Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

June 29, 2019

செடிகள் மலர்கள்

இன்று எங்கள் வீட்டில் ஒரு சட்டியில் வளர்த்த லில்லி செடியில் அழகான ஒரு மலர் பூத்தது. மிகவும் மணத்துடன் நிறைவாக பூத்துள்ளது. 

பொதுவாகவே எனக்கு தோட்டக்கலையில் ஆர்வம் உண்டு. நான் பிள்ளையாய் இருந்த போழுது எங்கள் வீட்டில் 100 சட்டிகளில் செடி இருக்கும். வகை வகையான செடிகள் வண்ணவண்ணமான மலர்கள். எங்களுக்கு சின்ன சின்ன மெய்யான சந்தோஷங்களை கொடுத்தது. 

ஆனால் இப்படி செடி வளர்ப்பதற்கும் உழைப்பு தேவை. அதற்கு உரம் இட்டு, களைகள் களைந்து, தினமும் தண்ணீர் ஊற்றி போற்றவேண்டும்.  சில செடிகளில் ஒரு சில பூச்சிகள் இருந்தால் பரவாயில்லை. ஆனால் செம்பருத்தி போன்ற செடிகளில் பூச்சிகள் எளிதாய் தொற்றிக்கொள்ளும். பலநாள் இருக்கும் செடி அதற்கு ஒன்றும் இல்லை என்று நினைப்போம். இலைகளின் மேலே பளபளவென இருக்கும் ஆனால் கீழே அடி பகுதியில் நம் கண்ணுக்கு தெரியாத வண்ணம் வெள்ளை வெள்ளையாக பூச்சிகள் இருக்கும். அதை காணும் பொழுது மனதிற்கு கடினமாக இருக்கும். அப்படி பார்க்கும் பொழுது அதனை களைந்து எரிவதே சிறந்தது ஏனெனில் மருந்துகள் இதுபோன்ற சூழ்நிலைகளில் உதவாது ஏனெனில் ஆழ் அடிவேர்வரை நோயின் தாக்கமும் இருக்கும். இல்லையேல் அது மொத்த தோட்டத்தையும் கெடுத்துவிடும். அப்படி செய்வதால் தோட்டத்திற்கு நல்லது. அந்த செடியிற்கும் நல்லது. நோயுற்ற செடி அவதி பட வேண்டாமே. பூச்சியுடன் இருக்கும் செடி நமக்கும் மன உளைச்சலே. 

ஆனால் சில நேரம் சில இன்னல்கள் இருந்தாலும், ஒரு மலரை கண்ட உடன் மனம் இலகுவாகிறது. சந்தோஷம் நம்மை நாள் முழுக்க தொற்றிக்கொள்கிறது 




June 02, 2019

1994 - பாலா - நவில்தொறும் நூல்நயம் போலும்

முன் கதை
1994 என் வாழ்வில் ஒரு திருப்புமுனை ஆண்டு. 1994-மார்ச் வரை மாநில பாடத்திட்டத்தில் வரும் ஒரு தனியார் பள்ளியில் படித்துக்கொண்டு வந்தேன். என் அம்மா நான் கல்வித்தரமும் மாணவர்களின் ஆற்றலும் படிப்பில் ஆர்வமும் நன்கு உள்ள நல்லதொரு பள்ளியில் படிக்கவேண்டும் என்று மெனக்கெட்டார்கள்.  அப்பேர்ப்பட்ட பள்ளியில் சோபித்தால் நீண்ட காலத்திற்கு நன்மை என்பதே அவர்களின் தின்னம். அது உண்மையும் ஆயிற்று.

ஆனால் பழைய பள்ளியில் இருந்து நண்பர்களை பிரிகிறோம் என்று எனக்கு எண்ணம் அவ்வளவாக இல்லை. ஆனால் புதிய டான் பாஸ்கோ பள்ளியில் முதல்நாள் துவங்கும் முன்பே எனக்கு பயம். பயத்திற்கு காரணம் பாடத்திட்டம் மாறியதே. Science என்று படித்த எனக்கு பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, பாடனி, சூலோஜி, ஹிஸ்டரி, ஜீயோக்ரபி (Physics, Chemistry, Botany, Zoology, History, Geography) என்று பாடங்கள் அதிகம் ஆகின. போதாதைக்கு ஆங்கிலம் Non-Detailed என்று வேறு ஒரு சிறு புத்தகம். என் எடையை விட என் புத்தகங்களின் அடை அதிகம். சின்ன பயன், பயப்பட மாட்டேனா?
சரி, முன் கதையில் இருந்து கதைக்கு செல்வோமா?

2005 April

மைய கதை
பொதுவாக நமக்கு கடந்தகால நாட்கள் பல நினைவில் இருக்காது நினைவில் நிறுத்தினால் ஒழிய. ஆனால் நினைவுகளை மீட்டெழுக்கும் பொழுது சில நாட்கள் நினைவுக்கு வரும். அப்படி ஒரு நாள் தான் 3-ஜூன்-1994.  ஒரு கோடையின் இறுதியில் பள்ளிகளின் துவக்கத்தால் சற்றென தன் வேகத்தை மீட்டெடுத்த சிறு நகரத்தின் புத்துணர்ச்சியில் ஒரு ஒல்லி பையனாக ஒரு அடி கடற்படை நீல நிற ட்ரோஸரில் வெள்ளை நிற அரை கை சட்டையுடன் டை கட்டிக்கொண்டு டான் பாஸ்கோ பள்ளியிற்கு செல்கிறேன். எப்படி இந்த பள்ளியில் படித்து நல்ல ரெங்க் (rank) வாங்க போகிறேன் என்று நினைப்பு இருந்தது (ஏனெனில் அதற்கு முந்தைய பள்ளியில் 6ஆவது ரெங்க் எடுக்கவே மெனக்கெட்டேன்). முதல் நாள் அன்று பிரார்த்தனை மற்றும் பொது கூடுகைக்கு எல்லோரும் வகுப்பு வாரியாக வரிசையாக அணித்திரண்டோம். எல்லாமே ஆங்கில சொற்பொழிவு தான். ஒன்றும் விளங்கவில்லை எனக்கு. பாதர் தாமஸ் (Rev.Fr.Thomas) அன்று பள்ளி முதல்வர் என்பது நினைவில் உள்ளது. அவரின் கனிவான பழகும் குணம் அவர் ஒரு நல்ல மனிதர் என்று இன்று என் நினைவில் உள்ளது. கூடுகை முடிந்து எல்லோரும் வகுப்புக்கு செல்ல வேண்டும்.

எனக்கு எது வகுப்பரை என்று தெரியாமல் பின் தங்கினேன். பின்பு காவலாளி(watchman) என்னை அழைத்து சென்று வகுப்பில் விட்டார் என்று ஞாபகம். முதல் மாடியில் ஒரு குடிசையில் தான் என் வகுப்பு இருந்தது. வகுப்பில் ஆசிரியர் இருந்தார். நான் பின்னே சென்று உட்கார்ந்தேன். அங்கே என்னுடன் சட்டேன்று சகஜமாய் பக்கத்து வீட்டில் விளையாடி கதையாடும் நண்பனின் தோனியில் சற்றும் அண்ணியம் அற்ற ஒரு குரல் என்னுடன் பேசியது. அது பாலாவின் குரல். என்ன பேசினான் என்று தெரியவில்லை. ஆனால் என்னை சகஜ படுத்த தமிழில் பேசினான் என்று நினைக்கிறேன். திரும்பிபார்க்கையில் ஒரு நம்பிக்கை கீற்று அக்னி குஞ்சு போல் அங்கு புதைந்து கிடந்ததை இன்று பார்க்கிறேன். 

வகுப்புகள் முடிந்து மதிய உணவிற்கு சென்றேன். யாருடன் சாப்பிட்டேன் என்று நினைவில் இல்லை. முதல் சில நாட்கள் பாலா, ஐயப்பன் உடனோருடன் சாப்பிட்டேன் என்று நினைக்கிறேன். ஆனால் சில நாள் கழித்து ஸ்ரீராம், விக்ரம், வில்பர்ட், தினேஷ், என்ற ஒரு கோஷ்டியுடன் மாதாவின் குகை ஆலயத்திற்குள் சாப்பிட்டேன். இப்போது நினைத்தாலும் சிரிப்பு தான் வருகிறது அவர்கள் Jurassic Park சொன்ன கதை (அதுவரை பணக்காரன் மாப்பிள்ளை படங்களில் ரஜினி அந்த மொட்ட வில்லனை பதம் பார்த்த கதைகளை ஸ்வாரஸ்யமாக என் 7த் டே பள்ளி நண்பர்கள் சொல்லி கேட்டு பழகியிருந்தேன்) அவ்வளவு பிரம்மிப்பாக இருந்தது. ஆனால் மைக்கல் ஜாக்சன் பாடல்கள், ஆங்கில படங்கள், விடியோ கேம்ஸ் என்று மேல் தட்டு கேளிக்கைகள் எனக்கு அண்ணியமாகவே இருந்தன. அதனைவிட பெரிய அண்ணியம் இவர்கள் எல்லோரும் ஆங்கிலத்தில் தான் பெருவாரியாக உரையாடினார்கள். அவர்களை குறை சொல்லமுடியாது. அது பள்ளியின் சட்டம். என் மனம் வேறு ஒரு கோஷ்டியை நோக்கி தேடிக்கொண்டு இருந்தது. 

