Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

April 11, 2019

துல்லியம் - ஒரு குட்டி கதை

மூன்றையும் எட்டையும் பெருக்கினால் என்ன? இருபத்திமூன்று என்று உன் நண்பன் சொன்னால் அவனிடம் நீ சண்டைக்கு போக கூடாது.  பரவாஇல்லை, நீ இருப்பத்திமூன்று நு நினைச்சு இருக்க, எனக்கு இருப்பத்திநாலு நு எங்க வாத்தியாரு சொல்லிகொடுத்து இருக்காரு. உங்க வாத்தியாரு இருப்பத்திமூனு நு சொல்லிகொடுத்து இருக்காரு. அதுல்லாம வாய்ப்பாடில் பலவிதம் இருக்கல. அதில இது ஒரு விதம். அதனால பரவாஇல்லை. அப்படி இருந்தால் நன்மை நமக்கே. வாழ்க்கைல துல்லியம் பின்சென்றால் நமக்கு தான் கேடு.

அதேப்போல் ஒரு மாணவன் வங்கியிற்கு நேர்காணலுக்கு சென்று இருக்கிறான். எட்டை மூனால் பெருக்கினால் என்ன என்று கேட்கிறார்கள். மாணவன் இருப்பத்தின் மூன்று என்று சொல்லிவிட்டு வருகிறான். வீட்டுக்கு வந்து ஐயோ நம்ம இவ்ளோ கிறுக்கா பதில் சொல்லி இருக்கோமே நமக்கு கிடைக்காது வேலைனு இருக்கான். ஒருவாரம் கழித்து வேலைக்கான அப்பாய்ன்மண்ட் ஆர்டர் வருகிறது. வேலையில் சேர்ந்து ஒருவருடன் பின் பணி நிரந்திரம் ஆனப்பிறகு மேலாளரிடம் கேட்கிறான், சார் நீங்க அன்னிக்கி அப்படி ஒரு கேள்வி கேட்டீங்க, நான் தப்பா சொல்லிட்டேன். நீங்க கவனிக்கல போல. மேலாளர் சொல்கிறார் அதலான் இல்ல தம்பி. இப்ப இனிமே நம்ம மாத்த முடியாது. அன்னிக்கி 294 பேர் நேர்காணல்க்கு வந்தாங்க. எல்லார்கிட்டையும் இந்த கேள்விய கேட்டேன். உன் பதில் தான் சரியான பதிலுக்கு பக்கத்துல இருந்த்துச்சு (nearest correct answer). அதனால உனக்கு வேலைய கொடுத்தேன். நான் ஒன்னும் தப்பு செய்யல. 

ஆதலால் வாழ்க்கையில் வெற்றி பெற nearest correct answer அதான் பார்க்கனும். ஆனா science'la perfection நு பாக்கனும். வாழ்க்கைல perfection/accuracy பாக்ககூடாது.

Perfection பத்தி சொல்லனும் நா, நம்ம பாக்கற்துலான் அழகா இருக்கு தானே தவிர அழகா இருப்பத்தை யெல்லாம் நாம் பார்ப்பத்தில்லை. அதனால் தான் ஒரு நீக்ரோ விற்கு ஒரு நீக்ரோவை பிடித்து இருக்கிறது. நமக்கு வித்தியாசமா இருக்கு. ஆதலால் வாழ்க்கைல துல்லியம் (perfection/accuracy) லான் பார்த்து வாழ்க்கைய வீண் அடிக்க கூடாது.

(நண்பனுக்கு)

February 20, 2019

2001

பல பொய்பிரச்சாரங்களையும்

உண்மையாக மறுத்தவனும்

இன்று அது

உண்மையாக இருந்திருக்கலாமோ

என்று நினைப்பானெனில்

......
போதும் போதும் ..

January 22, 2019

எனக்கு முக்கியமான ஜெயமோகன் மற்றும் பிற எழுத்தாளர்கள் பதிவுகள்

இக்கட்டுரைகளின் தொகுப்பு பெரும்பாலும் ஆசான் நிலையில் உள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் வலைத்தளத்தில் இருந்து வாசித்து சேமித்து வைக்கபட்டது. 

இவற்றில் எந்த ஒரு ஜெயமோகன் புத்தகமோ தொகுக்க படவில்லை. உதிரிகளாக சில இருக்கலாம். ஆயினும் அந்த ஒரு புத்தகமும் இல்லை. 


ஆனால், இக்கட்டுரைகள் தேர்ந்தெடுக்க எந்த வித ஒரு மதிப்பீடும் அளவுகோலும் நான் வைத்துக்கொள்வது இல்லை. பெரும்பாலும் 2-3 முறை வாசித்து இருப்பேன். இவை பெரும்பாலும் நான் வாசித்தபொழுது இருந்த மனநிலையில் அக்கட்டுரையில் இருந்த கருத்துக்காவோ அல்லது ஒரே ஒரு வரிக்காகவே அல்லது ஒரே ஒரு சொல்லுக்காக்கவோ எனக்கு முக்கியமானதாக பட்டவை. 

பெரும்பாலும் எனது மீள் வாசிப்பிற்காகவே பயன்படுத்தபடும் எனக்கான Bookmark post இது.

பொது

நூல்மரபில் - மனனம், ஸ்வாத்யாயம், தியானம் - மனப்பாடம்
செயல் தியானம் - தியானம்
இளிப்பியல்
அமெரிக்க நூலகச் சந்திப்பு - ஜெயமோகன் நேர்காணல் (Day Planning - என் நாளை எப்படி திட்டமிடுகிறேன், Indian Values)
நாம் எதைப்பற்றியாவது பெருமிதம் கொள்ளமுடியுமா?
ஒரே ஆசிரியரை வாசித்தல்
சகஜயோகம்
எதிர்விமர்சனங்களை தவிர்த்தல்… நம்பிக்கையிலிருந்து தொடங்குவது
யோகம்,ஞானம்
விற்பனை பற்றி - அகம்நக விற்பது - ஆட்டத்தின் ஐந்துவிதிகள் நூலுக்கான முன்னுரை 
எழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா?
எழுத்தாளன் வாழ்க்கை பற்றிஅறிவுரைக்கலாமா? -2
இயற்கையின் சான்றுறுதி (நாய்கள் பற்றிய எல்லா கட்டுரைகளும் இதன் கடைசியில் உள்ளன)
இன்றைய தற்கொலைகள் [செயல், பொருள், இலட்சியம், இலக்கு, குழந்தைகள், பெற்றோர்கள், தற்கொலை, அகவாழ்வு, உளச்சோர்வு, காதல், தோல்வி, நுகர்வு, விளையாட்டு, அதீத போட்டி]
இந்து பாக சாஸ்திரம்  (சமையல் மேல் ஏன் இத்தனை ஈடுபாடு? ஏனென்றால் இங்கே சமையல் வெறும் உணவு மட்டுமல்ல. அது சமூகப்படிநிலையில் மேலேறுவதன் வெளிப்பாடும்கூட)




லோலோ, கடிதம் [செல்வம், காமம், அதிகாரம் மூன்றிலும் மனிதனுக்கு பேராசை உள்ளது. அது அனைத்தையும் திரிபடையச் செய்கிறது.]

கௌதம் மேனன், துருவநட்சத்திரம், மீட்சி [குறுகிய கால தன்னலப் புத்தியால் இவற்றைச் செய்துவிட்டு தங்கள்  சொந்த வாழ்க்கையில், தங்கள் வாரிசுகளின் வாழ்க்கையில் அவற்றுக்கான விலையை கொடுக்காமல் சென்ற எவருமே இல்லை.............தோல்விச்சூழலில் வெளித்தெரிவதுதான் மனிதனின் தரம் என்பது.........அவரோட அந்த நிமிர்வு, எல்லாத்தையும் பொறுப்பேத்துக்கிட்டு எவரையுமே குறைசொல்லாம இருக்கிற அந்த ஃபைட்டர் ஆட்டிடியூட், அதான் எனக்கு இன்ஸ்பிரேஷன் ......... நான் வணிகமே செய்வதில்லை, என் அப்பாவின் ஆணை அது.]

ரசனை 
நுகர்வுக்கு அப்பால் [இயற்கையை ரசிப்பதைக்கூட நுகர்வாக எண்ணிக்கொள்ள நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். ஊட்டி ஏரியை பார்த்து ‘கொடுத்த காசுக்கு ஒர்த்துடா!” என்று சொல்லும் பலரை நான் கண்டிருக்கிறேன். அம்மனநிலை ரசனையை முற்றாக அழிப்பது. ஏனென்றால், நுகர்வு என்பது நாம் விரும்பும் பொருளை நம் விருப்பப்படி ஆக்கிக்கொண்டு அனுபவிப்பது. நம் விருப்பத்தையே பொருளாக ஆக்கி நுகர்ந்து மகிழ்கிறோம். ரசனை என்பது நாம் அந்த ரசிக்கப்படும் விஷயம் நோக்கி முன்னகர்வது. ரசனை என்பது நம்மை சற்றேனும் மேம்படுத்தவேண்டும். நுகர்வில் நாம் வளர்வதில்லை.............இன்றைய வாழ்க்கையில் நுகர்வோர் மனநிலைக்கு வெளியே சென்று நாம் அடைபவை மட்டுமே உண்மையில் மதிப்புள்ளவை. நுகர்வுக்கு அப்பால் செல்லும்போது மட்டுமே வாழ்கிறோம்.]



வரலாறு

இசை

கவிதை


ஆன்மிகம் 
கீதை
திருக்குறள் / இலக்கியம் / தத்துவம் / கல்வி / அறிவு / கலை


மு. இராகவையங்கார் - கலாச்சாரம் / அறிவுச்செயல்பாடு [கலாச்சாரம் என்பதே மானுட இயற்கைக்கு எதிராகச் செயல்படுதல் என்று சொல்லலாம். மானுடவிலங்கு காமமும் பசியும் வன்முறையுமாக அன்றாடத்தில் வாழ்ந்து அழிவது. உள்ளுணர்வு மட்டுமே அதன் தொடர்ச்சியாக நீடிக்கிறது. கலாச்சாரம் என்பது நேர் எதிரானது. காமத்தை வன்முறையை கட்டுப்படுத்தி, பசியை ஆட்சிசெய்தாலொழிய கட்டுப்பாடு இல்லை. கூடவே அன்றாடத்தில் மட்டுமே திளைக்கும் உள்ளத்தை இழுத்து விரித்து கடந்தகால நினைவுகளாக, எதிர்காலக் கனவுகளாக ஆக்கவேண்டும்.

சென்ற கால அறிஞர் ஒருவரை பற்றிப் பேசினால் உடனே “அதெல்லாம் தெரிஞ்சுகிட்டு இப்ப என்ன?” என்று உங்களுக்குத் தோன்றினால் நீங்கள் எவராக இருந்தாலும் கலாச்சாரத்துக்கு எதிரான எளிமையான மானுடவிலங்கு மட்டும்தான். இன்னொரு சொல்லில் பாமரர். அவர்களே நம்மில் பெரும்பாலானவர்கள். அதைச் சொன்னால் வருந்துவார்களென்றாலும் அதுவே உண்மை. அறிவுச்செயல்பாட்டில் ஈடுபடுபவர்கள் அறிஞர்களை நினைவுகூர்ந்தே ஆகவேண்டும். அப்படியெனில் மட்டுமே அவர்கள் நினைவுகூரப்படுவார்கள். அந்த உறுதிப்பாடே அறிவுச்செயல்பாட்டின் அடிப்படை ]

வயதடைதலும் வயதாவதும் -ஒரு கடிதம்
பாத்தும்மாவுடைய ஆடும் இளம் பருவத்துத்தோழியும்
காமமும் கம்பனும்- ஒரு காலைநேரம்
கம்பனும் காமமும், இரண்டு
கம்பனும் காமமும் 3:அருளும் மருளும் அது
மகள் மங்கலம் ,கம்பனும் காமமும் 6
மனம் (மனதை என்ன செய்யவேண்டும் குரு?)
பேச்சும் பயிற்சியும்  (மற்றும் பொதுக்கல்வி vs தற்கல்வி)
காடு, நிலம், தத்துவம் (நாங்கள் லாஜிக்கல் பாஸிடிவிஸத்தைக் கொண்டு அன்றுவரை பேசப்பட்ட அத்தனை தத்துவநிலைபாடுகளையும் உடைத்தோம். எஞ்சியது இடிபாடுகள். எங்களால் எதையும் உருவாக்க முடியவில்லை. அழகியலையோ அறவியலையோ” நாங்கள் லாஜிக்கல் பாஸிடிவிஸத்தைக் கொண்டு அன்றுவரை பேசப்பட்ட அத்தனை தத்துவநிலைபாடுகளையும் உடைத்தோம். எஞ்சியது இடிபாடுகள். எங்களால் எதையும் உருவாக்க முடியவில்லை. அழகியலையோ அறவியலையோ” )

அர்ஜுனனும் கர்ணனும் [மகாபாரதத்தில் கர்ணன் மெய்ஞானம் தேடி எந்தப் பயணத்தையாவது செய்திருக்கிறானா? எங்காவது அலைந்திருக்கிறானா?

