Featured Post

Daily Project திருக்குறள்

Dear Readers / Friends, http://DailyProjectThirukkural.blogspot.com/    By interpreting various meanings for every word in a Thirukkur...

August 01, 2018

Perseverance and Selflessness Create Warmth with in a Storm


Dear Amma,

I am reading this letter on behalf of myself, Kirthika and Manikandan.

Today, 31st of July 2018 is an important day in your life, as it marks the end of a long perseverant journey which you so boldly shouldered after Appa left us. We, as kids definitely did not realise back then how extremely challenging it must have been for you. But today, when we reflect on the past, we are able to see how Selfless, Affectionate, Noble, Thoughtful and Inspiring (SANTI) you have remained for our sake. We can’t thank you enough for all that you have done for us but can only make an effort. On this special day, we would like to present you with a painting to commemorate your journey through our eyes.


Perseverance and Selflessness Create Warmth with in a Storm
Painting Credit: Artist Katie.M.Berggren (www.kmberggren.com)
All (forms of reproduction in any media format) copyrights of painting reserved by Katie.M.Berggren. Contact her via her website or email.

This painting titled “Perseverance and Selflessness Create Warmth within a Storm” has been specially made for you in an effort to express you how much you mean to us. The following is the interpretation of the painting:

The left top corner represents our past. In the painting, you and Pattu are turning your backs on the past and are angled toward the future which is represented by the sun in right side. This indicates that life has to move on despite the circumstances and so you and Pattu looked ahead to lead us confidently into the future.

You are shown with your back more upright, as you were the one who was firmer than all of us! You are the backbone of the painting. You have a small happy and peaceful smile reflecting your belief in “everything will be alright someday”. Each of the three flowing pieces of your hair represents each one of us kids, showing that we are always in your thoughts. The turbulence around you shown by the white strokes on the blue background stands for the harshness or the “weight of the world” you carried on your shoulders. Despite the uphill climb you were facing, you never failed to protect us and provide us with shelter, love and care. You protected us with your own self exactly like your blue saree which covers your body as well as the three of us. 

The blue colour of your sari signifies you flowing like a river beautifully into the future taking us along with you, creating a way and a path for us (help with school, helping find spouses, etc). Just like a river cuts through rocks and harsh terrain (with its persistence) to always finds its path and doesn’t rest until it joins the ocean ultimately, you never rested in your duties as a mother and father. And one can only be happy to be in the middle of a big, beautiful river.

Rivers gives lives to billions of organisms and so have you to us, time and again, by supporting us and guiding us through tough times. River is made up of billions of water droplets, drops contributed by trees from their storage on the river side (it refers to our friends and well-wishers who did their part like trees by supporting us) plus showering of the god through rain. 

The pottu/bhindi/dot on your forehead represents love, hope and unrelenting focus.

The big flower on your left shoulder represents your love for gardening. On the edge of your sari wrapping us, are five flowers, with five petals each, to signify the unity within the five of us (and of course to also represent what gardening meant for our special family of five! Indulging in gardening and flowers certainly was a hobby from which we derived immense positivity, happiness and relaxation as kids and continues to do so even today.

The embrace of your sari, flowers and river aspects emphasize the fact that we kids were kept warm by you and Pattu together and that we find happiness in life despite the storm and chaos around us (because you two women are protecting us from it). 

Pattu is located behind you to show that she supports you and “backs you up” with chores, childcare and help. She is leaning more (compared to you being straight and tall) because she is the one who was a bit softer to us kids. Pattu has a larger smile because she was less strict. Her sari wraps around all of us kids and you, showing her care for us as well as her own child, you. 

The grains of white rice on the border of pattu’s saree represent her cooking talent. The green colour of her saree signifies that she helped enhance vision, stability and endurance in each of our actions.

Pattu and your heads are turned toward the right, as you are focused on us children having a good future. 

By this time you would have figured out which kid on the painting represents each one of us.

The boy close to Pattu is me. My face is shown to be tilted towards Kirthika and Manikandan, just as a big brother would. Also, being the eldest son, I am depicted to be turned toward the future – as I realize the importance of school and other endeavors that will guide my future into success and also to always be someone Kirthika and Manikandan looked up to.

Kirthika who is drawn beside me is shown with beautiful eyes, reflecting the beautiful person that she is, and looks out at the viewer, calm and serious but with a gentle smile. She is shown with softness as she looks out. She is in the NOW, the present. 

Manikandan, the youngest of us, is shown with mischievous eyes and smile to represent that he was and still is the naughtiest of us! 

The several tones of blues and creams signify warmth within the family while cluster of blue dots around us indicates our friends and well wishers.

The sun in the upper right shines on the family. Sun here refers to the guiding force/God. Beneath the sun there are two small white stars, representing Appa and Thatha- who left our family way too soon only to shower us with blessings from above.

The embedded spirals near sun indicating darkness, are shown in a flat boring colour field.  The sun spiral stand-outs more, and the stars too, indicating that the power of light, god and blessings is always higher than the darkness befallen us.

There is a storm eye (whirlpool) on the bottom left side. Pattu and your sarees are acting as a protective barrier between us and the storm, cocooning us to provide protection while the storm is “outside” (the outside world and extended family that didn’t support you or your journey). 

Storm eye also balances with the sun’s location – the sun and the stars represent Appa and Thatha’s love, shining over our family, and is shining over the FUTURE of all of us as well.

Bright white sparkles (dots), lines and spirals move through the space and saree as they represent the molecules of energy, love and life.

We thank you from the bottom of our hearts for everything you have done for us. If not for you, we would have never made it this far. From this point onwards, we will take care of you. It’s our turn now. It’s time for you to take a break from work. Wish you a happy retirement!

With lots of love and respect always,
Rajesh, Kirthika and Manikandan
(31-July-2018)

May 12, 2018

Quote by Rumi

“Excuse my wandering.
How can one be orderly with this?
It's like counting leaves in a garden,
along with the song-notes of partridges,
and crows.

Sometimes organization
and computation become absurd.”

                                              - Rumi


January 02, 2018

2018 - Reading Challenge and Operational Plan (OP)

வந்தாய் 2018. வருக வருக! இனிதே வருக! இனிது இனி தருக! 

உன் உற்ற நண்பன் 2017 வாழ்வில் போதித்தவை ஏராளம். வாழ்வு கற்றுகொடுக்கும் பாடங்கள் ஒருபுறம் இருப்பின், என் புத்தக அறிவு என்னை செறிவு படுத்துவதை நான் உணர்கிறேன். அதை தொடரவும் விரும்புகிறேன். 

என் கல்லூரி பேராசிரியர் நேரமெடுத்து ஒருதடவை சொன்னார், நம் முடிவுகள் நமது உள்மனம் சொல்லுவதில் (gut feeling) இருந்து பிறக்கின்றன. நம் உள்மனம் அதனிடம் உள்ள தகவலின் அடிப்படையில் இருந்து முடிவுகளை கூறுகின்றன. நம் உள்மனம் கொண்ட தகவல்கள் நாம் கொடுக்கும் தகவல்கள். அத்தகவல்கள் பல மூலத்தில் இருந்து வருபவை. அவற்றில் ஒன்று புத்தகங்கள்.  மேலும், பெரிய நிர்வாகத்தின் தலைவர்கள் (உதாரணமாக பில் கேட்ஸ் - Bill Gates, Founder and Former CEO of Microsoft) ஓர் ஆண்டுக்கு 50 முதல் 60 புத்தகங்கள் படிக்கிறார்கள். ஆதலால் நீங்கள் குறைந்தது 30 புத்தகங்களாவது படிக்க வேண்டும் என்று அப்பேராசிரியர் கூறுவார். உங்கள் அலுவலக வேலைக்காக பயணம் செய்யும் பொழுது விமானத்தில் கிடைக்கும் நேரத்திலாவது படிக்கவேண்டும். அப்படி படித்தால் கூட 30 புத்தகங்களை எளிதாக முடிக்கலாம் என்று.  

