதுமைப்பித்தன் சிறுகதைகள்
8) எனது நாடக வாழ்க்கை - அவ்வை ஷண்முகம்
9) ஜெயகாந்தன் சிறு கதைகள் - 1
10) ஜெயகாந்தன் சிறு கதைகள் - 2


Printbooks to read (Future)

1) போரும் அமைதியும் (1/3) - War and Peace - Leo Tolstoy - Translated by M.A.Susila 
2) போரும் அமைதியும் (2/3) - War and Peace - Leo Tolstoy - Translated by M.A.Susila 
3) போரும் அமைதியும் (3/3) - War and Peace - Leo Tolstoy - Translated by M.A.Susila
மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்
தந்திர பூமி (அல்லது சுதந்திர பூமி) - இந்திரா பார்த்தசாரதி
அசடன் - The Idiot -  Fyodor Dostoyevsky translated by M.A.Susila
கோபாலபுரத்து மக்கள் - கி.ராஜநாரயணன்
ஒளியிலானது - தேவதேவன் - ஜெயமோகன்
புயலிலே ஒரு தோனி - ப.சிங்காரம்
தனிமையின் 100 ஆண்டுகள் - One Hundred Years of Solitute -  Gabriel García Márquez, - Translated by Sukumaaran


Kindle Books to read (Future)
மாயமான் - கி.ராஜநாராயணன்
ஜே.ஜே சிலக்குறிப்புகள் - சுந்தர ராமசாமி
8) Tamil translation of Sapiens - A brief history of humankind - Yuval Harari
9) எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
10) கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேலுக்குடி கிருஷ்ணன்
11) ராமானுஜர் - இந்திரா பார்த்தசாரதி
12) குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி
1) ஒரு மனிதன் ஒரு வீடு ஒர் உலகம் - ஜெயகாந்தன்  

இந்திய ஞானம் - ஜெயமோகன்
அவ்வை ஷண்முகம் படைப்புகள்
How to Speak and Write Correctly

Myskin suggested to read (Future)
Anna Karenina,
Brothers Karamazov,
Siddhartha by Herman Hesse,
Works of Gabriel Garcia,
Survival in Auschwitz by Primo Levi,
Works of Anton Chekhov,
Zen and the art of motor cycle,
Works of Pudhumai Pithan, G. Nagarajan,
Folk Stories by AK Ramanujam,
Susan Sontag's criticism on 200+ books,
War and Peace by Leo Tolstoy

January 04, 2021

Food :: Cold Rice

Can You Eat Cold Rice?

Rice is a staple food worldwide, especially in Asian, African, and Latin American countries.

Though some prefer to eat their rice while it’s fresh and hot, you may find that some recipes, such as rice salad or sushi, call for cold rice.

Nevertheless, you may wonder whether it’s safe to eat cold rice.

This article reviews the facts.

Potential benefits

Cold rice has a higher resistant starch content than freshly cooked rice.

Resistant starch is a type of fiber that your body cannot digest. Still, the bacteria in your gut can ferment it, so it acts as a prebiotic, or food for those bacteria.

This specific type of resistant starch is called retrograded starch and is found in cooked and cooled starchy foods. In fact, reheated rice seems to have the highest amounts.

The fermentation process produces short-chain fatty acids (SCFAs), which influence two hormones — glucagon-like peptide-1 (GLP-1) and peptide YY (PYY) — that regulate your appetite.

They’re also known as antidiabetic and anti-obesity hormones due to their association with improved insulin sensitivity and reduced abdominal fat.

One study in 15 healthy adults found that eating cooked white rice that had been cooled for 24 hours at 39°F (4°C) and then reheated significantly reduced blood sugar levels after the meal, compared with the control group.

Additionally, a study in rats who were fed retrograded rice powder determined that it considerably improved blood cholesterol levels and gut health, compared with a control group.

Nevertheless, though these findings seem promising, further human studies are needed to confirm these effects.

SUMMARY

Eating cold or reheated rice may help increase your resistant starch intake, which may improve your blood sugar and cholesterol levels.

Risks of eating cold rice

Eating cold or reheated rice increases your risk of food poisoning from Bacillus cereus, which may cause abdominal cramps, diarrhea, or vomiting within 15–30 minutes of ingesting it.

Bacillus cereus is a bacterium typically found in soil that can contaminate raw rice. It has the ability to form spores, which act as a shield and allow it to survive cooking.

Thus, cold rice may still be contaminated even after being cooked at high temperatures.

However, the issue with cold or reheated rice is not bacteria, but rather how the rice has been cooled or stored.

Pathogenic or disease-causing bacteria, such as Bacillus cereus, grow rapidly at temperatures between 40–140°F (4–60°C) — a range that’s known as the danger zone (16).

Therefore, if you let your rice cool by leaving it at room temperature, the spores will germinate, quickly multiplying and producing the toxins that make you sick (17).

While anyone who consumes contaminated rice may get food poisoning, those with compromised or weak immune systems, such as children, older adults, or pregnant women, may have a higher risk of infection (10).

SUMMARY

Eating cold rice increases your risk of food poisoning from Bacillus cereus, a bacterium that survives cooking and may cause abdominal cramps, diarrhea, or vomiting.

How to safely eat cold rice

Since cooking doesn’t eliminate Bacillus cereus spores, some believe that you should treat cooked rice similarly to how you would treat any perishable food.

Here are some important pointers to follow regarding how to safely handle and store rice (17, 18, 19):

To refrigerate freshly cooked rice, cool it within 1 hour by dividing it into several shallow containers. To speed up the process, place the containers in an ice or cold water bath.

To refrigerate leftovers, place them in airtight containers. Avoid stacking them to allow enough airflow around them and ensure rapid cooling.

Leftover rice should not be left at room temperature for more than 2 hours. If so, it’s best to throw it away.

Make sure to refrigerate the rice under 41ºF (5ºC) to prevent the formation of spores.

You can keep your rice refrigerated for up to 3–4 days.

Following these cooling and storing instructions allows you to prevent any spores from germinating.

To enjoy your serving of cold rice, make sure to eat it while it’s still cold instead of allowing it to reach room temperature.

If you prefer to reheat your rice, make sure it is steaming hot or verify that the temperature has reached 165ºF (74ºC) with a food thermometer.

SUMMARY

Properly cooling and storing rice helps reduce your risk of food poisoning.

The bottom line

Cold rice is safe to eat as long as you handle it properly.

In fact, it may improve your gut health, as well as your blood sugar and cholesterol levels, due to its higher resistant starch content.

To reduce your risk of food poisoning, make sure to cool the rice within 1 hour of cooking and keep it properly refrigerated before eating it.

Food :: Eat More Protein

10 Science-Backed Reasons to Eat More Protein

The health effects of fat and carbs are controversial. However, almost everyone agrees that protein is important.

Most people eat enough protein to prevent deficiency, but some individuals would do better with a much higher protein intake.

Numerous studies suggest that a high-protein diet has major benefits for weight loss and metabolic health.

Here are 10 science-based reasons to eat more protein.

1. Reduces Appetite and Hunger Levels

The three macronutrients — fats, carbs, and protein — affect your body in different ways.

Studies show that protein is by far the most filling. It helps you feel more full — with less food.

This is partly because protein reduces your level of the hunger hormone ghrelin. It also boosts the levels of peptide YY, a hormone that makes you feel full.

These effects on appetite can be powerful. In one study, increasing protein intake from 15% to 30% of calories made overweight women eat 441 fewer calories each day without intentionally restricting anything.

If you need to lose weight or belly fat, consider replacing some of your carbs and fats with protein. It can be as simple as making your potato or rice serving smaller while adding a few extra bites of meat or fish.

SUMMARY

A high-protein diet reduces hunger, helping you eat fewer calories. This is caused by the improved function of weight-regulating hormones.

2. Increases Muscle Mass and Strength

Protein is the building block of your muscles.

Therefore, eating adequate amounts of protein helps you maintain your muscle mass and promotes muscle growth when you do strength training.

Numerous studies show that eating plenty of protein can help increase muscle mass and strength.

If you’re physically active, lifting weights, or trying to gain muscle, you need to make sure you’re getting enough protein.

Keeping protein intake high can also help prevent muscle loss during weight loss (10, 11, 12Trusted Source).

SUMMARY

Muscle is made primarily of protein. High protein intake can help you gain muscle mass and strength while reducing muscle loss during weight loss.

3. Good for Your Bones

An ongoing myth perpetuates the idea that protein — mainly animal protein — is bad for your bones.

This is based on the idea that protein increases acid load in the body, leading to calcium leaching from your bones in order to neutralize the acid.

However, most long-term studies indicate that protein, including animal protein, has major benefits for bone health.

People who eat more protein tend to maintain bone mass better as they age and have a much lower risk of osteoporosis and fractures.

This is especially important for women, who are at high risk of osteoporosis after menopause. Eating plenty of protein and staying active is a good way to help prevent that from happening.

SUMMARY

People who eat more protein tend to have better bone health and a much lower risk of osteoporosis and fractures as they get older.

4. Reduces Cravings and Desire for Late-Night Snacking

A food craving is different from normal hunger.

It is not just about your body needing energy or nutrients but your brain needing a reward (18).

Yet, cravings can be incredibly hard to control. The best way to overcome them may be to prevent them from occurring in the first place.

One of the best prevention methods is to increase your protein intake.

One study in overweight men showed that increasing protein to 25% of calories reduced cravings by 60% and the desire to snack at night by half.

Likewise, a study in overweight adolescent girls found that eating a high-protein breakfast reduced cravings and late-night snacking.

This may be mediated by an improvement in the function of dopamine, one of the main brain hormones involved in cravings and addiction.

SUMMARY

Eating more protein may reduce cravings and desire for late-night snacking. Merely having a high-protein breakfast may have a powerful effect.

5. Boosts Metabolism and Increases Fat Burning

Eating can boost your metabolism for a short while.

That’s because your body uses calories to digest and make use of the nutrients in foods. This is referred to as the thermic effect of food (TEF).

However, not all foods are the same in this regard. In fact, protein has a much higher thermic effect than fat or carbs — 20–35% compared to 5–15% (21Trusted Source).

High protein intake has been shown to significantly boost metabolism and increase the number of calories you burn. This can amount to 80–100 more calories burned each day.

In fact, some research suggests you can burn even more. In one study, a high-protein group burned 260 more calories per day than a low-protein group. That’s equivalent to an hour of moderate-intensity exercise per day (25Trusted Source).

SUMMARY

High protein intake may boost your metabolism significantly, helping you burn more calories throughout the day.

6. Lowers Your Blood Pressure

High blood pressure is a major cause of heart attacks, strokes, and chronic kidney disease.

Interestingly, higher protein intake has been shown to lower blood pressure.

In a review of 40 controlled trials, increased protein lowered systolic blood pressure (the top number of a reading) by 1.76 mm Hg on average and diastolic blood pressure (the bottom number of a reading) by 1.15 mm Hg

One study found that, in addition to lowering blood pressure, a high-protein diet also reduced LDL (bad) cholesterol and triglycerides.

SUMMARY

Several studies note that higher protein intake can lower blood pressure. Some studies also demonstrate improvements in other risk factors for heart disease.

7. Helps Maintain Weight Loss

Because a high-protein diet boosts metabolism and leads to an automatic reduction in calorie intake and cravings, many people who increase their protein intake tend to lose weight almost instantly.

One study found that overweight women who ate 30% of their calories from protein lost 11 pounds (5 kg) in 12 weeks — though they didn’t intentionally restrict their diet. 

Protein also has benefits for fat loss during intentional calorie restriction.

In a 12-month study in 130 overweight people on a calorie-restricted diet, the high-protein group lost 53% more body fat than a normal-protein group eating the same number of calories.

Of course, losing weight is just the beginning. Maintaining weight loss is a much greater challenge for most people.

A modest increase in protein intake has been shown to help with weight maintenance. In one study, increasing protein from 15% to 18% of calories reduced weight regain by 50%.

If you want to keep off excess weight, consider making a permanent increase in your protein intake.

SUMMARY

Upping your protein intake can not only help you lose weight but keep it off in the long term.