மாறாக அர்ஜுனன் திசைப்பயணம் செய்துகொண்டே இருந்தவன். சிவனையே சந்தித்து பாசுபதம் பெற்றவன். தேடுபவனுக்கே சொல்லப்படும் இல்லையா? // அர்ஜுனர்களுக்கே கீதை சொல்லப்படமுடியும். ஒரு போரில் எதையும் அடையும் நோக்கம் இல்லாமல், எதற்கும் எதிராக இல்லாமல், கடமையின்பொருட்டே வில்லெடுப்பவர்கள் அர்ஜுனர்கள்தான். அவர்கள் வில்லை தாழ்த்துவது சொல்லைப் பெறுவதற்காகவே.]




====

இலக்கிய வாசிப்பு / வெண்முரசு பற்றி 
ஒரு மலரிதழை முளைக்க வைத்தல்
கல்விச்சாலையில் இந்திய மரபிலக்கியங்கள்
யானைடாக்டர்- கதை தொன்மமாதல் (கதையாக சொல்லுதல்)
மொழியாக்கங்களை வாசிப்பது (this has lot of references on translation works)
தமிழாசியா- வாழ்த்துரை (ஏன் வாசிக்க வேண்டும்? ஏன் எழுத்தாளர் வேண்டும்)
பிறழ்வுகள் [ஒரு கட்டிடத்தை நீங்கள் கட்டி குடியிருக்கிறீர்கள். தொன்மையான, பாரம்பரிய உரிமையாக கிடைத்த பழைய கட்டிடம். அதை ஒரு விசை உடைத்து விரிசலிடுகிறது. நீங்கள் அதை விட்டு வெளியே வந்து வெட்டவெளியில் நிற்கிறீர்கள். பின்னர் நீங்களே ஒரு புதிய வீட்டை கட்டுகிறீர்கள். புதிய வீடுகள் அவ்வாறுதான் கட்டப்படுகின்றன. அந்த விசைதான் இலக்கியம். அது உடைக்கிறது, மறுபரிசீலனைக்குச் செலுத்துகிறது]
மொழிவழி அறிதலும் மொழியை அறிதலும்  [நீங்கள் பார்த்த ஒன்றை, அறிந்த ஒன்றை மொழியாக ஆக்கத்தெரியவில்லை என்றால் உங்களுக்குள் அது எவ்வகையிலும் தொகுக்கப்படவில்லை என்றுதான் பொருள். அது எந்த வகையிலும் உங்களுக்குப் பயனற்றது என்பதே உண்மை]

ச ங் க ச் சி த் தி ர ங் க ள்

சங்கப்பாடல்








பேட்டிகள் 
ஓலைச்சுவடி இதழ் - பேட்டி
கட்டிடக் கலை


வெண்முரசு பற்றி 


=======================

புத்தர்


நகைச்சுவை


விலங்குகள்



குமரித்துறைவி [தனிமையின் புனைவுக்களியாட்டு / கதைத் திருவிழா]
=======================================================================


குமரித்துறைவியின் விழா [திருவிழா என்பதைப்பற்றி தொடர்ந்து சொல்லிவருகிறேன். ஆரல்வாய்மொழி என்னும் ஊரில் வாழ்பவர்கள் அந்தப் பத்துநாளும் இருக்கும் நிலை என்பது ஓர் அரிய விடுதலைநிலை. அப்படி ஒருவரின் ஆயுளில் நினைவறிய அறுபது எழுபது விழாக்களை பார்க்கமுடியும். வாழ்க்கை என்பதே அவ்வளவுதான். அதில் மகிழ்வுக்குரிய எந்த தருணமும் விடுதற்குரியவை அல்ல. சில்லறை ‘பகுத்தறிவு’ , நம்மை ஒரு படி மேலாக எண்ணிக்கொள்ளும் பலவகை ஆணவங்கள் வழியாக சமூகத்தின் கூட்டுக்களியாட்டங்களை இழந்தால் உளச்சோர்வுக்கே செல்வோம். உலகியல்வாழ்க்கையில் செல்வம் ஈட்டுவதும் நுகர்வதும் முக்கியம்தான், ஆனால் அவற்றுக்கிணையானவை இத்தகைய களியாட்டுகளும். பழங்குடிச் சமூகங்கள் முதல் அதிநவீன சமூகங்கள் வரை அவை வெவ்வேறு வகையில் உள்ளன]

=====

==========

======


====



வெண்முரசு கட்டுரைகள்
01 முதற்கனல்


=======================
========


கோவில்கள்

தொடர்கள் 
மகாபாரத கதைகள்



ஜெயமோகன் Quotes

தன்னிலை என்பது நாம் ஏற்று அணிந்துகொள்ளும் அடையாளம் அல்ல. நம்மில் உருவாகிக்கொண்டே இருப்பது. அழிந்து அழிந்து உருவாவது. [அத்வைத மரபின்படி ஒருவன் முதல்முழுமையின் பகுதியாக தன்னை அறுதியாக உணர்வதே முழுத்தன்னிலை. அதைக் கடந்து சென்று தன்னிலையழிவது வீடுபேறு]
- ஜெயமோகன் [இந்து என உணர்தல்- ஒரு கடிதமும் பதிலும்]

இங்கு நிகழும் நன்றுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது ஆணவம். தீதுக்கு நீங்களே பொறுப்பென்று எண்ணுவது மேலும் ஆணவம். இங்கு உங்களை எதிர்த்து நின்றிருப்போரின் வாழ்வை நீங்கள் அமைத்தீர்களா என்ன? இங்குவரை அவர்கள் தெரிந்து வந்தமைந்த வழியை வகுத்தீர்களா? முடிவுக்கு மட்டும் நீங்கள் எவ்வண்ணம் பொறுப்பேற்கிறீர்கள் என்ற உங்கள் சொல்லை நான் தலைக்கொண்டவன்.

இங்கனைத்திலும் நிறைந்திருக்கும் அழிவற்ற ஒன்றின் அலைகளே இவையென்று உணர்ந்தவன் துயரோ களிப்போ கொள்வதில்லை. எழுவதே அமையும். எரிவதே அணையும். எனவே இருமைகளற்று துலாமுள் என நிலைகொள்பவனுக்கு சோர்வென்பதில்லை என்றது உங்கள் மெய்வேதம்.
-ஜெயமோகன் [வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை-54]

ஆக, நான் முன்வைப்பது ஒரு முக்கியமான வேறுபாட்டை. போலிக்கும் அசலுக்குமான வேறுபாட்டை. உண்மையான கருத்தியல் நிலைப்பாட்டுக்கும் உள்நோக்கம் கொண்ட வெறுப்புக்குரலுக்கும் இடையேயான மாபெரும் தூரத்தை.

இந்நிலையில் செய்யக்கூடியது இந்த உண்மையை முடிந்தவரை உரத்துக்கூவுவதுதான். அதற்கு ஏதேனும் விளைவுகள் வருமென்றால் அதைச் சந்திப்பதுதான். அப்படி உரத்துக்கூவ முதன்மையான தகுதி நம் மடியில் கனமில்லாமல் இருப்பது. நமக்கு சுயலாப நோக்கங்கள் இல்லாமல், அவை பறிபோகுமா என்ற அச்சமில்லாமல் இருப்பது. அது எனக்கிருப்பதாக நம்புவதனால் இதைச் சொல்கிறேன்.
-ஜெயமோகன் [அவதூறு செய்கிறேனா?]

நான் எப்போதும் சொல்வதுதான் , ஒருவாழ்க்கையில் பல வாழ்க்கைகளை வாழ்பவனே வாழ்வை பொருள்கொள்ளச் செய்பவன். மெய்யாக வென்றவன் அவன். ஆனால் அவனுக்கு அறைகூவல்கள் மிகுதி. ஆகவே சோர்வும் கொந்தளிப்பும் மிகுதி. அவன் தன்னை மீண்டும் மீண்டும் தொகுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. வரையறை செய்ய வேண்டியிருக்கிறது. அதன்பின்னர் அதைக் கடக்க வேண்டியிருக்கிறது. அது சிந்தனையினூடாக நிகழவேண்டும்.
- ஜெயமோகன் [வரையறுத்து மீறிச்செல்லுதல்]


தனிப்பட்ட வாழ்க்கையில் உருவாகும் இடர்கள் கற்பதற்கும் மேலே செல்வதற்கும் தடைகள்தான். ஆனால் அதை நாம் கடந்தே ஆகவேண்டும் அதற்கான உளக்கருவிகள், வழிமுறைகள் ஒவ்வொருவருக்கும் ஒன்று அதை நாம் கண்டடையவேண்டும். சிலருக்கு பிரச்சினையில் இருந்து மானசீகமாக விலகிக்கொள்வது, சிலருக்கு அதை சிறுகச்சிறுக எதிர்கொள்வது, சிலருக்கு அதை வேறு ஒன்றாக கற்பனைசெய்துகொள்வது. ஆனால் விலகியாகவேண்டும் என்னும் உறுதியான எண்ணம் இருந்தால்போதும் - ஜெயமோகன் [இரு தொடக்கங்கள்]

எப்போது நாம் தத்தளிப்பின் எல்லையில் இனியென்ன என்று தவிக்கிறோமோ அப்போது நமது அந்தரங்கத்திலிருந்து அதுவரை நாமறிந்திராத ஓர் உள்ளொளி உதயமாகி நம்மை புதிய சாத்தியங்களின் வாசல்களை நோக்கி இட்டுச் செல்கிறது. அது தரும் தன்னம்பிக்கையும் துணிவும் என்றும் நமது வழித்துணையாக இருக்கும். சற்றும் எதிர்பாராதபடி ஓர் எரிமலை நம்முள் உடைந்து தீக்கங்குகளை உமிழும்போது, வானைத் துழாவும் தீ நாக்குகளை நாம் செயலற்றுப் பார்த்திருக்குபோது, அவ்வொளியில் புதிய தோற்றம் தரும் வானம், பிறகு நம் வாழ்வின் மிக இனிய நினைவுகளில் ஒன்றாக ஆகிவிடுகிறது.

– யதி & ஜெயமோகன்  [தும்பி]



வலியை எதிர்கொள்ள சிறந்த வழி என்பது வலியை கூர்ந்து கவனிக்க ஆரம்பிப்பதே. வலியில் நாம் நினைப்பவை எல்லாமே வலியுடன் தொடர்பு கொண்டவையாக இருக்கின்றன. எதையும் கூர்ந்து நோக்கும்போது நம்முடைய மனம் அதில் இருந்து மெல்ல விலகிவிடுகிறது. அதை வேடிக்கை பார்க்க ஆரம்பிக்கிறது. அந்த வேடிக்கை அவ்வனுபவத்தில் உள்ள அச்சம், துயரம், வலி போன்றவற்றை பெருமளவுக்குக் குறைத்து விடுகிறது

- ஜெயமோகன் [வலி]

மனிதர்களை எங்கும் சந்தித்துக்கொண்டேதான் இருக்கிறோம். அவர்களின் அன்பு காழ்ப்பு சிறுமை பெருமைகளுடன். ஒன்றை வைத்து இன்னொன்றை எடைபோடாமலிருப்பது, ஒன்றைப் பெருக்கி இன்னொன்றைக் காணாமலிருப்பதுதான் பயிலவேண்டிய நிலை.

- ஜெயமோகன் [கொரோனா- கடிதங்கள்]

பாதைகள் இருப்பது மண்ணிலும் கால்களிலுமல்ல. அவை காற்றில் வானில் திசைகளில் இருக்கின்றன. அவற்றை மனம்  எதிர்கொள்ளும் சாத்தியங்களில் இருக்கின்றன. பாதைகள் ஏற்கனவே நுண்வடிவில் இருந்துகோண்டிருக்கின்றன. தயங்கி ஐயுற்று துணிந்து மீண்டும் அஞ்சி மெல்லமெல்ல மனிதன் அவற்றுக்கு மண்ணில் ஒரு பருவடிவத்தை அளிக்கிறான்.

பலகோடி பாதைகளின் பின்னல்வலையால் முற்றிலும் சூழப்பட்ட இந்தபூமி ககனவெளியில் திரும்பித்திரும்பி பிற கோளங்களுக்கு நன் பாதைக்கோலத்தின் அழகைக் காட்டியபடிச் சுற்றி வருகிறது. பிரபஞ்சத்துக்கு அப்பாலிருந்து பார்க்கையில் கோள்களின் மீன்களின் மாபெரும் பாதைவலையே பிரபஞ்சமென்று தோன்றுமோ?

அப்படியே இருக்கட்டும் இந்தப்பாதை. அதன் மறுநுனியில் நானறிந்த அனைத்துமே இன்னும் மேலானதாக மேலும் மகத்தானதாக இருக்கட்டும். பாதை ஒரு  வாக்குறுதி, வெளியே திறந்த வாசல்.

-ஜெயமோகன் [குன்றுகள்,பாதைகள்]


நான்கு வினாக்களை கேட்டுக்கொள்ளவேண்டும். 

1. எதைச் செய்தால் நான் உண்மையாகவே மகிழ்ச்சியாக இருப்பேன்? 

2. எதைச்செய்ய என்னால் முடியும்? 

3. அதில் எனக்கிருக்கும் தடைகள் என்ன? 

4. அதைச்செய்வதற்கான திட்டங்கள் என்ன? 

தொடங்குங்கள். வாழ்நாள் முழுக்கச் செல்லுங்கள். அப்படி தொடங்குவது ஒரு பிறப்பு. அது ஒரு பிறந்தநாள் சூளுரை. அது ஒன்று போதும்.

-ஜெயமோகன் [புத்தாண்டுச் சூளுரை]

ஆகவே உங்களிடம் நான் என்ன சொல்வேன்? 