இதுவரை நான் படித்தவை மிக குறைவு என்றாலும் அவை என்னை செம்மை படுத்தியே உள்ளன. பல இடங்களில் என்னை கண்ணாடிப் போல பிரதிபலித்து உள்ளது. என்னை ஓங்கி அடித்துள்ளது. மானிடராய் பிறந்து ஆடுகளாய் குதிரைகளாய் ஓடாமல் இருக்க முடிகிறது. என்னால் என்னை இன்னும் செம்மைப் படுத்திக்கொள்ள பல ஆயிர இடங்கள் உள்ளன.  மானுடம் பற்றிய எனது பார்வையை விஸ்தரித்துக்கொள்ள, மனிதர்களின் சூழ்நிலைகளையும், தர்க்கங்களையும் புரிந்துக்கொள்ள, என் அலுவல் துறை சார்ந்து என்னை வளர்த்துக்கொள்ள, வாழ்வை பற்றிய அறிதல்களை புரிந்துக்கொள்ள வாசிப்பேன். ஆதலால் புத்தகம் வாசிப்பேன்!

ஆண்டு தோரும் குட்ரீட்ஸ்.காம் (GoodReads.com) தளத்தில் உள்ள வாசிப்பு சவாலில் (2018 ReadingChallenge) பங்கேற்பேன். ஆனால் சவாலை முடிக்க மாட்டேன். இவ்வாண்டு முடிக்க வேண்டும் என்று உறுதி பூணுகிறேன். (பொதுவாக எனக்கு ஆண்டின் முதல் நாள் உறுதிமொழிகளில் நம்பிக்கை இல்லை. இது உறுதிமொழியும் அல்ல. இவ்வாண்டின் திட்டமிடல் அவ்வளவே). அதற்காக என் நிர்வாக அறிவு கற்றுக்கொடுத்த செயல்வடிவ திட்டத்தை (Operational Plan) கையாள்கிறேன். இவ்வருடத்தின் புத்தக வாசிப்பு செயல்வடிவத்தை கீழே வரைந்துள்ளேன்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு


=================
2018 - OP1 - Jan - Mar
=================
1) When breathe becomes air - Paul Kalanithi (Finished)
2) போரும் அமைதியும் (3) - War and Peace - Leo Tolstoy - Translated by M.A.Susila
3) ஒற்றை வைக்கோல் புரட்சி - One-Straw Revolution - Masanobu Fukuoka (Finished)
4) ஜே.ஜே.சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
5) What If? Serious Scientific Answers to Absurd Hypothetical Questions - Randall Munroe
6) வெண்முரசு - #5 - பிரியாகை  - ஜெயமோகன் (Finished)

=================
2018 - OP2 - Apr - Jun
=================
7) The Subtle Art of Not giving a fuck - Mark Manson
8) Principles - Ray Dalio 
9) Thinking Fast and Slow - Daniel Kahneman
10) புயலிலே ஒரு தோனி - ப.சிங்காரம்
11) தனிமையின் 100 ஆண்டுகள் - One Hundred Years of Solitute -  Gabriel García Márquez, - Translated by Sukumaaran
12) வெண்முரசு - #6 - வெண்முகில் நகரம் - ஜெயமோகன் (Finished)

=================
2018 - OP3 - Jul - Sep
=================
13) வெண்முரசு - #7 - இந்திர நீலம் - ஜெயமோகன்
14) ஒளியிலானது - தேவதேவன் - ஜெயமோகன்
15) Ideas and Opinions - Albert Einstein
16) கோபாலபுரத்து மக்கள் - கி.ராஜநாரயணன்
17) பொய்தேவு - க.நா.சுப்ரமணியன்
18)  தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன் (Finished)

=================
2018 - OP4 - Oct - Dec
=================
19) வெண்முரசு - #9 காண்டீபம் - ஜெயமோகன்
20) ஒரு மனிதன் ஒரு வீடு ஒர் உலகம் - ஜெயகாந்தன்
21) மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்
22) தந்திர பூமி (அல்லது சுதந்திர பூமி) - இந்திரா பார்த்தசாரதி
23) அசடன் - The Idiot -  Fyodor Dostoyevsky translated by M.A.Susila

=================
Daily Literary Works
=================
Daily Reads - 24) Bhagavat Gita According to Gandhi
Daily Writes - 1 திருக்குறள் / Thirukkural - திருவள்ளுவர்

=================
Un Planned
=================
கடலோரக் குருவிகள் - பாலகுமாரன் (Finished)
உடலினை உருதி செய் - சைலெந்திர பாபு (Finished)
அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன் (Finished)
The Best Business Books Ever (Finished)
மகாபாரதம் - பிரபஞ்சன் (Finished)
அம்புப்படுக்கை - சுனீல்கிருஷ்ணன் (Finished)
How I raised myself from failure to success in selling - Frank Bettger  (Finished)
A Yogic Approach to Stress - Dr.Anandha Balayogi Bhavanani (Finished)
Autobiography of Benjamin Franklin  (Finished)
Men are from Mars, Women from Venus -  John Gray  (Finished)
The Effects of Yoga - Swami Shankardevananda  (Finished)
Understanding the Yoga Dharshan - Dr.Anandha Balayogi Bhavanani  (Finished)





எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு 

December 29, 2017

பூவே பூச்சூடவா

பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..
பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா…

பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..

அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும்
ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என்வாசல் தீண்டவேயில்லை ..
கண்ணில் வெண்ணீரை வார்பேன்.
கண்களும் ஓய்ந்தது..
ஜீவனும் தேய்ந்தது..
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய்..
இந்த கண்ணிரில் சோகம் இல்லை
இன்று ஆனந்தம் தந்தாய்..
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்

பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..

காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும்
தங்கம் கருக்காது தாயே
பொன் முகம் பார்க்கிறேன்
அதில் என் முகம் பார்க்கிறேன்..
இந்த பொன்மானை பார்த்துக்கொண்டே ..
சென்று நான் சேர வெண்டும்
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போது,
நீ என் மகளாக வேண்டும்.
பாச ராகங்கள் பாட வேண்டும்..

பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா…

பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா..

=====================================
படம் : பூவே பூச்சூடவா
பாடல் :  பூவே பூச்சூடவா
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : சித்ரா, கே.ஜே.ஜேசுதாஸ்
=====================================


December 20, 2017

[கவிதை] கோபுரத்திற்கெல்லாம் ராஜமாதா ராஜகோபுரம்



ராஜகோபுரம்
கோயிலுக்கு என்று சென்ற போது
நான் முதன் முதலாய் கண்டது ராஜகோபுரம்
நீ அளித்த உவகை என்னை உன்னிடம் அழைத்தது
உன் பாதம் தொட்டு
வணங்கி செல்லாமலில்லை

கோயிலுக்குள்ளே சென்று நான்
பல  பரிவார மூர்த்திகளை
கண்டேன் தொழுதேன் நகர்ந்தேன்
கற்பகரகத்தை வணங்கினேன்
சிறுதெய்வங்களும் இருந்தனர்
ஆனால் அவைகள் பலர் கண்ணுக்கு தெரியவில்லை
கற்பகரகத்தில் இருந்து தினமும் பார்க்கிறேன்
ஆதலால் எனக்கு தெரிகிறது

பிரகாரம் சுற்றியப்பின்பு வந்து அமர்ந்தேன்
பிறரை போல் நான்
அண்ணாந்து பார்த்தது உனைதான்
உன் அடித்தளம் கண்டு வியந்தேன்
நீ நூற்றாண்டுகளாய் தாங்கும்
பெரும் பாரம் பேசி முடியாது
ஆனால் அழாமல் நீ அழகாய் இருக்கிறாய்

மற்ற சந்நிதிகள் கோபுரம் கொண்டாலும்
ராஜகோபுரத்தை நின்று பார்க்காதவார் உண்டோ?
நீ வான்நோக்கி எழும் பொழுது
சிற்பங்கள் உன் மீது எழுந்து அமர்ந்தது
பல மலர்கள் கொண்ட வெட்சி பூ ஏறி
கலச மகுடமாய் அழகு சேர்த்தது

மனிதர்ளாயினும் தெய்வங்களாயினும்
உன்னை தாண்டியே வரவேண்டும்
அதுவே உனக்களித்த சிறப்பு
கோபுரங்களுக்கெல்லாம் "ராஜமாதா" நீ
அதுவே உன் பேறு ராஜகோபுரம்

அவசரத்தில் செல்வோரும்
உனை பார்த்து மலைத்து
ஒரு கணம் வணங்கி
உன்னை மெச்சாதவர் உண்டோ?