8. Does Not Harm Healthy Kidneys

Many people wrongly believe that a high protein intake harms your kidneys.

It is true that restricting protein intake can benefit people with pre-existing kidney disease. This should not be taken lightly, as kidney problems can be very serious (32Trusted Source).

However, while high protein intake may harm individuals with kidney problems, it has no relevance to people with healthy kidneys.

In fact, numerous studies underscore that high-protein diets have no harmful effects on people without kidney disease.

SUMMARY

While protein can cause harm to people with kidney problems, it doesn’t affect those with healthy kidneys.

9. Helps Your Body Repair Itself After Injury

Protein can help your body repair after it has been injured.

This makes perfect sense, as it forms the main building blocks of your tissues and organs.

Numerous studies demonstrate that eating more protein after injury can help speed up recovery.

SUMMARY

Eating more protein can help you recover faster if you’ve been injured.

10. Helps You Stay Fit as You Age

One of the consequences of aging is that your muscles gradually weaken.

The most severe cases are referred to as age-related sarcopenia, which is one of the main causes of frailty, bone fractures, and reduced quality of life among older adults.

Eating more protein is one of the best ways to reduce age-related muscle deterioration and prevent sarcopenia.

Staying physically active is also crucial, and lifting weights or doing some sort of resistance exercise can work wonders.

SUMMARY

Eating plenty of protein can help reduce the muscle loss associated with aging.

The Bottom Line

Even though a higher protein intake can have health benefits for many people, it is not necessary for everyone.

Most people already eat around 15% of their calories from protein, which is more than enough to prevent deficiency.

However, in certain cases, people can benefit from eating much more than that — up to 25–30% of calories.

If you need to lose weight, improve your metabolic health, or gain muscle mass and strength, make sure you’re eating enough protein.

December 02, 2020

வீழ்ச்சி

நீர் வீழ்ச்சியின்ன் அழகை கண்டு பொறாமை கொள்ளாத மனம் உண்டோ? இல்லை. சரி இதை ஏன் சொன்னேன்? வீழ்ச்சியையும் பொறாமையையும் பற்றி ஒன்று கூறப்போகிறேன். அதனால்.

வீழ்ச்சியின் பொழுது நமது ஏற்றத்தின் மீது பிறர்க்கொண்டா ரகசிய அழுக்காறுகள் வெளியே வரும். அவர்களை அடையாளம் காண மிக சரியான சந்தர்ப்பம் வீழ்ச்சி. ஆனால் இந்த எளியவற்றுக்கா வீழ்ச்சி? இல்லை. நமது வீழ்ச்சிகளையும் கற்றுக்கொண்டு. நம்மை அறிந்துக்கொள்வதைவிட நம்மை சுத்திகரிக்க (self purification) மிக ஏதுவான காலம் இது.

December 01, 2020

Dangers of Breathing Cold Air

Dangers of Breathing Cold Air (Credit: Cold Avenger)

Prolonged exposure to cold air can present a serious threat to the body's vital organs and systems.

The body uses a few different means to protect itself from cold air, the first lines of defense being the nose, mucus system, and lungs.

The nose helps protect the lungs by adding moisture and increasing temperature to inhaled air. When a person is exposed to cold temperatures, the tissue lining the nose swells as the capillaries open. This brings warm blood to the nose to heat the cold air. In fact, often it's too much blood in the nose (not increased mucus) which results in nasal congestion.

The body's next defense against cold air is the mucus lining in the airways. The mucus lining acts as a barrier protecting the airways from dangerous particles and organisms, including bacteria that can cause the common cold and other airway infections. As the mucus lining in the airways is exposed to cold air it thickens through inflammation and dehydration and can block airways. Cold can incite inflammation and airway swelling leading to asthma.

If cold air does reach the lungs despite the body's natural nose and mucus defenses, the lungs may react by releasing histamine and other inflammatory mediators. Histamine is a natural chemical often released by the body during allergic reactions. In people with sensitive airways or asthma this causes wheezing.

On average, a human breathes 1,100 times per hour, with each breath measuring about one liter in volume and requiring humidification to keep the lungs and airway from drying. When inhaled air is cold, the body works to heat the air to 98°F and humidify it to 100%. This extra work represents a significant effort and heat loss to the body.

By passively humidifying and gently warming inhaled air with a ColdAvenger face mask, lungs are protected from the damaging effects of dry/cold air.

Why cold air makes your nose run (Credit CNN)

About 50-90% of people get a runny nose when it's cold. We call this "cold-induced rhinitis", or "skier nose". People with asthma, eczema and hay fever seem to experience it more.

It's the job of your nose to make the air you breathe in warm and wet so that when it gets to your lungs it does not irritate the cells.

When inhaling air through the nose at subfreezing temperatures, the air in the back of the nose is usually about 26°C (78.8˚F), but can be as high as 30°C (86˚F). And the humidity of air at the back of the nose is usually around 100%, irrespective of how cold the air is we're breathing in.

This shows the nose is very effective at making sure the air we breathe becomes warm and wet before it reaches the lungs.

So how does it do this?

Cold, dry air stimulates the nerves inside your nose, which send a message through your nerves to your brain. Your brain then responds to this impulse by increasing the blood flow to the nose, and these dilated blood vessels warm the air passing over them.

Secondly, the nose is triggered to produce more secretions via the mucous glands in order to provide the moisture to humidify the air coming through.

Simple nudges can increase physical activity

The cold, dry air also stimulates cells of your immune system (called "mast cells") in your nose. These cells trigger the production of more liquid in your nose to make the air more moist. It's estimated you can lose up to 300-400mL of fluid daily through your nose as it performs this function.

Your brain performs better when it's cold outside

Heat and water loss are closely related: heating the air in the nasal cavities means the lining of the nasal cavity (mucosa) becomes cooler than core body temperature; at the same time, water evaporates (becomes vapour) to make the air moist.

Water evaporation, which requires large amounts of heat, takes heat from the nose, thus making it cooler.

In response, the blood flow to the nose increases further, as the task of warming the air that's breathed in takes precedence over heat loss from the nose (the body's normal response to cold is to shunt blood away from the surface to the deep vessels to minimise heat loss from the skin).

So it's a difficult balancing act to achieve the correct amount of heat and moisture lost from the nose.

When the compensatory mechanism is a little too overactive, moisture in excess of that needed to humidify this cold, dry air will drip from the nostrils.

Mast cells are usually more sensitive in people with asthma and allergies, and blood vessel changes more reactive in those who are sensitive to environmental irritants and temperature changes. So nasal congestion and even sneezing can be triggered by the cold air.

Treatment is usually simply to carry some tissues or a handkerchief. Although the use of anticholinergic (blocks nerve impulses) and anti-inflammatory nasal sprays such as Atropine and Ipratropium have been trialled with some success.


Cold Weather and Runny Noses (Credit: Very Well Health)

While you may wish you could turn your runny nose off like a faucet, that drip actually serves several important purposes in protecting your health. The moisture protects your mucous membranes, traps germs such as bacteria and viruses, and keeps foreign substances out of your nasal passages and body.


Woman blowing nose in Fall season

While your body produces between one and two quarts of mucus every day, certain conditions can increase that amount.1 Allergies caused by pollen or mold in the air, rhinoviruses (also known as the common cold) and irritation can all cause your body to secrete excess mucus, as can exposure to cold weather.

What to Do When You Get a Cold

Vasomotor Rhinitis

When you only have a runny nose while outdoors in cooler temperatures and no other symptoms of allergies or illness, the culprit could be vasomotor rhinitis, a type of nonallergic rhinitis caused by changes in temperature, humidity, and exposure to strong odors and perfumes.2 Usually, a person with vasomotor rhinitis will have production of clear nasal discharge that may drain out of the front of the nose, down the back of the throat, or result in nasal congestion.

Why Temperature Matters

Your body has an inherent intelligence that prompts it to take action to protect itself when needed. When exposed to cold temperatures, the additional mucus warms and moisturizes the air taken in through your nasal passages. This protects your mucous membranes in your nose from damage due to the dry, cold air and also protects the bronchioles (delicate air sacs) in your lungs from damage.

In addition, a runny nose due to cold temperatures is a phenomenon similar to condensation. While the air you breathe in may be cold, your body temperature warms the air and when you exhale, you release that warm, moist air into the environment (which is cold). As these two temperatures meet, droplets of water are produced, ultimately dripping down from your nose along with the mucus they mix with.

How to Prevent Cold-Weather Runny Nose

The only way to effectively prevent a runny nose from developing due to cold exposure is to avoid breathing in cold air. One way to do that is by covering your nose and mouth with a wrap or scarf while outdoors, which allows the air to become warm and moist before you inhale it.

Vasomotor rhinitis will not usually get better with antihistamines but may get better by using a nasal steroid or nasal antihistamine spray. The best medication for the treatment of vasomotor rhinitis, especially when the symptoms are a nose that “runs like a faucet," is Atrovent (ipratropium bromide) nasal spray.2 Atrovent works by drying up the mucus-producing cells in the nose and can be used as needed since the spray will start working within an hour. Atrovent nasal spray is available by prescription only—check with your doctor to see if this medication is right for you.

Finally, use a humidifier while indoors.1 Even if the temperature in your home is mild, air is generally drier during cold-weather months. Humidification can help keep your mucous membranes optimally moistened.

November 06, 2020

குறள் - நன்றி - கடிதம்

எனது கடிதம் - 26-Oct-2020

அன்பிற்கும் வணக்கத்திற்கும் உரிய ஜெ,

நலமாக இருக்கிறீர்களா?

சில காலமாக கடிதங்கள் எழுதவில்லை. ஆயினும் உங்களையும் வெண்முரசையும் தொடர்ந்து வாசித்து வருகிறேன். 

திருக்குறள் வாசிப்பு 
2013 இறுதியில் நாளும் ஒரு திருக்குறள் (https://DailyProjectThirukkural.blogspot.com/) கற்க வேண்டும் என்று ஒரு செயலில் இறங்கினேன். ஆனால் தொடர்ச்சியாக செய்யவில்லை. ஆனால் கடந்த 2.5 வருடங்களாக நாளும் அரைமணிநேரம் எடுத்துக்கொண்டு தொடர்ந்து திருக்குறளை கற்றேன். சென்ற வாரம் அதனை (முதல் நிலை கற்றல்/ஸ்வாத்யாயம்) நிறைவு செய்தேன்.

துவக்கத்தில் வெறுமென  திருக்குறளைப் படித்துக்கொண்டிருந்த நான், பின்பு திருக்குறளில் இருந்து அதிகம் பயன்பெற்றேன் என்றால் அதற்கு காரணம் நீங்கள் கூறியதுப்போல் ஒவ்வொரு சொல்லுக்கும் அகராதியில்(agarathi.com) இருந்து எல்லா அர்த்தங்களையும் அறிந்து குறளை ஸ்வாத்யாயம் செய்தது தான். உங்களின் “மனப்பாடம்” கட்டுரையும், யூட்யுபில் உள்ள உங்களது குறளினிது உரைகளும் மற்றும் இந்திய சிந்தனை மரபில் குறள் கட்டுரைகளும் எனக்கு வழிகாட்டியாக அமைந்தன. நீங்கள் பரிந்துரைத்த கி.வா.ஜகன்னாதன் ஆராய்ச்சிப் பதிப்பும் (மற்ற இலக்கியங்களில் திருக்குறள் எடுத்தாளப்பட்டது) உதவியாக இருந்தது. மனனம் செய்த பல குறள்களில் சில குறள்கள் ஆப்த்வாக்கியமாக தோன்றி தெளிவு கொடுத்ததும் உண்டு. சில குறள்கள் பல குழப்பங்களுக்கு தீர்வை கொடுத்தது என்றும் கூறலாம். குறள்கள் எனது சுயமுன்னேற்றத்திற்கும் நிர்வாக மேலாண்மைக்கும் வழிக்காட்டியாக இருந்தது. 

இக்கற்றல் பயணம் எனக்கு பயனுள்ளதாகவும் மனதிற்குநிறைவாகவும் இருந்தது.