உங்களால் அரிது என்று மலைக்கப்படும் ஒரு செயலை இன்றே செய்ய தொடங்குங்கள்.

- ஜெயமோகன் [இருத்தலின் ஐயம்]

வாழ்வதன் அகலம் அல்ல, வாழ்வதன் ஆழமே முக்கியம்

நான் ஏன் செயலாற்ற வேண்டும் இந்த இனிமை போதுமே என்று கேட்கலாம். செயலாற்றுவதன் மூலம நாம் அடைவது தன்னிறைவு. செயல் போல் நிறைவளிக்கக்கூடியது ஏதுமில்லை. செயல் என்பதே நம்மை மற்ற உயிர்களிடத்தில் இருந்து பிரித்து காண்பிப்பது. செயலின்மை என்பது இனிய மது. செயலாற்றவே நாம் மனிதனாக பிறந்துள்ளோம். உண்மையில் எதையாவது செய்ய ஆரம்பித்து அதன் சவால்களைச் சந்தித்து அச்சவால்களைத் தூண்டுவது போல் சிறந்தக் கல்வி என ஏதுமில்லை. அது மிக மிக கூர்மையான கல்வி. அது செயல்முறைக் கல்வி. நமக்குப் பிடித்த தளத்தில் செயலாற்றுவதுதான் யோகம். அது நம்மை கண்டடையும் வழி. நம்மை முழுமைப்படுத்தும் வழி. வாழ்க்கை வெல்வதற்கும் நிறைவதற்கும் உரியது. பத்திரமாக பதுங்கி இருப்பதற்குரியதல்ல.

-ஜெயமோகன் [சரியான வாழ்க்கையா?] [தன்மீட்சி- கடிதம்]

நான் விதைக்குள் வாழும் அழியா நெருப்பு

அறத்தின் முன், ஊழின் முன், தெய்வங்களுக்கு முன் தணிவதே நாங்கள் கற்றாகவேண்டியது. இரக்கத்தை அடையும் அசுரன் தேவனாகிறான்.

சிறிய குன்றுகள் வழியாக நான் ஏறும் மாமலை ஒன்று இருக்கிறது.

அதாவது சகோதரா, சின்ன விஷயங்களில்தான் நமக்கு உடனடி வெற்றிகள் கிடைக்கும். சின்ன விஷயங்களில் உள்ள சின்னச்சின்ன சந்தோஷங்கள் நமக்கு மட்டுமே உரியவை. அவைதான் நமக்கு அன்றாடம் ருசிக்கத்தக்கவையாக இருக்கும். பெரிய விஷயங்கள் மலைகளைப்போல பக்கத்தில் இருந்தாலும் நாம் நெருங்கநெருங்க விலகிவிலகிச் செல்லக்கூடியவை. அவற்றை நெருங்கியதும் நாம் மிகமிகச் சிறியவர்களாக ஆகி மறைந்துவிடுவோம். பெரியவிஷயங்களில் உள்ள துன்பமும் ஏமாற்றமும் பிரம்மாண்டமானவை. அவற்றில் உள்ள வெற்றியும் மகிழ்ச்சியும் பல்லாயிரம்பேரால் பகிர்ந்துகொள்ளப்படும்.

ஆனாலும் பெரியவிஷயங்களை நோக்கிச் செல் என்றே நான் சொல்வேன். பெரியவிஷயங்களைச் செய். அல்லது பெரிய விஷயங்களுக்குப் பக்கத்திலே இரு. ஏனென்றால் அவைதான் சரித்திரம்…சரித்திரத்திலே பங்கெடுக்காத வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை. அப்படி வாழ்ந்து சாகிறவர்கள்தான் கோடிக்கணக்கானவர்கள். அவர்களெல்லாம் இதோ இந்த கங்கையில் வெடித்து அழியும் குமிழிகள்… நாமெல்லாம் போய் மறைவோம். சரித்திரம் மட்டும் எஞ்சும்
-ஜெயமோகன் [பிழை, சிறுகதை]


ஆனால் எந்த துறையிலும் முதன்மையாளர்கள் என்பவர்களுக்கு ஒரு தகுதி உண்டு, அவர்களின் நீண்டகால அர்ப்பணிப்பு. ஒன்றை தெரிவுசெய்து அதில் தன்னை முழுதளித்தல்.  நான் செய்வதுபோல ஒரு கரு அமைந்ததுமே கையில் வடிவம் உங்களுக்கு வரவேண்டுமா? என்னைப்போல நாற்பதாண்டுகள் ஒவ்வொருநாளும் குறைந்தது எட்டு மணிநேரம் முழுக்கவனத்துடன் வாசியுங்கள், எழுதுங்கள், ஓர் ஆண்டுக்கு பத்தாயிரம் கிலோமீட்டருக்கு குறையாமல் உலகைப் பார்ப்பதற்காக மட்டுமே பயணம் செய்யுங்கள், நீங்கள் மதிக்கும் அத்தனை பேராளுமைகளையும் எந்த தயக்கமும் இல்லாமல் சென்று பாருங்கள், ஆணவத்தை முழுமையாக கழற்றிவிட்டு காலடியில் அமர்ந்து கற்றுக்கொள்ளுங்கள். 

பிற தளங்களில் வெற்றியும் பணமும் புகழும் உள்ளது, நாலுபேர் மதிக்கும்படி இருக்கவேண்டும் என்பதுபோன்ற சபலங்களை கடந்து உங்கள் கலைக்கு உங்களை அளியுங்கள். அதன்பின் முயலுங்கள்.
- ஜெயமோகன் [’மாஸ்டர்’]

இந்த உடல் அதன் வடிவம் மூலம் உங்களுக்கு
ஒரு கடமையை விடுக்கிறது. செயலாற்றுக.
ஒரு சவாலை விடுக்கிறது. வென்று செல்க!
- ஜெயமோகன்

அத்திமரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைகாலம் நெருங்கிவிட்டதென்று அறிந்துகொள்வீர்கள். வேர்கள் காயும் கோடையில் புதிதெனத் தளிர்க்கும் மரங்கள் மட்டுமே அறியும் அவன் ரகசியம்.

வலியைப்பற்றிய அச்சமளவுக்கு பயங்கரமானதல்ல வலி. வலியைத் தாங்கமுடியாது என்ற கற்பனையே பொய். வலியைத் தாங்கமுடியும். மனிதனால் மிகமிகக் கடுமையான வலியைக்கூட தாங்கமுடியும். அதை உணர உணரத்தான் சித்ரவதைமுறைகள் மேலும் மேலும் கடுமையாகின்றன. அவை அப்படிக் கடுமையாக ஆவதிலிருந்தே மனிதன் வலியை வெல்கிறான் என்று தெரிகிறது. 

இதோ என்னைப்போல. நானும் வலியை வென்றிருக்கிறேன். என்னாலும் முடியும்… அந்த வெற்றியுணர்வு என்னைப் பூரிக்கச்செய்தது. என்னைப்பற்றி எப்போதும் உணராத பெருமிதம் உருவாயிற்று
- ஜெயமோகன் [கன்னி நிலம்]


எந்த பித்துக்கும் ஆட்படாத உள்ளம் கொண்டவர்கள் ,ஜாக்ரதையானவர்கள், இழப்பே இல்லாதவர்களாகவும் எங்குமே உரசிக்கொள்ளாதவர்களாகவும் மறுகரைக்குச் சென்றிருப்பார்கள். அவர்கள் அடைந்தவை என ஒரு சில கணங்கள்கூட இருக்காது. அவர்கள் வாழ்ந்திருக்க மாட்டார்கள், வெறுமே கடந்து சென்றிருப்பார்கள். அதற்காகவா வந்தோம்? 


பெருஞ்செயல் என்றால் பெருங்கனவின் நடைமுறை வடிவம். கனவு ஒட்டுமொத்தமானது.செயல் அதன் துளிகளால் ஆனது. துளிகளில் மனம் ஊன்றி தொடர்ச்சியாகச் செய்துகொண்டே இருக்கவேண்டியது. ஒட்டுமொத்தம் நம் கனவில் இருக்கிறது. ஆழத்தில் நாம் அறியாமல் உறைகிறது. துளிகளில் நாம் முழுமையாக வெளிப்பட்டோம் என்றால் ஒட்டுமொத்தம் ஒத்திசைவுடன் தன்னை நிகழ்த்திக்கொள்வதைக் காண்போம்

நான் ஒன்றைக் கண்டுகொண்டேன். 
அச்சம்தான் சித்ரவதையின் முக்கியமான கருவி. 
அச்சத்துக்கு ஆட்படாமலிருந்தாலே பாதி வென்றது போலத்தான். 
ஆனால் அச்சம் நம்மை மீறுகிறது. 
அதை வெல்ல ஒரே வழி அதை உதாசீனம் செய்வது. 
உதாசீனம் செய்யச் சிறந்தவழி பிறிதொன்றைக் கவனிப்பது…
- ஜெயமோகன் [கன்னி நிலம்]


ஆவேசமான ஒரு காதல் நம்மிடம் எப்போதும் ஊறிக்கொண்டே இருக்க வேண்டும். அந்தக் காதல் எப்போது இல்லாமலாகிறதோ அப்போது நம்முள் உயிர்ச்சக்தி இல்லாமல் ஆகிறது என்று பொருள்.
- ஜெயமோகன் [லோகி 1..காதலன்]

ஒருபோதும் சென்றடையவில்லை என்கிற நிறைவின்மையை அடைக!
- ஜெயமோகன்

January 21, 2019

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends,


By interpreting various meanings for every word in a Thirukkural I am attempting to write my explanation for Thirukkural. It is a small effort to understand Thirukkural little more deeply than usual and take it to my life.

I have taken it as project and it is document in the aforementioned blog.

Kindly have a look and if you find it good, you can subscribe to it

Best Regards
Rajesh
==================================================
அன்புள்ள வாசகர்களே / நண்பர்களே

ஒவ்வொரு பாலின் அதிகாரங்களும் (அதன் சுட்டிகளும்) இந்த முதன்மை பதிவின் சுட்டியில் உள்ளன.


ஒவ்வொரு சொல்லாய் ஆழ் பொருள் - - A sincere attempt at understanding the deeper meaning of Thirukkural by analyzing meanings word by word  

அன்புடன்
ராஜேஷ்

January 19, 2019

Who is your life partner???

Who is your life partner??? 
Mother?
Dad?
Husband /wife?
Best friend?
Son?
Daughter??
Teacher?
Principal?

Or someone else… ????

Not at all. Remember ! Your real life partner is Your Body.

Once your body stops responding no one is with you.
You are your body stay together from Birth till Death.
What you do to your body is your responsibility and that will come back to you.
The more you care for your body, the more you your body will care for you

What you eat, What you do for being Fit? How you deal with Stress? How much you Rest you give to it? will decide how your body gonna respond.

What your body wants is?
Love
Care
Respect
Politeness
Humbleness
Honesty

Remember your body is the only permanent address where You live.
Your body is your asset/ liability, which no one else can share.

Your body is your responsibility. Because, You are the real life partner. Be Fit forever, Take care of yourself. Money comes and goes, Relatives and Friends are not permanent.

Remember, No one can help your body other than you.

Pranayama - for Lungs
Meditation - for Mind
Yoga-Asanas - for Body
Walking - For Heart
Good Food - for Intestines
Good Thoughts - for Soul
Good Karma - for World

Be Fit forever.