உன் பெருமை கேட்டாயே ராஜகோபுரமே
மூலஸ்தானமாய் நின்று எனக்கு கிட்டாத
புகழும் உனக்கு கிட்டுகிறது
என்று சொல்வதில் மகிழ்ச்சியே

ஆயினும் நீ அழுவதை கண்டால் எனக்கு
விரக்தியாய் உள்ளது
கேள் ராஜகோபுரமே கேள்
உன் முதல் தளத்தில் நின்றுகொண்டு
மற்ற பரிவார மூர்த்திகள் கோபுரங்கள்
உயர்வாய் உனக்கு தெரிந்தால்
உன் உயரம் உனக்கு எப்படி தெரியும்!!
ராஜகோபுரம் மட்டும் இருந்தால்
கோயில் அவ்வளவு அழகில்லை
என்பதையும் அறிக நீ
கோயிலின் விளிம்பில் இருக்கிறேன்
என்று நினைக்கிறாய்
என்னில் முதல் படி நீ
என் அங்கம் நீ
நீ இல்லாமல் கோயிலை யார் அறிவார்?

- ராஜேஷ் (19 டிசம்பர் 2017)

December 12, 2017

இரண்டாயிறத்திப் பதினேழ்

இரண்டாயிறத்திப் பதினேழே
இன்னும் இருபது நாட்கள் இருக்கிறாய்
உன்னை நான் மறவேன்
என் திருமண நாளின் ஆண்டு
என்பதற்காக அல்ல

ஜனவரி ஒன்று காலை இவ்வாண்டை
நல்லபடியாக கடக்க வேண்டும்
என்று வேண்டினேன்
ஏனெனில் அதற்கு ஒருவாரம் முன்பே
இவ்வாண்டு எவ்வளவு கடுமை
என்பதற்கான கடுஞ்சொல்லை
என் செவி கேளச்செய்தாய்

மனதில் உறுதியுடன்
உன்னை எதிர்க்கொண்டேன்
ஆனால் உனக்கு கிடைத்த
முதல் தருணத்திலேயே
என்னை செம்மட்டியால் அடித்தாய்

வலித்தாளாமல் வருந்தினேன்
என் வலிமை முழுவதையும்
உனக்காக கொடுத்தேன்
ஆனால் நீ எனக்கு சிறிதும்
கை கொடுக்கவில்லை

முளைத்து விதையாய் எழுந்தாலும்
நீ என் தழைகளை
கிள்ளி எரியும் தோறும்
வீழ்வேனோ என்று நான்
தழைத்து மீண்டும் வந்தேன்

வஞ்சகத்திற்கு பிறர் கைக்கொர்த்து
பிறர் அறியாமல்
அவர் சொற்களை திரித்தாய்
கருணையின்றி வெட்கமின்றி
ஓல சாசனம் எழுதினாய்

உன் சொற்கள் என்னை
வாலால் வெட்டி
மன்னில் புதைத்து
உன் இயலாமைக்கு என்னை
நரபலி கொடுத்துக்கொண்டது

நீ நசுக்கியது என்னையல்ல
என்னுள் இருந்த தன்னம்பிக்கையை
நான் உன்னை நினைக்காத நாள் இல்லை
என்பதனை நீ அறிவாயோ?
ஏனெனில் நீ என் 70-80 அகவைகளில் ஒருவன்

எனக்கெதற்கு
ஏன் நான்
என்ன தவறு செய்தேன்
இப்பொழுது ஏன்
என்று மனதில் உன்னை கேட்காத நாளில்லை

நயவஞ்சகனே உன் பதில் வேண்டி
உன்னை கேட்டேன்
ஒன்றுக்கும் பதில் கூறவில்லை
இல்லாத நியதிகளை கூறி
உண்மையை மறைத்து உன்னை தற்காத்துக்கொண்டாய்

கரையான் போல் என்னில்
ஒவ்வொரு உயிரணுவிலும் புகுந்தாய்
என் சந்தோஷங்களை
என் அமைதி
என் நம்பிக்கை
என் முயற்சி
என் நேரம்
என் ஓர் ஆண்டு
என் உன்னத தருணங்கள்
ஏன் என்னை சார்ந்தோரின் இன்பங்கள் என்று கூட இல்லாமல்
இரக்கமின்றி அழித்தாய்

நீ உமிழ்ந்த சொற்கள் எனக்கு அகோர ஓலமாய் ரீங்கரிக்கிறது
அகோர ஓலம் என்றால் என்னவென்று கேட்கிறாய்?
தொடர்மழையால் முளைத்துக்கொண்டு இருக்கும்
காட்டில் முளைத்த பல கோடி விஷகாளான்கள் போல
என்னுள் முளைத்துக்கொண்டே இருந்தாய்
உனை களைய நான் பாடுபட்டு
சோர்வடைந்தேன்
வீழ்ந்தேன்

சோர்வில் வந்த
பிழற்றல் எண்ணங்கள்
மேலூன்றிய பொழுதெல்லாம்
என் வலிமையும் பிறர் வலிமையும் அன்பும்
என்னை எளிதாக தற்காத்தது

ஆனால் என்னை இந்த கதியிற்கு
ஆளாக்கிய உன்னை என்னவெல்லாம்
செய்ய நினைத்தேன் தெரியுமா
உன்னை கடத்தி
வருடத்திற்கு பன்னிரண்டு மாதம்போல
பன்னிரண்டு பாகங்களாய் வெட்டி எரிய நினைத்தேன்

உன்னை ஒரு ஆள் உயர
கண்ணாடியாய் பாவித்து
உன்னை ஒவ்வொரு சில்லாய்
அடித்து நொறுக்க விழைந்தேன்
கண்ணாடி நொறுங்கும் தோறும்
ஒவ்வொரு சில்-இலும் அதன் ஒவ்வொரு ஓரத்திலும்
உன் குருதி வழிவதை
பார்க்கவே விரும்பினேன்
உன் விகார முகமும் அகோர மனமும்
இரக்கமின்றி  சிதைக்கவே விணவுகிறேன்

இரண்டாயிறத்திப் பதினேழே
ஆண்ட்ரியாவே
நான் வேண்டாத பாக்டீரியாவே
உன்னை அழித்துக்கொள்
என்னை விட்டுவிடு
இன்னும் இருபது நாட்கள்
இருப்பினும் இப்போதே
என்னை விட்டுவிடு!!

ஆனால் ஒன்று
கெட்டதிலும் ஒரு நன்மை
இரண்டாயிறத்திப் பதினேழே
நீ எனக்கு நிறைய வலி தந்தாய்!