அங்கு இங்கு அலைந்து ஒரு வழியாக மரத்தின் நிழலில் காய்ந்த இலைகள் கலந்த மணலின் மேல் அமர்ந்த படி தமிழில் பேசி வீட்டு தெரு கதைகளை கதைத்து கொண்டு இருந்த ஒரு கூட்டத்துடன் இணைந்தேன். அதில் ஐயப்பன், வைத்தியநாதன், சந்திப், பாலா இருந்தனர். (சில காலம் கழித்து செல்வாவும் சேர்ந்தான்) அதன் பிறகு வேறு ஒர் குழுவை என் மனம் என்றும் தேடவில்லை. 

அந்த குழுவில் பல நாட்கள் பாலாவிடம் திட்டு வாங்கி இருக்கிறேன். ஏன்? பல நாட்கள் பீன்ஸ், பீட்ரூட், அவரைக்காய், டர்னிப் பொரியல் கரிகளை கீழே கொட்ட முற்படுவேன். ஒரு நாள் பாலா என்னிடம் அந்த கரியை வாங்கி சாப்பிட்டுவிட்டு, இது அவ்ளோ நல்லா இருக்கு உங்க அம்மா அவ்ளோ கஷ்ட பட்ராங்க, நீ இங்க சாப்பாட கொட்ர என்று திட்டினான். அதன் பிறகு நான் சாப்பாட்டை கொட்டியது இல்லை. எங்கள் கூட்டம் கலகலப்பான கூட்டம், சாப்பிட்டுவிட்டு அப்படியே மற்ற கூட்டங்களுக்கு சென்று ஒரு attendance உம் போடுவோம். அப்படி எல்லோருடனும் சகஜமாய் இருப்போம். பாலா விற்கு எல்லா விஷயமும் நன்றாய் தெரியும். அந்த காலத்திலேயே பிஞ்சாய் இருக்குமோதே ஆனந்த விகடன் குமுதம்லான் விட மாட்டான். கேட்டா? நான் பிரஞ்சு மாணவன். இந்த புக்ஸ்ல தான் தமிழ் படிக்கற்து தொடருதுனு சொல்லுவான்.

வகுப்பில் பாலாவிடம் என்ன சந்தேகமும் கேட்கலாம். எளிமையாக சொல்லி தருவான். இது இவ்வளவு சுலபமா, நம்மால் செய்ய முடியுதே என்று நமக்கே தன்னம்பிக்கை வரும். 9ஆம் வகுப்பு என்று நினைக்கிறேன் பள்ளியில் அறிவியில் கண்காட்சி நடந்தது, அதில் சிறுநிரகம் உறுப்பு பற்றி ஒரு மாதிரி வைத்தோம் நானும் ஜெயசந்திரனும். அதற்கு அன்றைய காலத்தில் ஒரு 100ரூபாய் செலவாகியது என்று நினைக்கிறேன். பாலா தான் left hand rule, right hand  rule, electro-magnetic force லான் எப்படி வேலை செய்யுதுனு எளிமையாக விளக்குவது போல ஒரு LED bulb வைத்துக்கொண்டு செயலியை தயார் செய்து காண்பித்தான். அவனுக்கு இரண்டாம் பரிசு கிடைத்தாக ஞாபகம். அது முடிந்த பிறகு பாலா என்னிடம் கேட்ட கேள்வி உனக்கு அறிவியல் கண்காட்சில ஏதாது பண்ணனும்னா என்கிட்ட கேட்டு இருக்கலாம் இல்ல பேசி இருக்கலாம். நான் உனக்கு ஐடியா கொடுத்து இருப்பேன். சும்மா காச செலவு செய்யாத. ஜெயசந்திரன் உன் தலைல பாதிக்கு மேல செலவையும் கட்டிடான் பாரு என்று சொன்னான்.

8ஆம் வகுப்பு எங்கள் இருவருக்கும் நல்ல ஒரு ஆண்டாக இருந்தது. பாலா முதல் மூன்று ரெங்க்ல உள்ளவர்களுக்கு ஒரு ஆரோக்கியமான போட்டியாக உருவானான். நானுமும் அதுவரை பல பாடங்களில் கோட்டைவிட்ட மாணவனாய் இருந்து படிப்படியாக முன்னேறி 15 ஆவது ரெங்க் எடுத்தேன். ஆண்டு இறுதியில் வரலாறு ஆசிரியரும் வகுப்பாசிரியருமான அமலோர்பவராஜு மாஸ்டர் சொன்ன வார்த்தை எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. இந்த வருஷத்தோட find-ந்நா அது பாலாவும் ராஜேஷும் தான். இரண்டு பேரும் ஆண்டு துவக்கத்தில் இருந்து இறுதிக்குள் மிக நல்ல முன்னேற்றம். (வகுப்பே திரும்பிபார்த்தது) இன்னும் நல்ல பண்ணனும் நு மனசார வாழ்த்தினார். 

காலம் ஓடியது 10 ஆம் வகுப்புக்கு வந்தோம். Board exam ஜுரம் எல்லோருக்கும் இருந்தது. எனக்கு தெரிஞ்சு எந்த coaching உம் போகாத ஒரே ஆள் பாலா தான். ஏன் எல்லாரும் Tuition ல 1000, 2000 ரூபாய் நு காசு செலவு பண்ரீங்க. நம்மலே வீட்ல படிக்கலாம் நு சொல்லுவான். அண்ணிக்கி அது புரியல. அவனுக்கு அது தேவை படலனு சொல்லலாம். என்னை போன்றோருக்கு தேவை பட்டது. அன்று அந்த தெளிவும் நிதானமும் அவனிடம் இருந்ததை இன்று நான் பார்க்கிறேன். பத்தாம் வகுப்பு முடிந்தது. என் அம்மா அவசர அவசரமாக எனக்கு பள்ளி மாற்று படிவம் வாங்கினார்கள். யாரிடமும் சொல்லிக்கொள்ள முடியவில்லை. +1, +2 வகுப்புகள் சங்கர வித்யாலாயாவில் சேர்ந்தேன். டான் பாஸ்கோவை மிஸ் செய்தேன். குறிப்பாக பாலாவை மிஸ் செய்தேன். ஆண்டு இறுதியில் வெற்றி coaching centre இல் entrance exam பயிற்சிக்கு சேர்ந்தேன். பாலா அங்கு இருந்தான். மிக்க மகிழ்ச்சி. நல்ல இடத்தில் இருக்கிறோம் என்று ஒரு நம்பிக்கை. ஆனால் அங்கும் ஒரு 3-4 மாதம் தான் இருந்தேன். மாருதி coaching centre க்கு சேர்ந்தேன். பாலா உடனான பிரிவு இருந்தது. 

2016 September

பின்பு பாலவை நான் புதுவை பொறியில் கல்லூரியில் பார்த்தேன். பாலா தனித்துவமானவன். நீர்ப்போல் வந்து காற்றுப்போல் செல்பவன். தப்புனா நேரடியா சொல்லிருவான். உரக்க சொன்னா சரியாயிடும்னு நினைக்க மாட்டான். முன்முடிவு இல்லாம எங்கிட்ட பேசுவான். ஆணிவேர் எதுனு காம்மிப்பான். அவனுடைய சித்தாங்களை திணிக்க மாட்டான். மனசுல காழ்ப்ப வெச்சுகிட்டு சிரிச்சு பேசினு பின்னாடி ஒரு சந்தர்பத்துல கக்க மாட்டான் மட்டு தட்ட மாட்டான். தன் உழைப்பின் மீது நம்பிக்கை உள்ளவன் பிறர் முன்னேற்றங்கள் மீது ரகசிய பொறாமை கொள்ளாதவன். முக்கியமா பொருள்களின் மீது பற்று இல்லாதவன் பாலா. எனக்கு camera அது இதுனு பொருள் மீது பற்று தலைதூக்கினபோது எல்லாம் என்னை அடக்கினவன்.  (இவன் என்ன சொல்லா போறானு தெரியல என்று) சற்று அச்சப்பட்டாலும் உள்ளூர வாஞ்சையுடன் யானையிடம் வேண்டும் வேண்டும் என்று பெறும் துதிகை அடி போல பல தடவை ஹிட்டுகளும், ஷொட்டுகளும், குட்டுகளும் அவனிடம் இருந்து வாங்கி இருக்கிறேன். அது இல்லாம பாலாவோட ரசனையும் உயர்வா இருக்கும். அவன் வாசிக்கிற புத்தகங்கள் நல்ல இலக்கிய தரமா இருக்கும். அவன்கிட்ட நான் கத்துக்கிட்ட முக்கியமான ஒன்னு அதுக் கூட. 

இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று 
புனையினும் புல்லென்னும் நட்பு (குறள் 790)

இவர் எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத் தன்மையுடையேம் என்று ஒருவரை ஒருவர் அலங்காரமாகப் பாராட்டிச் சொன்னாலும் நட்பு சிறப்பிழந்து விடும். ஆதலால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன் முடிவுரையில்லாமல்.

2018 November

தொடரும்....

(இதை வாசித்தவர்கள் கண்ணு போடாதீங்க ப்ளீஸ்). 

May 28, 2019

மாரீசம் யாதோ?

சில வருடங்கள் முன்பு திருக்குறளை நாளும் வாசித்து அர்த்தம் விளங்கி தியானித்து வந்தேன். ஒரு சமயம் ஜெயமோகன் அவர்கள் திருக்குறளையும் மற்ற சூத்திர நூல்களையும் (பாடல்களையும்) எப்படி வாசிக்க வேண்டும் என்று மனப்பாடம் என்னும் தலைப்பில் எழுதியிருந்தார். குறள்களை தியானித்தால் அது வேறு ஒரு நேரத்தில் நமக்குள் திறந்துக்கொள்ள வேண்டும் என்பதே சாராம்சம். அதுப்போல் எனக்கு பல குறள்கள் திறந்துக்கொண்டு உள்ளன. உதாரணமாக "பொருளல்லவற்றை பொருள் என்று உணரும்", "யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது", "தத்தம் கருமமே கட்டளை கல்", "யாதனின் யாதனின் நீங்கியான்", "காலம் கருதி இடத்தாற் செயின்", "கொக்கொக்க கூம்பும் பருவத்து", "இருள்நீங்கி இன்பம் பயக்கும்" போன்ற என்னற்ற குறள்கள் என் நினைவுக்கு பல சந்தர்ப்பங்களில் வந்துள்ளன.

அப்படி சமீபத்தில் மிக சோர்வுற்ற ஒரு சமயத்தில் என்னை (சொல்லினால் திகைக்கிற) சிறுமை செய்த போது குறள்களில் இருந்து இரு வார்த்தைகள் மனதில் எழுந்தன. ஒன்று “அஞ்சு", மற்றொன்று “சிறுமை நமக்கொழிய”. 

முதலாவது வார்த்தை எனக்கு சொல்லிகொடுத்தது நான் எதனை அஞ்ச வேண்டும். ஆதலால் அதனை நீங்க வேண்டும் (யாதனின் யாதனின் நீங்கியான் அதனினும் அதினும் இல). அவ்வாறு அதனை (பெருவாரியாக) நீங்கினால் நமக்கு பெருவாரியான நன்மையே. சற்று கடினமான காரியம் ஆயினும் அகம் ஒப்பாமல் புறவயமாய் ஒப்புவதால் நேரமே வீண். ஆதலால் நீங்குவோம். சில சமயம் சில இடைவெளிகளும் சில கால இடைவெளிகளும் நன்மைக்கே என்பதை முன்பே உணர்ந்திருக்கிறேன். "காலம் வருங்கால் முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல்". "அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்."

இரண்டாவது வார்த்தை காமத்துப்பாலில் இருந்து வரும் ஒரு குறள். அதனுடைய அர்த்தம் சிறுமை நமக்கல்ல தோழி நம்மை இத்தனை காலம் பிரிந்து சென்றவருக்குதான் என்பதாகும். இப்பொருள் என்னுடைய சூழ்நிலைக்கு பொருந்தவில்லை என்றாலும் அக்குறளின் முதல் வரி “சிறுமை நமக்கொழிய” என்பது இங்கே என் சுழ்நிலைக்கு நன்கு பொருந்துகிறது.  "நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு" என்பதை அறியாதாவர்கள். ஒருபொழுதும் ஒன்றும் துளங்காது நம்மை சிறுமை செய்பவர்களால் சிறுமை நமக்கல்ல ஏனெனில் "பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்" என்பது வள்ளுவன் வாக்கு. "மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற்று" அன்று (மனத்தால் நம்மோடு சேராதவரை எந்தக் காரியத்திலும் அவர்களின் சொல்லைக் கண்டு நம்ப முடியாது). 

(Prambanan Temple, Yogyakarta)

சொல்லுய்த்து மெய்யுணர்ந்தேன் மாரீசம் ஆதலால்
அஞ்சுகிறேன் அணுகாது நிற்கிறன்

பலாப்பழமென நினைந்தேன் பலூன் பழத்தில் 
அபானவாயுவே நிறைந்திருந்தது துர்க்கந்தம்

இழப்பு ஆங்கிழப்ப ஆகாது ஆதலால்
இழப்பு இங்கும் அல்ல

"இனம்போன்று இனமல்லார்" அவர் "உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க" ஆதலால் "நகுதற்கு இல்லை" என் நேரம் ஏனெனில் "கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது" ஆதலால் சிறுமைக்கு உண்டு "அடைக்குந்தாழ்" என்னும் முடிவை வந்தடையும் பொழுது “எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு”  என்பதை கூறிக்கொள்கிறேன். ஊழிற் பெருவலி  என்பதையும் கூறிக்கொள்கிறேன்.

😢

May 11, 2019

பல சமயம் புரிவதில்லை
சில சமயம் அமைவதில்லை
யாருக்கும் நிற்பதில்லை
மதியாதாரை மதிப்பதில்லை
கூர்மையில் பிசிறில்லை
உறக்கத்தில் விடுவதில்லை
புலம்புவதில் பயனில்லை
தராசில் சலனமில்லை
சக்தியில் குறைவில்லை
சோர்வினில் அர்த்தமில்லை
விரத்தியில் அழகில்லை
பாதையில் பின்னூட்டமில்லை
வெற்றி நிரந்தரமில்லை
இரக்கத்தில் ஏற்றமில்லை
செயல் கற்றுக்கொடுக்காமலில்லை
முயற்சியில் வெல்லாதவரில்லை
முயற்சிக்காதவர் வென்றதில்லை



April 11, 2019

துல்லியம் - ஒரு குட்டி கதை

மூன்றையும் எட்டையும் பெருக்கினால் என்ன? இருபத்திமூன்று என்று உன் நண்பன் சொன்னால் அவனிடம் நீ சண்டைக்கு போக கூடாது.  பரவாஇல்லை, நீ இருப்பத்திமூன்று நு நினைச்சு இருக்க, எனக்கு இருப்பத்திநாலு நு எங்க வாத்தியாரு சொல்லிகொடுத்து இருக்காரு. உங்க வாத்தியாரு இருப்பத்திமூனு நு சொல்லிகொடுத்து இருக்காரு. அதுல்லாம வாய்ப்பாடில் பலவிதம் இருக்கல. அதில இது ஒரு விதம். அதனால பரவாஇல்லை. அப்படி இருந்தால் நன்மை நமக்கே. வாழ்க்கைல துல்லியம் பின்சென்றால் நமக்கு தான் கேடு.

அதேப்போல் ஒரு மாணவன் வங்கியிற்கு நேர்காணலுக்கு சென்று இருக்கிறான். எட்டை மூனால் பெருக்கினால் என்ன என்று கேட்கிறார்கள். மாணவன் இருப்பத்தின் மூன்று என்று சொல்லிவிட்டு வருகிறான். வீட்டுக்கு வந்து ஐயோ நம்ம இவ்ளோ கிறுக்கா பதில் சொல்லி இருக்கோமே நமக்கு கிடைக்காது வேலைனு இருக்கான். ஒருவாரம் கழித்து வேலைக்கான அப்பாய்ன்மண்ட் ஆர்டர் வருகிறது. வேலையில் சேர்ந்து ஒருவருடன் பின் பணி நிரந்திரம் ஆனப்பிறகு மேலாளரிடம் கேட்கிறான், சார் நீங்க அன்னிக்கி அப்படி ஒரு கேள்வி கேட்டீங்க, நான் தப்பா சொல்லிட்டேன். நீங்க கவனிக்கல போல. மேலாளர் சொல்கிறார் அதலான் இல்ல தம்பி. இப்ப இனிமே நம்ம மாத்த முடியாது. அன்னிக்கி 294 பேர் நேர்காணல்க்கு வந்தாங்க. எல்லார்கிட்டையும் இந்த கேள்விய கேட்டேன். உன் பதில் தான் சரியான பதிலுக்கு பக்கத்துல இருந்த்துச்சு (nearest correct answer). அதனால உனக்கு வேலைய கொடுத்தேன். நான் ஒன்னும் தப்பு செய்யல. 

ஆதலால் வாழ்க்கையில் வெற்றி பெற nearest correct answer அதான் பார்க்கனும். ஆனா science'la perfection நு பாக்கனும். வாழ்க்கைல perfection/accuracy பாக்ககூடாது.