December 27, 2018

2019 - Book Reading Challenge - Plan

=================
Daily Literary Works
=================
Daily Reads -  Bhagavat Gita According to Gandhi [2%]
Daily Reads - காந்திஜியின் இறுதி 200 நாட்கள்   - வி.ராமமூர்த்தி [Finished]

=================
Weekly Works
=================
Weekly Writes - 3 திருக்குறள் / Thirukkural - திருவள்ளுவர் [Finished] [114 Kurals, Avg 2.19 per week]
=================
2019 - OP1 - Jan - Mar
=================
1) Data Driven Marketing - 15 Metrics every marketer should know - Mark Jeffery  [Finished]
2) Profit First -  Transform Your Business from a Cash-Eating Monster to a Money-Making Machine by Mike Michalowicz  [Finished]
3) வெண்முரசு - #7 - இந்திர நீலம் - ஜெயமோகன் [Finished]
4) Think Straight - Change your thoughts and change your life - Darius Foroux [Finished]
5) பாத்துமாவின் ஆடு - பஷீர் [Finished]
6) இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் - அ.ச.ஞானசம்பந்தன்  [Finished]

Unplanned
Keep it Simple  - Unclutter your mind to uncomplicate your life - Joe Calloway  [Finished]
Surya Namaskar - A Technique of Solar Vitalization - Swami Satyananda Saraswathi  [Finished]
Solitude - A return to the Self - Anthony Storr [Finished]
Thanks a Thousand - A Gratitude Journey - A.J.Jacobs  [Finished]

AudioBooks
1) When: The Scientific Secrets of Perfect Timing [Finished]
2) Ego is the Enemy by Ryan Holiday [Finished]
3) The Courage to be Disliked by Ichiro Kishimi, Fumitake Koga  [Finished]
4) Digital Minimalism - Choosing a Focused Life in a Noisy World - Cal Newport [Finished]

=================
2019 - OP2 - Apr - Jun
=================
1) வெண்முரசு - #8 காண்டீபம் - ஜெயமோகன்[Currently Reading 29%]
2) ஒரு மனிதன் ஒரு வீடு ஒர் உலகம் - ஜெயகாந்தன்
3) Introduction to Gita - Sri Aurobindo
4) கே.பி.டி. சிரிப்பு ராஜசோழன் - க்ரேஸி மோகன்
5) உபசாரம் - சு.கா
6) Prana and Pranayama - Sri Niranjanandha Saraswathi

Unplanned
Asana Pranayama Mudra Bandha - Swami Satyananda Saraswati [Finished]


AudioBooks
1) The Subtle Art of Not giving a fuck - Mark Manson
2) How to Measure Anything: Finding the Value of "Intangibles" in Business [Plan Dropped]
3) The Five Dysfunctions of a Team by Patrick Lencioni
4) Measure What Matters. OKRs: The simple Idea that Drives 10x Growth - John Doerr  [Finished]

Unplanned Audiobooks
5) Escaping the Rabbit Hole: How to Debunk Conspiracy Theories Using Facts, Logic, and Respect - Mick West  [Listened 50%. Dropped]
6) Running is My Therapy - Scott Douglas  [Finished]
7) The Path Made Clear: Discovering Your Life's Direction and Purpose - Oprah Winfrey  [Finished]
8) Basic Economics - A common sense guide to the Economics - Thomas Sowell [Currently Listening]
9) The 5 AM Club : Own your Morning, Elevate your Life - Robin Sharma [Finished]
10) The Salt Fix - Why the Experts Got it All Wrong - and How Eating More (salt) Might Save Your Life - Dr. James DiNicolantonio [Finished]


=================
2019 - OP3 - Jul - Sep
=================
1) வெண்முரசு - #9 வெய்யோன்- ஜெயமோகன்
2) பாரதியின் சுய சரிதைகள் - கனவு, சின்னச் சங்கரன் கதை - ஆ.ரா.வேங்கடாசலபதி
3) ஒரு சிறு இசை - வண்ணதாசன்
4) புதுமைப்பித்தன் சிறுகதைகள்
5) பொய்தேவு - க.நா.சுப்ரமணியன்
6) ஒரு நாள் - க.நா.சு சுப்ரமண்யம்
7) Tamil translation of Sapiens - A brief history of humankind - Yuval Harari
8) Anti-Aging Hacks: 200+ Ways to Feel--and Look--Younger - Asp, Karen [Finished]
9) Lean in for Graduates: With New Chapters by Experts, Including Find Your First Job, Negotiate Your Salary, and Own Who You Are - Sandberg, Sheryl  [Finished]
10) Coconut Oil for Health: 100 Amazing and Unexpected Uses for Coconut Oil - Brandon, Britt [Finished]


AudioBooks
1) Never Split the Difference: Negotiating As If Your Life Depended On It - Chris Voss [Finished]
2) Thinking Fast and Slow - Daniel Kahneman
3) The Hard Things About Hard Things: Building a business when there are no easy answers

Unplanned Audiobooks
4) Changing Body Composition Through Diet and Exercise - Ormsbee, Michael [Finished]
5) The Diabetes Code: Prevent and Reverse Type 2 Diabetes Naturally - Fung, Jason  [Finished]
6) All Marketers Are Liars: The Power of Telling Authentic Stories in a Low-Trust World - Godin, Seth  [Finished]

=================
2019 - OP4 - Oct - Dec
=================
1) வெண்முரசு - #10 பன்னிரு படைக்களம் - ஜெயமோகன்
2) எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
3) போரும் அமைதியும் (1/3) - War and Peace - Leo Tolstoy - Translated by M.A.Susila 
4) போரும் அமைதியும் (2/3) - War and Peace - Leo Tolstoy - Translated by M.A.Susila 
5) போரும் அமைதியும் (3/3) - War and Peace - Leo Tolstoy - Translated by M.A.Susila
6) The Shooting Star - Shivya Nath
7) இன்றைய காந்திகள் - பாலசுப்ரமணியம் முத்துசாமி [Finished]
8) உரையாடும் காந்தி - ஜெயமோகன் / Jeyamohan [Finished]
9) 12 Health and Fitness Mistakes You Don't Know You're Making - Michael Matthews [Finished]
10) Home Workout For Beginners: The Ultimate Home Workout Plan On How To Get Fit For Life - Peterson Elle  [Finished]
11) Workout: Routines - Sample Strength And Conditioning Bodyweight Exercises Workout Routines For Men And Women (fitness training, stretching, home exercise, strength and conditioning Book 1) - David Nordmark [Finished]
12)

AudioBooks
1) Principles - Ray Dalio
2) Ideas and Opinions - Albert Einstein 
3) The Obstacle is the Way by Ryan Holiday
4) 21 Days of Guided Meditation - Aaptiv, Jess Ray [Finished]

Unplanned Audiobooks
Spark: The Revolutionary New Science of Exercise and the Brain - Ratey, John J.  [Finished]
The 4-Hour Work Week by by Timothy Ferriss [Finished]
The Clever Guts Diet - Michael Mosley  [Finished]


For Future
மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்
தந்திர பூமி (அல்லது சுதந்திர பூமி) - இந்திரா பார்த்தசாரதி
அசடன் - The Idiot -  Fyodor Dostoyevsky translated by M.A.Susila
கோபாலபுரத்து மக்கள் - கி.ராஜநாரயணன்
ஒளியிலானது - தேவதேவன் - ஜெயமோகன்
புயலிலே ஒரு தோனி - ப.சிங்காரம்
தனிமையின் 100 ஆண்டுகள் - One Hundred Years of Solitute -  Gabriel García Márquez, - Translated by Sukumaaran

Final Result
I completed reading 44 books as per the counter in goodreads.
3 of the fitness related books would together count for hardly 100 pages.
5 architecture and interior related books cannot be technically counted as good read
So I can call 35 books as good reads

I am actually happy about reading/listening to the following books
உரையாடும் காந்தி [Jeyamohan]
இன்றைய காந்திகள் [முத்துசாமி, பாலசுப்ரமணியம்]
பாத்துமாவின் ஆடு [Paatthumaavin Aadu]
வெண்முரசு – 07 – நூல் ஏழு – இந்திரநீலம்
காந்திஜியின் இறுதி 200 நாட்கள்

Measure What Matters
Never Split the Difference: Negotiating As If Your Life Depended On It
When: The Scientific Secrets of Perfect Timing
Profit First: A Simple System To Transform Any Business From A Cash-Eating Monster To A Money-Making Machine
Data-Driven Marketing: The 15 Metrics Everyone in Marketing Should Know

Spark: The Revolutionary New Science of Exercise and the Brain
Changing Body Composition Through Diet and Exercise
The Diabetes Code
The Salt Fix Method

The 5am Club
Solitude: A return to the Self
The Courage to Be Disliked: The Japanese Phenomenon That Shows You How to Change Your Life and Achieve Real Happiness


Asana Pranayama Mudra Bandha
Surya Namaskar

December 22, 2018

2018

இவ்வாண்டு இவ்வளவு கடுமையானதாக எனக்கு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. கடினம் கடினம் கரிமலை கடினம் என்று சரணகோஷம் முழங்கி இருக்கிறேன். ஆனால் கடினம் கடினம் வாழ்வு மிக மிக கடினம் என்று விரத்தியின் உச்சியிற்கே வந்துவிட்டேன் என்று தான் சொல்ல வேண்டும். 

ஜனவரி-மார்ச்
வருட துவக்கத்தில் நன்றாகவே இருந்தது. முதன்முறையாக சபரிமலையின் மகர விளக்கை காண சென்றேன். நன்றாக தரிசனம் கண்டேன். கூடுதலாக திருவாபரண தரிசனம் பெற்றேன். அது மட்டுமில்லாமல் ஐய்யப்பனின் (போர் வாள், அரிவாள், ராஜா முகம் உடனான) திருவாபரண அலங்காரத்தையும் கண்டுகளித்தேன்.  

உடற்பயிற்சியில் ஈடுபட்டு எனது கொழுப்பின் அளவுகளையும் குறைத்தேன். தம்பி மணிகண்டனின் கல்யாண வேலைகளில் ஈடுபட்டேன். எல்லாம் நன்றாக சென்றுகொண்டு இருந்தது. ஆனால் வேலையும் கிடைக்கவில்லை,  கனடா பி.ஆர்க்கான அழைப்பு வரவில்லை.

கனடா வில் பி.ஆர் எனப்படும் நிரந்திர தங்குமுரிமை கிடைக்க நவம்பர் 2017இல் விண்ணப்பித்தேன். ஆனால் ஒவ்வொரு இருவாரமும் ஒரு புள்ளி இரண்டு புள்ளிகளில் கோட்டை விட்டேன். ஒன்றும் செய்யமுடியாத கையறு நிலையில் இருந்தேன் ஏனெனில் என்னால் எடுக்க முடிந்த எல்லா புள்ளிகளையும் எடுத்துவிட்டிருந்த நிலையது. 

தம்பியின் கல்யாண முறைமைகள் நன்றாக துவங்கியது. கல்யாணத்திற்கு கிளம்புவதற்கு முன் இரவு என் மனைவியிற்கு வாய் குளரியது. அதன் வீரியம் புரியாமல் இருந்தேன். காலையில் அவளால் இடது கையை அசைக்ககூட முடியவில்லை எழவும் நடக்கவும் முடியவில்லை. அழகுவேல் சொன்னதால் சி.டி.ஸ்கேன் எடுத்துவிட்டு சென்னை சென்றோம். அங்கு தான் இடி காத்திருந்தது. என் மனைவியிற்கு ஸ்ட்ரோக் (மூளை பக்கவாதம்) தாக்கி இருந்தது தெரியவந்தது. நாங்கள் இதை அறிந்த நேரம் ஸ்ட்ரோக் வந்தால் கொடுக்ககூடிய சிகிச்சையின் பொன் நேரம் (3 மணிநேரத்திற்குள்ளே வர வேண்டும்)  தாண்டி (13 மணிநேரம் கழித்து) வந்து சேர்ந்தோம். சிகிழ்ச்சை கொடுக்க முடியவில்லை. ஆதலால் அப்போலோ சென்றோம். நண்பர்கள் (அவர்களின் மூளை நரம்பியல் நிபுண மருத்துவர்கள்) உதவியுடன் மேற்படி பராமரிப்பு சிகிழ்ச்சை அளித்தோம். அவள் செய்த புண்ணியத்தால் அவளுடைய பக்காவாதம் குறைந்து பத்து நாட்களில் வீடு திரும்பினாள். ஆனால் அவள் சரிவர சராசரியாக ஆக இரண்டு மாதம் ஆனது. இதற்கிடையில் என் தம்பியின் கல்யாணத்தையும் காணகொடுப்பினையில்லை எங்கள் இருவருக்கும். 

ஏப்ரல்-ஜூன்
மனைவியின் தங்கையின் கல்யாணம் ஜூனில் இருந்ததால் மனைவியின் பெற்றோர்கள் அவளுடன் கனடா செல்ல இயலவில்லை. ஆதலால் நான் அவளுடன் சென்றேன். கனடா விமான நிலையத்தில் Immigration officer என்னை ஏன் அடிக்கடி வருகிறாய் என்று கேட்டார். 

கனடா செல்லும் முன் கடையின் பெலென்ஸ் ஷீட் எடுத்துபார்த்தால் அதில் நாங்கள் எல்லோரும் எவ்வளவு பெரிய வேலைகள் செய்ய வேண்டியது இருக்கிறது என்பது புரிந்தது. 

எனக்கு கனடா பீ.ஆர்க்கான அழைப்பு வந்தது. ஆறு மாதம் கழித்து வந்தது. மிக விரத்தியில் இருந்தோம். ஆதலால் யாரிடமும் பீ.ஆர் வந்து கனடா வரும் வரை இதை பற்றி பேச வேண்டாம் என்று முடிவு செய்தோம். பெற்றோர் உட்பட.  எங்களின் விண்ணப்பத்தை சமர்பிக்க 2 மாதம் ஆனது. ஜூன் இறுதியில் தான் சமர்பித்தோம். 

மே ஜூன் மாதங்களில் மனைவியின் உடலுக்கு சில பரிசோதனைகள் செய்தோம். இதயத்தில் ஒரு சிறு ஒட்டை இருக்கலாம் என்று மருத்துவர் கூறினார். ஆனால் உறுதியாக சொல்லவில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை. இந்தியாவிலோ அது தேவையில்லை என்று கூறினார்கள். நாங்கள் செய்வதறியாது தவித்தோம் (தவிக்கிறோம்). இதனால் மருத்துவர் எங்களை இந்தியா செல்லகூடாது என்று கூறிவிட்டார். ஆதலால் மனைவியால் அவள் தங்கையின் கல்யாணத்தையும் காணமுடியவில்லை. 

ஜூன் மாதத்தில் என்னுடைய கொழுப்பின் அளவுகளை பரிசோதித்தால் அது அதிகமாக இருந்தது. ஆதலால் மறுபடியும் உடற்பயிற்சி செய்யத்தொடங்கினேன். சாப்பாட்டில் அக்கறை எடுத்தேன். 

இதற்கிடையில் பல குழப்பங்களையும், சஞ்சலங்களையும் சந்திக்க நேர்ந்தது. மிக கடினமான நாட்கள்.