திருக்குறளை (பொதுவாக இலக்கியங்களை) விவாதிப்பது பற்றி நீங்கள் கூறியதுப்போல் என் தோழி ஒருவருடன் (இதுவரையில் 79 குறள்கள்) விவாதித்து வந்துக்கொண்டு இருக்கிறேன். அதன் விளைவாக பிழைத்துணர்ந்த ஒன்றை இழைத்துணரும் வாய்ப்பும் கிடைத்தது/கிடைக்கிறது. ஆதலால் திருக்குறள் மறுவாசிப்பும் விவாதமும் மேலும் தெளிவுப்பெற உதவுகின்றன. 

மேலும் எனது தங்கையின் 7 வயது மகள் ப்ரத்ன்யாவிற்கு மனனம் செய்ய பயிற்சி அளித்துக்கொண்டு இருக்கிறேன். இதுவரையில் 94 திருக்குறள்கள் ஆயிற்று. துவக்கத்தில் வெறுமென மனனம் செய்தாள், போக போக அதன் அர்த்தத்தையும் கேட்டு அறிந்துக்கொள்கிறாள். பிற்காலத்தில் அவளுக்கு திருக்குறள் பயனாக அமையும் என்று நம்புகிறேன். ஒருவிதத்தில் எனக்கும் மனனம் ஆகிறது. இவ்வாறு ப்ரத்ன்யாவிற்கு சொல்லித்தர வாரத்தில் மூன்று நாட்கள் ஒரு 10 நிமிடம் எடுக்கவில்லை என்றால் திருக்குறளை மனனம் செய்வேனா என்று தெரியவில்லை. இந்த இருவழி கற்றல் வழி நன்மையாகவும் இனிமையாகவும் உள்ளது. 

மிக்க நன்றி ஜெ🙏. 

அன்புடன்
அன்புள்ள ராஜேஷ்

ஒரு செவ்வியல்நூலை வாழ்நாள் முழுக்க பயிலலாம். குறள் அதற்கு அப்பால் சூத்திரமும் கூட. அது பயிலப்படவேண்டிய நூல் மட்டுமல்ல, பிற நூல்களை பயில்வதற்குரிய அடித்தளத்தை அமைக்கும் நூலும்கூட.

சமீபத்தில் ஒரு நாவலை வாசித்துக்கொண்டிருந்தேன். அதிலிருந்த தந்தைமகன் உறவை புரிந்துகொள்ள முயன்றபோது

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தத்தம் வினையான் வரும்
என்றவரி வந்து நினைவை தட்டியது. பொருள் என்று நாம் இங்கே உணர்வனவற்றில் குழந்தைகள்தான் உண்மையான பொருள். அது நாம் செய்த ஊழ்வினையால் அமையும்.

நெடுந்தொலைவு செல்லவைத்தது

ஜெ

November 05, 2020

பொய்த்தேவு- கண்டடைதல்

எனது கடிதம் - 26-Oct-2020

அன்பிற்கும் வணக்கத்திற்கும் உரிய ஜெ,

பொய்த்தேவு
சென்ற வாரம் க.நா.சு.வின் “பொய்த்தேவு” நாவலை வாசித்தேன். மிகவும் பிடித்து இருந்தது. அதனை ஒரு சினாப்சிஸ் ஆக தொகுத்துக்கொண்டேன் எனது வலைப்பூவில். 

இந்நாவலில்“ஆத்ம பலம்” பற்றி குறிப்பிட்டு இருக்கப்படும். சாம்பமூர்த்தியின் ”ஆத்மபலம் அவர் எவ்வளவுதான் தவறு செய்தாலும் ஒரு விநாடியில் அவரை திருத்திக் காப்பாற்றிவிடும்” என்று ஒரு வரி வரும். அவ்வரியைப் பற்றி பல முறை யோசித்து இருந்துக்கொண்டு இருந்தேன். ஏனெனில் நான் சமீப காலங்களில் சந்தித்த தோல்விகளுக்கு எனது ஆத்மபலம் குன்றியிருந்தது காரணமோ என்று எனது மனதில் சில காலமாய் ஓடிக்கொண்டு இருந்தது. அவ்வரி அதனைக் கூறியதுப்போல் இருந்தது. மேலும் ”நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம்” இக்குறளை பிறர்க்கு என்று எடுத்துக்கொள்ளாமல் எனக்கு என்று பொருத்திக்கொண்டேன். பிரச்சனைக்கான விடையை என்னிடமே தேடிக்கொள்ள முயன்றேன். எனது சில தவறுகள் எனக்குத் தெரியும். அவற்றில் சிலவற்றை சீர் செய்தேன். அதன் பலனும் கிடைத்தது. ஆனால் ஆத்மபலம் அதிகரித்ததாக உணரவில்லை. 

குழந்தைப்பருவம் முதல் என் இருப்பத்தைந்து வயது வரையிலும் பல எதிர்மறை சூழ்நிலைகளைச் சந்தித்து இருந்தாலும் அப்பொழுது நான் நேர்மறையாகவே செயல்பட்டேன். யோசித்துப்பார்த்தால் அப்பொழுது எனக்கு பக்தி மார்க்கத்தில் சீரான ஈடுபாடு இருந்தது. உதாரணமாக வருடா வருடம் ஐம்பது நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று வருவது என்னை நெறிப்படுத்தியதுப் போல் இருக்கிறது. கடந்த பத்துவருடங்களில் வேறு ஊர்களிலும் நாடுகளிலும் இருப்பதால் அதனை தொடர்ச்சியாக செய்ய முடியவில்லை ஊருக்கு வரும் பொழுது மட்டும் செய்கிறேன். ஊக்கமும் ஆள்வினையும் இருக்கிறது. ஆனால் தோல்விக்கு பிறகு எதிர்மறை சூழ்நிலைகளை எண்ணங்களை எதிர்க்கொள்வது சவாலாகவே இருக்கிறது. அது மேலும் சோர்வை கொடுக்கிறது. அதனால்தான் என் ஆத்ம பலம் குறைந்ததோ என்று நினைக்கிறேன். 

ஆத்ம பலம் குறைவது எங்கு என்று தெளிவாக தெரியவில்லை. ஒருவேலை அன்று நான் தெரியாமல் /பலாபலன் பார்க்காமல்(பக்தி போன்றவற்றை) செய்ததைதான் இன்று தெரிந்து செய்யவேண்டுமா என்று தெரியவில்லை.   உங்களில் தளத்தில் ஆத்ம பலம் / சக்தி என்று மூன்று நாட்களாக தேடினேன். பதில்கள் கிடைக்கவில்லை.  நீங்கள்  பல கட்டுரைகளில் தன்னறத்தை என்னவென்று கண்டடைந்து செயல்பட்டால் உற்சாகம் கிடைக்கும் என்று கூறியுள்ளீர்கள். அது தான் ஆத்ம பலமா? அல்லது என்ன? ஆத்மபலத்தை பற்றிய உங்கள் பதில் பயனுள்ளதாய் இருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி.

அன்புடன்
ராஜேஷ்


அன்புள்ள ராஜேஷ்

ஒரு நாவலை வாசிக்கையில் நமக்கு ஒரு நிலைகுலைவு உருவாகிறது. நாம் அதுவரை நம்மைப்பற்றி கொண்டிருந்த எண்ணங்கள் மாறுபடுகின்றன. நம்மை நாமே உடைத்து ஆராய்கிறோம். மறு ஆக்கம் செய்துகொள்கிறோம். அவ்வாறு பொய்த்தேவு உங்களுக்குள் உருவாக்கிய கேள்விகளும் அலைவுகளுமே நீங்கள் எழுதியவை. அது அந்நாவலின் வெற்றி’

அந்தக் கேள்விகளுக்கான பதில்களை அந்நாவலை முன்வைத்தும், இதுவரை நீங்கள் வாசித்த நூல்களை முன்வைத்தும், வாழ்வறிதல்களைக்கொண்டும் நீங்கள்தான் சென்றடையவேண்டும். அதுவே இலக்கியம் நிகழ்த்தும் அகப்பயணம். அதை வெளியே ஒருவருடன் விவாதிக்கமுடியாது

ஜெ

எனது பதில் - 5-Nov-2020

அன்புள்ள ஜெ,

தங்களது பதில் பதிவை தளத்தில் கண்டேன். நன்றி.
நீங்கள் சொன்னதுப்போல் செய்து விடைத்தேடுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்

October 25, 2020

பொய்த்தேவு - க.நா.சுப்ரமண்யம்

 பொய்த்தேவு  - க.நா.சுப்ரமண்யம்


எழுத்தாளர் க.நா.சுப்ரமண்யம் எழுதிய பொய்த்தேவு (அதாவது பொய்த் தெய்வம்) என்னும் இந்நாவலை நான் இருநாட்களில் (மொத்தமாக 8 மணி நேரத்தில்) வாசித்தேன். இதை எதற்கு சொல்கிறேன்? எளிமையான சரளமான நாவல். ஆனால் மிக நல்ல நாவல். சோமு என்ற பொடிப் பயல் எப்படி சோமு முதலி ஆகி சோமு பண்டாரமாக இறக்கிறான். இந்நாவலில் சோமுவின் வாழ்க்கைப் பயணத்தின் சில பக்கங்களின் மூலமாக வாழ்வின் பற்பல தளங்களையும் பல மனிதர்களின் குணாதிசியங்களையும் தொட்டுச் செல்கிறார் க.நா.சு. 

முதல் அத்தியாயமே சோமு பிறக்கும் மேட்டுத் தெருவை பற்றி. இம்மேட்டுத் தெருவில் உள்ளோர் பெரும்பாலும் இழிந்தோர்கள் எனலாம். சிலர் நாணயமான வேலையில் நம்பிக்கை இல்லாதவர்கள். சில இரவுகள் ஈன்றிவிட்டுப் போதுமென்ற மனசுடன் மறு சந்தர்ப்பம் வாய்க்கும் வரையில் காத்திருப்பார்கள். சிலர் எதுவும் செய்யாமல் பிறர் காரியங்களில் தலையிட்டு தரகு அடித்துப் பிழைப்பார்கள். வேலை செய்யாமலும் பிழைக்காமலும் நடைப் பிணங்களாகவே நடமாடித் திரியும் ஜந்துக்களுக்கும் இம்மேட்டுத்தெருவிலே குறைவில்லை. 

அத்தகைய மேட்டுத் தெருவிலே தான் சோமு பிறக்கிறான். அவன் வளர்ந்து பெரியாளாகி பணக்காரணாகியும் இறுதிவரையில் அத்தெருவைவிட்டு அவன் வெளியே வரவேயில்லை. அது அவனது மனதை காண்பிக்கிறது. அவன் அறிவு வளர்ந்தாலும் அவன் ஞானம் வளரவே இல்லை. அவன் இழிவாகவே உள்ளான் என்று. 

பிறரை உடல் வலிமையால் அதட்டி பிழைத்து வாழும் கறுப்புக்கும் வள்ளியமைக்கும் பிறந்தவன் சோமு பயல் . ஆனால் அவர்கள் பெற்றோர்கள் திருமணம் செய்துக்கொண்டவர்கள் அல்ல. அது ஒருவித தகாத உறவு. சோமுவின் மிக இளம் வயதிலேயே அவன் தந்தை கறுப்பு இறக்கிறான். பின்பு சோமு “கறுப்பு மகன்” என்னும் சமூகத்தின் அடையாளப்படுத்தலால் வளர்கிறான். சிலர் அவனை “அப்பனைப் போல் இல்லாமல், நீயாவது யோக்கியமாகப் பிழையடா பயலே!” என்கிறார்கள். அந்த வார்த்தைகள் அவன் ஆயுள் பூராவுமே ரீங்காரமிட்டன. 

சோமு முதலியின் குழந்தைப் பருவ ஞாபங்களில் இருப்பது கோயில் மணி ஓசை, ஒளி, புயல். ஆனால் அக்கோயில் மணியின் ஓசையை அவன் இறுதியில் மட்டுமே கேட்கிறான். இடையில் எத்தனை முறை கோயில் மணி அடித்தாலும் அவன் ஆழ் மனதில் அது கேட்கவே இல்லை. இதுப்போல் பலருக்கு வாழ்வில் பலதடவை ஆத்ம சக்தி ஓங்கினாலும் (குறிப்பாக தவறு செய்யும் பொழுது மனசாட்சி அதனை தடுத்தாலும்) அதனை கேட்க மாட்டார்கள். அதனால் தான் என்னவோ பலரின் ஆத்ம சக்தி குறைந்துக்கொண்டே இருக்கிறது. 