Perfection பத்தி சொல்லனும் நா, நம்ம பாக்கற்துலான் அழகா இருக்கு தானே தவிர அழகா இருப்பத்தை யெல்லாம் நாம் பார்ப்பத்தில்லை. அதனால் தான் ஒரு நீக்ரோ விற்கு ஒரு நீக்ரோவை பிடித்து இருக்கிறது. நமக்கு வித்தியாசமா இருக்கு. ஆதலால் வாழ்க்கைல துல்லியம் (perfection/accuracy) லான் பார்த்து வாழ்க்கைய வீண் அடிக்க கூடாது.

(நண்பனுக்கு)

February 20, 2019

2001

பல பொய்பிரச்சாரங்களையும்

உண்மையாக மறுத்தவனும்

இன்று அது

உண்மையாக இருந்திருக்கலாமோ

என்று நினைப்பானெனில்

......
போதும் போதும் ..

January 22, 2019

எனக்கு முக்கியமான ஜெயமோகன் மற்றும் பிற எழுத்தாளர்கள் பதிவுகள்

இக்கட்டுரைகளின் தொகுப்பு பெரும்பாலும் ஆசான் நிலையில் உள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் வலைத்தளத்தில் இருந்து வாசித்து சேமித்து வைக்கபட்டது. 

இவற்றில் எந்த ஒரு ஜெயமோகன் புத்தகமோ தொகுக்க படவில்லை. உதிரிகளாக சில இருக்கலாம். ஆயினும் அந்த ஒரு புத்தகமும் இல்லை. 


ஆனால், இக்கட்டுரைகள் தேர்ந்தெடுக்க எந்த வித ஒரு மதிப்பீடும் அளவுகோலும் நான் வைத்துக்கொள்வது இல்லை. பெரும்பாலும் 2-3 முறை வாசித்து இருப்பேன். இவை பெரும்பாலும் நான் வாசித்தபொழுது இருந்த மனநிலையில் அக்கட்டுரையில் இருந்த கருத்துக்காவோ அல்லது ஒரே ஒரு வரிக்காகவே அல்லது ஒரே ஒரு சொல்லுக்காக்கவோ எனக்கு முக்கியமானதாக பட்டவை. 

பெரும்பாலும் எனது மீள் வாசிப்பிற்காகவே பயன்படுத்தபடும் எனக்கான Bookmark post இது.

பொது

நூல்மரபில் - மனனம், ஸ்வாத்யாயம், தியானம் - மனப்பாடம்
செயல் தியானம் - தியானம்
இளிப்பியல்
அமெரிக்க நூலகச் சந்திப்பு - ஜெயமோகன் நேர்காணல் (Day Planning - என் நாளை எப்படி திட்டமிடுகிறேன், Indian Values)
நாம் எதைப்பற்றியாவது பெருமிதம் கொள்ளமுடியுமா?
ஒரே ஆசிரியரை வாசித்தல்
சகஜயோகம்
எதிர்விமர்சனங்களை தவிர்த்தல்… நம்பிக்கையிலிருந்து தொடங்குவது
யோகம்,ஞானம்
விற்பனை பற்றி - அகம்நக விற்பது - ஆட்டத்தின் ஐந்துவிதிகள் நூலுக்கான முன்னுரை 
எழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா?
எழுத்தாளன் வாழ்க்கை பற்றிஅறிவுரைக்கலாமா? -2
இயற்கையின் சான்றுறுதி (நாய்கள் பற்றிய எல்லா கட்டுரைகளும் இதன் கடைசியில் உள்ளன)
இன்றைய தற்கொலைகள் [செயல், பொருள், இலட்சியம், இலக்கு, குழந்தைகள், பெற்றோர்கள், தற்கொலை, அகவாழ்வு, உளச்சோர்வு, காதல், தோல்வி, நுகர்வு, விளையாட்டு, அதீத போட்டி]
இந்து பாக சாஸ்திரம்  (சமையல் மேல் ஏன் இத்தனை ஈடுபாடு? ஏனென்றால் இங்கே சமையல் வெறும் உணவு மட்டுமல்ல. அது சமூகப்படிநிலையில் மேலேறுவதன் வெளிப்பாடும்கூட)




லோலோ, கடிதம் [செல்வம், காமம், அதிகாரம் மூன்றிலும் மனிதனுக்கு பேராசை உள்ளது. அது அனைத்தையும் திரிபடையச் செய்கிறது.]

கௌதம் மேனன், துருவநட்சத்திரம், மீட்சி [குறுகிய கால தன்னலப் புத்தியால் இவற்றைச் செய்துவிட்டு தங்கள்  சொந்த வாழ்க்கையில், தங்கள் வாரிசுகளின் வாழ்க்கையில் அவற்றுக்கான விலையை கொடுக்காமல் சென்ற எவருமே இல்லை.............தோல்விச்சூழலில் வெளித்தெரிவதுதான் மனிதனின் தரம் என்பது.........அவரோட அந்த நிமிர்வு, எல்லாத்தையும் பொறுப்பேத்துக்கிட்டு எவரையுமே குறைசொல்லாம இருக்கிற அந்த ஃபைட்டர் ஆட்டிடியூட், அதான் எனக்கு இன்ஸ்பிரேஷன் ......... நான் வணிகமே செய்வதில்லை, என் அப்பாவின் ஆணை அது.]

ரசனை 
நுகர்வுக்கு அப்பால் [இயற்கையை ரசிப்பதைக்கூட நுகர்வாக எண்ணிக்கொள்ள நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். ஊட்டி ஏரியை பார்த்து ‘கொடுத்த காசுக்கு ஒர்த்துடா!” என்று சொல்லும் பலரை நான் கண்டிருக்கிறேன். அம்மனநிலை ரசனையை முற்றாக அழிப்பது. ஏனென்றால், நுகர்வு என்பது நாம் விரும்பும் பொருளை நம் விருப்பப்படி ஆக்கிக்கொண்டு அனுபவிப்பது. நம் விருப்பத்தையே பொருளாக ஆக்கி நுகர்ந்து மகிழ்கிறோம். ரசனை என்பது நாம் அந்த ரசிக்கப்படும் விஷயம் நோக்கி முன்னகர்வது. ரசனை என்பது நம்மை சற்றேனும் மேம்படுத்தவேண்டும். நுகர்வில் நாம் வளர்வதில்லை.............இன்றைய வாழ்க்கையில் நுகர்வோர் மனநிலைக்கு வெளியே சென்று நாம் அடைபவை மட்டுமே உண்மையில் மதிப்புள்ளவை. நுகர்வுக்கு அப்பால் செல்லும்போது மட்டுமே வாழ்கிறோம்.]



வரலாறு

இசை

கவிதை


ஆன்மிகம் 
கீதை
திருக்குறள் / இலக்கியம் / தத்துவம் / கல்வி / அறிவு / கலை


மு. இராகவையங்கார் - கலாச்சாரம் / அறிவுச்செயல்பாடு [கலாச்சாரம் என்பதே மானுட இயற்கைக்கு எதிராகச் செயல்படுதல் என்று சொல்லலாம். மானுடவிலங்கு காமமும் பசியும் வன்முறையுமாக அன்றாடத்தில் வாழ்ந்து அழிவது. உள்ளுணர்வு மட்டுமே அதன் தொடர்ச்சியாக நீடிக்கிறது. கலாச்சாரம் என்பது நேர் எதிரானது. காமத்தை வன்முறையை கட்டுப்படுத்தி, பசியை ஆட்சிசெய்தாலொழிய கட்டுப்பாடு இல்லை. கூடவே அன்றாடத்தில் மட்டுமே திளைக்கும் உள்ளத்தை இழுத்து விரித்து கடந்தகால நினைவுகளாக, எதிர்காலக் கனவுகளாக ஆக்கவேண்டும்.