ஜூலை-செப்டம்பர்
ஜூலையில் இந்தியாவிற்கு சென்றேன். உடனே திட்டமிட்டபடி புபனேஸ்வர், கொனார்க், பூரி, கயா, புத்கயா, காசி, சேவாக்ராம், காஞ்சிபுரம் சென்றேன் அழகுவேலுடன். இந்த பயணம் நன்றாக இருந்தது. இதில் எனக்கு கிடைத்த நல்ல விஷயம் என்றால் அது தியானம் செய்ய புதுச்சேரியிலேயே இடங்கள் இருக்கும் என்று. கையில் வெண்ணை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதைதான். 

ஜூலை மாதம் அம்மாவின் பணிநிறைவு விழா நடந்தது. நான் அம்மாவிற்காக மே மாதத்தில் ஒரு ஒவியரின் உதவியுடன் ஒரு ஒவியம் வரைந்து வாங்கினேன். நானும் ஒரு ஏழுபக்க உரை தயார் செய்து வாசித்தேன். அதுவே அம்மாவிற்கு நான் செய்யகூடிய சரியான அங்கிகாரமாக இருக்கும் என்று நினைத்தேன். 

பாண்டியில் தேடினால் தியானத்திற்கு நல்ல இடங்கள் அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. கடைசியாக யோகாஞ்சலி நாட்யாலயாவில் டாக்டர் ஆனந்த பாலயோக்கி பவனானி கிடைத்தார். அவரோ யோக, பிராணயாம் செய்யாமல் தியானம் செய்யவது அவ்வளவு பலன் இல்லை. ஆதலால் நாங்கள் இவை அனைத்தையும் ஒன்றாக தான் கற்பிப்போம் என்று கூறிவிட்டார். பிறகு அங்கேயே சேர்ந்து வகுப்பில் கற்றேன்.  இரண்டு நாட்கள் டாக்டர் ஆனந்த பாலயோகியை சந்தித்தேன். அவர் பிரச்சனையின் ஆதி என்னவென்று சொன்னார். என்னையும் எனது மனைவியையும் யோக செய்து பிரணாயாமம் செய்ய சொன்னார். அதுவே சிறந்த தீர்வாகும் என்றார்.

அக்டோபர்-டிசம்பர்
இதற்கிடையே, கனடா பீ.ஆர் எங்களை சோதித்தது. என்னையும் என் மனைவியையும் இன்னும் சில படிவங்களை கேட்டது. எல்லாம் கொடுக்க அக்டோபர் ஆனது. ஒருவழியாக பீ.ஆர் ஒப்புதல் பெற அக்டோபர் ஆனது. ஆனால் கையில் பாஸ்போர்ட் கிடைக்க நவம்பர் ஆனது. மிகவும் விரத்தியாகவே இருந்தது அந்த காத்திருப்பு.

ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை கடையில் வேலை செய்து கணக்கு வழக்குகளை பார்த்து கடையின் மைய பிரச்சனைகளை கண்டைந்தது சற்று ஆறுதல் அளித்தாலும் பணியின் சுமை, கடையின் -தவறுகளின் சுமை சோர்வே அளித்தது. செய்ய வேண்டிய பணிகள் ஏறாலாம். இதனால் சில மனகசப்புகளையும் விரிசல்களையும் சந்திக்க நேர்ந்தது. நல்லவேலையாக அவை துளிரிலேயே களையப்பட்டு இப்போது சரியான வழியில் செல்கிறோம்.

தங்கையோ அவளுடைய வீட்டை வாங்கினாலும் அவளால் அதனை கையில் வாங்க முடியவில்லை. அதனால் அவள் கஷ்டபட்டாள். அவளுக்கு கணக்குகளை சரிபார்த்துக்கொடுத்தேன். வட்டி பணம் (40%)  கட்டி வாங்க ஊக்கப்படுத்தினேன். அவள் பணத்தை செலுத்தி வீட்டை வாங்கி நவம்பரில் கிரஹப்ரவேசம் செய்து வீடு புகுந்தாள்.

தம்பியின் உடம்பிற்கு இப்போது கொழுப்பு பிரச்சனை என்று கேட்கையில் அதுவும் உளசோர்வு அளிக்கிறது. ஏன் இப்படி எங்கள் குடும்பத்தில் எல்லோரும் ஒரு ஒரு விதத்தில் அவதிபடுகிறோம் என்று தெரியவில்லை.

இறுதியாக கனடாவிற்கு புறப்படும் முன்பு மூக்கில் அடிப்பட்டு காதில் சிறு பழுது பெற்று வலது காது சற்று கேட்கும் திறனை இழந்தது (சிறிது அளவு. மூன்று மாதம் ஆகும் சரியாக) இன்னும் சோர்வை அளிக்கின்றது.

ஒருவழியாக டிசம்பரில் கனடா வந்து அடைந்தேன். இங்கு வந்தபிறகு தான் தெரிந்தது மனைவியின் மருந்த தரும் பக்கவிளைவுகள் வரும் சந்ததிகளையும் தாக்கும் என்று. அதற்கு நாம் இதயத்தில் அறுவை சிகிழ்ச்சை செய்ய வேண்டும் என்று.

இந்த ஆண்டு குறைந்த அளவிலான 25 புத்தகங்களாவது படிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் வெறும் 16 புத்தகங்களே படித்தேன். இவ்வளவு நேரம் இருந்தும் ஒரு 25 புத்தகம் கூட முழுதாய் படிக்க முடியவில்லை என்பது மிகுந்த வருத்தமாக இருந்தது. இதில் நான் கற்றுக்கொண்டது என்னவென்றால் நமது திட்டம் இன்னும் ஆழமாக இருக்க வேண்டும் என்று. நேரத்தை இன்னும் அணுக்கமாக கண்காணிக்கவேண்டும் என்று.

ஒட்டுமொத்தமாக சொன்னால் நான் சந்தித்த சவால்கள் (வரிசைபடி) 1) கனடா பீ.ஆர் அழைப்பிற்கு 6 மாதம் காத்து இருந்தது 2) மனைவியின் உடலிற்கு மிகுந்த இடர் வந்தது 3) தம்பி கல்யாணம் செய்ய முடியாமல் போனது 4) பீ.ஆர் சமர்பிக்க 2 மாதம் போராட்டம் ஆனது 4)மன சஞ்சலங்களும் குழப்பங்களும் 5) பீ.ஆர் மேலும் படிவங்கள் கேட்ட காத்திருப்பை நீட்டியது 6) கடையின் கணக்குள், தவறுகள் தரும் சோர்வு 7) மனைவியின் மருந்துகள் தரும் பக்கவிளைவுகள் 8) மற்றவர்களின் பிரச்சனைகள் தரும் சோர்வு 9) 20 மாதமாக வேலையில்லாமல் இருப்பது 9) புதியதாக மூக்கு காது பிரச்சனை

ஆண்டின் ஆறுதல்கள் என்று சொன்னால் 1) தம்பியின் கல்யாணம் தடையின்றி நடந்தது 2)காசி பயணம் செய்தது 3) அம்மாவிற்கு அங்கீகாரமாக ஒவியம் செய்து, உரை ஆற்றியது 4) யோகா பிராணாயமம் தியானம் பற்றி நன்கு படித்து டாக்டர் ஆனந்தாவிடம் பேசி உடலை பற்றி நன்கு புரிந்துக்கொண்டது  5) கடையின் ச்டாக் எடுத்து பிரச்சனைகளை கண்டு அடைந்தது 6) கிருத்திகாவிற்கு ஆலோசனை வழங்கியது 6) கனடா வந்தது.

உண்மையாக சொன்னால் எனக்கு ஏன் இப்படி நடக்கின்றது என்றே தெரியவில்லை. யாரிட்ட சாபமோ தெரியவில்லை. 

August 01, 2018

அன்னை

என் அன்னை ஜூலை-31-2018 அன்று பணி நிறைவு பெற்றார். அன்று அவ்விழாவில் நாள் அளித்த சிறப்புரையின் எழுத்து:


என்/எங்கள் அன்னை சாந்தி


அன்புள்ள அனைவருக்கும் நமஸ்காரம் வந்தனம் வணக்கம் சுஸ்வாத்தகம்!

இந்த பிரிவு உபசார விழாவிற்கு என் அன்னையை வாழ்த்தக்கூடியுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

எங்களது அன்னையைப் பற்றி எனக்கு பொதுவெளியில் பேசிப் பகிர்ந்துக்கொள்ள உங்கள் வாழ்வில் ஒரு 20 நிமிடம் அளித்து வாய்ப்புக் கொடுத்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

திருமதி.சாந்தி என்பவர் கணவரை இழந்து மூன்று பிள்ளைகளை வளர்த்து பொறியாளர்களாய்/Engineeer-களாய் ஆளாக்கி கல்யாணம் செய்து கொடுத்த சித்திரம் மட்டுமே பலர் மனதில் இருக்கக்கூடும். ஆனால் தற்போதைய இவ்வலுவகத்தில் என் அன்னையின் 1990 முதலான 20 ஆண்டுகளை அறிந்தவர்கள் சிலரே இருக்க வாய்ப்பு உண்டு. அதனை சொல்கிறேன் உங்கள் அனுமதியுடன்.

13 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது மிகக் கடுமையான நாட்களைக் கடந்து. ஆதலால் அனுதாபம் வேண்டியோ அல்லது சுயசரிதை புத்தகங்கள் குவிந்துள்ள இந்நாட்டில் ஒரு பாடம் சொல்ல முற்பட்டோ இவற்றை நான் இங்கு கூறபோவதில்லை. ஒரு சாமானிய பெண்ணின் பயணமும் குறிப்பிடத்தக்கது என்பதை கூறவே.

காதலித்தவரை மணம்புரிவதில் இருந்தே வாழ்வின் போராட்டம் துவங்கியது. திருமணத்தை முதலில் ஏற்க மறுத்தாலும் மனம் வேறு கதியில்லை எனும்போது மெல்ல சமரசமடைந்து பழகிக் கொள்கிறது. அதுபோல பெற்றோர்கள் சமரசமடைந்தார்கள். கடலில் முத்துக்கள் போல் மூன்று பிள்ளைகள் இப்பிறவிப்பெருங்கடலில் இவர்கள் மூலம் இணைந்தனர்.

ஆனால் வாழ்விலே ஒரு புயல் வார்த்தைகளில் வசப்படமுடியாத துயரத்தை இடியாய் தாக்கியது. மறுநாள் இருள் நீங்கி ஒளி உயிர்த்தெழும் தீபாவளி. ஆனால் எங்கள் வாழ்வில் மேற்கில் வெள்ளி (சுக்கிரன்) மறைந்த நாள். நீர்குமிழி உடைந்த நாள். அப்போது வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள் இவள் வயது 32. சரியாக சொன்னால் நடுவயது. ஆங்கிலத்தில் மனதினால் வரக்கூடிய Mid-Life Crisis என்பது உண்மையாகவே வந்தது. அசாதாரணமான ஒரு வாழ்க்கையை வாழ விதிக்கப்பட்டவளானாள்.

“கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே இங்கு வேரிற் பழுத்த பலா - மிகக் கொடியதென்று எண்ணிடப் பட்டதண்ணே - குளிர் வடிகின்ற வட்ட நிலா” என்று பாரதிதாசன் கூறியது முழுவதும் உண்மை. மூன்று பிள்ளைகளுடன் இவள் கோரிக்கை அற்றுக் கிடந்தாள். அவல நிலை என்றே சொல்லவேண்டும். இந்த கைம்பெண்ணை கண்டு இளகவில்லை. மாறாக இவளையும் இவள் அன்னையையும் ஏசியது. இந்த அவல நிலை ஒரு விஷயமாகவே அவர்களுக்கு தோன்றவில்லை. வார்த்தைகள் உயிருள்ளவை என்பதை அறிந்தோ அல்லது மறந்தோ பேசினார்கள். (பே/)போராயுதங்களைவிடவும் வார்த்தைகள் விஷம் உள்ளவை. அப்படிப்பட்ட வார்த்தைகள் கொண்டு ஏசினார்கள்.பார்த்து பிள்ளைகளை வீணாக வளர்த்துவிடாதீர்கள்” என்ற ரணமான வார்த்தைகளை இவர்கள் முகத்தின் நேரே வாய்க்கூசாமல் உரக்க சொல்லியது (அவை நாகரிகம் கருதி தறிநிலைக்கு வீண் என்று கூறியுள்ளேன்). அன்று பிறந்தது கர்வம். “எண்ணிக துணிக கருமம் துணிந்தப்பின் எண்ணுவம் என்பது இழுக்கு” என்று வள்ளுவர் கூறினார். அக்குறளை அன்று அறியாதவர்கள் எனது அன்னையும் பாட்டியும்.

ஆனால் அன்று இவர்கள் கொண்ட கர்வம், பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து அவரவர்களுக்கு என்று ஒரு நல்வாழ்விற்கான அடித்தளத்தை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்று. எண்ணங்கள் ஆட்டுமந்தைபோல. அதில் முதன்மையான ஆடு எது என்று அறியவேண்டும். அந்த எண்ணத்தை நம் வசப்படுத்தி மெல்ல இட்டுச்செல்லவேண்டும். அனைத்து எண்ணங்களும் அதைத் தொடர்ந்து வரும். அப்படி இவர்கள் இவர்களுக்கும் எங்களுக்கும் வசப்படித்திய முதல் எண்ணம் கல்வி. ஏன் என்றால் விதைப்பவர்களுக்கு விதையே சிறந்தது. இவர்கள் விதைத்தது கல்வி. “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு”. “கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை”.