August 07, 2017

ஓடும் தெளிந்த நீரில்

வாழக்கையை போல் 
அருவியும் இல்லை 
நதியும் இல்லை 

Image result for river
Image result for river
Image result for river
Image result for river
Image result for river

ஓடையாய் பிரிந்து
குளமாய் மாறி 
ஒரே மாதிரி காட்சியை கண்டு
தன் மேல் விழும்
சூர்யோதய பிம்பத்தையும்
நட்சத்திர பிம்பத்தையும்
தனதென எண்ணி
சுயகனவில் வாழ்ந்து
தன அடியில் உள்ள
காழ்ப்பில் ஊறி
உயர் வெயிலின்
வெட்பத்தில் வறண்டு
இம்மண்ணில் மாய்வோர் 
ஒரு குலம் எனில்

Image result for pond

ஆறாய் தொடர்ந்து 
பாறையில் முட்டி 
சங்கீதம்  எழுப்பி 
வளைவுகளில் வளைந்து கொடுத்து 
ஒவ்வொரு நொடியும் 
புதிய காட்சிகள் கண்டு
செல்லும் வழியில்
பல கோடி வேர்களுக்கு
தண்ணீர் பாய்ச்சி
சென்று சேரும் இடத்தில்
எண்ணற்ற கடல் உயிர்களுக்கு
புது ஸ்வாசம் தந்து
களிப்புறுவோர் 
இன்னொரு குலம் 

Image result for river

சும்மாவா சொன்னார்கள் 
ஓடும் தெளிந்த நீரில் 
நோய்யில்லையென்று!

- ராஜேஷ் (எ) பாலசுப்ரமணியன் (8 ஆகஸ்ட் 2017)

April 15, 2017

ஏழாம் உலகம்

==================================================================
==================================================================
அன்புள்ள ஜெ,

நலமா?

தங்களின் சங்கச்சித்திரங்களை சிறிது சிறிதாக வாசித்தேன். நல்ல வாசிப்பாகவும், சங்க பாடல்களை எப்படி பார்க்க வேண்டும் என்று தெரிந்துக்கொண்டேன். உங்களின் திருக்குறள் பற்றிய உரைகளையும் யூடிபில் கேட்டேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஏனெனில் நான் அவ்வப்போது திருக்குறளை புரிந்துக்கொள்ளவேண்டும் என்று ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒரு குறள் என்று சுழற்ச்சி முறையில் வாசித்துக்கொண்டு இருக்கிறேஏண். நீங்கள் ஒரு இடத்தில் கூறி இருப்பீர்கள் ஒவ்வொரு சொல்லுக்கும் பல பொருள்கள் இருக்கும். அதனை அறிந்துக்கொண்டு படித்தால் திருக்குறள் இன்னும்  நன்றாக புரியும் என்று. அவ்வாறே கடந்த மூன்று ஆண்டுகளாக agarathi.com உதவியுடன் படித்து வருகிறேன். துவக்கத்தில் கடினமாக தான் இருந்தது. ஆனால் பிற்பாடு பொறுமையாக படித்தாலும் நன்கு படிக்க முடிந்தது.  இப்படி படிப்பது வீண் வேலையோ என்று ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால் உங்களின் உரை கேட்டப்பின்பு அது சிறந்த முறையில் ஒன்றே என்று தெரிந்துக்கொண்டேன். நன்றிகள்.

ஏழாம் உலகம்


சில ஆண்டுகளுக்கு முன் ஏழாம் உலகம் நாவலை வாங்கினேன். ஆனால் படிக்க ஒரு ஐயப்பாடு இருந்துக்கொண்டே இருந்தது. ஏனெனில் அது ஒரு இருண்ட உலகம், அதற்கு தேவையான நுண்வாசிப்பு என்னிடம் இல்லை என்ற எண்ணங்கள் என்னை தடுத்தன. கடந்த ஒரு வாரமாக வாசித்தேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நாவலை ஒரு தடவை வாசித்துள்ளேன். ஆதலால் நான் புரிந்துக்கொண்ட அளவு தொகுத்துக்கொள்ள முயற்சிக்கிறேன்.

நாவலின் துவக்கமே (30 பக்கத்திற்குள்) எனக்கு ஒரு உவப்பிலாத உலகத்திற்குள் செல்லும் உணர்வு இருந்தது. கீழே வைத்து விடலாம் என்றேன் தோன்றியது. அதுவும் ஒரு இடத்தில் எருக்குக்கு பெருமாள் தாலி கட்டும் இடம். பின்பு இன்னும் ஒரு 50 பக்கம் படித்தேன். அதன் பின்பு என்னால் அந்த ஏழாம் உலகம் சொல்ல வருவது புரிந்துக்கொள்ள முடிந்தது. நாம் வாழும் உலகையும் புரிந்துக்கொள்ள முடிந்தது.

நாவலின் பிற்பகுதியில் மண்ணுக்கு கீழ் உள்ள ஏழு லோகங்கள் அதலம். விதலம். நிதலம், கபஸ்திமல், மகாதலம், சுதலம், பாதளம் உண்டு அவை அனைத்தும் நம்மை சுற்றியே இருக்கிறது. ஆனால் நாம் அதை பார்ப்பது இல்லை. பழனி மலைக்கு படியேறி போறவங்க கூட எல்லாதையும் பாத்துட்டு சும்மா போகிறார்கள் என்று.  முருகனுக்கு அரோகரா என்று கூறுகிறார்கள். அதுபோல எருக்கை ஒரு துணியில் போட்டு அந்த மல வண்டியில் போடுகிறான். வண்டி அதிர்கிறது. எருக்கி மீது சாக்கை எடுத்து மூடுகிறான். ஆனால் இந்த வண்டியைப் பார்க்கும் எவரும் மறு முறை பார்க்காமல் பதறி விலகுகிறார்கள்.  இது போல நாம் வாழ்வில் நம்ம சுற்றி இருக்கிற உலகை பார்க்க மறுக்கிறோம். பொருள் அல்லவற்றை பொருள் என்று எண்ணி அதன் பின் ஓடுகிறோம். 

பழனிக்கு பல முறை சென்றதுண்டு. ஆனால் பழனியை இப்படி பார்ததது இல்லை. எல்லாவற்றையும் செய்து விட்டு சாமி சாமி என்று சொல்லும் எளிய மனிதர்கள். பாவிகளுக்கும் அதே சாமி, பிச்சக்காரணுக்கும் அதே சாமி, திருடனுக்கும் அதே சாமி. எளிய மனிதர்கள். ஒரு கையும் இரு கால்களும் இல்லாத மாங்காண்டி சாமியை கண்டால் ஐஸ்வர்யம் என்று நினைப்பவர்கள், தினமும் ஒரு காசாவது போடவேண்டும் என்று நினைப்பவர்கள் என்று அந்த பழனி மலை. அங்கே மக்கள் காசு பொடுவதும் ஒரு வணிகமாக சித்தரிக்கப் படுகிறது. பிச்சைக்கார்ர்களைப் பார்க்கும் போது ஐயோ என்பது. பின்பு நமக்கு இல்லையே என்று ஆறுதல் படுத்திக்கொள்வது. அதற்கு நன்றி சொல்லிக்கொள்வது என்று காசு போடுவது. கீழ்மைகள்.  இந்த பழநி மலை உண்மையில் ஒரு திருத்தலம் என்று கருதுகிறோம். ஆனால் தைப்பூசம் முடிந்தப்பின்பு அது ஒரு குப்பை குவியலாய் நாறுவது மனிதர்களை பற்றியே உணர்த்துகிறது. நம்ம மனதில் உள்ள குப்பைகளை பழனி என்ற குப்பை கூடையில் போடுகிறார்களோ என்று தோன்றியது.  ஆதலால் தான் என்னவோ (கேரளாக்கு கொச்சன்) எல்லா வருஷமும் போனாலும் ஒரு சாமிக்கும் இவர்களை அறியவில்லை. அந்த கோவிலில் (பல கோவில்களில்) நடக்கும் அபத்தமும் நன்றாக கூறப்பட்டு உள்ளது. வெளியுலகத்து தான் மரியாதையான கோவில் வேலை, மற்றபடி செய்வதெல்லாம் அறம் அல்லாதவைகள். கை நீட்டினாலும் அதும் எரப்பாளித் தனம்தான். மந்திரம் சொல்லி துண்ணூறுவாரிக் கொடுத்து கைய நீட்டினாலும்  கணக்குதேன்...  அந்த ஆறடிக்கல்லுக்கு ஆயிரம் வருசமா கழுவி சந்தனம் போட்டு பூ போட்டு கும்பிட்றது ஒர் தொழில் - அதுபோல முத்தமை பண்டாரத்தின் தொழிலுக்கு மூல தனம். 