சென்ற கால அறிஞர் ஒருவரை பற்றிப் பேசினால் உடனே “அதெல்லாம் தெரிஞ்சுகிட்டு இப்ப என்ன?” என்று உங்களுக்குத் தோன்றினால் நீங்கள் எவராக இருந்தாலும் கலாச்சாரத்துக்கு எதிரான எளிமையான மானுடவிலங்கு மட்டும்தான். இன்னொரு சொல்லில் பாமரர். அவர்களே நம்மில் பெரும்பாலானவர்கள். அதைச் சொன்னால் வருந்துவார்களென்றாலும் அதுவே உண்மை. அறிவுச்செயல்பாட்டில் ஈடுபடுபவர்கள் அறிஞர்களை நினைவுகூர்ந்தே ஆகவேண்டும். அப்படியெனில் மட்டுமே அவர்கள் நினைவுகூரப்படுவார்கள். அந்த உறுதிப்பாடே அறிவுச்செயல்பாட்டின் அடிப்படை ]

வயதடைதலும் வயதாவதும் -ஒரு கடிதம்
பாத்தும்மாவுடைய ஆடும் இளம் பருவத்துத்தோழியும்
காமமும் கம்பனும்- ஒரு காலைநேரம்
கம்பனும் காமமும், இரண்டு
கம்பனும் காமமும் 3:அருளும் மருளும் அது
மகள் மங்கலம் ,கம்பனும் காமமும் 6
மனம் (மனதை என்ன செய்யவேண்டும் குரு?)
பேச்சும் பயிற்சியும்  (மற்றும் பொதுக்கல்வி vs தற்கல்வி)
காடு, நிலம், தத்துவம் (நாங்கள் லாஜிக்கல் பாஸிடிவிஸத்தைக் கொண்டு அன்றுவரை பேசப்பட்ட அத்தனை தத்துவநிலைபாடுகளையும் உடைத்தோம். எஞ்சியது இடிபாடுகள். எங்களால் எதையும் உருவாக்க முடியவில்லை. அழகியலையோ அறவியலையோ” நாங்கள் லாஜிக்கல் பாஸிடிவிஸத்தைக் கொண்டு அன்றுவரை பேசப்பட்ட அத்தனை தத்துவநிலைபாடுகளையும் உடைத்தோம். எஞ்சியது இடிபாடுகள். எங்களால் எதையும் உருவாக்க முடியவில்லை. அழகியலையோ அறவியலையோ” )

அர்ஜுனனும் கர்ணனும் [மகாபாரதத்தில் கர்ணன் மெய்ஞானம் தேடி எந்தப் பயணத்தையாவது செய்திருக்கிறானா? எங்காவது அலைந்திருக்கிறானா?

மாறாக அர்ஜுனன் திசைப்பயணம் செய்துகொண்டே இருந்தவன். சிவனையே சந்தித்து பாசுபதம் பெற்றவன். தேடுபவனுக்கே சொல்லப்படும் இல்லையா? // அர்ஜுனர்களுக்கே கீதை சொல்லப்படமுடியும். ஒரு போரில் எதையும் அடையும் நோக்கம் இல்லாமல், எதற்கும் எதிராக இல்லாமல், கடமையின்பொருட்டே வில்லெடுப்பவர்கள் அர்ஜுனர்கள்தான். அவர்கள் வில்லை தாழ்த்துவது சொல்லைப் பெறுவதற்காகவே.]




====

இலக்கிய வாசிப்பு / வெண்முரசு பற்றி 
ஒரு மலரிதழை முளைக்க வைத்தல்
கல்விச்சாலையில் இந்திய மரபிலக்கியங்கள்
யானைடாக்டர்- கதை தொன்மமாதல் (கதையாக சொல்லுதல்)
மொழியாக்கங்களை வாசிப்பது (this has lot of references on translation works)
தமிழாசியா- வாழ்த்துரை (ஏன் வாசிக்க வேண்டும்? ஏன் எழுத்தாளர் வேண்டும்)
பிறழ்வுகள் [ஒரு கட்டிடத்தை நீங்கள் கட்டி குடியிருக்கிறீர்கள். தொன்மையான, பாரம்பரிய உரிமையாக கிடைத்த பழைய கட்டிடம். அதை ஒரு விசை உடைத்து விரிசலிடுகிறது. நீங்கள் அதை விட்டு வெளியே வந்து வெட்டவெளியில் நிற்கிறீர்கள். பின்னர் நீங்களே ஒரு புதிய வீட்டை கட்டுகிறீர்கள். புதிய வீடுகள் அவ்வாறுதான் கட்டப்படுகின்றன. அந்த விசைதான் இலக்கியம். அது உடைக்கிறது, மறுபரிசீலனைக்குச் செலுத்துகிறது]
மொழிவழி அறிதலும் மொழியை அறிதலும்  [நீங்கள் பார்த்த ஒன்றை, அறிந்த ஒன்றை மொழியாக ஆக்கத்தெரியவில்லை என்றால் உங்களுக்குள் அது எவ்வகையிலும் தொகுக்கப்படவில்லை என்றுதான் பொருள். அது எந்த வகையிலும் உங்களுக்குப் பயனற்றது என்பதே உண்மை]

ச ங் க ச் சி த் தி ர ங் க ள்

சங்கப்பாடல்








பேட்டிகள் 
ஓலைச்சுவடி இதழ் - பேட்டி
கட்டிடக் கலை


வெண்முரசு பற்றி 


=======================

புத்தர்


நகைச்சுவை


விலங்குகள்



குமரித்துறைவி [தனிமையின் புனைவுக்களியாட்டு / கதைத் திருவிழா]
=======================================================================


குமரித்துறைவியின் விழா [திருவிழா என்பதைப்பற்றி தொடர்ந்து சொல்லிவருகிறேன். ஆரல்வாய்மொழி என்னும் ஊரில் வாழ்பவர்கள் அந்தப் பத்துநாளும் இருக்கும் நிலை என்பது ஓர் அரிய விடுதலைநிலை. அப்படி ஒருவரின் ஆயுளில் நினைவறிய அறுபது எழுபது விழாக்களை பார்க்கமுடியும். வாழ்க்கை என்பதே அவ்வளவுதான். அதில் மகிழ்வுக்குரிய எந்த தருணமும் விடுதற்குரியவை அல்ல. சில்லறை ‘பகுத்தறிவு’ , நம்மை ஒரு படி மேலாக எண்ணிக்கொள்ளும் பலவகை ஆணவங்கள் வழியாக சமூகத்தின் கூட்டுக்களியாட்டங்களை இழந்தால் உளச்சோர்வுக்கே செல்வோம். உலகியல்வாழ்க்கையில் செல்வம் ஈட்டுவதும் நுகர்வதும் முக்கியம்தான், ஆனால் அவற்றுக்கிணையானவை இத்தகைய களியாட்டுகளும். பழங்குடிச் சமூகங்கள் முதல் அதிநவீன சமூகங்கள் வரை அவை வெவ்வேறு வகையில் உள்ளன]

=====

==========

======


====



வெண்முரசு கட்டுரைகள்
01 முதற்கனல்


=======================
========


கோவில்கள்

தொடர்கள் 
மகாபாரத கதைகள்



ஜெயமோகன் Quotes

தன்னிலை என்பது நாம் ஏற்று அணிந்துகொள்ளும் அடையாளம் அல்ல. நம்மில் உருவாகிக்கொண்டே இருப்பது. அழிந்து அழிந்து உருவாவது. [அத்வைத மரபின்படி ஒருவன் முதல்முழுமையின் பகுதியாக தன்னை அறுதியாக உணர்வதே முழுத்தன்னிலை. அதைக் கடந்து சென்று தன்னிலையழிவது வீடுபேறு]
- ஜெயமோகன் [இந்து என உணர்தல்- ஒரு கடிதமும் பதிலும்]

இங்கு நிகழும் நன்றுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது ஆணவம். தீதுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது மேலும் ஆணவம். இங்கு உங்களை எதிர்த்து நின்றிருப்போரின் வாழ்வை நீங்கள் அமைத்தீர்களா என்ன? இங்குவரை அவர்கள் தெரிந்து வந்தமைந்த வழியை வகுத்தீர்களா? முடிவுக்கு மட்டும் நீங்கள் எவ்வண்ணம் பொறுப்பேற்கிறீர்கள் என்ற உங்கள் சொல்லை நான் தலைக்கொண்டவன்.

இங்கனைத்திலும் நிறைந்திருக்கும் அழிவற்ற ஒன்றின் அலைகளே இவையென்று உணர்ந்தவன் துயரோ களிப்போ கொள்வதில்லை. எழுவதே அமையும். எரிவதே அணையும். எனவே இருமைகளற்று துலாமுள் என நிலைகொள்பவனுக்கு சோர்வென்பதில்லை என்றது உங்கள் மெய்வேதம்.
-ஜெயமோகன் [வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை-54]

ஆக, நான் முன்வைப்பது ஒரு முக்கியமான வேறுபாட்டை. போலிக்கும் அசலுக்குமான வேறுபாட்டை. உண்மையான கருத்தியல் நிலைப்பாட்டுக்கும் உள்நோக்கம் கொண்ட வெறுப்புக்குரலுக்கும் இடையேயான மாபெரும் தூரத்தை.

இந்நிலையில் செய்யக்கூடியது இந்த உண்மையை முடிந்தவரை உரத்துக்கூவுவதுதான். அதற்கு ஏதேனும் விளைவுகள் வருமென்றால் அதைச் சந்திப்பதுதான். அப்படி உரத்துக்கூவ முதன்மையான தகுதி நம் மடியில் கனமில்லாமல் இருப்பது. நமக்கு சுயலாப நோக்கங்கள் இல்லாமல், அவை பறிபோகுமா என்ற அச்சமில்லாமல் இருப்பது. அது எனக்கிருப்பதாக நம்புவதனால் இதைச் சொல்கிறேன்.
-ஜெயமோகன் [அவதூறு செய்கிறேனா?]