என் தந்தை இறக்கும் பொழுது எனது வயது 6, என் தங்கைக்கு 4, என் தம்பிக்கு 2 தான். பூகம்பம் வரும் முன்பே இரவில் உறங்கும் எறும்புகளும் விழித்துக்கொண்டு தன் இடத்தைவிட்டு வேறு இடத்திற்கு சென்று ஒளிந்துக்கொள்ளும். மனிதனை மனித உறவுகளை பற்றிக் கேட்கவே வேண்டாம். எனது தந்தை வழி சில உறவினர்கள் இரக்கமற்று தன்னறமற்று நீதிமன்ற படியேற வைத்தார்கள். செழிப்பாய் இருந்தும் அவர்களுக்கான எங்கள் தந்தையின் gratuity-ஐ நீதிமன்றம் மூலம் பெற்றுக்கொண்டார்கள். எங்கள் பங்குகளையும் படிப்பிற்குப் பயன்படுத்த முடியாமல் வங்கிகளில் முடக்கினார்கள். துவலவில்லை இவர்கள். போராடினார்கள். துணையற்ற இவர்களுக்கு வலியே ஓர் நல்ல துணைவன். வலியே வலிமை தந்தது. விருப்பு, வெறுப்பு, ஏற்பு, மறுப்பு என்ற அந்த உணர்ச்சியும் அற்றவர்களானார்கள் இவர்கள். ஒரு Atlas சைக்கிளில் முன்னே எனது தங்கை வளைவான பார்-இல் நிற்க பின்னே நானும் எனது தம்பியும் அமர இப்படியாக இரண்டு ஆண்டுகள் சைக்கிளை மிதித்து சென்றாள். இதைக் கண்டு ஒரு நொடி நிற்காத மனம் அன்றில்லை என்று என் அகம் இன்று சொல்கிறது. 1991 TVS-50 எங்களுடன் வந்து எனது அம்மாவிற்கு சைக்கிளில் இருந்து சிறு ஓய்வு கொடுத்தது. பின்பு சில ஆண்டுகளில் எங்கள் மூவர் கால்களும் சைக்கிளை மிதித்தது.

எனது தம்பியும் தங்கையும் St.Patricks இல் படித்தார்கள். எனக்கு அங்கு அனுமதி கிடைக்கவில்லை. நான் Seventh Day பள்ளியில் இருந்து Bright School பள்ளிக்கு மாறுவதாக இருந்தது. ஆனால் அங்கு ஒரு வகுப்பில் 15 மாணவர்களே இருந்தனர். கடைசி நிமிடத்தில் எனது அம்மா என்னிடம் கூறியது நீ இந்த பள்ளியில் படித்து முதல் rank எடுப்பதை விட ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் படிக்கும் Don Bosco வில் படித்து உன்னை நிருபித்துக்கொள்வது தான் உனக்கு தன்னம்பிக்கையையும் ஆரோக்கியாமான போட்டி மனப்பான்மையையும் வளர்க்கும். அச்சூழல் மெத்தனமாய் இருக்க வாய்ப்பு கொடுக்காது. ஆதலால் அங்கு தான் நீ படிக்க வேண்டும்.

ஆக 1994 முதல் மூன்று பேரும் Don Bosco மற்றும் St.Patricks போன்ற அதிக பணம் செலவாகும் உயர்ரக பள்ளிக்கூடங்களில் படித்தோம். அதுவும் நான் SSLC யில் இருந்து Matriculation சென்றவன். அப்பாடத்திட்டத்திற்கு என்னால் அவ்வளவு எளிதாக பொருத்திக்கொள்ள முடியவில்லை. ஆனால் எனது அன்னை எனக்கும் எனது தங்கை தம்பிக்கும் 1994 முதலே Tuition வைத்தார்கள். இப்படி எங்களுக்கு தரமான கல்விக்கான அடிப்படைகளை மிக இளவயதிலேயே எங்களது அன்னை அமைத்துக்கொடுத்தார்கள்.

கடந்துசெல்லும் காற்றில் மரங்களின் முட்கள் மெல்ல சீறிக்கொண்டிருந்தன. நூற்றுக்கணக்கான பழுத்த இரும்பு ஊசிகள் மேல் நீர் விழுந்ததுபோல. அப்படியிருக்கையில், புயலிலே ஒரு தோனி கிடைத்தால் எப்படி இருக்கும். அப்படித் தான் எங்களது பாட்டி எங்கள் வாழ்விலும் என் அன்னையின் வாழ்விலும் ஒரு அன்னையாய், தந்தையாய், ஆசிரியையாய், விவேகமாய், உண்மையில் பதட்டமான நேரங்களில் பக்குவம் வாய்ந்த நமது M.S.Dhoni-ஆய் வந்து சேர்ந்தார்கள். கிருஷ்ணன் அர்ச்சுனனிடம் தன்னைக் கொடுத்தான். கிருஷ்ணன் அவனுடைய கைகளால் செய்த நன்மைகளை கைகளின் விரல்கள் கூட அறியாமல் செய்தான். விரல்நகங்களும் அறியாது செய்தான். ஆயுதம் ஏந்தாமல் தன் புத்தி, தன் தந்திரங்களையே ஆயுதமாகக்கொண்டு குருசேத்திர யுத்தம் செய்த முதல் மாயாவி கிருஷ்ணன். இறுதிவரை, கிருஷ்ணன் பாண்டவர்களின் குடும்பத் தலைவனாகச் செயல்பட்டான். கிருஷ்ணன் பாண்டவர்களுக்கு போன்று எங்கள் பாட்டியும் எங்கள் அனைவருக்கும். இன்னும் சொல்லப்போனால் கிருஷ்ணனுக்கு ஆயர்பாடி முதல் யுத்த பூமி வரை உயிருள்ள நிழலாக இருந்து, கிருஷ்ணனின் இன்னொரு உருவமாக தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, கிருஷ்ணர் நினைத்ததை எல்லாம் நினைத்து முடிக்கும் முன்னே செய்து முடித்த சாத்யேகி எங்கள் பாட்டி. தன் பேரமைதியே தன் தகுதிக்கான பதிலாகக் கொண்டவர் எங்கள் பாட்டி என்பதை குறிப்பாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நாங்கள் வளரும் பொழுது தந்தை இருந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று ஒருநாளும் நினைக்காத அளவிற்கு இருவரும் எங்களை பார்த்துக்கொண்டார்கள். ஆதலால் அன்னையிற்கும் பட்டுவிற்கும் இங்கு நான் கூறும் ஒவ்வொரு சொல்லிலும் கிடைக்கும் வாழ்த்துகளிலும் சரிசமான பங்கு உண்டு.

காலத்தின் கைகள் இவர்களைப் பந்துகளாக்கி எறிந்து விளையாடின. கங்கை காவேரி ஆறுகள் போன்று என் அன்னையின் வாழ்வும் பல பாறைகளைத் தடையாகச் சந்தித்தது. ஆனால் பாறைகள் இல்லாமல் ஆறுகளுக்கு சங்கீத ஓசை இல்லை. அப்பாறைகளை இருவரும் அறுத்தெறிந்து முன்னே சென்றார்கள். அது இவர்களின் மனதிட்பம் மட்டும் அன்று அது விடாமுயற்சியின் விஸ்வரூபம் கூட. மூன்று பேரும் Convent என்றால் சும்மாவா ? ஆண்டுக்கு ஆண்டு கல்வியின் விலை உயரும். சிறுக சேர்த்த செல்வம் எப்படி வந்து சேர்ந்ததைவிட விரைவாக நம்மை விட்டுப்போகும் என்பதை "செல்வம் போகும் விளிந்தற்று" என்று சொன்னான் வள்ளுவன். அதுப்போல் இவளின் தேங்காய் பத்தைப் போன்ற மாதச்சம்பளம் பூசணிக்காய் பத்தைப் போல் கல்விக்கென்று சென்றது. PF, Gratuity என்ற எதனையும் எங்கள் அம்மா சேர்த்ததில்லை. எல்லாவற்றையும் எங்கள் கல்வியிலேயே முதலீடு செய்தார்கள். ஆயினும் ஒரு சம்பளம் போதவில்லை. போதவும் போதாது. பகுதிநேர வேலைகளே கரம் கொடுத்தன. ஆதலால் இவள் செய்த வேலைகளை மட்டும் பட்டியிலிடுகிறேன். காலையிலெழுந்து துணி துவைத்து, எங்களை பள்ளிக்கு ஆயுத்தமாக்கி, பாட்டி சமையல் செய்தப்பிறகு பாத்திரத்தை கழுவி, பள்ளியில் விட்டுவிட்டு, பகுதிநேரமாக ஒரு வீட்டில் ஒரு பாட்டி தாத்தாவுக்கு சமையல் செய்துவைத்து, அரசு வேலைக்கு சென்று, மாலையில் 6:00 மணி முதல் 10:00 மணி வரை எலும்பு நிபுண மருத்துவர் Dr.Sivadasan இடம் Receptionist ஆக பகுதிநேர வேலை அல்லது Accountant வேலைகள் செய்துவிட்டு வந்து, மறுபடியும் வீட்டில் வந்து பாத்திரம் கழுவி, வீட்டை சுத்தம செய்து, கொஞ்சம் உறங்கி, மறுபடியும் காலையில் சுவாமி அறையைத் துடைத்துக் கோலம் போட்டு வாழ்வின் அன்றாட Vicious cycle (துஷ்ட சுழற்சியில்) விழிகள் பிதுங்கி சிக்கித் தவித்தார்கள். ஆண்டுக்கு ஆண்டு அந்த பகுதிநேர சம்பளமும் போதவில்லை. பச்சோபதாபப்படும் மதமாற்ற ஓநாய்களையும், வட்டியை உரிஞ்சும் அட்டைகளையும் முழுங்கும் முதலைகளையும் ஒரு இருபதடித் தள்ளியேவைக்க வேண்டியிருந்தது. ஆதலால் மற்ற வேலைகளும் நாங்கள் செய்தோம். Soap Powder, Pepsi Cola Packet, பஜ்ஜி பக்கோடாவுக்கு பயன்படுத்தப்படும் பேப்பர் ஒட்டிக்கொடுப்பது என்று எல்லாவற்றையும் செய்தோம். நேர்மையாக!!

பாடும் தேனீக்களும் உலாவும் தென்றல் நம்மையும் தாக்காமல் இருக்காது. ஆனால் சுற்றமும் நட்பும் உறவுகளும் அப்படியில்லை. ஏனெனில் தவிர்க்கமுடியாதச் சந்திப்புகளான குலதெய்வக் கோயில்களிலும் கல்யாணங்களிலும் குசலம் விசாரித்துத் தங்கள் கடமையை அத்துடன் முடித்துக்கொண்ட உறவுகளே பெரும்பாலும். கர்ணனுக்கு துரியோதனன் இருந்தும், பேசுகின்ற எல்லா வாய்களையும் மூடமுடியவில்லை. ஆனால் செல்லப்பிள்ளை பாண்டவர்கள்கள் (அர்ஜுணன்) பெரிய தவறு செய்தாலும் அதில் பிழையில்லை என்று வாதிட ஓர் கூட்டமே அன்று திரண்டுவந்தது ஏனெனில் தம்பிகளையும் மனைவியையும் வைத்துச் சூதாடிய ஒரு மனிதரையே யாரும் இங்கே விமர்சிக்கவில்லை. ஆனால் கர்ணனுக்கோ ஒவ்வொரு இடத்திலும் அவன் சிறுபிழை செய்தாலும் அதனை பூதக்கண்ணாடி கொண்டுப் பேசுவார்கள். கர்ணனுக்கு தலையில்லை. பாண்டவர்களுக்கு கோட்டை சுவர்களாய் பலர் இருந்தனர். கர்ணனைப் போல என் அன்னையும் என் பாட்டியும் கைவிடப்பட்டவர்கள். தலையில்லாவிட்டால் வாலும் ஆடும். அடிக்கடி வந்துப்போகும் மின்வெட்டு இம்சைகள் போல் வந்து பிறருக்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லாத உடன்பிறப்புகள் நஞ்சைக் கக்கினார்கள் - சகுனியைப் போல் பிறர் துன்பத்தில் மகிழ்ச்சி அடைபவர்கள். இப்படிச் சுற்றமும் உறவுகளும் தந்த மன அழுத்தம் சும்மா வேற Level என்றே சொல்லலாம். அதனால் ஒரு இராணுவ தலைவருக்கு உண்டான கண்டிப்பும் கோபமும் அன்னையிடம் இருந்தது. ”நெடிதாக்கம் வேண்டி கடிதோச்சினாள் ஆனால் மெல்ல எறிக என்பதை உணர நேரம் இல்லை என்று தான் சொல்லவேண்டும்”. அதுயாவும் நாட்டின் மீதான பாதுகாப்பு போல் எங்கள் வருங்காலத்தின் மீதான அக்கறையே. அது மட்டுமின்றி தாய் பறவை மிதித்தால் சேய் பறவைக்கு நோவதுமில்லை காயம் ஆவதுமில்லை. அது தேவையும் கூட ஏனெனில் நிலத்தியல்பால் நீராகும், நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம், தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும். ஆதலால் சிற்றினம் அஞ்சிய நீங்கள் எங்களை சிறுமை சூழாமல் பார்த்துக்கொண்டீர்கள். அதனை எங்கள் ஆழ்மனதிற்கு எங்களுக்கு அறியாமலே கற்றும்கொடுத்தீர்கள். ஆதலால் தீ நட்பிலிருந்து பத்தடி விலகியே இருந்தோம். வள்ளுவன் கூறியதுப்போல “தம்மைவிட பெரியவர்களுடன் தங்களின் உறவினர் என்றெண்ணி நெருங்கிப் பழகி ஒழுங்குபடுகிறோம் (தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை)”