சாத்தனூர் கோவில் விக்கிரங்களைவிட கோயில் மணி ஓசை சோமுவை கவர்ந்தது என்பதில் ஆச்சர்யம் இல்லை. வெறும் உலோகத்தை உருக்கி வார்த்து அந்த மாதிரி இனிய நாதம் எழுப்பும் சக்தியை அதற்குக் கொடுத்தவன் உண்மையிலேயே ஒரு கலைஞாகத்தான் இருக்கவேண்டும். அது தனி இசை; உள்ளத்தைக் கவர்ந்து உயிரையே உருகி ஓடச் செய்யும் இசை; மனிதனின் ஆத்மாவைக் கவ்வி இழுத்துக் கடவுளின் பாதாரவிந்தங்களில் பணியச் செய்வதற்கு என்று ஏற்பட்ட இசை.” என்று க.நா.சு சொல்கிறார். இக்கோவில் மணியை நமது ஆத்மாகவா நாம் உருவகிக்கலாம். நமது ஆத்மாவை நாம் ஒரு கலைஞாகவே இருந்து உருவாக்கவேண்டும். ஒரு கலைஞன் அவன் கலையில் தேர்ச்சிப் பெற அவன் எவ்வளவு உழைக்கவேண்டும். எவ்வளவற்றை விட வேண்டும். அப்பொழுது தான் அவன் கலை அவனுக்கு கைக்கூடும். அதுப்போல தான் ஒருவனின் ஆத்ம பலம். ஒருநாளில் வார்ப்பது அல்ல. 

சோமு மேட்டுச்தெருவிலேயே அலைந்து திரிந்து வளர்வதைக் கண்ட சோமுவின் அம்மா வள்ளியம்மை அவனை அவ்வூர் மிராசுதாரர் ரங்கா ராயரிடம் சேர்த்துவிடுகிறாள். ரங்கா ராயரிடம் கூடமாட ஒத்தாசை செய்து வேலையாளாக இருக்கிறான் சோமு. ரங்கா பல நன்மைகள் செய்து ஊரில் நற்பெயர் வாங்கினாலும் ரங்காவிடம் சோமு ”காண்பது” பணத்தின் மதிப்பை மட்டுமே. ஒரு 10 ரூபாய் வைத்துக்கொண்டு சாத்தனூர் கிராமத்தையே வாங்கிவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அடைவது வரை எது நீடிக்கிறதோ அதுவே ஆசை. மற்றவை எல்லாம் நீராவி போன்ற கற்பனைகள் எனலாம். சோமு ஆசைகளை கொண்டவன். ஏக்கங்கள் கொண்டவன். அதற்காக உழைப்பவன். ரங்காவிடம் அவன் கண்ட பணமே அவனது லட்சியம் என்று கூறுவது மிகையாகது. சோமு வளர்ந்து பெரியாள் ஆகி பணத்தை அளவில்லாது சம்பாதிக்கிறான். 

சோமு வளரும் பொழுது ரங்கா அவனிடம் சிதம்பரம் என்னும் குதிரை ஓட்டியிடம் சகவாசம் வைத்துக்கொள்ளதே என்று கூறுகிறார். ஏனெனில் அவன் ஒரு உதாவாக்கரை. நீயும் அப்படி ஆகாதே என்று. ஆனால் சோமு ரகசியமாக சிதம்பரத்துடன் சிநேகம் வைத்துக்கொள்கிறான். சிறு வயதில் ஆரம்பித்த இந்த ரகசிய வாக்கு மீறல் அவன் வாழ்நாளில் இறுதிவரை வெவ்வேறு வடிவில் தொடர்கிறது. அவன் குடி, கூத்தியாள், அளவு மீறும் பாலியல் கற்பனைகள் என்று அவன் சீர்க்கெடும் பல இடங்கள் அவனை பொருத்த அளவில் ரகசியம் (கிணத்துக்குள்ள குசு விட்டால் வெளியே தெரியாது என்பது போன்ற ரகசியம்). ஏனெனில் இவனுடைய வீடுகட்டும் ரகசியத்தைப் பற்றி ரங்காச்சாரியார் தீடீர் என்று அவனிடம் கேட்டுவிடுவார். அதேப்போல் சோமுவின் கள்ள உறவுகளை இவ்வூர் மக்கள் பார்த்துக்கொண்டே இருப்பர். பின்னே ஏசுவர். குறிப்பாக இறுதியில் சோமுவின் ஆசிரியர் சுப்ரமணியரின் பேரன் சாமா (சுவாமிநாதன்) சாம்பமூர்த்தி இறந்துவிட்டார் என்ற செய்தியை சொன்ன உடன் அடுத்ததாக என்னைப்போன்றவருக்கு கோமளவிலாஸில் (அதன் கிரஹ ப்ரவேசத்தில்) என்ன வேலை இருக்க போகிறது? என்னைப்போன்றோர் வந்து என்ன ஆகப் போகிறது என்று கேட்பான். அவ்வார்த்தையில் உடைந்துவிடுவான் சோமு என்று சொன்னால் மிகையாகது. ஏனெனில் அவனின் பணம் அவனுடைய வெற்றியாக கருதும் பங்களாவை ஆதம்பலம் கொண்ட சாமா போன்றோர் அதை துச்சமாக கருதுகிறார்கள். அப்பொழுது அவனுக்கு மணி ஓசை கேட்கும். குழந்தை காலத்துக்கு பிறகு நடுவில் பல ஆண்டுகள் (அவன் ஆத்ம சக்தி)யின் மணி ஓசை அடித்தாலும் அதனை சோமு கேட்கவே இல்லை. ஏனெனில் இது அறவழியில் வந்த சாமா போன்றவரிடம் இருந்து வரும் ஓசை. அதுவே ஆத்ம சக்தியின் வலிமை எனலாம். 

அதேப்போல் சோமுவின் இளமைப்பருவம் அவன் வாழ்நாள் எல்லாம் தாக்கம் செலுத்தும் என்பதற்கு உதாரணம் - சோமு தைரியமாக நீதிபதியிடம் சென்று போலிஸை அழைத்து வந்து அவனது எஜமான் ரங்கா ராயரை கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றுகிறான். இந்த மனதிடம் அவனை எக்காரியத்தை செய்து முடிப்பவன் என்பதற்கு உதாரணம். ஏனெனில் பிந்நாளில் அந்த ஊருக்கு ரயில் ஸ்டேஷன் வர காரணமாக இருக்கிறான். எந்த தொழில் செய்தாலும் அதில் வெற்றிப் பெறுகிறான். 

”மனிதனுடைய ஞாபகம், மனசு ஏதோ ஒன்றைக் கவ்விப் பிடித்துக்கொள்கிறது. இப்படிப் பிடித்துக்கொள்ளும் ஒரு விஷயத்திற்கு ஒன்பது விஷயங்களை நழுவ விட்டுவிடுகிறது. முக்கியம், முக்கியம் அல்லாதது என்பது பற்றியெல்லாம் கவலை படுவதே இல்லை இந்த மனசு. ஒரு விஷயத்தைப் பிடித்துக்கொண்டால் ஆயுசு பூராவும் நழுவ விடவே விடாமல் வைத்துக் காப்பாறியும் தருகிறது. அதுவே மனசின் கிறுக்கு” என்று க.நா.சு சொல்கிறார். அதனால் தான் என்னவோ சோமு பணத்தை பெற்று வாழ்வில் மற்றவற்றை கோட்டைவிட்டான் என்று சொல்லவேண்டும். குறிப்பாக அவன் ஆத்ம சக்தியை.

பல தெய்வங்கள் உண்டு. பணம், ஆசைகள், சிந்தனைகள், உதவி, உழைப்பு. ஆனால் சோமு பணம் என்னும் ஒரே தெய்வத்தை மட்டுமே கண்டான். அதற்காக திட்டமிட்டு உழைத்தான். கல்வி கற்றான், தொழிலை சுத்தமாக சீரும் சிறப்புமாக செய்தான். அவன் மளிகை கடை வைத்தாலும் தரம் வாய்ந்த பொருள்களை வாங்கினான். அமேரிக்க வியாபார யுக்திகளை மாத இதழ்கள் (magazine) மூலம் கற்று தன் வியாபரத்தை பெறுக்கினான். பல தொழில்கள் செய்தான் - இன்சூரன்ஸ், மெர்சண்ட் என்று பல தொழில்களை செய்தான். எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினான். உழைத்தால் மட்டும் பணம் ஈட்டமுடியும் என்று நம்பி திட்டமிட்டு உழைத்தான். ஆடம்பரமாக செலவு செய்யவே மாட்டான். கம்பனியிடம் இருந்து சோமு ஒரு கார் வாங்கினான். ஆனால் அதன் செலவு, பெட்ரோல் என எல்லாம் கம்பெனி செலவில் வந்தன. இவனோ அக்காரில் இன்சூரன்ஸ் தொழில் செய்து சம்பாதித்தான். இவனை பார்த்து கார் வாங்கிய மற்ற ஊர் பணக்கார்கள் காருக்கு செலவு மட்டுமே செய்தார்கள். சோமு பணம் சம்பந்தமான எதுவாக இருந்தாலும் அதில் சூரப்புலியாக செயல்பட்டான்.

உழைப்பை நம்பிய சோமு எவ்வளவு சம்பாத்திதாலும் என்றும் ஒரு பிடி அளவு நிலத்தை கூட வாங்கியது இல்லை. ஏனெனில் வெறும் நிலத்தை வாங்கி அது காசு கொடுக்கும் என்று நம்புவோர் போன்று சோமு நம்பவில்லை. ஏனெனில் பலர் நிலத்தை வாங்கி வைத்துவிட்டு அதுனை உழாமல் நாளைக்கே அது வளர்ந்து பொன் தரவேண்டும் என்று நினைக்கின்றனர். உழைக்க தயாராக இல்லை. பிறர் எவ்வளவு சம்பாதிக்கின்றனர் என்று அக்கறைக்கொள்கின்றனர் அந்த சோம்பேறிகள். 

ஆனால் இவ்வளவு உழைக்கும் சோமு தன் சிந்தனைகளை எல்லாம் பணத்தில் குவித்து இருக்கும் சோமு கோட்டை விட்டது ஆத்ம பலத்தில். ஏனெனில் இவன் வாலிபனாக இருக்கும் பொழுது அளவு கடந்த காம கற்பனைகளிலும், கூத்தியாள் சகவாசங்களிலும் திரிந்தான். ஆனால் பின்பு உழைப்பின் பக்கம் வந்தாலும் அவன் இரகசியமாக மறுபடியும் கூத்தியாள்களிடமே செல்கிறான். ஆனால் இதற்கு நேர் எதிராக க.நா.சு ரங்கா ராவையும் அவரதும் மாப்பிள்ளை சாம்பமுர்த்தியையும் காண்பிக்கிறார். ரங்கா ராவ் ஒரு சொத்து வழக்கில் தோற்றாலும் மனம்விடாது உயர்நீதிமன்றத்தில் போராடி வெற்றிப் பெறுகிறார். அதேப்போல் சாம்பமூர்த்தி அவன் மனைவி கங்காபாய் இறந்தப் பிறகு தனது பணத்தை எல்லாம் தீர்த்தப் பிறகு கூத்தியாளிடம் சென்று தவறு செய்கிறான். ஆனால் அவன் ஆத்மபலம் அவனை ஒரு வினாடியில் துவக்கத்திலேயே காப்பாற்றிவிடுகிறது. அவனை நல்வழிப்படுத்தி மறுபடியும் கோயில் பூஜை சேவை என்று ஈடுபடவைக்கிறது. ஏன் சாம்பமூர்த்தியின் ஆத்ம பலம் அதிமாக இருந்தது என்றால் அவன் பூஜை, சேவை, என்று மனதை நல்வழிப்படுத்தினான். நேர்மையாக இருந்தான். பொருளின் மீது மயக்கம் கொள்ளவில்லை. மேலும் தர்மம் தலைக்காக்கும் என்பதுப்போல், அவன் மகன் சுப்ரமணியம் நன்கு படித்து நல்ல ஒரு வியாபாரத்தை துவங்குவான்.