நான் எப்போதும் சொல்வதுதான் , ஒருவாழ்க்கையில் பல வாழ்க்கைகளை வாழ்பவனே வாழ்வை பொருள்கொள்ளச் செய்பவன். மெய்யாக வென்றவன் அவன். ஆனால் அவனுக்கு அறைகூவல்கள் மிகுதி. ஆகவே சோர்வும் கொந்தளிப்பும் மிகுதி. அவன் தன்னை மீண்டும் மீண்டும் தொகுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. வரையறை செய்ய வேண்டியிருக்கிறது. அதன்பின்னர் அதைக் கடக்க வேண்டியிருக்கிறது. அது சிந்தனையினூடாக நிகழவேண்டும்.
- ஜெயமோகன் [வரையறுத்து மீறிச்செல்லுதல்]


தனிப்பட்ட வாழ்க்கையில் உருவாகும் இடர்கள் கற்பதற்கும் மேலே செல்வதற்கும் தடைகள்தான். ஆனால் அதை நாம் கடந்தே ஆகவேண்டும் அதற்கான உளக்கருவிகள், வழிமுறைகள் ஒவ்வொருவருக்கும் ஒன்று அதை நாம் கண்டடையவேண்டும். சிலருக்கு பிரச்சினையில் இருந்து மானசீகமாக விலகிக்கொள்வது, சிலருக்கு அதை சிறுகச்சிறுக எதிர்கொள்வது, சிலருக்கு அதை வேறு ஒன்றாக கற்பனைசெய்துகொள்வது. ஆனால் விலகியாகவேண்டும் என்னும் உறுதியான எண்ணம் இருந்தால்போதும் - ஜெயமோகன் [இரு தொடக்கங்கள்]

எப்போது நாம் தத்தளிப்பின் எல்லையில் இனியென்ன என்று தவிக்கிறோமோ அப்போது நமது அந்தரங்கத்திலிருந்து அதுவரை நாமறிந்திராத ஓர் உள்ளொளி உதயமாகி நம்மை புதிய சாத்தியங்களின் வாசல்களை நோக்கி இட்டுச் செல்கிறது. அது தரும் தன்னம்பிக்கையும் துணிவும் என்றும் நமது வழித்துணையாக இருக்கும். சற்றும் எதிர்பாராதபடி ஓர் எரிமலை நம்முள் உடைந்து தீக்கங்குகளை உமிழும்போது, வானைத் துழாவும் தீ நாக்குகளை நாம் செயலற்றுப் பார்த்திருக்குபோது, அவ்வொளியில் புதிய தோற்றம் தரும் வானம், பிறகு நம் வாழ்வின் மிக இனிய நினைவுகளில் ஒன்றாக ஆகிவிடுகிறது.

– யதி & ஜெயமோகன்  [தும்பி]



வலியை எதிர்கொள்ள சிறந்த வழி என்பது வலியை கூர்ந்து கவனிக்க ஆரம்பிப்பதே. வலியில் நாம் நினைப்பவை எல்லாமே வலியுடன் தொடர்பு கொண்டவையாக இருக்கின்றன. எதையும் கூர்ந்து நோக்கும்போது நம்முடைய மனம் அதில் இருந்து மெல்ல விலகிவிடுகிறது. அதை வேடிக்கை பார்க்க ஆரம்பிக்கிறது. அந்த வேடிக்கை அவ்வனுபவத்தில் உள்ள அச்சம், துயரம், வலி போன்றவற்றை பெருமளவுக்குக் குறைத்து விடுகிறது

- ஜெயமோகன் [வலி]

மனிதர்களை எங்கும் சந்தித்துக்கொண்டேதான் இருக்கிறோம். அவர்களின் அன்பு காழ்ப்பு சிறுமை பெருமைகளுடன். ஒன்றை வைத்து இன்னொன்றை எடைபோடாமலிருப்பது, ஒன்றைப் பெருக்கி இன்னொன்றைக் காணாமலிருப்பதுதான் பயிலவேண்டிய நிலை.

- ஜெயமோகன் [கொரோனா- கடிதங்கள்]

பாதைகள் இருப்பது மண்ணிலும் கால்களிலுமல்ல. அவை காற்றில் வானில் திசைகளில் இருக்கின்றன. அவற்றை மனம்  எதிர்கொள்ளும் சாத்தியங்களில் இருக்கின்றன. பாதைகள் ஏற்கனவே நுண்வடிவில் இருந்துகோண்டிருக்கின்றன. தயங்கி ஐயுற்று துணிந்து மீண்டும் அஞ்சி மெல்லமெல்ல மனிதன் அவற்றுக்கு மண்ணில் ஒரு பருவடிவத்தை அளிக்கிறான்.

பலகோடி பாதைகளின் பின்னல்வலையால் முற்றிலும் சூழப்பட்ட இந்தபூமி ககனவெளியில் திரும்பித்திரும்பி பிற கோளங்களுக்கு நன் பாதைக்கோலத்தின் அழகைக் காட்டியபடிச் சுற்றி வருகிறது. பிரபஞ்சத்துக்கு அப்பாலிருந்து பார்க்கையில் கோள்களின் மீன்களின் மாபெரும் பாதைவலையே பிரபஞ்சமென்று தோன்றுமோ?

அப்படியே இருக்கட்டும் இந்தப்பாதை. அதன் மறுநுனியில் நானறிந்த அனைத்துமே இன்னும் மேலானதாக மேலும் மகத்தானதாக இருக்கட்டும். பாதை ஒரு  வாக்குறுதி, வெளியே திறந்த வாசல்.

-ஜெயமோகன் [குன்றுகள்,பாதைகள்]


நான்கு வினாக்களை கேட்டுக்கொள்ளவேண்டும். 

1. எதைச் செய்தால் நான் உண்மையாகவே மகிழ்ச்சியாக இருப்பேன்? 

2. எதைச்செய்ய என்னால் முடியும்? 

3. அதில் எனக்கிருக்கும் தடைகள் என்ன? 

4. அதைச்செய்வதற்கான திட்டங்கள் என்ன? 

தொடங்குங்கள். வாழ்நாள் முழுக்கச் செல்லுங்கள். அப்படி தொடங்குவது ஒரு பிறப்பு. அது ஒரு பிறந்தநாள் சூளுரை. அது ஒன்று போதும்.

-ஜெயமோகன் [புத்தாண்டுச் சூளுரை]

ஆகவே உங்களிடம் நான் என்ன சொல்வேன்? 

உங்களால் அரிது என்று மலைக்கப்படும் ஒரு செயலை இன்றே செய்ய தொடங்குங்கள்.

- ஜெயமோகன் [இருத்தலின் ஐயம்]

வாழ்வதன் அகலம் அல்ல, வாழ்வதன் ஆழமே முக்கியம்

நான் ஏன் செயலாற்ற வேண்டும் இந்த இனிமை போதுமே என்று கேட்கலாம். செயலாற்றுவதன் மூலம நாம் அடைவது தன்னிறைவு. செயல் போல் நிறைவளிக்கக்கூடியது ஏதுமில்லை. செயல் என்பதே நம்மை மற்ற உயிர்களிடத்தில் இருந்து பிரித்து காண்பிப்பது. செயலின்மை என்பது இனிய மது. செயலாற்றவே நாம் மனிதனாக பிறந்துள்ளோம். உண்மையில் எதையாவது செய்ய ஆரம்பித்து அதன் சவால்களைச் சந்தித்து அச்சவால்களைத் தூண்டுவது போல் சிறந்தக் கல்வி என ஏதுமில்லை. அது மிக மிக கூர்மையான கல்வி. அது செயல்முறைக் கல்வி. நமக்குப் பிடித்த தளத்தில் செயலாற்றுவதுதான் யோகம். அது நம்மை கண்டடையும் வழி. நம்மை முழுமைப்படுத்தும் வழி. வாழ்க்கை வெல்வதற்கும் நிறைவதற்கும் உரியது. பத்திரமாக பதுங்கி இருப்பதற்குரியதல்ல.

-ஜெயமோகன் [சரியான வாழ்க்கையா?] [தன்மீட்சி- கடிதம்]

நான் விதைக்குள் வாழும் அழியா நெருப்பு

அறத்தின் முன், ஊழின் முன், தெய்வங்களுக்கு முன் தணிவதே நாங்கள் கற்றாகவேண்டியது. இரக்கத்தை அடையும் அசுரன் தேவனாகிறான்.

சிறிய குன்றுகள் வழியாக நான் ஏறும் மாமலை ஒன்று இருக்கிறது.