ஊரில் அனைவரும் விடுமுறையில் உறவினர் வீட்டிற்கு சென்றார்கள். நாங்களோ பெரும்பாலும் வீட்டில் இருந்து நாட்களை கடத்தினோம். சொந்தத்தை தினம் சந்திக்க எங்கள் நிழல் கூட ஏங்கிய நாட்கள். அவர்கள் நிழல்கள் (கடிதங்கள்) கூட வேடிக்கை கூட பார்க்காமல் வேறெங்கோ பார்த்தது. ஆனால் எங்கள் அம்மாவும் பாட்டியும் எங்களை ஏதாவது ஒரு புனித ஷேத்தரத்திறகு, இறைவனிடமே நம் உறவு என்று கூட்டிச் செல்வார்கள். அப்படி எங்களில் இறை நம்பிக்கையை விதைத்து நன்கு நீரூற்றி எங்களை ஒழுங்கு படுத்துவதற்கொரு அணையாகவே ஆன்மீகத்தை பயன்படுத்தினார்கள். அப்படியில்லை என்றால் "அவர்கள்" சொன்னது போல் “வீணாக போய்விடுவோமே”. ஆனால் சீர்கெட்டுப்போக அனைத்து சாத்திய கூறுகளையும் ஐஸ்கிரீம் போன்று வண்ண வண்ணமாய் குளிர்ச்சியாய் கொண்டது சினிமா. ஆனால் எங்கள் வீட்டில் சினிமாவை முழுவதுமாய் ஒதுக்கவில்லை. “குணமும் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி” கே.பாலசந்தர், மணிரத்னம், பாலுமகேந்திரா, பாரதிராஜா, ஷங்கர், ரஜினி, கமல், பாக்கியராஜ் படங்களுக்கு கூட்டிப்போவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். அவ்வப்போது பிச்சாவரம் வேடந்தாங்கல், ஆரோவில், மகாபல்லி்புரம், பூம்புகார் என்று வன போஜனங்களுக்கும் (picnic) சென்றுவருவோம்.

எவ்வளவு கஷ்ட நஷ்டங்கள் இருந்தாலும் எங்கள் வீட்டில் இன்பத்திற்கு குறைவில்லை. ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி, படைப்பூக்கத்திற்கு வித்தாக அமையும் படிகட்டுகளும் பூங்காவும் கொண்ட நவராத்திரி கொலு, தீபாவளி, சபரிமலை ஐயப்ப விரதபூஜைகள் பயணங்கள், பொங்கல் என்று ஒரு பண்டிகையையும் விட்டுவைத்ததில்லை.

வாழ்வதற்குத் தான் உணவு. ஆனால் அமுது படைக்கும் அந்த தில்லை ஆண்டவனுக்கே தினமும் அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம். அன்னமே பிரம்மம் என்கின்றன உபநிடதங்கள் (Upanishads). ஆனால் அது அடுமனையில் இருப்பவர்களுக்கு தெரியுமோ தெரியாது. ஆனால் எங்கள் வீட்டில் உணவை கொண்டாடினார்கள். அடுமனை எங்கள் “நிகரற்ற சமையல்ஞானி" பாட்டியின் பிரம்மலீலை நிகழும் இடம். அது ஒரு தவச்சாலை. வாய் என்னும் வேள்விகுண்டத்துக்கு உணவிடுபதுபோல் பட்டியலிடமுடியாத அளவிற்கான உணவுகளை செய்துக்கொடுத்தார்கள். பல நாட்கள் ஜலதோஷம், வாயுப் பிரச்சினை, வயிற்று வலி, உஷ்ணம், வாய் புண் என்று எதுவாக ஆயினும் மிக எளிதாக செய்யக்கூடிய ஒரு பூண்டு கருவேப்பிலை துவையல், வேப்பம் பூ ரசம், பெருங்காய ஜலம் என்று விதவிதமான தன் பாட்டி வைத்திய குறிப்புகளை சமையலிலும் எங்கள் சித்தத்திலும் ஆழமாய் வைத்தாள். அக்காலங்களில் காய்கறி தட்டுப்பாடு நிலவும் வறட்சிக்காலத்திலும் மழைக்காலத்திலும் சமையலை சமாளிக்க உலரவைத்த காய்கள், வேப்பம் பூக்கள், உப்பு நார்த்தங்காய்கள் கொண்டு செய்யப்படும் உணவுகளை எங்களுக்கு பழக்கினார்கள். அது நாங்கள் வெளியூர்களுக்கு செல்லும்பொழுது பயன்பட்டது. பேரப்பிள்ளைகள் எங்களை சமையல் செய்வதில் நளன் பீமன் என்ற அளவிற்கில்லையென்றாலும் நன்கு சமையல் செய்யும் அளவிற்கு மெருகேற்றினார்கள். பசி அறிந்தவர்கள் அதன் வேதனையையும் அறிவார்கள். அப்படிப்பட்ட சில நாட்களில் ரசஞ்சாதம் என்றாலும் அதனை பேரின்பத்துடன் சாப்பிடும் பக்குவும் எங்களிடம் அன்றே வளர்க்கப்பட்டது. அதனால் தான் என்னவோ நாங்கள் மூவரும் வெளியூர்களுக்கு சென்றாலும் உலரவைத்த சாமன்களைக்கொண்டு எங்களால் சாப்பாட்டை சமாளித்து அதனை கடந்து செல்ல முடிகிறது.

குழந்தைகளை நாம் வளர்க்க தேவையில்லை. அவர்களே வளர்வார்கள் ஏனெனில் காலம் உயிர்களை வளர்கிறது. நாம் வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடியும். நாம் அவர்களுக்கு கொடுக்க வேண்டியதெல்லாம் வாழ்க்கைக்குத் தேவையான கருவிகள் தான். அவை கல்வி, நல்லொழுக்கம், தன்னம்பிக்கை, உழைப்பு போன்ற விழுமியங்கள் மட்டுமே. உழைப்பின் முக்கியத்துவத்தை - எங்கள் மொட்ட மாடியில் ஆரோக்கியமான நந்தவனம் ஒன்றில் 100 ஜாடிகளில் விதைகள் விதைத்து, செடிகள் நட்டு, தினமும் தண்ணீர் ஊற்றி, காய்கறி குப்பைகளை மக்கச்செய்து உரமாக்கி அவ்வப்போது தொடர்ந்து உரம் இட்டு, களைகளையும் பூச்சிகளையும் துவக்கத்திலேயே வெட்டி எறிந்து, என்று வகைவகையான செடிகளை வளர்த்துக் கற்றுத்தந்தார்கள் இவர்கள் இருவரும். அது தந்த பூக்களும் ஞாபகங்களும் ஏராளம். அது மட்டுமா? எனது தங்கையை பாட்டிற்கும் எனது தம்பியை Western Drums வகுப்புகளிலும் சேர்த்து விட்டார்கள். நானோ என் பங்கிற்கு Lego, Brainvita, Chess Board, நுழைவுத்தேர்வுக்கான Brilliant Tutorials புத்தகங்கள் என்று கல்வி சம்மந்தமாக செலவுகள் வைத்தேன்.

அடிப்படை கல்விக்குத் தேவையான வசதிகளை விட அதிகமான வசதிகள் எங்கள் நற்கல்விக்கு செய்துக்கொடுத்து எங்களிடம் வைக்கப்படும் ஒரே கோரிக்கை நல்லாபடியுங்கள் என்று. தகுதியின் (Merit-இன்) அடிப்படையில் கல்லூரியில் இடம் வாங்குங்கள். காசு கொடுத்து கல்லூரியில் சேர்க்கும் அளவிற்கு பணமும் சொத்துமில்லை சிபாரிசு செய்யும் அளவிற்கு உறவும் அருகிலில்லை. நாங்கள் 10ஆம் வகுப்பும், 12ஆம் வகுப்பும் சேர்ந்த பிறகு எங்களுக்கு தேவையான அனைத்து Coaching Centre களிலும் (சேதுராமனின் Sankara Coaching Centre, Seetharaman Sir, Maruthi Coaching Centre, Petit Seminar Summer Entrance, Vetri Coaching Center, Krishnasamy Sir, Brilliant Tutorials என்று பணம் படைத்தவர்களுக்கு மட்டுமேயான இடங்களில் சேர்த்து) அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தாள் எங்கள் அம்மா (சில ஆசிரியியர்கள் காசு குறைத்துக்கொண்டும் உதவினார்கள்). ஒரு தூரத்துத் தந்தை வழி உறவு மற்றும் ஒரு தாய் வழி உறவை தவிர, எங்களது உறவுகள் அன்று 1990 முதல் 2005 வரை என்றுமே ஒரு கடிதாசியின் மூலம் கூட குசலம் விசாரிப்பு அல்லது பிள்ளைகள் இதனை இக்கல்லூரிகளில் படித்தால் அதில் நல்ல வருங்காலம் உண்டு, அதற்கு இந்த நுழைவுதேர்வுகளுக்கு படிக்க வேண்டும் என்று வழிகாட்டியதும் கிடையாது. ஆனால் இன்றோ விரைவில் பணி நிறைவு அடையப்போகிறாய் PF-Gratuity Settlement எவ்வளவு வரும் என்று வாய் கூசாமல் கேட்கிறார்கள் சில உறவுகள். இத்தகையவற்றை தியான மந்திரம் போன்ற ”ஆகுல நீர பிற” (மற்ற அனைத்தும் வெறும் சத்தம் (இரைச்சல்) மட்டுமே) என்ற வள்ளுவன் வரியை சொல்லிக்கொண்டுதான் முன் கடந்துச் செல்கிறேன்.

ஆளுக்கு இரு தோள்கள் மட்டுமே ஆயினும் அதன் மேல் இருவரும் ஒரு பெரிய பலகையினையே ஏந்தி எங்கள் மூவரையும் ஏற்றி சாமி பார்க்க வைத்தார்கள். பாலபருவத்தில் புரிதல் இல்லையென்றாலும் பின்பு நாங்களும் படித்தோம். மிக நல்ல கல்லூரிகளில் படித்தோம். கல்லூரி படிக்கும் காலங்களில் வங்கிகளின் உதவியை நாடாமல் இருக்க முடியவில்லை. வங்கிகள் உதவினாலும் சுமையின் பாரம் குறையவில்லை. அது குறைய முழுமையாக 15 ஆண்டுகள் ஆனது. நாமிட்ட இலை தழைகளை உண்ட ஒரு புழு பட்டாம்பூச்சியாய் மாறும் தருணம் மாறிய தருணம், அதுவும் வாழ்வில் முதல்முதலாய் அதனை பார்க்கும் தருணம் மிக நெகுழ்ச்சியானது. ”தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும்” -? தன் செயலினால் தன் பிள்ளைகள் செல்வங்கள் ஆன தருணம் ஜூன்-04 2004 மாலை ஆறு மணியளவில் இருக்கும். என் அன்னையை நண்பரின் மொபைல்லிலிருந்து அழைத்தேன். எனக்கு Campus’லையே வேலை கிடைச்சுடுச்சு அம்மா என்றேன். ஒரு நிமிட மௌனம் எங்கள் இருவருக்கும் நடுவில். இவள் குரல் உடைந்ததை என்றும் என் நினைவில் சேமித்து வைத்துள்ளேன். ஒரு 15km தொலைவில் இருந்தாலும் அன்றுபோல் என்றும் என் அன்னையை அவ்வளவு அருகில் உணர்ந்ததில்லை. ஒவ்வொருவராக படித்துமுடித்து வேலைக்கு சேர்ந்து பாரத்தை குறைத்தோம்.

பின்பு நாங்கள் மேற்படிப்புக்கு முயற்சி செய்தாலும் அதற்கும் எங்கள் அம்மா வங்கிகளுக்கு அலையாய் அலைந்துதிரிந்து படிவங்களை வாங்கிக்கொடுத்து விண்ணப்பித்தார்கள், நாங்கள் ஊருக்குச் செல்லும் பொழுதெல்லாம் எங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் ஓடி ஆடி வாங்கி வந்து வைப்பார்கள், கஞ்சி மாவு, வத்தல், சாம்பார் பொடி, சிகைக்காய் பொடி, போன்று சிறுசிறு விஷயமானாலும் அதனை அலுக்காமல் செய்வார்கள் - இது எங்களிடம் இவற்றையெல்லாம் வீட்டிலேயே செய்யவேண்டும் பாக்கெட்டில் வாங்க கூடாதென்பதின் மகத்துவத்தை உணர்த்தியுள்ளது. Use and Throw என்ற நவினயுகத்திலெதையும் சலிக்காமல் பழுதுப் பார்த்து (உதாரணமாக flight suitcases) அதன் நாட்களை கூட்டும் நிதானத்தையும் பணத்தின் மதிப்பையும் கற்றுக்கொடுத்துள்ளனர்.