இருந்த இடத்தில் சோறு கிடைக்கும் பழனியில் உருப்படிகளை காண்பிப்பது எல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை. அடுத்த பக்கம் போலாமா வேண்டாமா என்றே எண்ணித் திருப்பினேன்.  அங்கே ஓரு உருப்படியும் ஒவ்வொரு ரகம். மலமும் மூத்திமும் நாறும் இடத்தில் பன்னிக மாதிரி திங்குவதும் தூங்குவதும். .. கடைசியில் அவர்கள் எலை போட்டு சோறு திங்குவதற்கு காத்துகிடப்பது. குய்யன் கல்யாண் சாப்பாடு இல்லை என்ற உடன் வருத்தம் கொள்ளும் இடம், பிறகு சாக துணியும் இடங்கள் அவ்வளவு எளிதாக கடக்க முடியவில்லை.

பண்டாரம் எல்லாவற்றையும் செய்யும் பொழுதும் முருகன் துணையிருப்பான் என்று கூறுகிறான்..ஆரம்பத்தில் எல்லாம் பழனியாண்டிக்க கணக்கு... கணக்கறிந்தவன் அவன். ஞானபண்டிதன் என்கிறான்.  ஆனால் பண்டாரம் செய்யும் தொழில் உடல் உணமூற்றோர்களை வாங்கி, விற்று, பிச்சை எடுக்க வைத்து செய்யும் தொழில். பண்டாரம் இந்த உருப்படிகளை பிச்சை எடுக்க வைத்து சோறு போடுவதே அவர்களுக்கு ஒரு வித நல்லது .. இல்லை என்றால் யார் இவர்களை பார்த்துக்கொள்வார்கள் என்ற நினைப்பு.  பண்டாரம் செய்வதும் முதலாளித்துவம் தான். ஒரு குமாஸ்தா மூளையை விற்பது போல, தேசம் மனிதற்களை விற்பது போல. மனுசனை மனுசன் விக்காம் பணம் இல்லை என்ற இடங்கள் நன்றாக இருந்தது. பண்டாரம் இப்படி செய்கிறான் என்றால், உலகில் பல மக்கள் தந்திரத்தால் எப்படி காரியம் சாதிக்கின்றனர் என்பதை கூறும் இடங்கள் - உதாரணமாக -  ஒருத்தன் அடித் தொண்டையில நிதானமா பேசினாலே அவன் புத்திசாலின்னுஜனம் நினைக்கும். 

பின்பு தன் மகளுக்கு வளையல் வாங்கும் பொழுது அந்த இடத்தில் சுத்தியால் ஒரு குழந்தை அடிகிறார்கள். ஆனால் வளையலை வாங்கிவிட்டு செல்கிறான்... குடும்பவாழ்வில் கலியாணம் செய்து வைத்து பிள்ளைக்கு அப்பாவாக பொறுப்பாக பாசமாக இருந்தாலும், அவன் மனது அவனை அலைக்கழிக்கிறது. பண்டாரம் எல்லாவற்றையும் செய்து விட்டு நான் ஒருத்தனுக்கு துரோகம் நினைக்கவில்லை, ஒருத்தனையும் ஏமாத்தினதும் இல்லை என்பது எல்லாம் வெளியே சொல்லிக்கொள்ளும் சமாளிப்புகளே. உண்மையில் அவன் அகத்திற்கு தெரியும் அவன் செய்வது தவறு என்று. சில இடங்களில் அவன் நட்சத்திரங்களை பார்க்க முற்படுகிறான். ஆனால் அதை பார்க்க முடியவில்லை. கண் கூசுகிறது. அவன் செய்யும் தவறுகளை யாரோ பார்க்கிறார்கள் என்ற குற்ற உணர்வு. தன்நெஞ்சே தன்னைச் சுடும் என்பது போல.  
  
முத்தமைய பற்றி சொல்லமால் இருக்க முடியாது. அவளுடைய முதற்காட்சியே கொடூரம் என்று சொல்வேன்.  பண்டாரம் முத்தமையை அந்த நிலைமையிலும் பலபேருடன் புணர வைத்து அவளை ஒரு முட்டையிடும் கோழியாக சித்தரிப்பும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.   பதினேட்டு  பெற்றும் எதுவும் அவளுடன் இல்லை என்று கஷ்ட படுகிறாள். ஒற்றை முலை தான் இருந்தாலும் அவளுடைய தாய்மை சற்றும் குறையவில்லை. அவளது குழந்தையின் சிறுநீரு பட்ட உடன்.. எங்க மகாராஜல என்று சொல்லும் இடங்கள். (அந்த இடத்தில் குழந்தை பிரிக்கிறான் பண்டாரம். நட்சத்திரங்களை தன்னை அறியாமல் பார்க்கும் பொழுது அவனுக்கு கூசு கிறது. குடையை விரித்துக்கொள்கிறான். பாவங்களை இப்படித்தான் மறைத்துக்கொள்கிறார்கள். ) .. அது போல சணப்பியிடம் உரையாடும் இடங்களில். பிள்ளைகளை வெறுக்க முடியாது... முலைகளில் வாய் வச்ச பின்பு அது அம்மாண்ணு விளிப்பது மாதிரி இருக்கும் - பிறகு வெறுக்க முடியாது.  அது போல. குழுந்தை கூனும் குருடுமாக இருந்தாலும் பிள்ளையை மயிருனு சொன்னா அவள் கோபம் கொள்வதும். 

நான் சற்று நேரம் பின்பு கடந்த மற்ற சில இடங்களை சொல்ல வேண்டும்.1) நம்மள மாதிரி சாதாரண ஆத்மா நம்மளை மாதிரி இன்னொரு ஆத்மாவ மதிக்கணும், சினேகிக்கனும். 2) சீவன் கூனன் சீவனாட்டு மாறுமா என்ற இடத்தில்.. பீல எரியிர தீயும் சந்தனக் கட்டைல எரியர தீயும் நாத்த குப்பைல எரியிர தீயும் ஒன்னு தான் 3) அப்பன் குழந்தையை தொட்டு பார்க்கும் ஏற்படும் சுகம் அந்த மணத்தை மோந்தவன் செத்தாலும் மறக்க மாட்டன் 4) கூன்குருடு செவிடு நீங்கி பிறத்தலரிது. பிறந்தாச்சு. பின்ன என்ன? என்ற் இடமும் 5) ஓட்டு இல்லாதவன் முனிசிப்பாலிடி கேஸ் என்ற இடம் (லா அண்ட் ப்ரொசீஜர்) 6) எல்லோருக்கும் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான காலம் குழந்தைகள் வளர்ந்து வரும் காலகட்டம்தான்

இன்னும் சில நாட்கள் இந்த ஏழாம் உலகத்தில் தான் இருப்பேன் என்று நினைக்கிறேன். அப்படியே தொகுத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். யோசித்த்ப்பார்த்தால், நான் பல இடங்களை தவறவிட்டிருப்பேன். மறுவாசிப்பில் வாசிப்பும் மனதும் இன்னும் விரிவடையும் என்று நம்புகிறேன்.