ஆனால் சோமு முதலி அப்படி அல்ல.  சாம்பமூர்த்திக்கு இருந்த ஆத்மபலத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட சோமுவிடம் இல்லை என்பதை சோமுவே உணர்ந்திருந்தான். சோமுவுக்கு பணம் ஒன்றே பிராதனம். அதனால் தான் அவனால் ஆத்ம சக்தியை வளர்த்து எடுக்க முடியவில்லை. அதனால் தான் அவன் எவ்வளவு பணம் சம்பாத்தித்தும் பூரண மனிதன் ஆகவில்லையே என்று சோமு வருந்தினான். புண்ணியத்தையும் சம்பாத்திக்கவில்லை. சோமுவின் மகன் நடராஜன் சீர்கேட்டு உதவாக்கரையாக வளர்வான்.

சோமு தவறு செய்யும் பொழுது எல்லாம் “கறுப்பு முதலி பையன் கறுப்பு மாதிரி தான் இருப்பான்” என்ற வார்த்தைகள் அவன் காதில் விழுத்துக்கொண்டே இருக்கின்றன. இவ்வூரும் இரக்கமற்று அதையே நினைவூட்டுகிறது. ஏனெனில் அது அவன் பால்யத்திலும் வாலிபத்திலும் அவன் மனதில் கொண்ட தவறான எண்ணங்களால் விளைந்தவை. 

ரங்கா ராவ் மீது தவறுகள் உண்டு. அவர் ஆடம்பரமாக கல்யாணத்தை கடன் வாங்கி செய்தார். அதன் விளைவாக வட்டியும் கடனும் கட்ட அவர் செல்வத்திலும் நிலம் போன்ற ஆஸ்திகளை விற்று இழந்தார். ரங்கா ராவும் சரி சாம்பமூர்த்தியும் சரி தங்கள் பரம்பரை சொத்தை விற்று தானம் செய்தார்கள். ஆனால் அது தவறு. இவற்றையெல்லாம் அவர்கள் துவக்கத்திலேயே திருத்தி இருக்க வேண்டும். ஒரு திட்டத்துடன் இறங்கி இருக்க வேண்டும். வரும் பொழுது பார்த்துக்கொள்ளலம் என்பதெல்லாம் தவறு. போகும் இடம் தெரியாதவன் எந்த ஒரு ஊருக்கும் போய் சேர மாட்டான். ரங்காவும் சாம்பமூர்த்தியும் தங்களது சொத்துக்களை விருத்தி செய்து இருக்கவேண்டும். வரும் இலாபத்தில் இருந்து தானங்களையும் சேவைகளையும் செய்து இருக்க வேண்டும். அதுவே நல்ல ஒரு ஏற்பாடு. அவர்கள் பொருளை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை. இறுதியில் பொருள் இல்லாமல் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

மேட்டுத் தெருல பிறந்த சோமு கடைசி வரைக்கும் அங்கேயே இருக்கான். ஏன்னா அவன் ஆத்மா சக்தி ஓங்கவில்லை என்பதே காரணம். ஏன் ஆத்ம சக்தி ஓங்கவில்லை? அவன் பணம் சம்பாத்தித்தான். ஆனால் அவன் கீழ்மைகளை உதரவில்லை அறுக்கவுமில்லை. அவன் கீழ்மைகள் அவனுள் ஆழமாக இருந்தது. சமயம் பார்த்து அவனை வஞ்சித்தது (வாலிபம் திரும்பி பெண்களிடம் சென்றான். தன் மதிப்பை குறைத்துக்கொண்டான்). கீழ்மையில் இருப்பதை உணரவில்லை. சாக்கடைப் போன்ற மேட்டுத் தெருவும் கீழ்மையின் சின்னம் என்பதை உணரவில்லை. அதனால் தான் அவன் மேட்டுத் தெருவிலேயே இருந்துவிட்டான். அது ஒரு குறியீடு. சொல்லப்போனால் அவர் சிறையில் இருந்து விடுதலையாகி வந்தப் பிறகு வேறு ஏதோ ஒரு சாத்தனூர் கிராமத்தில் இறக்கிறான். அவ்வூரிலும் மேட்டுத் தெரு இருக்கிறது.

அதனால் மனிதன் அவ்வப்போது சிந்திக்க வேண்டும். அதற்கு அவகாசமும் வேண்டும். இரண்டும் வேண்டும். சிந்திப்பதை தொடர்ந்து செய்யவேண்டும். ஆனால் சிந்தனையுடன் நிறுத்திவிடக் கூடாது. செயலில் தன் சிந்தனையை காண்பிக்க வேண்டும். அதுவே அவனை நல்வழிப்படுத்தும். அவன் ஆத்ம பலத்தைக் கூட்டும். 

எல்லோரும் தவறு செய்வது ஒரு நொடியில். அந்த ஒரு நொடியை கடக்க சிந்திக்க வேண்டும். 

உலகம் பொறந்த நாள் முதல் இன்னிவரையில் எவ்வளவு விநாடி உண்டோ அவ்வளவு தெய்வமும் உண்டு - இனி இருக்கப்போற விநாடிக்கும் விநாஅடிக்கொரு தெய்வம் உண்டு” என்று சோமு பண்டாரம் சொல்வதாக க.நா.சு சொல்கிறார். இதன் உள்ளார்ந்த அர்த்தம் பணம் (மட்டுமே) தெய்வம் அல்ல. சொல்லப்போனால் பணம் ஒரு பொய்த்தேவு / பொய்யான தெய்வம். பணம் இருந்தால் எல்லாம் கிடைத்துவிடும் என்னும் மாயம் கொண்ட தெய்வம். வாழ்வில் மற்ற முக்கியமான தெய்வங்கள் உண்டு. அதனால் தான் நாவலின் கடைசியில் சாமா சொல்கிறான் சோமு போன்ற உழைப்பால் முன்னேறிய பணக்காரர்கள் இவ்வுலகிற்கு வேண்டாம், ஏனெனில் இவர்கள் ஒரு விதத்தில் பணக்காரர்களாக இருந்தாலும் பல முக்கியமான விஷயங்களில் ஏழையாகவே இருக்கிறார்கள். குறிப்பாக கீழ்மைகளை கொண்டுள்ளார்கள். ஆனால் இவ்வுலகிற்கு சாம்பமூர்த்திப் போன்ற ஆசாமிகள் தான் தேவை ஏனெனில் அவரிடம் செல்வம் குறைந்தாலும் குணம் குறையவில்லை. அவரிடம் ஆத்மபலம் அதிகமாகவே இருந்தது. அவரைப்போன்றோர் செயலாற்ற வேண்டும்.

============================================

மேலும் - நாவலில் இருந்து சில பத்திகள்

ஏழைகளாகப் பிறந்து பசி தாகத்தைப் பரிபூரணமாக அறிந்தவர்களுக்கு மட்டுமே உள்ளத்திலே எண்ணிறந்த அற்புதமான கனவுகள் நிறைந்திருப்பதற்கும், பணக்காரர்களாகப் பிறந்து விட்டவர்களுக்கு ஒரு திருப்தி, வயிறு நிறைந்த தன்மை, சோம்பல், தூக்கம் இவை தவிர வாழ்க்கையிலே வேறு ஒன்றுமே இல்லாதிருப்பதற்கும் பொதுவாக இதுதான் காரணம் போலும்! பசியையும் தாகத்தையும் தலை தூக்க விடாமல் வயிற்றை நிரப்பிக்கொண்டு வளர்ந்து பெரியவர்களாகி விட்டவர்களுக்கு இவ்வுலகில் வாழ்வதன் மகிமைகள் பூராவும் நிச்சய்மாக தெரியது என்று தைரியமாகவே சொல்லலாம்.

ஒரு மனிதனுடைய வாழ்க்கையிலே ஒவ்வொரு வினாடியுமே முக்கியமானதுதான் - அற்புதமானது தான் - முடிவற்றதுதான்!

ஒரு மனிதனுடைய ஆசைகள் ஒரே வினாடியில் பூர்த்தியாகி விடுகின்றன. இன்னொருவனுடைய ஆசைகள் ஏழேழு தலை முறைக்கும் பூர்த்தியாக மாட்டாதவை என்று அதே வினாடியில் தெரிகிறது. ஆமாம், ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். ஆசைகளே இல்லாத மனிதர்களும் இருந்து, வாழ்ந்து வினாடிக்குப் பின் வினாடியாகக் கழித்து வாழ்க்கை நடத்துகிறார்கள்.

இவ்வுலகிலே ஒரு விஷயத்தை எண்ணி ஆசைப்படுவதற்கே தெம்பு வேண்டியிருக்கிறது. அந்த ஆசை பூர்த்தியாகும் வரையில் ஆசையாக நீடிக்க வேண்டும் - அதாவது சிலகாலமாவது நீடிக்க வேண்டும். ஆசை என்று தோன்றிவிட்டு மறைந்து விடக்கூடாது. பரிபூரணமாக அடைவதற்கு இடைவிடாது பாடுபட்டு உழைக்க வேண்டும். ஆசையும் அந்த ஆசை காரணமாக உழைப்பும், சோமுசுந்தர முதலியாரிடம் பரிபூரணமாகக் கலந்து அமைந்திருந்தன.

இந்தப் பிரபஞ்சத்திலே உழைப்பு என்ற ஒரு சக்தியும், அந்தச் சக்தியை இயக்கும் காரணமாக ஆசை என்று ஒரு சக்தியும் ஒன்றையொன்று தழுவி நெருங்கி நிற்கின்றன. இவை இரண்டும் நித்தியமான, அழியாத சக்திகள். இந்த இரண்டு சக்திகளையும் மீறி மனிதன் வாழ முடியாது. வாழ முயல்வது மதியீனம் - பைத்தியக்காரத்தனம்.

சாம்பமூர்த்தி ராயர் மிகவும் நல்லவர். தூய்மையான எளிய உள்ளம் படைத்தவர். தான தருமங்கள் செய்வதே பொருள் படைத்தவரின் கடமை என்று எண்ணுபவர். நிஷ்காமியமாக வாழ்கை நடத்தி அதைப் பரத்துக்குப் பூரானா சாதகமாக வைத்து விடவேண்டும் என்று எண்ணினார். 

பெரியவன், சின்னவன், பணக்காரன், ஏழை என்கிறோம். ஆனால் கடவுள் இரண்டு பேரையுந்தான் படைச்சிருக்கான். பணத்திலே பணக்காரணாக இருப்பவன் மற்ற எவ்வளவோ விஷயங்களில் ஏழையாக இருப்பதை நாம் பார்க்கிறோம்; பெரியவனுக்கு பெரிய கஷ்டங்களும்.

மனிதனுடைய மனசிலே, உள்ளத்திலே, அந்தரங்கத்திலே விதவிதமான் சக்திகள், நவ நவமன உணர்ச்சிகள் விநாடிக்கு விநாஅடி மூளுகின்றன - மூண்டு மூண்டு போராடுகின்றன. இந்தப் போராட்டமே மனிதனுடைய வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைகிறது. ஒரு சக்தி, ஓர் உணர்ச்சி வெற்றி பெற்று ஒரு விநாடி தலை தூக்கி நிற்கும். ஆனால் அடுத்த விநாடியே இன்னொரு சக்தி தோன்றி அதை வீழ்த்திவிட்டு ஆட்சி செலுத்தத் தொடங்குகிறது. ஆனால் இந்தச் சக்தியுனுடைய ஆட்சி நீடிப்பதும் ஒரே விநாடிதான். இந்தப் போராட்டத்துக்கெல்லாம் பின்னணியக மனிதன் உள்ளத்திலே ஒரு லட்சியத்தை, ஒரு தெய்வத்தைக் கற்பனை பண்ணிக்கொண்டு வாழ ஆரம்பித்து விட்டானானால் அவனைப் பாக்கியசாலி என்றே சொல்லவேண்டும். 