ஆங்கிலத்தில் Gary Chapman என்பவர் எழுதிய The 5-Love Languages (அன்பின் ஐந்து மொழிகள்) என்ற ஒரு புத்தகம் உண்டு. அவை 1) Affirmation (அன்பு பாராட்டுதல்), 2) Gifts (பரிசளித்தல்) 3) Quality Time (தரமான நேரம் செலவிடுதல்) 4) Acts of Service (சேவை செய்தல்) 5) Physical Touch (மெய் தீண்டல்). எங்கள் அம்மாவின் மொழி Acts of Service என்று சொல்லவேண்டும். இவர்களது உழைப்பை புரிந்துக்கொண்டாலும் சேவையும் அன்பின் மொழி என்பதை புரிந்துக்கொள்ள எனக்கும் எனது தம்பி தங்கைக்கும் பல ஆண்டு காலம் ஆனது.

வலி ஒரு நல்ல துணைவன் என்று முன்னர் கூறினேன். வலிக்கு வலியே மருந்து. வலி யானையாக வருகிறது. மிகப்பெரிய நிழலாக அந்தயானை வந்துகொண்டிருக்கிறது. அதன் எடைமிக்க துதிக்கையை தோள்மேல் போட்டிருக்கிறது. மத்தகத்தையே நம் மேல் வைத்துக்கொள்கிறது. ஆம் நாம் கெஞ்சினாலும் மிரட்டினாலும் விலகிச்செல்லாதது. ஆனால் வாழ்நாள் முழுக்க நீடிக்கும் பெரும்வலி கொண்டவர்கள் வாழ்த்தப்பட்டவர்கள். அவர்களுக்கு வேறு ஏதும் தேவையில்லை. அவர்களின் வெற்றிடங்களை எல்லாம் அதுவே நிறைத்துவிடும்.

இராவணனின் தலைபோல வெட்ட வெட்டத் தழைக்கும் எளிய உலகியல் ஆசைகளாலும் விருப்புவெறுப்புகளாலும் அச்சங்களாலும் மாறிமாறி அலைக்கழிக்கப்பட்டு வாழ்ந்து முடியும் வெறும் உடல்கள் கொண்டோருக்கு வாழ்வது மட்டுமே முக்கியம். அப்படி ”ஒருபொழுதும் வாழ்வது அறியார் பொய்யான எண்ணங்களில் இருப்போரின் எண்ணிக்கை கோடி அல்ல அதற்கும் மேலே”. தனக்கென வாழா பிறர்க்கென வாழும்​ ​ மனத்தினைப் பெற்றார் வாழ்வர். அப்படி உண்மையான சுயநலமற்ற விடாமுயற்சியுடன் திருவினை ஈன்ற நிறைவாழ்க்கை வாழ்ந்தவர்கள் இவ்விரு பெண்மணிகளும். ஆதலால் எங்களை விட பாக்யசாலிகள் கிடையாது என்ற எண்ணம் எங்களிடம் ஆழ வேரூன்றியுள்ளது.

(என்னை மன்னித்துவிடுங்கள், சற்று நீளமாய் செல்கிறது இவ்வுரை)

சில காலம் வெளியே வைத்தால் காற்றிலேயே மக்கிப்போகும் காகித வெற்றறிக்கையில் தையலூசி ஓட்டைப்போன்ற குறைகளை ப்ரசுரிக்கும் சற்றும் தார்மீக அறம் அருகில் அல்லாதவர்கள், நிதம் வம்பு இரைத் தேடி அலைந்து இறுதியில் இரையென மாயுபவர்களின் செயல்களில் கவலையடைந்து நாம் உழல வேண்டியதில்லை. ஏனெனில் மானுட உள்ளம் அத்தனை கீழ்மை கொண்டது. ஒளியூற்றான சூரியனிலேயே கரும்புள்ளிகள் (dark sun spots) உண்டென்று வாதிடும் வேடிக்கை மனிதர்கள் அவர்கள். வானின் நட்சத்திர கூரையை பார்க்க விழையாமல் வீட்டிற்குள் புகுந்துக்கொள்கிறார்கள் மனிதர்கள். அவர்கள் கண்களுக்கு நட்சத்திரங்கள் தெரியவாய்ப்பில்லை.

Clayton Christensen என்ற Harvard பல்கலைகழக பேராசிரியர் (உன்) வாழ்க்கையை நீ எப்படி அளப்பாய்? என்ற கேள்விக்கு (How will you measure your life?) பதில் அளிக்கிறார் - நான் எத்தனை பேரின் வாழ்க்கையினை என் செயல்களினால் ஆக்கப்பூர்வமாக தொட்டேன் என்பதே என் வாழ்வின் அளவுகோல் என்கிறோர். அப்படி பார்க்கையில் எங்கள் அம்மா எங்கள் வாழ்வு மற்றும் அல்லாது பிறருக்கு உதவக்கூடிய வாய்ப்பு அமைந்த எல்லா நேரங்களிலும் அவர்களால் முடிந்தவரை உதவியுள்ளார்.

வள்ளுவன் மெய்யுணர்தலில் கூறியது போல சம்பளம், பதிவி உயர்வு, மனைப் போன்ற பொருளல்லவற்றை பொருளென்று உணரும் மருளும் மாணப்பிறப்புகள் உள்ள இந்த பூமியில் எங்கள் அம்மாவும் பாட்டியும் எந்தவிதமான ஒரு நிலையில்லா செல்வத்தையும் சேர்த்து வைத்துக்கொண்டதில்லை யாரிடமும் (ஏன் எங்களிடமும் கூட) ஒரு துரும்பு கூட எதிர்ப்பார்த்ததில்லை. இன்று இவர்கள் வங்கி கணக்கில் 10000 ரூபாய்க்கு மேல் கிடையாது. சொந்தமாக நகையும் கிடையாது. ஆனால் கருங்குடத்தில் புதைத்த கருங்கற்கள் நாங்கள், உங்கள் மார்பில் எப்பொழுதும் வைர மணிகளாய் செல்வமாய் உள்ளோம்.

"மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல் வைர மணிக ளுண்டோ ? சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல் செல்வம் பிறிது முண்டோ ?” என்றான் தன் பிள்ளை கண்ணமாவை பார்த்து பாரதி சொன்னான். நாங்கள் மூவரும் உரக்க சொல்வோம் தங்கள் இருவருக்கும் மேல் ஒரு தந்தையும் தாயும் என்று எவரையும் இங்கு நாங்கள் வேண்டுவதுமில்லை என்று.

இப்போது எனக்கு ஒரு கடமையும் எண்ணமும் உள்ளது.
1) ஒன்று நன்றி: பாலைநிலத்தின் விதைகள் நூறுமடங்கு வல்லமை கொண்டவை. ஏனென்றால் ஒரு விதைக்குப்பின்னால் வாழ்வை விரும்பி நீர் கிடைக்காமல் அழிந்த ஆயிரம்கோடி விதைகளின் துயரம் உள்ளது. துளிநீருக்குத் தவம்செய்யும் பல்லாயிரம் விதைகளின் துடிப்பு உள்ளது. அப்படி வளரும் செடிகளுக்கு அவ்வப்போது நீர் பாய்ச்சிய -அதாவது - கல்வி போதித்த ஆசிரியர்கள் பேராசிரியர்கள், மருத்துவம் பார்த்த மருத்துவர்கள், எங்களை தங்கள் பிள்ளைகளாய் பார்த்து அன்பு செலுத்திய குடும்ப நண்பர்கள், அவ்வப்போது உண்மையாக தலைகாட்டி நலம்விசாரித்த வெகு சில உறவுகள் என அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றிகள் கோடி ஏனெனில் மானுடத்தின் மீதான நம்பிக்கையை தக்கவைக்க உதவினார்கள்.

2) இரண்டு ஓய்வு: ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் இரண்டு தொடக்கங்கள் தேவை என்பது என் எண்ணம். பணி, குடும்பம் என ஒரு வாழ்க்கை. அது ஏறத்தாழ அறுபது வயதில் முடிவடைகிறது. அதன் பின்னர் ஓய்வு பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என நம் சூழல் சொல்கிறது. ஓய்வு பெற்ற பின்பு வரும் வெறுமையையும் தனிமையும் சகிக்கமுடியாதவையாக இருக்கும்.

ஆனால் நவீன மருத்துவத்தினால் இன்று மேலும் இருபதாண்டு முப்பதாண்டு வாழ்க்கை எஞ்சியிருக்கிறது. 60-80 வரை ஓய்வெடுப்பதென்பது சாதாரண விஷயம் கிடையாது. மீண்டுமொரு தொடக்கத்தை நிகழ்த்தி அதில் தீவிரமாக செல்லாவிட்டால் வெறுமையே எஞ்சும் (மிஞ்சும்). பெரும்பாலானவர்கள் அமர்ந்திருக்கும் நரகம் அது. உங்களுடைய வாழ்க்கை உங்கள் குழந்தைகளுக்காக கொடுக்க படவேண்டியது அல்ல. கொஞ்சம் கொடுக்க வேண்டியயிடத்தில் நீங்கள் ஏற்கனவே நிறைய கொடுத்துவிட்டீர்கள். உங்களுடைய வாழ்க்கை உங்கள் குழந்தையை ஆளாக்கிய உடன்முடிந்து போவதில்லை. அதன்பின்புதான் துவங்குகிறது.

எப்படா வேலையிலிருந்து ஓய்வு பெறுவோம், எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருப்போம் என்று நினைப்பவர்கள் மத்தியில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பும் மிக உற்சாகமாக உங்களுக்கு பிடித்தவற்றில் ஈடுபடுத்திக்கொண்டு பயனுள்ளதை செய்யுங்கள். பணி ஓய்வு பெற்றப் பின்பு இன்னொரு புதிய வாழ்க்கையை தொடங்கியவர்கள் மட்டுமே மகிழ்ச்சியாக இருப்பதாக சான்றுகள் உள்ளன. பெரிய விஷயங்களை செய்யுங்கள். பணி ஓய்வுக்குப் பிறகு ஒரு நிதானமான சூழல் கிட்டும். அதில் உங்கள் வாய்ப்பினை நன்கு அமைத்துக்கொள்ளுங்கள். ஒரு விதத்தில் பெரும்பாலும் அரசு பணி என்பது ஒரு சிறந்த ஓய்வு காலம் தான்:) அது முடிவடைகிறது. இனிமேல் வேலை செய்யலாம்.

உங்கள் முதல் தொடக்கம் பலருக்கு பாடமாகவும் வழிகாட்டியுமாகவும் இருந்தது. உங்கள் இரண்டாம் தொடக்கமும் ஒரு வழிகாட்டியாக அமைய வேண்டும். எடுத்த காரியம் யாவினும் வெற்றி. எண்ணத்தில் இருக்கும் எரியேசக்தி. எண்ணம் போல் அமையட்டும்!

தனக்கான ஒரு போரை கண்டடைந்தவன் அதில் வெற்றி பெருகிறான். அப்படி கண்டடைந்தவர்கள் நம்பிக்கையை இழக்காமலிருக்க, இறுதிக்கணம் வரை போராட உடலால் முடியும். உள்ளத்தால் அது வதைக்கப்படாமலிருக்கவேண்டும். கழிவிரக்கம் குடியேறிவிட்டால் பின்னர் அந்நெஞ்சங்களில் வீரம் விளையாது. ஆதலால் உடல் என்னும் தழலிற்கு உள்ளமெனும் நெய்யை இடைவிடாது அளித்தவர்கள். அனைத்தையும் எதிர்நீச்சல் அடித்து இப்போரில் வெற்றி வாகை சூடியவர்கள் இவர்கள் இருவரும். கிருஷ்ணனை ஊசியாகவும், தம்மை நூலாகவும் அமைத்துக் கொண்ட யாதவச் சாத்யகிப் போல, இவர்கள் இருவரும் சமர்ப்பணம் என்கிற சொல்லுக்கு ஒரு உயிர் உதாரணமாக வாழ்ந்து அமைதி அடைந்தவர்கள். ஆதலால் கைதட்டல்களுக்கு உரியவர்கள் என்பதனால் இவர்களுக்கு கைதட்டல்களை இங்கு விழைகிறேன்.

பாண்டவர்களுக்கு கிருஷ்ணன் அவ்வளவு கொடுத்தான். கிருஷ்ணன் திரும்பக் கேட்டது அன்பு ஒன்றைத்தான். அவன் மேல் அல்ல! சக உயிர்களின் மேல்! அதுப்போல் இவர்கள் எங்களுக்கு அவ்வளவு கொடுத்துள்ளனர். நாங்கள் அவ்வளவு கொடுக்கவில்லை. இன்றுபோல் என்றும் அன்புடன் ஒற்றுமையாக இருப்போம் என்று கூறிக்கொள்கிறேன்.

தன் தவத்திறத்தால் விண்ணில் நிலைபேறடைந்த துருவனை போன்ற இவர்கள் இருவரையும் என்றும் தண்மதியும் கங்கையும் சூடிக்கொண்ட சைவரைப்போல நாங்கள் எங்கள் வாழ்விலும் எண்ணங்களிலும் சூடிக்கொள்வோம்.

மேற்கில் விதைத்த வெள்ளி கிழக்கில் முளைத்துள்ளது. விடியல் உடம்பின் இரத்ததில் வெப்பத்தை காக்கட்டும். மொட்டுகள் மலரட்டும். நன்றி!

பேரன்புடன்
ராஜேஷ், கிருத்திகா & மணிகண்டன்

(31-ஜூலை-2018)