Image result for ezham ulgam
எழுத்தாளர் ஜெயமோகன்

நன்றிகள்!! இதனை திரைப்படம் ஆக்கிய பாலாவிற்கும் நன்றிகள்! 

அன்புடன்,
ராஜேஷ்  

February 01, 2017

இசை

நான் என்றும் இசையில் லயித்து விடுவேன். நான் பள்ளியில் படிக்கும் காலங்களில் (ஒன்பதாவது இருக்கும்) எமது நண்பர்கள் வந்தே மாதரம் பாடினார்கள். கண்ணில் நீர் திரண்டது. அதே போல் எனது சகோதர சகோதரி படித்த பள்ளியின் ஆண்டு விழாவுக்கு செல்லும் பொழுதும் உணர்ச்சிவசப்படுவேன். அடுத்த பிறவி என்று ஒன்று எனக்கு இருந்தால் அதில் இசையை முறைப்படி கற்க வேண்டும். இசை என் முதன்மை  வாழ்வாக இருக்க வேண்டும். 

January 28, 2017

கிருஷ்ணா கிருஷ்ணா!!

அன்புள்ள வணக்கத்திற்குரிய திரு.இந்திரா பார்த்தசாரதி ஐயா அவர்களுக்கு,

நமஸ்காரங்கள்!

தாங்கள் நலமா?

முதல் முதலாக 2014இல் தங்களின் ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன குறுநாவலை வாசித்தேன். அப்பொழுது தான் நான் வாசிக்க துவங்கியிருந்தேன். நல்ல வாசிப்பு அனுபவமாக அமைந்தது.


Image result for krishna krishna indira parthasarathy


கடந்த ஒரு வாரமாக கிருஷ்ணா கிருஷ்ணா குறுநாவலை வாசித்தேன். கிழே வைக்க மனமில்லாமல் கிழே வைத்து வைத்து வாசித்தேன். கிருஷ்ணனை இப்படி எல்லாம் இதன் முன் பார்த்தது இல்லை நான் . மிக நல்ல திறப்பாக அமைந்தது. கிருஷ்ணன் மூலம் சொல்லப்படும் மாற்றம், மரணம், செல்வம், அதிகாரம்,பயம், உடல், காதல், காமம், பாசம், நட்பு, பெண்ணியம் (இன்னும் பல), பற்றி கூறுவதை ரசித்தேன்.

தர்மம், அதர்மம் பற்றி பல இடங்களில் வருவது மிகுந்த தெளிவாக இருக்கிறது. அன்றே விதிகளை ஆட்டதிற்கு ஏற்ப கிருஷ்ணன் மாற்றிக்கொண்டான். ஆஹா Reinvention என்ற buzz wordக்கு கிருஷ்ணனே வழிகாட்டி!! 

அதே போல் ராமன், கர்ணனை சுற்றி இருந்த துன்பியல்கள் கிருஷ்ணனை சுற்றியில்லை. கிருஷ்ணன் என்றால் கொண்டாட்டம். கிருஷ்ணனே அவ்வதாரத்தின் செய்தி என்று முதலில் குறிப்பிட்டது நினைவில் வந்தது. 

பின்பு கடைசியில் ராதவிற்கும் கிருஷ்ணன்னுக்கும் ஆன காதலை பற்றி சுறுக்கமாக சொன்ன இடங்களையும் ரசித்தேன்.

கிருஷ்ணா கிருஷ்ணா மொத்தத்தில் எனக்கு இப்பொழுது தேவை பட்ட ஒரு நல்ல வாசிப்பாக இருந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

நன்றி.

அன்புடன்
ராஜேஷ் பாலசுப்ரமணியன்


January 08, 2017

பெருமழை

எத்தனை வகையான மழை, இந்த ஒரே கவிதைக்குள்! முதலில் கரிய வேங்கை மரத்தில் வண்டுகள் மொய்ப்பது போல ரீங்கரிக்கும் இளம் மழை. பின்பு மலைச்சரிவுகள் அதிரும் யானைப் பிளிறல் போன்ற பெருமழை. கடல் முழுக்கக்  குடித்து உமிழும் மழை. மண்ணை மூடும் நீலமணி அருவி . இடிநாதம் சேவை செய்ய ஊர்வலம் வரும் மழை. 

இந்த உக்கிரமழை ஒரு காத்திருப்பின், எதிப்பார்ப்பின், ஒரு கற்பனைக் கூடலின் பேருருவம். எல்லா அலங்காரங்களும் கட்டுப்பாடுகளும் அறுந்து தெறிக்கும் வெறிமழை. அப்படிப்பட்ட ஒரு மழையில்தான் யுகங்களாக மண்ணில் பதிந்து, மௌனத்தின் பரு வடிவங்களாக ஆன மாமலைகள் தங்கள் ஒளி காக்கும் கண்களைக் திறக்கும் போலும். உறவை அப்படி அதன் உக்கிரத்துடன் அறிய வேண்டும். பிறகு நாசூக்கான மௌன மழைகள் வம்மை நினைப்பதில்லை. வாழ்க்கையில் எது முக்கியம் என்ற கேள்விக்குப் பிறகு இடமே இல்லை. 

நற்றிணை - 112. குறிஞ்சி
பருவ வரவின்கண்ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது. 
விருந்து எவன்செய்கோ- தோழி!- சாரல்
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கைச்
சுரும்பு இமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டு,
உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும்
பெருங் கல் நாடன் வரவு அறிந்து, விரும்பி,
மாக் கடல் முகந்து, மணி நிறத்து அருவித்
தாழ் நீர் நனந் தலை அழுந்து படப் பாஅய்,
மலை இமைப்பது போல் மின்னி,
சிலை வல் ஏற்றொடு செறிந்த இம் மழைக்கே?
               -  பெருங்குன்றூர் கிழார்

(எளிய வடிவில்)
அரும்புகள் முழுக்க விரிந்த
கரிய கால் கொண்ட
வேங்கை மரத்தில்
வண்டுகள் ரீங்கரிக்கின்ற,
மலைச்சரிவுகள் எதிரொலிக்க
யானை மத்தகம் பிளந்து
சிம்மம் உலவுகின்ற,
மாமலையின் அதிபன் வருவத்தைச் சொல்ல
பெருங்கடல் நீர் அள்ளி ,
நீலமணியருவியென
மண் நிறைத்து ஒழுகி,
மலை கண்ணிமைப்பதுபோல
மின்னல் ஒளிர
இடிமேளம் முழங்க
வரும் இந்த மழையை
எப்படி வரவேற்பது தோழி!

(நன்றி: ஜெயமோகன் / சங்கச்சித்திரங்கள்)

Related image

December 04, 2016

இன்று 2016/ 12 /04

இன்று என் வாழ்வில் நான் ஒரு பாதுகாப்பின்மை உணர்கிறேன் முன்பெப்பொழுதையும் விட. நான் பள்ளிகளில் படிக்கும் பொழுது உற்றார் உறவினர் இல்லாத பாதுகாப்பின்மை சில நேரங்களில் வந்ததுண்டு. தந்தை இல்லை என்று கூட கவலை பட்டது இல்லை. பட்டபடிப்பு பற்றியை கவலையை விட வேலை பற்றிய கவலையே பள்ளி நாட்களில் உண்டு.
பள்ளிகளில் படிக்கும் பொழுது என் மேல் இருந்த குடும்ப பொறுப்பு ஒரு புறம் சுமையாக இருந்தாலும் எனக்கு அது அவ்வளவு சுமையாக இல்லை.  பின்னாளில் வேலை செய்யும் போது கூட சுமையாக எண்ணியதில்லை. ஏனெனில் நான் அப்பொழுது தான் வேலை செய்ய துவங்கினேன். என் மேல் எனக்கு அதீக தன்னம்பிக்கை இருந்தது. எனக்கு நிலையான வருமான இருந்தது. 