சிந்திப்பவன் தன் சிந்தனைகளின் பலாபலன்களைப் பற்றி நினைக்காதவனாக இருக்க வேண்டும். ஆனால் சிந்தனை தன்னை எங்கே கொண்டுபோய் விடுமோ, என்ன செய்யத் தூண்டுமோ என்று பயப்படுகிறவன் சிந்திக்கச் சக்தி இல்லாமல் இருப்பதே நலம்.  தவிரவும் வாழ்கையிலே சிந்திக்கவேண்டியவற்றை எல்லாம் பற்றிச் சிந்தித்து, கூடுமானவரையில் முடிவு கட்டி விட்டுப் பிறகு வாழ ஆரம்பிப்பவனே கெட்டிக்காரன். பழைய காலத்துக் குருகுல வாழ்க்கைக்கு இதுதான் அர்த்தம் போலும். வாழ்க்கை வழிகள் குருகுலத்தை விட்டு வெளியேறுமுன் திடமாகிவிட வேண்டும். இந்த வழி போகலாமா, அந்த வழி போகலாம என்று வழி நெடுகிலும் யோசித்துக்கொண்டே போகிறவன் எங்குமே போய்ச் சேரமாட்டான் என்பது நிச்சயம். வேறு ஒன்றும் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் ஒவ்வொரு மனிதனும் அவன் போகிற திசைப்பற்றியேனும் நிச்சயம் செய்த்துக்கொண்டுதான் ஆகவேண்டும். சிறுசிறு பிரச்சனைகளைக்கூட அவை எழும்பொழுது, விநாடியிலே, தீர்த்துக்கொண்டுவிடலாம் என்று எண்ணுவது பிசகு என்பதுதான் அனுபவ ரகசியம். அப்படித் தீத்துக்கொள்ள முடியவே முடியாது. சிந்தித்து முடிவு கட்டுவதற்குள் பிரச்சனைகளின் தன்மை தீர்ந்துவிடும். முடிவு கட்டிப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் வரையில் பிரச்சனைகள் பிரச்சனைகளாகக் காத்திருக்க மறுக்கின்றன.


===========================

எனது  மற்ற வலைப்பதிவுகள்

நாளும் ஒரு திருக்குறள் - https://DailyProjectThirukkural.blogspot.com/

October 15, 2020

திருக்குறள் (முதல் நிலை கற்றல்) - நிறைவு

 



நான் எடுத்த ”நாளும் ஒரு திருக்குறள்” [ http://DailyProjectThirukkural.blogspot.com/ ] என்னும் செயலை/குறிக்கோளை நேற்று 14 அக்டோபர் 2020 இரவு முடித்தேன். இச்செயலை 11 டிசம்பர் 2013 அன்று துவங்கினேன். சரியாகச் சொன்னால் 2500 நாட்கள்.  இதில் சுமார் பாதி நாட்கள் தான் 1330 குறள்களுக்கு எடுத்து இருக்க வேண்டும். ஆனால் நடுவில் பல நாட்கள் சோம்பேறித் தனம் என்று நினைக்கையில் வெட்கமாகவே உள்ளது. ஏனெனில் “குறள் 834 ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல் என்றென்பதே வள்ளுவன் வாக்கு. அதாவது தான் படித்தும் அதனை பிறர்க்கு எடுத்துரைத்த போதிலும் தான் அதை பின்பற்றவில்லை என்றால் அவனைப்போன்று பேதை வேறு யாரும் இல்லை. நான் சோம்பலை கடந்து இச்செயலை குறைந்தது 2000 நாட்களிக்குள்ளாவது முடித்து இருக்க வேண்டும் (2000?ஏனெனில் நடுவில் இரு ஆண்டுகள் MBA படிக்கச் சென்றுவிட்டேன்).  ஆனால், கடந்த ஒரு வருடமாக நாளும் உரை எழுதி முடித்துள்ளேன் என்பது ஆறுதல்.

1330 குறள்களை கற்றுள்ளேன். இதில் கண்டிப்பாக சில குறள்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. உதாரணமாக நான் எழுதிய முதல் குறள் “எண்ணித் துணிக கருமம்”. அக்குறளை ஒரு சங்கல்பமாகவே சொல்லிக்கொண்டு இச்செயலை துவங்கினேன். பல மாதங்கள் குறள்களை கற்று உரை எழுதாத காலங்களிலும், உரை எழுத வேண்டாம் வெறும் கற்றால் போதும் என்ற நினைப்புகள் வந்த காலங்களிலும் நான் சொல்லிக்கொண்டது “குறள் 467 எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.”. அக்குறளே என்னை இச்செயலை முடிக்க முக்கியமான காரணம்.

இதுப்போல் பல குறள்கள் உள்ளன. அவற்றை பற்றி என்னால் இன்று எழுத முடியாது. எல்லா குறள்களையும் மறுபடியும் ஒரு தடவை வாசித்துவிட்டு ஒவ்வொரு அதிகாரத்திலும் சிலவற்றை தேர்ந்தெடுக்கவேண்டும். (அவற்றை Favorites என்று சொல்வது இன்னும் சரியாக இருக்கும்). 

திருக்குறள் அறத்தை வலியுறுத்தியே எழுதப்பட்டுள்ளது. ஆனால் அதற்கென்று பொருளையும் இன்பத்தையும் நிராகரிக்கவில்லை. பொருளின் நிலையாமையை கூறினாலும் பொருளின் அவசியத்தையும் தெளிவாகவே எடுத்துரைத்துள்ளது. உறவுகளில் இன்பம் எவ்வளவு அவசியம் என்பதையும் எடுத்துரைத்துள்ளது.

திருக்குறள் என்பது ஒருவன் இல்வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை மிக நன்றாக தெளிவாக கூறியுள்ளது. ஆனால் இந்த லௌகீக வாழ்க்கையை தாண்டி வீடுபேறு அடைவதற்கான துறவு வாழ்க்கையையும் மிக தெளிவாக வகுத்துள்ளது. துறவியலில் கூறப்பட்டது துறவு வாழ்க்கைக்கு என்று மட்டும் அல்ல இல்வாழ்க்கைக்கும் மிக மிக பயனுள்ளதாக இருக்கும் (எனக்கு இருக்கிறது) என்பதில் சந்தேகமில்லை. 

வாணிப நிர்வாக மேலாண்மை கல்லூரிகளில் சொல்லித்தரப்படும் சில முக்கியமான தலைமை பண்புகளையும்(Leadership skills) திட்டமிடல் (Planning Skills, SWOT Analysis etc) செயல்முறை (Execution Skills, Risk Management analysis etc) பாடங்களையும் மிக தெளிவாக பொருட்பாலில் கூறப்பட்டுள்ளதை காணலாம்.

அடுத்து காமத்துப்பால். காமத்துப்பாலில் காதலிக்கும் காதலனுக்கும் இடையே உள்ள அன்பை அவர்கள் காதலிக்கும் நாட்களை மிக அழகாக கூறியுள்ளார் திருவள்ளுவர். ஆனால் பல குறள்கள் மிக சிறந்த மனோதத்துவங்கள் என்பதில் சந்தேகமில்லை. அதனை பிரிவு என்று கடந்து செல்லக்கூடும். பிரிவு தரும் துன்பம் என்று பார்க்காமல் துன்பம் என்று பார்த்தால் அது வாழ்வில் பலவற்றிற்கும் பொருந்தும் என்பது புரியும். எல்லாவற்றிற்கும் எல்லை உண்டு என்பதும் புரியும். 

பரிந்துரைகள்

திருக்குறளை நான் இப்படி பரிந்துரைப்பேன்

1) முக்கியாமான ஒரு 300-400 குறள்களை குழந்தைகள் 12 வயதிற்குள்ளாகவே மனனம் செய்யவேண்டும். முடிந்தால் அவர்களுக்கு எளிமையாக அர்த்தம் சொல்லித் தர வேண்டும்.

ஆயினும் எல்லா வயதினரும் இதனை படிக்கலாம் என்பதை நான் தனியாக கூறவேண்டியது இல்லை.

2)  12 முதல் - 15 வயது வரை அறத்துப்பாலை நன்கு சொல்லித்தர வேண்டும். மறுபடியும் 20-22 வயது வரை மறுபடியும் வாசிக்க வேண்டும். அதன்பிறகு அடிக்கடி (தினமும் ஒரு குறள்) வாசிப்பது இன்னும் சிறப்பு

3) 12 முதல் - 15 வயது வரை பொருட்பாலை நன்கு சொல்லித்தர வேண்டும். நேரத்தின் மதிப்பை, திட்டமிடலின் அவசியத்தை, வினைத்திட்பம், விடாமுயற்சி, ஊக்கம், சோம்பலின்மை, மறதியின்மை என்று பலதரபட்ட நிர்வாக திரண்களை மாணவர்களுக்கு இளமையிலேயே கற்பித்து அவர்கள் பின்பற்றச்செய்ய வேண்டும்.

ஏனெனில் பிள்ளைகள் பெரியவர்களாக உருவாவது அந்த பருவத்தில் தான். Formative years ஆன 14 வயது வரை பிள்ளைகள் கற்பதே அவர்கள் வாழ்நாள் முழுக்க பயனுள்ளதாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது. 

ஆதலால் இளமையில் தான் திருக்குறளை முக்கியமாக சொல்லித்தர வேண்டும். 

4) பின்பு ஒருவர் அலுவகத்தில் வேலைக்கு சேர்ந்தப்பின்பு 21-25 வயது வரை பொருட்பாலையும் அறத்துப்பாலையும் மீண்டும் நன்கு படிக்க வேண்டும். அது அவர்களின் மிக உற்சாகமான 20-30 வயது காலக்கட்டங்களை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள அறிவுரைகளை கொடுக்கும். 

5) 20-25 வயது வரையில், மறுபடியும் கல்யாணம் ஆகும் முன்பும் ஆனப்பிறகும் காமத்துப்பாலை படித்தல்வேண்டும். உறவு ஆழமாக அமைய மிக பயனுள்ளதாக அமையும்.  பொதுவாக கடந்துச்செல்லும் நுண்ணிய உணர்வுகளை நாம் அலட்சியம் செய்யக்கூடாது என்பதை அறியலாம்.

6) திருக்குறளை எப்படி படிக்க வேண்டும் என்பதற்கு கீழ்காணும் பரிந்துரைகளை காணவும்

-- திருக்குறளை எப்படி மனனம், ஸ்வாத்யாயம், தியானம் செய்து கற்க வேண்டும் என்று எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் விவரித்துள்ளார். அதற்கு ஜெயமோகனின் ”மனப்பாடம் (சுட்டியை தட்டவும்)”, ”குறள் என்னும் தியானநூல்”, ”குறள்;இருகடிதங்கள்”, “குறள் – கவிதையும், நீதியும்”, “இந்திய சிந்தனை மரபில் குறள் 1”,   ”இந்திய சிந்தனை மரபில் குறள் 2”, ”இந்திய சிந்தனை மரபில் குறள் 3”, ”இந்திய சிந்தனை மரபில் குறள் 4”, ”இந்திய சிந்தனை மரபில் குறள் 5” கட்டுரைகளை வாசிக்கவும். 