அதாவது சகோதரா, சின்ன விஷயங்களில்தான் நமக்கு உடனடி வெற்றிகள் கிடைக்கும். சின்ன விஷயங்களில் உள்ள சின்னச்சின்ன சந்தோஷங்கள் நமக்கு மட்டுமே உரியவை. அவைதான் நமக்கு அன்றாடம் ருசிக்கத்தக்கவையாக இருக்கும். பெரிய விஷயங்கள் மலைகளைப்போல பக்கத்தில் இருந்தாலும் நாம் நெருங்கநெருங்க விலகிவிலகிச் செல்லக்கூடியவை. அவற்றை நெருங்கியதும் நாம் மிகமிகச் சிறியவர்களாக ஆகி மறைந்துவிடுவோம். பெரியவிஷயங்களில் உள்ள துன்பமும் ஏமாற்றமும் பிரம்மாண்டமானவை. அவற்றில் உள்ள வெற்றியும் மகிழ்ச்சியும் பல்லாயிரம்பேரால் பகிர்ந்துகொள்ளப்படும்.

ஆனாலும் பெரியவிஷயங்களை நோக்கிச் செல் என்றே நான் சொல்வேன். பெரியவிஷயங்களைச் செய். அல்லது பெரிய விஷயங்களுக்குப் பக்கத்திலே இரு. ஏனென்றால் அவைதான் சரித்திரம்…சரித்திரத்திலே பங்கெடுக்காத வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை. அப்படி வாழ்ந்து சாகிறவர்கள்தான் கோடிக்கணக்கானவர்கள். அவர்களெல்லாம் இதோ இந்த கங்கையில் வெடித்து அழியும் குமிழிகள்… நாமெல்லாம் போய் மறைவோம். சரித்திரம் மட்டும் எஞ்சும்
-ஜெயமோகன் [பிழை, சிறுகதை]


ஆனால் எந்த துறையிலும் முதன்மையாளர்கள் என்பவர்களுக்கு ஒரு தகுதி உண்டு, அவர்களின் நீண்டகால அர்ப்பணிப்பு. ஒன்றை தெரிவுசெய்து அதில் தன்னை முழுதளித்தல்.  நான் செய்வதுபோல ஒரு கரு அமைந்ததுமே கையில் வடிவம் உங்களுக்கு வரவேண்டுமா? என்னைப்போல நாற்பதாண்டுகள் ஒவ்வொருநாளும் குறைந்தது எட்டு மணிநேரம் முழுக்கவனத்துடன் வாசியுங்கள், எழுதுங்கள், ஓர் ஆண்டுக்கு பத்தாயிரம் கிலோமீட்டருக்கு குறையாமல் உலகைப் பார்ப்பதற்காக மட்டுமே பயணம் செய்யுங்கள், நீங்கள் மதிக்கும் அத்தனை பேராளுமைகளையும் எந்த தயக்கமும் இல்லாமல் சென்று பாருங்கள், ஆணவத்தை முழுமையாக கழற்றிவிட்டு காலடியில் அமர்ந்து கற்றுக்கொள்ளுங்கள். 

பிற தளங்களில் வெற்றியும் பணமும் புகழும் உள்ளது, நாலுபேர் மதிக்கும்படி இருக்கவேண்டும் என்பதுபோன்ற சபலங்களை கடந்து உங்கள் கலைக்கு உங்களை அளியுங்கள். அதன்பின் முயலுங்கள்.
- ஜெயமோகன் [’மாஸ்டர்’]

இந்த உடல் அதன் வடிவம் மூலம் உங்களுக்கு
ஒரு கடமையை விடுக்கிறது. செயலாற்றுக.
ஒரு சவாலை விடுக்கிறது. வென்று செல்க!
- ஜெயமோகன்

அத்திமரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைகாலம் நெருங்கிவிட்டதென்று அறிந்துகொள்வீர்கள். வேர்கள் காயும் கோடையில் புதிதெனத் தளிர்க்கும் மரங்கள் மட்டுமே அறியும் அவன் ரகசியம்.

வலியைப்பற்றிய அச்சமளவுக்கு பயங்கரமானதல்ல வலி. வலியைத் தாங்கமுடியாது என்ற கற்பனையே பொய். வலியைத் தாங்கமுடியும். மனிதனால் மிகமிகக் கடுமையான வலியைக்கூட தாங்கமுடியும். அதை உணர உணரத்தான் சித்ரவதைமுறைகள் மேலும் மேலும் கடுமையாகின்றன. அவை அப்படிக் கடுமையாக ஆவதிலிருந்தே மனிதன் வலியை வெல்கிறான் என்று தெரிகிறது. 

இதோ என்னைப்போல. நானும் வலியை வென்றிருக்கிறேன். என்னாலும் முடியும்… அந்த வெற்றியுணர்வு என்னைப் பூரிக்கச்செய்தது. என்னைப்பற்றி எப்போதும் உணராத பெருமிதம் உருவாயிற்று
- ஜெயமோகன் [கன்னி நிலம்]


எந்த பித்துக்கும் ஆட்படாத உள்ளம் கொண்டவர்கள் ,ஜாக்ரதையானவர்கள், இழப்பே இல்லாதவர்களாகவும் எங்குமே உரசிக்கொள்ளாதவர்களாகவும் மறுகரைக்குச் சென்றிருப்பார்கள். அவர்கள் அடைந்தவை என ஒரு சில கணங்கள்கூட இருக்காது. அவர்கள் வாழ்ந்திருக்க மாட்டார்கள், வெறுமே கடந்து சென்றிருப்பார்கள். அதற்காகவா வந்தோம்? 


பெருஞ்செயல் என்றால் பெருங்கனவின் நடைமுறை வடிவம். கனவு ஒட்டுமொத்தமானது.செயல் அதன் துளிகளால் ஆனது. துளிகளில் மனம் ஊன்றி தொடர்ச்சியாகச் செய்துகொண்டே இருக்கவேண்டியது. ஒட்டுமொத்தம் நம் கனவில் இருக்கிறது. ஆழத்தில் நாம் அறியாமல் உறைகிறது. துளிகளில் நாம் முழுமையாக வெளிப்பட்டோம் என்றால் ஒட்டுமொத்தம் ஒத்திசைவுடன் தன்னை நிகழ்த்திக்கொள்வதைக் காண்போம்

நான் ஒன்றைக் கண்டுகொண்டேன். 
அச்சம்தான் சித்ரவதையின் முக்கியமான கருவி. 
அச்சத்துக்கு ஆட்படாமலிருந்தாலே பாதி வென்றது போலத்தான். 
ஆனால் அச்சம் நம்மை மீறுகிறது. 
அதை வெல்ல ஒரே வழி அதை உதாசீனம் செய்வது. 
உதாசீனம் செய்யச் சிறந்தவழி பிறிதொன்றைக் கவனிப்பது…
- ஜெயமோகன் [கன்னி நிலம்]


ஆவேசமான ஒரு காதல் நம்மிடம் எப்போதும் ஊறிக்கொண்டே இருக்க வேண்டும். அந்தக் காதல் எப்போது இல்லாமலாகிறதோ அப்போது நம்முள் உயிர்ச்சக்தி இல்லாமல் ஆகிறது என்று பொருள்.
- ஜெயமோகன் [லோகி 1..காதலன்]

ஒருபோதும் சென்றடையவில்லை என்கிற நிறைவின்மையை அடைக!
- ஜெயமோகன்

January 21, 2019

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends,


By interpreting various meanings for every word in a Thirukkural I am attempting to write my explanation for Thirukkural. It is a small effort to understand Thirukkural little more deeply than usual and take it to my life.

I have taken it as project and it is document in the aforementioned blog.

Kindly have a look and if you find it good, you can subscribe to it

Best Regards
Rajesh
==================================================
அன்புள்ள வாசகர்களே / நண்பர்களே

ஒவ்வொரு பாலின் அதிகாரங்களும் (அதன் சுட்டிகளும்) இந்த முதன்மை பதிவின் சுட்டியில் உள்ளன.


ஒவ்வொரு சொல்லாய் ஆழ் பொருள் - - A sincere attempt at understanding the deeper meaning of Thirukkural by analyzing meanings word by word  

அன்புடன்
ராஜேஷ்

January 19, 2019

Who is your life partner???

Who is your life partner??? 
Mother?
Dad?
Husband /wife?
Best friend?
Son?
Daughter??
Teacher?
Principal?

Or someone else… ????

Not at all. Remember ! Your real life partner is Your Body.

Once your body stops responding no one is with you.
You are your body stay together from Birth till Death.
What you do to your body is your responsibility and that will come back to you.
The more you care for your body, the more you your body will care for you

What you eat, What you do for being Fit? How you deal with Stress? How much you Rest you give to it? will decide how your body gonna respond.

What your body wants is?
Love
Care
Respect
Politeness
Humbleness
Honesty

Remember your body is the only permanent address where You live.
Your body is your asset/ liability, which no one else can share.

Your body is your responsibility. Because, You are the real life partner. Be Fit forever, Take care of yourself. Money comes and goes, Relatives and Friends are not permanent.

Remember, No one can help your body other than you.

Pranayama - for Lungs
Meditation - for Mind
Yoga-Asanas - for Body
Walking - For Heart
Good Food - for Intestines
Good Thoughts - for Soul
Good Karma - for World

Be Fit forever.