வேலைக்கு சென்று 4-5 ஆண்டுகள் பிறகு வேலையை பற்றிய பாதுகாப்பின்மையை உணர்ந்தேன். என் திறமை மேலும், என் தொழில் சுத்தத்தின் மேல் நம்பிக்கை இருந்தாலும், எனக்கு இத்தொழிலில் வளர்ச்சி என்பது குறைவாகவே இருக்கும் என்று கருதினேன். "நான்" செல்லவேண்டிய இடம் மிக தொலைவில் இருப்பதாக நினைத்தேன். மேற்ப்படிப்பு என்பது எனது வளர்ச்சிக்கும் மட்டும் இன்றி எனது அறிவுக்கும் மிக தேவையான கட்டுமானமாக கருதினேன். ஆதலால் மேற்ப்படிப்பு படித்தேன்.

மேற்ப்படிப்பு படிக்கும் பொழுது வேலை கிடைக்காமல், கல்யாணத்திற்கு பெண் கிடைக்காமல் வாழ்வின் மீது பாதுகாப்பின்மையை உணர்ந்தேன். இவ்வளவு நேர்மையாக உழைத்தும், படித்தும், எவர் உடைமையின் மீதும் பற்றற்று இருந்தும், நல்லது நினைத்தும், வாழ்வில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறேன். என மக்களுக்கும் என் குடும்பத்தினருக்கும் சிறந்த கட்டுமானத்தையும் வழிகாட்டுதலையும் சுற்றத்தையும்  தரவேண்டும் என்று என் மனம் விழைக்கிறது .  ஆனால் அதற்கான வேலைகளில் என்னால் முழுமையாக ஈடுப்பட முடியவில்லை. 

என்னுடைய புதிய வேலையில் என்னை பாதுக்காப்பின்மையில் ஆழ்த்தும் ஒரு மேலாளர். என் மீது சிறிதும் நம்பிக்கையில்லாமல் இருக்கும் அவர் எனக்கு மிகுந்த மன அழுத்தத்தை தருகிறார். என் மனம் அமைதியாகவே இல்லை. பலவற்றை நினைக்கிறது. ஒன்றும் செய்ய மறுக்கிறது. 

ஏன் என்று தெரியவில்லை. வாழ்வு எனக்கு இப்படி உள்ளது. ஒரு நேரத்தில் கடந்த கால நினைவுகள் பசுமையாக தென்றலாக தோன்றுகிறது. அதுவே சற்று ஆறுதல் அளிக்கிறது. 

எனக்கு வயது 32. காலம் சென்று விட்டது. நான் வந்தடைந்த தூரம் மிக குறைவாகவே தோன்றுகிறது. செல்ல வேண்டிய தூரம் மிக அதிகமாக தோன்றுகிறது. கிட்டதட்ட நான் சபரிமலையில் அழுதை மலை ஏறிய பிறகு கொள்ளும் மனநிலை. இன்னும் இறக்கம், கரிமலை, நீலிமலை, சபரிமலை இருக்கிறதே என்கிற மன சஞ்சலம். 

எங்கே என் மேலாளர் என்னை சறுக்கிவிடுவாரோ என்று ஐயம் கொள்கிறேன். இதனால் நான் இன்று என் நிகழ்காலத்தில் இல்லை. நான் நாளை பற்றியும் பல மாதங்கள் கழித்து எனது வேலையின் நிலை பற்றியும் ஐயம் கொள்கிறேன். வருங்காலத்தை பற்றி ஐயம் கொள்கிறேன்.

கடந்தகாலம் இவ்வளவு வேகமாக சென்று விட்டதே என்று நினைக்கிறேன். நிகழ்காலத்தில் யாருடனும் உடன் இல்லாமல் தனித்த ஒரு வனத்தில் உணவு சமைத்து, உழைத்து உண்டு வாழ்கிறேன். என் மக்கள் மீதும், என் நண்பர்கள் மீது ஆவிதழுவாமல் ஏற்றம் ஏற்றம் என்று எண்ணி எது சிகரம் என்று தெரியாமல் இருக்கிறேன். இன்றை நான் சிறுதும் வாழவில்லை. அதுவே அப்பட்டமான உண்மை.

எனக்கு இருக்கும் ஒரே மனநிறைவு என் வருங்கால மனைவி என்னுடன் எல்லாவற்றிலும் உடனிருப்பாள் என்னும் தெளிவும் நம்பிக்கையும் தான்.

September 17, 2016

En route to Luxembourg where Next Adventure begins

Folks,


I am thrilled to start the next voyage in my career and life. I am heading to Luxembourg where I will work for Amazon as Sr.Product Manager in their Retail Leadership Development Program!



With lots of hopes, dreams, ambition and perseverance, I landed in this country USA - a typical destination for many middle class Indians. I joined the BYU MBA program which turned out to be the best investment I've made in my career. In this program I met many fabulous people and made life time friends. However, it has also been a journey of many ups-n-down and uncharacteristic self doubts. I am glad that I was resolute and stayed there.


I wished I could stay here for some more time. However, life has different plans in store for me. Amazon-Luxembourg was the only non-USA job I had applied only because it is Amazon. Fortunately, I got the job offer in their Retail Leadership Development Program. In early October, I will begin my new career.

As I leave this truly diverse country, I carry, incredible friends, fond memories n stories and many invaluable lessons. I am sure I would come back after a while for another stint here. Until then Good Bye to all my friends here and I will stay in touch!


I like to take this opportunity to thank many people who helped me unconditionally. The list is really long and I apologize if I miss anyone. I learnt at least one thing from every official/unofficial Sherpa or mentor or BYU alum. Thank you BYU MBA Class of 2016, 2015, BYU MBA Network, my core Team 6 of first semester, my core Team 8 and Adobe Field Study Team of second semester and my all other teams viz Brand, A/c Mgmt etc.,. Big shout-out to Abhishek Reddy, Andrew Kinji Watanabe,@Anil.Dhawan (Meetup mentor), Austin Bagley, Austin Johansen, Christie Clark Rasmussen, Danner Banks, Gary K Rhoads, Meghan Whalen, Nirmal Ganesh, Reid Clark, and Sravya Vankayalapati Susarla. Thanks to Angel-Sheila Martinez, Brady David Leavitt, @Chetan Prasad, Chetan Zawar, Dave Crosby, Elena Samuels, John Peterson, Jorge Omar Ramirez, Julia Tian Mann, @Kari Ann Sewell, Lahari Prabha(for showing the path of Amazon Europe), Mark Nugent, Scott K. Christofferson, Sreekanth Rajoli Raichur and so many others. :)

And apologies to many as I couldn't call you to inform before my departure because I got my visa only yesterday while my USA visa expires tomorrow.

நான் வருவேனு சொல்லு! திரும்பி வருவேன்னு .. 20-25 மாசத்துக்கு முன்னால எப்படி போனாரோ ..ராஜேஷ் அப்படியே திரும்பி வருவேன்னு சொல்லு!!

Love you all!!