-- திருக்குறளை எப்படி ஒரு கவிதையாக வாசிக்க வேண்டும் என்பதை பற்றி மூன்று நாட்கள் உரையாற்றியுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன். அதற்கான YouTube சுட்டிகள் இதோ - குறளினிது (சுட்டியை தட்டவும்)

-- எழுத்தாளர் ஜெயமோகன் மேற்சொன்ன இரண்டு சுட்டிகளிலும் ஆபத்வாக்கியம் பற்றிப் பேசியிருப்பார். திருக்குறள்களை மனனம் செய்தால் அவை கண்டிப்பாக ஆப்த்வாக்கியமாக தோன்றும். சில காலம் ஆகும். உதாரணமாக எனக்கு சில வார்த்தைகள் 1) அருமை - அருமை உடைத்தென்று அசவாமை வேண்டும் 2) அரும்பயன் - அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் 3) பொருள் - பொருளல்லவற்றை பொருள் என்று உணரும் 4) எண்ணித் துணிக 5) எண்ணிய எண்ணியாங்கு எய்துப 6) இன்பம் விழையான் 7) விழை தகையான் வேண்டி இருப்பர் 8) முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை 9) தன்னுயிர் தான்அறப் பெற்றானை 10) யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் 

-- திருக்குறளை எனது தளமான http://DailyProjectThirukkural.blogspot.com/  ஒவ்வொரு சொல்லுக்கும் உள்ள பலத்தரப்பட்ட பொருளை கற்று படிக்க மிக ஏதுவாக இருக்கும். அகராதியில் ஒவ்வொரு சொல்லும் அர்த்தம் தேடி படிப்பதைக்காட்டிலும் இங்கு ஒரே இடத்தில் அகராதியில் உள்ள எல்லா பொருளையும் வாசிக்கலாம். ஆதலால் வேகமாகவும் ஆழமாகவும் படிக்கலாம்

-- திருக்குறள் தான் வேதவாக்கு என்று எல்லாம் சொல்லமாட்டேன். பலதரப்பட்ட புத்தகங்களை வாசித்து அவற்றுடன் திருக்குளை தொடர்பு படுத்தி, திருக்குறளை மற்றவற்றுடன் தொடர்பு படுத்தி பார்த்தால் நம் மனதில் திருக்குறள் நன்றாக பதியும். பொதுவாக விஸ்தாரமான வாசிப்பும் ஆழமான புரிதலும் நுண்ணிய கல்வியிற்கு அவசியம்.

-- திருக்குறள் ஒரு செவ்வியநூல். ஒரு செவ்வியல்நூலை வாழ்நாள் முழுக்க பயிலலாம். குறள் அதற்கு அப்பால் சூத்திரமும் கூட. அது பயிலப்படவேண்டிய நூல் மட்டுமல்ல, பிற நூல்களை பயில்வதற்குரிய அடித்தளத்தை அமைக்கும் நூலும்கூட. (- எழுத்தாளர் ஜெயமோகன் - குறள்- கடிதம்)

-- ஒரு முழுமையான பார்வை வேண்டும் என்றால் எல்லா திருக்குறள்களையும் கற்றல் அவசியம். சில குறள்கள் முழுமையானவையாக இருக்கும். உதாரணமாக “எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”. ஆனால் “எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்” என்ற குறளை மட்டும் படித்துவிட்டு இமயமலை ஏறச்சென்று வானிலை சரியில்லை என்று அறிந்தப்பின்பும் இமயமலை ஏறத் தொடர்ந்தால் உயிர் தான் போகும். அதற்குத்தான் “நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும்” என்ற குறளையும் படித்து இருக்க வேண்டும். அதேப்போல் “பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு.” என்பதை மட்டும் படித்துவிட்டு பொருளை நிராகரித்தால் துன்பமே எஞ்சும். அதற்கு தான் “பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள்” என்பதையும் உணர்ந்து பொருளை ஈட்ட வேண்டும். அப்படிச் செய்தால் தான் அறம் பொருள் இன்பம் சமநிலையில் இருக்கும். 

ஒரு சமச்சீரான அணுகுமுறைக்கு திருக்குறளை முழுமையாக கற்றல் மிக பயனுள்ளதாக இருக்கும். 

-- ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறள் கற்பதாக இருந்தால் நீங்கள் உங்களுக்கு உகந்த வழியில் கற்கவும் அதாவது, 1,2,3,4,5,6, என்ற குறள் வரிசையில் கற்கலாம், அல்லது 1,2,3,4,5 என்ற அதிகாரவரிசையில் உள்ள முதல் குறள் அல்லது ஏதாவது ஒரு குறள், அல்லது அதிகார வரிசையும் இன்று குறள் வரிசையும் இன்றி ஏதாவது ஒரு குறளையும் கற்கலாம். ஒவ்வொரு முறையும் ஒரு நல்லது உண்டு. அது அவரவர் தேவைகளைக்கும் வயதுக்கும் ஏற்ப மாறுபடும். 

நான் எப்படிச் செய்தேன் என்றால், (1) வரிசையாக ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒரு குறள் என்று முறையில் சென்றேன், பிறகு முதல் அதிகாரத்தில் இருந்து மறுபடியும். இதில் உள்ள நல்லது என்னவென்றால் திருக்குறளில் உள்ள ஒரு முழுமையான நோக்கு கிடைத்துவிடும். தேவையற்ற முரணான எண்ணங்களை மனதில் சுமக்கவேண்டாம். சிலசமயம் தவறான முன்முடிவுகளை தவரிக்கலாம். (2) முதல் தடவை ஒரு அதிகாரத்தை வாசிக்கும் பொழுது அவ்வாதிகாரத்தில் உள்ள எல்லா குறள்களையும் ஒருதடவை வாசித்துவிட்டு அதற்கான சாலமன் பாப்பையா போன்றவர்களின் எளிய உரைகளையும் வாசிக்கலாம். இது அவ்வதிகாரத்தின் முழு சாராம்சத்தையும் கொடுத்துவிடும். (3) ஒவ்வொரு தடவை ஒரு அதிகாரத்தை வாசிக்கும் பொழுதும் அவ்வதிகாரத்தில் உள்ள முந்திய 2-3 குறள்களை மனனம் செய்வது அல்லது அதன் அர்த்தங்களை ஆழ்ந்து வாசித்து மனதில் நன்கு பதியவைப்பது நன்று. ஏனெனில் நாம் ஒரு தடவை வாசிப்பதால் கல்லில் பதிவதுப்போன்று அர்த்தம் (எல்லோருக்கும்) பதிந்துவிடாது. மறுபடியும் மறுபடியும் படிக்க படிக்க தான் நம் மனதில் நன்றாக பதியும். அது நமது செயலிலும் தென்ப்படும்.

-- பிறருக்கு கற்பித்தல்: நாம் திருக்குறளுக்கு கற்பிக்கும் பொழுது பல நன்மைகள் உண்டு (1) நாம் பிறருக்கு ஒன்றை கற்றுக்கொடுக்கிறோம். நாம் கற்றது வீணாகவில்லை (2) நாம் பிறருக்கு கற்றுத்தரும் பொழுது நாம் ஏற்கனவே படித்ததை மீண்டும் படிக்கிறோம். அதனால் அக்குறள் மனதில் பதிய அதிக வாய்ப்பு உண்டு. அதன் அர்த்தம் கண்டிப்பாய் மனதில் நன்றாக பதியும் (3) நாம் பிறருக்கு சொல்லித்தருவதால் (பிறருக்கு ஓதுவதால் நாம் கூறியவற்றைப் பின்பற்ற வேண்டும் என்ற மன உறுதி நமக்கு பிறக்க வாய்ப்புகள் அதிகம். அதனால் நாம் முன்னேறுவோம்). ”குறள் 834 ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல்” என்பதை நினைவில் கொள்க (4) நாம் தவறாக கற்றிருந்தால் அதை கண்டுக்கொண்டு திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு. நமது புரிதலை ஆழப்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு (5) பிறருக்கு கற்றுத்தரும் பொழுது / பிறருடன் கற்கும் பொழுது அங்கே ஒரு உரையாடல் நிகழ்கிறது. அது பெரும்பாலும் ஒரு நல்ல தருக்கத்தை உருவாக்கும். அத்தருக்கத்தில் நாம் மிகுந்த பயனடைவோம். வாழ்வோடு தொடர்புடைய உதாரணங்கள் வெளிவரும். ஆழ்ந்த புரிந்தல் உண்டாகும். அர்த்தம் மனதில் பதியும் (6) மற்ற குறள்களுடனும் மற்ற புத்தகங்களில் உள்ள உதாரணங்களுடனும் தொடர்பு படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு. இப்படி நுனிப்புல்லில் இருந்து வெளிவந்து வாசிப்பு செம்மை அடைய முடியும். 

-- குழந்தைகளுக்கு கற்பித்தல்: - குழந்தைகளுக்கு கற்பிக்கும் பொழுது குறிப்பாக அவர்களை மனனம் செய்ய பழக்கும் பொழுது 1) நமக்கு நன்றாக மனனம் ஆகும். 2) நமக்கு அது ஆபத்வாக்கியங்களை உருவாக்கிக்கொடுக்கும். 3) சில வார்த்தைகள் நமக்கு நன்கு மனதில் பதியும். 4) பல அதிகாரங்களை தொடர்பு படுத்திப் பார்க்க நல்ல ஒரு வாய்ப்பும் கூட. 5) மேலும் அடுத்த தலைமுறைக்கு நல்லவற்றை கற்றுக்கொடுக்கிறோம் அதுவும் சின்ன வயதிலேயே. 

நன்றிகள்

திருக்குறள் கற்றல் செயலை செய்தற்கு சிலருக்கு நன்றிகள் தெரிவிக்க வேண்டும். 

இறைவனுக்கு நன்றி

இச்செயல் எனக்கு அமைந்தது என் பேறு அல்லது நல்லூழ் என்பேன். இதனை வரமாக கருந்துகிறேன். ஆதலால்  இச்செயலை முடிக்க அருள்புரிந்த இறைவனின் மலர்பாதங்களுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். எனக்கு கீழ்க்காணும் இத்தனை சந்தர்ப்பங்களையும் சாத்தியங்களையும் வினைத்திட்பத்தையும் கொடுத்தது இறைவன் தான். இச்செயலை துவங்கியப்பின்பு பல மாதங்கள் திருக்குறள் கற்காமல் இருந்தாலும் என்னை மறுபடியும் அதில் செலுத்தி என்னை இச்செயலை முடிக்க துணையாக இருந்த இறைவனுக்கு மறுபடியும் நன்றி.

(இதில் வரிசை முறை என்று ஏதும் இல்லை)

-- பேராசிரியர் திரு. ஒளவை நடராஜன்

நான் 2008-2011 ஆண்டுகளில் டெல்லியில் இருக்கும் பொழுது இவர்கள் பொதிகை தொலைக்காட்சியில் காலை வேலைகளில் திருக்குறளுக்கு அர்த்தம் உரைப்பர். ஒவ்வொரு குறளுக்கும் 20 நிமிடங்களுக்கு உரை கூறுவார்கள். என்னடா இது 2 வரில உரைகள் மலைப்போல் குவிந்துள்ளன. இவர் 20 நிமிடம் சொல்கிறாரே என்று தோன்றும். ஆனால் அவரை தொடர்ந்து கேட்கையில் எப்படி திருக்குறளை உள்வாங்க வேண்டும். எப்படி வெவ்வேறு கண்ணோட்டங்களில் அணுகி பொருள்க்கொள்ள வேண்டும் என்று கற்றுக்கொண்டேன்.நன்றி ஐயா.

-- எழுத்தாளர் ஜெயமோகன்

இச்செயலை துவக்க காலத்தில் புரியாமல்தான் செய்துக்கொண்டு இருந்தேன். அங்கே வெட்டி இங்கே வெட்டி எல்லாவற்றையும் கலந்து என்னமோ ஏதோவென்று செய்துக்கொண்டு இருந்தேன். அப்படியான காலகட்டங்களில் தான், ஒரு கடிதத்திற்கு பதிலாக எப்படி மனனம், ஸ்வாத்யாயம், தியானம் முறையில் எப்படி திருக்குறளை கற்றால் பயன் இருக்கும் என்று ஒரு சிறிய கட்டுரை எழுதி இருந்தார். அதன்படி நான் எனது கற்றல் முறையை மாற்றிக்கொண்டேன். அது எனக்கு மிக மிக பயனுள்ளதாக அமைந்தது. இல்லையேல் எனது வலைத்தளம் திருக்குறளுக்கான பத்தாயிரத்தி சொச்ச உரையாக அமைந்திருக்கும். நானும் ஆழமாக கற்று இருக்க மாட்டேன். நான் சிந்தித்து திருக்குறளை கற்றேன் என்றால் அதற்கு ஜெயமோகனே ஒளிவிளக்கு ஏற்றிவைத்தார். அதனை நோக்கியே சென்றேன்.  நன்றி ஜெ.