December 27, 2018

2019 - Book Reading Challenge - Plan

=================
Daily Literary Works
=================
Daily Reads -  Bhagavat Gita According to Gandhi [2%]
Daily Reads - காந்திஜியின் இறுதி 200 நாட்கள்   - வி.ராமமூர்த்தி [Finished]

=================
Weekly Works
=================
Weekly Writes - 3 திருக்குறள் / Thirukkural - திருவள்ளுவர் [Finished] [114 Kurals, Avg 2.19 per week]
=================
2019 - OP1 - Jan - Mar
=================
1) Data Driven Marketing - 15 Metrics every marketer should know - Mark Jeffery  [Finished]
2) Profit First -  Transform Your Business from a Cash-Eating Monster to a Money-Making Machine by Mike Michalowicz  [Finished]
3) வெண்முரசு - #7 - இந்திர நீலம் - ஜெயமோகன் [Finished]
4) Think Straight - Change your thoughts and change your life - Darius Foroux [Finished]
5) பாத்துமாவின் ஆடு - பஷீர் [Finished]
6) இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் - அ.ச.ஞானசம்பந்தன்  [Finished]

Unplanned
Keep it Simple  - Unclutter your mind to uncomplicate your life - Joe Calloway  [Finished]
Surya Namaskar - A Technique of Solar Vitalization - Swami Satyananda Saraswathi  [Finished]
Solitude - A return to the Self - Anthony Storr [Finished]
Thanks a Thousand - A Gratitude Journey - A.J.Jacobs  [Finished]

AudioBooks
1) When: The Scientific Secrets of Perfect Timing [Finished]
2) Ego is the Enemy by Ryan Holiday [Finished]
3) The Courage to be Disliked by Ichiro Kishimi, Fumitake Koga  [Finished]
4) Digital Minimalism - Choosing a Focused Life in a Noisy World - Cal Newport [Finished]

=================
2019 - OP2 - Apr - Jun
=================
1) வெண்முரசு - #8 காண்டீபம் - ஜெயமோகன்[Currently Reading 29%]
2) ஒரு மனிதன் ஒரு வீடு ஒர் உலகம் - ஜெயகாந்தன்
3) Introduction to Gita - Sri Aurobindo
4) கே.பி.டி. சிரிப்பு ராஜசோழன் - க்ரேஸி மோகன்
5) உபசாரம் - சு.கா
6) Prana and Pranayama - Sri Niranjanandha Saraswathi

Unplanned
Asana Pranayama Mudra Bandha - Swami Satyananda Saraswati [Finished]


AudioBooks
1) The Subtle Art of Not giving a fuck - Mark Manson
2) How to Measure Anything: Finding the Value of "Intangibles" in Business [Plan Dropped]
3) The Five Dysfunctions of a Team by Patrick Lencioni
4) Measure What Matters. OKRs: The simple Idea that Drives 10x Growth - John Doerr  [Finished]

Unplanned Audiobooks
5) Escaping the Rabbit Hole: How to Debunk Conspiracy Theories Using Facts, Logic, and Respect - Mick West  [Listened 50%. Dropped]
6) Running is My Therapy - Scott Douglas  [Finished]
7) The Path Made Clear: Discovering Your Life's Direction and Purpose - Oprah Winfrey  [Finished]
8) Basic Economics - A common sense guide to the Economics - Thomas Sowell [Currently Listening]
9) The 5 AM Club : Own your Morning, Elevate your Life - Robin Sharma [Finished]
10) The Salt Fix - Why the Experts Got it All Wrong - and How Eating More (salt) Might Save Your Life - Dr. James DiNicolantonio [Finished]


=================
2019 - OP3 - Jul - Sep
=================
1) வெண்முரசு - #9 வெய்யோன்- ஜெயமோகன்
2) பாரதியின் சுய சரிதைகள் - கனவு, சின்னச் சங்கரன் கதை - ஆ.ரா.வேங்கடாசலபதி
3) ஒரு சிறு இசை - வண்ணதாசன்
4) புதுமைப்பித்தன் சிறுகதைகள்
5) பொய்தேவு - க.நா.சுப்ரமணியன்
6) ஒரு நாள் - க.நா.சு சுப்ரமண்யம்
7) Tamil translation of Sapiens - A brief history of humankind - Yuval Harari
8) Anti-Aging Hacks: 200+ Ways to Feel--and Look--Younger - Asp, Karen [Finished]
9) Lean in for Graduates: With New Chapters by Experts, Including Find Your First Job, Negotiate Your Salary, and Own Who You Are - Sandberg, Sheryl  [Finished]
10) Coconut Oil for Health: 100 Amazing and Unexpected Uses for Coconut Oil - Brandon, Britt [Finished]


AudioBooks
1) Never Split the Difference: Negotiating As If Your Life Depended On It - Chris Voss [Finished]
2) Thinking Fast and Slow - Daniel Kahneman
3) The Hard Things About Hard Things: Building a business when there are no easy answers

Unplanned Audiobooks
4) Changing Body Composition Through Diet and Exercise - Ormsbee, Michael [Finished]
5) The Diabetes Code: Prevent and Reverse Type 2 Diabetes Naturally - Fung, Jason  [Finished]
6) All Marketers Are Liars: The Power of Telling Authentic Stories in a Low-Trust World - Godin, Seth  [Finished]

=================
2019 - OP4 - Oct - Dec
=================
1) வெண்முரசு - #10 பன்னிரு படைக்களம் - ஜெயமோகன்
2) எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
3) போரும் அமைதியும் (1/3) - War and Peace - Leo Tolstoy - Translated by M.A.Susila 
4) போரும் அமைதியும் (2/3) - War and Peace - Leo Tolstoy - Translated by M.A.Susila 
5) போரும் அமைதியும் (3/3) - War and Peace - Leo Tolstoy - Translated by M.A.Susila
6) The Shooting Star - Shivya Nath
7) இன்றைய காந்திகள் - பாலசுப்ரமணியம் முத்துசாமி [Finished]
8) உரையாடும் காந்தி - ஜெயமோகன் / Jeyamohan [Finished]
9) 12 Health and Fitness Mistakes You Don't Know You're Making - Michael Matthews [Finished]
10) Home Workout For Beginners: The Ultimate Home Workout Plan On How To Get Fit For Life - Peterson Elle  [Finished]
11) Workout: Routines - Sample Strength And Conditioning Bodyweight Exercises Workout Routines For Men And Women (fitness training, stretching, home exercise, strength and conditioning Book 1) - David Nordmark [Finished]
12)

AudioBooks
1) Principles - Ray Dalio
2) Ideas and Opinions - Albert Einstein 
3) The Obstacle is the Way by Ryan Holiday
4) 21 Days of Guided Meditation - Aaptiv, Jess Ray [Finished]

Unplanned Audiobooks
Spark: The Revolutionary New Science of Exercise and the Brain - Ratey, John J.  [Finished]
The 4-Hour Work Week by by Timothy Ferriss [Finished]
The Clever Guts Diet - Michael Mosley  [Finished]


For Future
மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்
தந்திர பூமி (அல்லது சுதந்திர பூமி) - இந்திரா பார்த்தசாரதி
அசடன் - The Idiot -  Fyodor Dostoyevsky translated by M.A.Susila
கோபாலபுரத்து மக்கள் - கி.ராஜநாரயணன்
ஒளியிலானது - தேவதேவன் - ஜெயமோகன்
புயலிலே ஒரு தோனி - ப.சிங்காரம்
தனிமையின் 100 ஆண்டுகள் - One Hundred Years of Solitute -  Gabriel García Márquez, - Translated by Sukumaaran

Final Result
I completed reading 44 books as per the counter in goodreads.
3 of the fitness related books would together count for hardly 100 pages.
5 architecture and interior related books cannot be technically counted as good read
So I can call 35 books as good reads

I am actually happy about reading/listening to the following books
உரையாடும் காந்தி [Jeyamohan]
இன்றைய காந்திகள் [முத்துசாமி, பாலசுப்ரமணியம்]
பாத்துமாவின் ஆடு [Paatthumaavin Aadu]
வெண்முரசு – 07 – நூல் ஏழு – இந்திரநீலம்
காந்திஜியின் இறுதி 200 நாட்கள்

Measure What Matters
Never Split the Difference: Negotiating As If Your Life Depended On It
When: The Scientific Secrets of Perfect Timing
Profit First: A Simple System To Transform Any Business From A Cash-Eating Monster To A Money-Making Machine
Data-Driven Marketing: The 15 Metrics Everyone in Marketing Should Know

Spark: The Revolutionary New Science of Exercise and the Brain
Changing Body Composition Through Diet and Exercise
The Diabetes Code
The Salt Fix Method

The 5am Club
Solitude: A return to the Self
The Courage to Be Disliked: The Japanese Phenomenon That Shows You How to Change Your Life and Achieve Real Happiness


Asana Pranayama Mudra Bandha
Surya Namaskar