Warm Regards
Rajesh

September 16, 2016

M.S. Subbulakshmi 100

When I started listening seriously to Carnatic Music / Indian Classical music, in 2007, I was listening to multiple sources/musicians. It was like a cat running in a closed dark room trying to find a way out. My violin guru Shri Babu advised me to listen to @M.S.Subbulakshmi. I followed it blindly falling more in love with the music. Her music is so simple which IMO is very difficult to achieve. Her music is so spiritual with 100% Bhakti. Not to forget her perfect diction in any language that she sung in. If anyone listens to her music they can easily sing it along. She showed that one can attain Brahman (immortality) by Bhakti, hardwork and simple way of life irrespective of the birth (here her devdasi birth(no offense)). #MSS100 #birthCentenaryYear #MSSubbulakshmi #Inspiration


August 15, 2016

மானுட சாத்தியத்தின் எல்லைகள் | தீபா கர்மாகர்

முன் குறிப்பு: இப்பதிவினை எழுதுவதற்கு முன் நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். நான் கிரிக்கேட் விளையாட்டினை தவிர வேறு எந்த விளையாட்டினையும் தீவிர ஈட்டுபாட்டுடன் கவனித்தவனும் அல்ல தொடர்ந்து கவனித்தவனும் அல்ல. அவ்வப்போது சில விளையாட்டுகளை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். அவ்வளவு தான். பொதுவாக தனி நபர் (Athletics) விளையாட்டுகளுக்கான உலக பிரபல விளையாட்டு போட்டி என்றால் அது ஒலிம்பிக்ஸ் (Olympics) தான். எனக்கு விவரம் தெரிந்து அட்லாண்டா (Atlanta) 1996 தான் நான் முதல் முறையாக கேள்விப்பட்ட ஒலிம்பிக்ஸ். அதன் பின் பல ஒலிம்பிக்ஸ் வந்தாலும் 2008 பிஜீங் (Beijing) ஒலிம்பிக்ஸ்-இன் துவக்கம் மற்றும் நிறைவு நிகழ்ச்சிகளை கண்டுகளித்திருகிறேன். அதன் பின் அவ்வளவு பார்த்தது இல்லை. ஈடுபாடு இல்லை. பொதுவாக கடைசியில் இந்தியா ஏதாவது பதக்கம் வென்றதா என்று செய்திகள் மூலம் தெரிந்துக்கொள்வேன். இந்த ஆண்டு ரியோ (Rio) 2016வும் அப்படித்தான். ஆனால் லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்க் (Lance Armstrong - Cycling) மற்றும் அண்ட்ரி அகாசி(Andre Agassi)  போன்றோரின் சுய வாழ்க்கை வரலாறு புத்தகத்தை வாசித்து  உள்ளேன். அவ்வளவுதான் எனக்கும் விளையாட்டுக்கும் உள்ள உறவு. 

​இந்த ஆண்டு ரியோ 2016 ஒலிம்பிக்ஸில் தீபா கர்மாகர் (Dipa Karmakar) என்கிற இருபத்தி மூன்று வயது பெண் ஜிம்னாஸ்டிக்கில் (Gymanstics) பங்கேற்று உள்ளார் என்று செய்தி அறிந்தேன். அதற்கு முன் எனக்கு தீபாவை தெரியாது. அதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் ஜிம்னாஸ்டிக்கில் இருந்து ஒருவர் ஓலிம்பிக்ஸில் பங்கேற்கும் அளவுக்கு இந்தியாவில் அதை பயில்கிறார்கள் என்பதே புதிய செய்தி. ​ஆக தீபா ஜிம்னாஸ்டிக்ஸில் விளையாட்டு பிரிவில் பங்கேற்கிறார் என்பதே எனக்கு ஆச்சர்யம் தான்! 

தீபா கர்மாகர்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிப்புராவின் (Tripura) தீபா கர்மாகர் ஜிம்னாஸிட்டிக்கில் ப்ரொடுனோவா (Produnova) என்னும் மிகவும் அபாயம் வாய்ந்த விளையாட்டு பிரிவில்/முறையில் சிறப்பாக (வெற்றிகரமாக நிறைவு செய்தார்) பங்கேற்றார் என்று அறிந்தேன். இந்த ப்ரோடுனோவாவில் ஒரு பிசிரு ஆனாலும் உயிருக்கே ஆபத்தாக விளைவுகள் அமைய வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு ஒரு ஆண் விளையாட்டில் காலினை ஊன்றும் பொழுது உடைத்துக்கொண்டார்.அவ்வளவு அபாயகரம். ஆனால் இதனை 1980 ஒலிம்பிக்ஸில் முதன் முதலாக வெற்றியின்றி முயற்சி செய்து உள்ளார் ஒரு விளையாட்டு வீரர். முதல் முறையாக 1999’இல் எலீனா ப்ரோடுனோவா (Elena Produnova) என்னும் பெண்மணி வெற்றிகரமாக முடித்து உள்ளார் (ஆதலால் ப்ரொடுனோவா என்று இவ்விளையாட்டு பிரிவுக்கு அப்பெயர்). அதன் பின் உலகில் மூன்றாவதாக முறையாக தீபா கர்மாகர் வெற்றிகராமாக உலக மேடைகளில் செய்து உள்ளார். 

தீபா கர்மாகர் - தகுதி சுற்றுகளில் ப்ரோடுனோவா

இந்தியாவில் இருந்து முதல் முறையாக ஒலிம்பிக்ஸில் ஜிம்னாஸ்டிக்ஸின் இறுதி சுற்றிற்கு (பாலினம் பாகு பாடு இன்றி) இந்த ஆண்டு தீபா கர்மாகர் நுழைந்தார். எட்டாவது இடத்தில் இருந்தார். ஆனால் இறுதி சுற்றில் நான்காவது இடத்தில் முடித்தார்.  அவர் எடுத்த புள்ளிகள் 15.066. மூன்றாவதாக எடுத்தவரின் புள்ளிகள் 15.216. வெறும் 0.15புள்ளிகளில் வெங்கல பதகத்தை கைபற்ற முடியவில்லை. ஆனால் இவர் கைப்பற்றிய நெஞ்சங்கள் லட்சோப லட்சம், கோடான கோடி என்று சொல்லலாம். கிரிக்கேட்டை தவிர எந்த விளையாட்டிற்கும் போதிய பயிற்சிகளும் வசதிகளும் ஊக்கமும் பார்வையாளர்களும் இல்லாத இந்திய நாட்டில் இந்த இடம் மிக முக்கியமானது. இது போன்ற பெயர் தெரியாத விளையாட்டில் நுழைந்தாலே இவர்களின் ஊக்கத்தை குறைக்க ஒரு கும்பல் இருந்துக்கொண்டே இருக்கும். வெற்றி பெற்றால் கூட இவர்களின் எதிர்க்கால வேலை வாய்ப்பு கேள்விக்குறியே. கனவுகளையும் லட்சியங்களையும் சுமந்துக்கொண்டு வசதி இல்லாமல் இவர்கள் படும் பாடு இவர்களுக்கு மன வேதனை அளிக்கும். ஊக்கம் இழக்க அதிக வாய்ப்பு உண்டு. 

ஆனால் இத்தனை இடர்களையும் மீறி இவ்வீரர்கள் தோடும் சிகரங்கள் அதிகம். இவர்கள் தொட நினைக்கும் சிகரத்தின் உயரங்களும் அதிகம். இவர்களின் உழைப்பு அசாத்தியம். தன்னுள் நிகழ்வதை ஒருவன் கவனிப்பான் என்றால் தன் சாத்தியங்களும் எல்லைகளும் தெளிவாகும். இத்தகையவர்கள் வெளி உலகம் போடும் இடர்களை பொருட்டாக எண்ணாமல் தங்களை அவதானிக்கிறார்கள். ஆகச்சிறந்த சாத்தியங்களை நோக்கி நாம் ஏன் அடி எடுத்து வைக்கக்கூடாது என்று என்னுகிறார்கள். விளைவுவாக இவ்விளையாட்டுகளில் இவர்கள் மானுட சாத்தியத்தின் எல்லைகளை ஒரு அடி விரிவு படுத்துகிறார்கள். விதி சமைக்கிறார்கள்!!

இப்பெண் என் வாழ்வில் நான் நினைவில் வைத்துக்கொள்ளும் நபர்களில் ஒருவராக அமைவார்!!

2020 டொக்யோ (Tokyo) இவரின் கனவுகளுக்கு மகுடம் சூட்டும்!