-- சொற்பொழிவாளர் தமிழ்க்கடல் திரு.நெல்லைக்கண்ணன்

2009, 2013 ஆண்டுகளில் ஸ்டார் விஜய் தொலைகாட்சியில் வந்த ”தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு” என்ற போட்டித் தொடர் நிகழ்ச்சியில் திருக்குறளின் எல்லா சுவைகளையும் பல போட்டியாளர்கள் கொடுத்தார்கள். இவர் அருமையான நெறியாளராக நடுவராக இருந்தார். மேலும் மற்ற இலக்கிய தலைப்புகளிலும் மிக நன்றாக அதன் சுவையை எடுத்து உரைத்தார். இவரின் சில பேச்சுகளில் எனக்கு சில மாறுபட்ட கருத்துக்கள் இருப்பினும், இவர் எனது தமிழ் ஆர்வத்தை ஒரு படி மேலே உயர்த்தினார், எனது வாசிப்பு தேடலை ஒரு படி மேலே உயர்த்தினார் என்பதில் ஐயமில்லை.  அதனால் தான் நாம் பாடத்திட்டங்களுக்கும் வேலைக்கும் வெளியே மற்றவற்றை குறிப்பாக தமிழ் இலக்கியங்களை படிக்க வேண்டும் என்ற செயலில் இறங்கினேன். நன்றி ஐயா

-- எனது பாட்டி சரஸ்வதி சுப்ரமணியம்

என்னை எப்பொழுதும் ஊக்கிவிக்கும் எனது பாட்டி. இது என்ன வேண்டாத வேலை என்றெல்லாம் கூறமாட்டார். நல்லது. திருக்குறளில் வாழ்க்கைக்கான எல்லாம் இருக்கு. இதை படித்தால் எல்லாத்தையும் படிச்ச மாதிரி. படி என்று என்னை ஊக்கபடுத்தினார். படிச்சு அதுமாதிரி நடந்துக்களையே என்று சிலர் நையாண்டி செய்வர் அல்லது குத்திக்காண்பிப்பர். அப்படி எல்லாம் நையாண்டி செய்யமாட்டார் பாட்டி. எல்லாவற்றையும் ஒரே அடியாக மாற்றுவது கடினம் என்ற தாத்பர்யத்தை உணர்ந்தவர். எல்லாவற்றையும் பின்பற்ற முடியவில்லை என்றாலும், சிலவற்றை பின்பற்றுகிறாயே, அதுவே முன்னேற்றம் தான். ஒரு படி மேலே சென்று இருக்கிறாய். நல்லவிஷயம் தான். அப்படியே தொடர்ந்தால் எல்லாவற்றையும் மாற்றிக்கொள்ளலாம். உன்னால் முடியும் என்று கூறுவார். நான் இப்பொழுது எனது மருமகள் (ஆதாவது தங்கையின் மகள்) ப்ரத்ன்யாவிற்கு திருக்குறளை மனனம் செய்ய பயிற்சிக்கொடுத்துக்கொண்டு இருக்கிறேன் (ஒருவருடத்தில் இதுவரையில் 90 திருக்குறள்கள்) . இதனைப்பார்க்கும் எனதுப்பாட்டி, எனக்கு இப்படி ஒரு மாமா இல்லையே என்று ஆதங்க படுகிறாள். நாம் நல்லது தான் செய்கிறோம் என்ற நம்பிக்கையை கொடுக்கிறாள். ஆதலால் பாட்டிக்கும் நன்றி. 

-- பள்ளிகாலத்துத் நண்பன் S.ராஜேஷ்

2010 ஆண்டுகளில் இவனது Google Talk / Chat இன் தன்னிலை செய்தி (status message) "எண்ணித் துணிக கருமம்”, “சிறுக்கோட்டுப் பெரும் பழம்” என்று தான் இருக்கும். அவை என்னை ஈர்த்தன. அதனை கேட்டு அறிந்தேன். எனது தமிழ் ஆர்வத்தை ஆழமாக ஆக்கியது. அன்றில் இருந்து இன்று வரை நான் ஒரு முக்கியமான செயலில் ஈடுபட்டாலோ அல்லது நெடுநாட்கள் எடுக்கும் பெரிய செயல்களில் ஈடுட்பட்டாலோ நான் மனதில் சங்கல்பமாய் சொல்லிக்கொள்வது “எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு”. நன்றி டா.

-- நண்பர் நாகமணி

இந்த செயலை துவங்கிய காலக்கட்டங்களில், இது நல்ல முயற்சி பாஸ், நல்லா பண்ணுங்க என்று ஊக்கப்படுத்தினார். நீங்களும் சேர்ந்துக்கொள்ளுங்களேன் என்று அழைத்தபொழுது, அவரும் வந்து சில பல குறள்களுக்கு உரை பதிவு செய்துள்ளார். அவ்வப்பொழுது சில மைல்கல்களை தாண்டும் பொழுது, செம பாஸ் என்று கூறுவார். சினிமா, கிரிக்கேட், அரசியல் என்பத்தை தாண்டி சற்று இலக்கியத்தை பற்றியும் இவரிடம் பேச முடியும். நன்றி பாஸ்.

-- திரு.அசோகன் சுப்பிரமணியம்

இச்செயலை துவங்கிய காலங்களில் திருக்குறள்களுக்கு பொருள் அறிந்துக்கொள்ளும் முனைப்பில் பல வலைத்தளங்களை மேய்வதுண்டு. 99% சதவிகித உரைகள் ஏற்கனவே உள்ள உரைகளை தொகுத்து வலையேற்றபட்டு இருக்கும். அதற்கு மேலே ஒரு துளி உழைப்பைக்கூட செய்து இருக்கமாட்டார்கள். ஒரு சில வலைப்புகள் சில குறள்களுக்கு மட்டும் கட்டுரை வடிவில் திருக்குறளை விவரித்து நன்றாக எழுதியிருப்பார்கள். அது பயனுள்ளதாகவும் இருந்தது. அப்படித் தேடிக்கொண்டு இருக்கையில், தற்செயலாக திரு அசோகன் சுப்பிரமணியன் அவர்களின் வலைத்தளத்தை கண்டடைந்தேன். அவரும் நான் மேற்கொண்ட பாதையில் முன்னரே பல காலமாக பயணித்துக்கொண்டு இருந்தார். ஆதலால் நாம் சரியான பாதையில் சென்றுக்கொண்டு இருக்கிறோம் என்ற நம்பிக்கை பிறந்தது. அவர் விளக்கம் அளிப்பதுடன் நிறுத்திவிடாமல் திருக்குறளை இன்று புழங்கும் வார்த்தைகளை வைத்து மறு ஆக்கம் செய்து இருப்பார். பாராட்டப்பட வேண்டிய முயற்சி. பல குறள்களுக்கு மற்றவர்கள் வேறுவிதமாக(தவறாகவோ அல்லது குழப்பமாகவோ) உரை எழுதி இருந்தாலும் அவர் அவருக்கு தோன்றியதை அவருக்கு சரி எனப்பட்டதை தெளிவாக எழுதியிருந்தார். அந்த இயல்பு எனக்கும் ஒரு மனத்திட்பத்தை கொடுத்தது. அதனால் எனக்கு சரியென பட்டதையே நானும் உரையாக எழுதினேன். திரு.அஷோக் அவர்களிடம் இருந்து சில குறள்களுக்கு வேறுபட்டு இருக்கிறேன். அவரின் உரை எனக்கு மிக மிக பயனுள்ளதாக அமைந்தது. திருக்குறளின் உரையை ஆங்கிலத்திலும் விரிவாக எழுதியது இவ்வுலகிற்கு கிடைத்த பேறு எனவே சொல்லுவேன். அவருக்கு எனது நன்றி கலந்த வணக்கம்.



பெருமை

குறள் 505 
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் 
கருமமே கட்டளைக் கல்

இச்செயலை முடித்தது எனக்கு பெருமையே அளிக்கிறது. ஆயினும் நான் திருக்குறளை ஒரு முறை கற்று உள்ளேன். அதன் படி நடக்க, பெருமை பயக்கும் பல செயல்களை செய்ய நான் ஏறவேண்டிய சிகரங்கள் பல இருக்கிறது. அப்பெருமை எனக்கு வாய்க்க நான் செயல்களை செய்ய இறைவன் துணைப்புரியட்டும். 

குறள் 978
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.

இச்செயலை செய்து முடித்தது என்னளவில் ஒரு பெரிய காரியம் ஆயினும் அதனை தாண்டியும் பல காரியங்கள் உள்ளன. ஆதலால் நான் சரிசெய்யவேண்டிய என்னுடைய குறைப்பாடுகளை எண்ணியும் நான் அடையவேண்டிய சால்புகளை வேண்டியும் பணிவு கொள்கிறேன். 

அடுத்து?

திருக்குறள் கற்றல் பணி தொடரும்

எனது அடுத்த செயல்களுக்கான எண்ணங்கள்

திருக்குறள்

எழுதிய எல்லா குறள்களையும் மறுவாசிப்பு செய்து தேவையெனில் சீரமைப்பு செய்ய வேண்டும். 1. துவக்க காலங்களில் சில குறள்களுக்கு ஒவ்வொரு வார்த்தைக்கும் அகராதியில் இருந்து பொருளை எடுக்கவில்லை. அவற்றை பூர்த்தி செய்யவேண்டும் 2. எழுதிய உரைகளை தேவையெனில் பொருட்பிழைகளை களையவோ அல்லது சுருக்கவோ  அல்லது நீட்டவோ வேண்டும். 3. சொற்ப்பிழைகள், எழுத்துப்பிழைகள், இலக்கணப்பிழைகள், வலிமிகும் வலிமிகா இடங்கள் பிழைகள் ஆகியவற்றை சரிசெய்ய வேண்டும்.

1. திருக்குறள் - ஒவ்வொரு அதிகாரத்திலும் முக்கியாமன 2-4 குறள்களை தேர்ந்தெடுக்க வேண்டும்

2. திருக்குறள் - தலைமை பண்புகளை பறைச்சாற்றும் குறள்களை தேர்ந்தெடுக்க வேண்டும்

3. திருக்குறள் - அதிகார வாரியாக கட்டுரைகள் - இது ஒரு பெரும் பணி

4. திருக்குறள் - ஆத்மார்த்தமான உறவுகளுக்கு காமத்துப்பால் சொல்லும் சில முக்கியமான மனோத்தத்துவங்கள்

5. திருக்குறள் - ஆபத் வாக்கியங்கள்

மற்றவை

மூதுரை - ஔவையார்
கொன்றை வேந்தன் - ஔவையார்
நல்வழி - ஔவையார்
புதிய ஆத்திசூடி - பாரதியார்
நாலடியார்
புறநானூறு

எண்ணங்கள் நிறைவேற வேண்டும்.

சமர்ப்பணம்

இச்செயலை பாதிக்கடந்து (665 குறள்கள்) இருக்கும் பொழுது தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன் ஐயா அவர்களுக்கு சமர்ப்பித்து இருந்தேன். 

இப்பொழுது மீதமுள்ள பாதிச்செயலை (665 குறள்கள்) எனது தனிப்பெருந்துணை பாட்டி சரஸ்வதி சுப்ரமணியத்திற்கு சமர்ப்பிக்கிறேன்.

இச்செயலை மொத்தமாக எனது குழந்தை உமையாள் மற்றும் எனது தங்கை தம்பியின் பிள்ளைகளான ப்ரத்ன்யா, தன்யா, சேந்தன் ஆகியோருக்கு சமர்ப்பிக்கிறேன். அவர்கள் திருக்குறளையும் மற்ற நூல்களையும் கலைகளையும் கற்று அவற்றை உறுதுணையாகக்கொண்டு வாழ்வை நன்கு அமைத்துக்கொண்டு வீடுபேறு அடையவேண்டுகிறேன். இறைவன் துணைநிற்கட்டும். 

அன்புடன்
ராஜேஷ் (எ) பாலசுப்ரமணியன்